tag:blogger.com,1999:blog-9525202410384522382024-03-14T01:27:20.310+09:00சிங்கக்குட்டிசிங்கக்குட்டிhttp://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comBlogger87125tag:blogger.com,1999:blog-952520241038452238.post-21603041583048191542016-05-06T20:45:00.001+09:002016-05-06T20:45:25.527+09:00இந்து ஒரு மதமல்ல<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
வணக்கம் நண்பர்களே, ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் இணையத்தில் இணைவதில் மகிழ்ச்சி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தலைப்பை வைத்து இது தனி ஒரு மதம் சார்த்த பதிப்பு என்ற எண்ணத்தோடு அல்லது என் மதத்தை பற்றி இங்கு குறை ஏதாவது இருக்குமா என்ற மதவாத தேடலோடு நீங்கள் இந்த பக்கத்திற்கு வந்து இருந்தால், மன்னிக்கவும் இது உங்களுக்கான பக்கமோ, பதிவோ இல்லை அதனால் உங்கள் நேரத்தை இங்கு வீணடிக்க வேண்டாம் .</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்து மதம் அல்லது இந்து சமயம் (Hindu or Hindu Religion) என்றுதான் பொதுவாக இப்போதெல்லாம் பேசப்படுகிறது, அது உண்மையல்ல மதம் சார்ந்த வார்த்தைகள் இடையில் வந்தவர்களால் திணிக்கப்பட்ட ஒன்றுதான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உண்மையில் இந்துவத்துவம் (Hinduism) என்பது ஒரு கலாச்சாரம் (Culture) மற்றும் அதுவே அவர்களின் பாரம்பரியம் (Tradition) என்று சொல்லும் ஒருவரின் காணொளியை சமீபத்தில் எதார்த்தமாக கேட்க நேர்ந்ததின் பிரதிபலிப்பே இதை என்னை எழுத தூண்டியது என்பதுதான் உண்மை </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு பொதுவான இடத்தில நம்முடைய பெயரை கொண்ட யாரையோ வேறு யாரோ ஒருவர் அழைக்கும் போது, நாமும் நம்மையறியாமல் திரும்பி பார்ப்பது போல, இது என்னுடைய கலாச்சாரம் பற்றி பேச பட்டதால் என்னையறியாமல் மனம் அதனுள் நுழைந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiIEUpsxnMMe_Jr3DRk8Oyt7w6IVKg1KhCghroEyhpgPWp6xo0xpvcFDh5s4V0EQrA_WhFGN5t62ycb5d5hx1Wb_bApjPDIPt-B1fcdQjkDeey8N5-EWj6qVq92sumyDULiPj29ELoy9HA/s1600/Tree.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="265" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiIEUpsxnMMe_Jr3DRk8Oyt7w6IVKg1KhCghroEyhpgPWp6xo0xpvcFDh5s4V0EQrA_WhFGN5t62ycb5d5hx1Wb_bApjPDIPt-B1fcdQjkDeey8N5-EWj6qVq92sumyDULiPj29ELoy9HA/s400/Tree.jpg" width="400" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இடையில் வந்த மதம் கொண்ட மனிதர்கள் இந்துவத்துவம் என்பதையும் மதம் என்று நினைத்து அப்படியே பேச, எழுத காலப்போக்கில் நமக்கும் இந்து மதம் என்றே மனதில் பதிந்து விட்டது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இது எந்த ஒரு தனிப்பட்ட மதத்தையும் பின்பற்றும் மனதை காயப்படுத்த சொல்லவில்லை, காரணம் அப்படி அவர்கள் நினைத்ததில் அவர்கள் தவறும் எதுவும் இல்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மதம் என்பது ஒரு சாரத்தின் அடிப்படை கொள்கைகளை ஒன்றாக்கி அது சார்த்த மக்களை நல்வழியில் நடத்த ஒருவர் துவக்கியதாகவும், அதை விரும்பி ஏற்றுக்கொண்டு அந்த கொள்கைகளை (Protocols) பின்பற்றிவர்களுக்கும் சொந்தமான ஒரு சொல்லாகும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதில் கவனிக்க வேண்டியது, அப்படி ஒரு மார்கத்தில் செல்லும் போது அவர்களுக்கு தெரியும் நாம் எங்கிருந்து, எதற்காக, எங்கு செல்கிறோம் என்று. உதாரணமாக, கௌதம புத்தரை அடிப்படையாகக் கொண்டு பௌத்த சமயம் உருவாக்கப்பட்டது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதாவது சித்தார்த்த கௌதமர் என்ற தனி ஒரு மனிதன், தனது சொந்த முயற்சியாலும், அனுபவத்தாலும் உருவாக்கப்பட்ட வழியாகும் பௌத்தம், அதை அடிப்படையாக கொண்டு உருவானது பௌத்த மதம் அல்லது புத்த மதம் .</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பௌத்த மதம் (Buddhism) முதன் முதலில் இந்தியாவில் தான் தோன்றியது, எனவேதான் இன்றும் புத்த மதத்தின் தாய்நாடு இந்தியா என்றும் அது இந்து கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவும் கருதப்படுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இப்படி பல இடங்களில் பல நல்ல மகான்கள் பல தத்துவங்களையும் பல சமயங்களையும் உருவாக்கி இருக்கிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எல்லாச் சமயங்களும் பணிவு, இரக்கம், பெருந்தன்மை, அன்பு என்று ஒரே நீதியையே போதிக்கின்றன, ஆனால் அதை அவர்கள் வாழ்ந்த, வாழும் பகுதி மற்றும் பழக்கத்தை பொருத்து அந்த பகுதி மக்களுக்கு புரியும் விதவிதமான சொற்களுடன், விதவிதமான பெயர்களைக் கொண்டு, விதவிதமான உதாரணம் மற்றும் குறிகளைப் பயன்படுத்தி தங்கள் சமயங்களை விளக்குகின்றனர். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த வகையில் வந்த யாருமே எனக்கு தெரிந்து மற்ற சமயங்களைத் தவறு எனக் கூறுவதில்லை, இவ்வளவு ஏன், அவர்கள் யாருமே தங்களை கடவுளின் மகனாகவோ, கடவுளின் தூதுவராகவோகூடப் பிரகடனம் செய்து கொண்டதில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இடையில் வந்த தரகர்கள் மதத்தின் பெயரால் தவராக மக்களை ம(த)ன மற்றம் செய்ததின் விளைவே இன்று மக்கள் மனத்தால் மதத்தால் வேறுபட்டு இருகின்றனர் .</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgenPe_2__yC1pjI9nyReThS2pRU9PSq3mZVGtC2G5Meq1Z23cGlJmMuE1CuN85NjjH3MjdmXnOf5Fw3F25O2E68QkeHQtVYt9El2C0zxXWYkH68LhC2RefpoAAJY-ZC_LaBrveBfP-m68/s1600/Bullet-Baba.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="241" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgenPe_2__yC1pjI9nyReThS2pRU9PSq3mZVGtC2G5Meq1Z23cGlJmMuE1CuN85NjjH3MjdmXnOf5Fw3F25O2E68QkeHQtVYt9El2C0zxXWYkH68LhC2RefpoAAJY-ZC_LaBrveBfP-m68/s400/Bullet-Baba.jpg" width="400" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மக்கள் குறுகிய மனப்பான்மையோடு தங்கள் வழியுடன் மட்டும் ஒட்டிக்கொள்ளும் போதுதான், மற்ற சமயங்களை சகித்துக்கொள்ள முடியாமல், தன் வழி தான் சரி என்ற பெருமையும், தான் சொல்வது தான் சரி என்ற பிரிவினையும் வந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சரி, இதில் இந்து கலாச்சாரம் என்ன சொல்கிறது? அல்லது இவற்றில் இருந்து எவ்வாறு வேறு படுகிறது என்று ஒரு கேள்வியை யாரேனும் இந்த இடத்தில் வைக்க கூடும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உண்மையில் <b>இந்து பாரம்பரியம் எதுவுமே சொல்லவில்லை என்பதுதான் நிதர்சனம்.</b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதை நான் என் நம்பிக்கைக்காக மட்டும் சொல்லவில்லை, முதலில் இந்துவத்தில் மதத்திற்கு அடிப்படியான எந்த கொள்கைககளும் இல்லை, இதில் எந்த வரைமுறைகளும் இல்லை, இதுதான் கடவுள், இதைதான் படிக்கவேண்டும், இப்படிதான் பிராத்தனை செய்யவேண்டும் என்று எந்த இடத்திலும் சொல்லவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அப்படி ஏதாவது எங்காவது இருந்தால் அது மேலே சொன்னபடி இடையில் வந்த தரகர்கள் செய்த வேலையாகத்தான் இருக்கும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்து கலாச்சாரத்தில், எதை வேண்டுமானாலும் படிக்கலாம், எதை வேண்டுமானாலும் கடவுளாக நினைக்கலாம், எப்போது வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் பிராத்தனை செய்யலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு இடத்தை கோவிலாக்கி அங்கே ஒருவர் சூடம் வைக்கலாம், அதே இடத்தில் வேறு ஒருவர் சேவல், ஆடு என்று உயிர் பலியும் கொடுக்கலாம் , அதே இடத்தில் வேறு ஒருவர் சாராயம் படைக்க முடியும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதற்கான காரணம் இந்து கலாச்சாரத்தில் எதுவுமே சொல்லப்படவில்லை, அதனால் அவரவர் விருப்பதிற்கு, அவரவர் சக்திக்கு, அவரவர் மனதில் பட்டதை அல்லது தன் முன்னோர்கள் சொல்லி கேட்டதை, செய்து பார்த்ததை செய்கிறார்கள் .</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதில் கவனிக்க வேண்டியது "<b>செய்கிறார்கள்</b>", யாரும் எழுதிவைக்காமல், செய்ய சொல்லாமல், தானகவே செய்கிறார்கள் அததனால் தான் இந்து என்பது ஒரு கலாச்சாரம் அவர்களின் பாரம்பரியம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதில் யார் கடவுள்?, என்ற பேச்சே இல்லை கரணம், இங்கு எல்லாமே கடவுளாகத்தான் பார்க்கப்படுகின்றன, மண்ணும் கடவுள், பொண்ணும் கடவுள், மரமும் கடவுள், மயிலும் கடவுள், குழந்தையும் தெய்வம், இறந்தவரும் குல-தெய்வம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எப்படி இந்துவத்தில் யார் யார் கடவுள் என்று சொல்லவில்லையோ, அதே போல யார் எல்லாம் கடவுள் இல்லை என்றும் எங்கும் எதிலும் சொல்லவில்லை. அவ்வளவு ஏன், யார் வேண்டுமானாலும் புதிய கடவுளை படைக்க முடியும், அதுவும் யாரை வேண்டுமானலும் கடவுளாக்க முடியும். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இன்றும் நம் மக்களிடையே இதை பார்க்க முடியும், இறந்து போன தன் தாயின் சேலையை, இறந்து போன தன் குடும்ப கன்னி பெண்ணை, தன் குடும்பத்தை காப்பற்றிய நாயை, இப்படி புதிய கடவுள்களை படைத்தவர்கள் நம்மிடயே ஏராளம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சரியான உதாரணம் வேண்டுமானால் எதிரி நாட்டு ராணி விட்ட சாபத்தால், வாரிசு (குழந்தை) வரம் இல்லாமல் இன்றும் மைசூர் மகராஜா குடும்பம் சாபமிட்ட ராணி அலமேலம்மாவை (ராயரின் மனைவியை) உடையார் ராஜ வம்சத்தின் குல தெய்வமாக்கி வணங்கி வருகிறார்கள் என்பது 400 வருட வரலாற்று பதிவுகள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ராஜ வம்சம் தொடர ஒவ்வொரு ராஜாவும் பட்ட அவஸ்தையும், சாபத்தின் படி. தலக்காடு மணல் மேடானதும், இன்றுவரை காவேரி நதி அங்கே மணல் கொண்டு சேர்ப்பதும் நாம் அனைவரும் அறிந்த உண்மை.</div>
<div style="text-align: justify;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi16M8ww_Z3iPvpig6VIKFVHCHYFPbFPBDO4mGyhGpt9lGDJKDhuUP59lmdmdGqwLfj1Ma-HBTIEyUETWuchla4sBL9ea855QaYSsNAg6DVqx50lo5_hnZo9DLi1D1x25-GJPcDy7Zy7aU/s1600/Visa-God.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="210" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi16M8ww_Z3iPvpig6VIKFVHCHYFPbFPBDO4mGyhGpt9lGDJKDhuUP59lmdmdGqwLfj1Ma-HBTIEyUETWuchla4sBL9ea855QaYSsNAg6DVqx50lo5_hnZo9DLi1D1x25-GJPcDy7Zy7aU/s400/Visa-God.jpg" width="400" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இன்னும் சொல்கிறேன், தட்டி பாருங்கள் கூகுளை (www.google.com) இயற்கை, மனிதன் மற்ற உயிர்களை கடவுளாக பார்த்ததை தாண்டி, புல்லட் கடவுள் (Shri Om Bana and Bullet Banna), வெளிநாடு விசா கடவுள் (Visa Chilkur Balaji Temple) என்று இந்துவத்தின் எல்லை பிரபஞ்சம் போல நாளுக்கு நாள் விரிந்து கொண்டே இருக்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆக, இதில் மிக தெளிவான விசையம் என்னவென்றால், யார் அல்லது எது கடவுள் என்பதில் இங்கு எந்த குழப்பமும் இல்லை, காரணம் இது ஒருவரால் சொல்லப்பட்டோ அல்லது எழுதப்பட்டு அதை படித்து வருபவை அல்ல.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எந்த கட்டாயமும் அல்லது தனித்து வைக்கும் கட்டுப்படும் இல்லாமல் பொது நல நோக்கோடு <b>காலம் காலமாக மக்களை எதோ ஒரு சக்தி ஒரு சமூக வட்டத்திற்குள் வழிநடத்தி செல்கிறது</b>, அந்த சக்தி கடவுளா இல்லாயா என்பது பற்றி எழுதுவது இங்கு என் நோக்கம் அல்ல.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எந்த ஒரு வழிகாட்டலும் தேவையில்லாமல் மக்களை தன் கட்டுக்குள் வைத்து <b>சுழலும் அந்த பாரம்பரிய சக்தியே என் எண்ணகளில் இந்து கலாச்சாரமாக தெரிகிறது.</b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆனாலும் இது எப்படி மதமாக காட்டபடுகிறது? இந்த கலாச்சாரம் எப்படி மதம் என்னும் வட்டதிற்குள் புகுத்தப்பட்டது என்று பார்த்தால் அதற்கும் மனிதனே பொறுப்பாகிறான் .</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மேலே சொன்னபடி தனி ஒரு மனிதன், தனது சொந்த முயற்சியாலும், அனுபவத்தாலும் உருவாக்கப்பட்ட வழியாக வந்தது மதம், இது தடம் மாறி மனிதனுக்கு மதம் பிடிக்கும் போது, அவனால் மதம் இல்லாமல் வாழமுடியாமல் போகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்துவத்தில் இதை உருவாக்கியவர் என்று யாரும் இல்லை, மேலும் இதை வழிநடத்தவும் யாரும் தேவை இல்லை என்பதால் தான் என்னவோ, யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் இதை பற்றி விமர்சனம் செய்ய முடியும், அதை பற்றி இதில் யாரும் கேள்வி கேட்க போவதில்லை எந்த ஒரு விமர்சனத்துக்கும் பதில் விமர்சனமும் வரபோவதில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆனால் மற்ற எந்த ஒரு மதம் அல்லது சமயத்தை இப்படி எதுவும் விமர்சனம் செய்து விட முடியாது என்பது இங்கு சிந்த்திக்க வேண்டியது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதை சாதமாக்கி இடையில் மதம் பிடித்த மனிதர்கள் புகுத்தல்தான் இந்து கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் என்பது இந்து மதமாக காட்டப்படுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
காரணம் எத்தனயோ மதங்கள் வந்தன எத்தனயோ மறைந்தும் போனது, ஆனால் யாரும் இல்லாமல் இது மட்டும் எப்படி தானாக சுழலுகிறது நாளுக்கு நாள் வளருகிறது என்று அவர்களால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
காலம் காலமாக முட்டையில் இருந்து வந்ததாவும் அது மட்டுமே பிறப்பின் தன்மை என்று நம்பிக்கொண்டு இருக்கும் ஒரு கோழியிடம் போய், ஒரு பெண்ணின் பிரசவ முறையை சொன்னால் அந்த கோழி என்ன நினைக்கும்?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அது எப்படி இந்த பெண்ணால் முட்டை ஓட்டை மட்டும் உள்ளே வைத்துக்கொண்டு தனியாக குட்டியை வெளியே அனுப்பமுடியும், அதும் ஒரே ஒரு முட்டை ஓடு வைத்துக்கொண்டு பல முறை பல குட்டிகளை மட்டும் அனுப்ப முடியும் என்றுதான் அதன் எண்ணம் இருக்கும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இது போலதான் மதம் பிடித்த மனிதர்கள், தனக்கு மதம் தவிர எதுவும் தெரியாது என்பதை அறியாமல், ஒரு கலாச்சாரத்தை தனக்கு தெரிந்த மதத்திற்குள் இழுத்து வர முயற்சி செய்தார்கள்,செய்கிறார்கள்,இனியும் செய்யலாம், ஆனால் அது அவர்கள் தவறு என்று சொல்லிவிட முடியாது என்பதை விட சொல்லகூடாது என்பதே சரியான முறை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்து கலாச்சாரம் என்பது பாரம்பரியமாக கொண்டு போகவே தவிர யாரையும், எந்த இறை நம்பிக்கையையும் விமர்ச்சனம் செய்ய பயன் பட்டதும் இல்லை இனியும் பயன் பட கூடாது என்பதும் இந்த கலாச்சாரத்தின் ஒரு அங்கம் தான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மொத்தத்தில் ஒரு பெரிய நூலகத்தில் இருந்து ஒருவர் ஒரே ஒரு புத்தகத்தை எடுத்து வருகிறார், எடுத்தவருக்கு தெரியும் இதை போல பல புத்தகங்களை கொண்ட நூலகம் ஒன்று இருக்கிறது அதில் இருந்து நாம் கடைபிடிக்க அல்லது கற்க நிறைய இருக்கிறது என்று.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆனால், அவரிடம் இருந்து அந்த ஒரு புத்தகத்தை மட்டும் வங்கி படித்த மற்ற ஒருவருக்கு இது புரியாது, அவரை பொறுத்தவரை இது மட்டும் தான், இதில் நாம் அனைத்தும் படித்து முடித்து விட்டோம் வேறு எதுவும் இங்கே இல்லை என்பதுதான், இதையே அவர் தனக்கு அடுத்து வருபவருக்கு அவர் அவருக்கு அடுத்து அடுத்து சொல்லக்கூடும் அதில் அவர்கள் தவறு எதுவும் இல்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்து கலாச்சாரம் பழகுபவர்கள் மற்ற சமய இன மதத்தவர்களுடன் இணைந்து இந்த பாரம்பரியதில் நடப்பதும், மற்ற மதம், சமய மக்கள் அந்த இந்து கலாச்சாரம் எப்படி பாரம்பரிமாக வருகிறது, எது உயர்ந்தது, எது தாழ்ந்தது, ஏன் அது மதமாக இருக்கவில்லை? என்று அர்த்தமற்ற பாகுபாடு பார்க்காமல், ஒரே குலம், ஒரே இனம் அது மானித இனம், அதில் பல கலாச்சாரம், பல பாரம்பரியம், அதில் அனைவரும் சமம் என்று உணர்ந்து நடப்பதே நம் மனித குலத்திற்கும், நாம் விரும்பும் மதத்திற்கும் செய்யும் உண்மையான பிறவி கடமை ஆகும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நன்றி மீண்டும் சந்திப்போம்.</div>
</div>
சிங்கக்குட்டிhttp://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-952520241038452238.post-65202702158471241362014-05-24T20:46:00.000+09:002014-05-25T00:04:41.215+09:00கோச்சடையான் ரஜினியின் பாஷா இல்லை...! <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
வணக்கம் நண்பர்களே,<br />
<br />
வருடம் கூட கூட தன் வயதை குறைத்து கொண்டு ஓட்டத்தில் வேகத்தை கூட்டும் சிங்கையின் வேகத்துக்கு இணையாக என் வாழ்கை வேகத்தை கூட்ட வயது கூடிக்கொண்டே போகும் நான் ஓட முயன்று கொண்டு இருப்பதால், இணையம், பதிவுகள் பக்கம் வர முடியாத சங்கடத்தை சந்திக்கும் படியாகிவிட்டது.<br />
<br />
எத்தனயோ தடைகளையும், சங்கடங்களையும் தாண்டி திரைக்கு வந்து ஆனந்த தாண்டவம் போட்டுகொண்டு இருக்கிறார் மாவீரன் கோச்சடையான்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEis-jdY2vrtgdkJ-OZc7TZGrKy74YDEpsiqhxqHqb081cybgirCsx-QWDGQ2ufbcWSH0LWCmqPBtp0EijCxHH3gUEe6z3W3CzFLpz5XFQzoCBTphFarOvZfO-1bjh8pcNsOJKojszvCdrM/s1600/rajini-kochadaiyaan.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEis-jdY2vrtgdkJ-OZc7TZGrKy74YDEpsiqhxqHqb081cybgirCsx-QWDGQ2ufbcWSH0LWCmqPBtp0EijCxHH3gUEe6z3W3CzFLpz5XFQzoCBTphFarOvZfO-1bjh8pcNsOJKojszvCdrM/s1600/rajini-kochadaiyaan.jpg" height="209" width="320" /></a></div>
<br />
நான் திரை விமர்ச்சனம் எழுதுவது கிடையாது (எழுதுறதே இல்ல இதுல எதுக்கு இந்த படம் அதான...சரி விடுங்க விடுங்க ), அதனால் இது கண்டிப்பாக கோச்சடையான் விமர்ச்சனம் அல்ல, ரஜினி ரசிகனாக என் முதல் பார்வையில் கோச்சடையான் அவ்வளவுதான்.<br />
<br />
சினிமா என்பது ஒரு தொழில், அதில் "வந்து விட்டீர்களா சுவாமி", "போகாதீர்கள் நாதா" என்பது முதல் " இஸ்தலக்கடி லாலா சுந்தரி கோல கொப்பற கொய்யா" என்பது வரை பல கால கட்டங்களில் பலரால் பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல பட்டு இருக்கிறது.<br />
<br />
இந்த வரிசையில் அடுத்த படி அல்லது மைல்கல் முதல் முயற்சிதான் "கோச்சடையான்".<br />
<br />
சரித்திர கதையையும், நடிகர்களின் நடிப்பையும் பற்றி பலரும் திரை விமர்ச்சனமாக கொடுத்து கொண்டு இருப்பதால், அதே விசையத்தை வேறு வாரத்தைகளை போட்டு இங்கு நான் கொடுக்க போவதில்லை.<br />
<br />
மாவீரன் கோச்சடையான் மீது மக்கள் கொண்டுள்ள புகழ் பிடிக்காத மன்னனே எதிரி நாட்டிடம் வீரர்களை அடிமை படுத்தியாதாக சூது செய்து நயவஜகமாக ராஜ துரக குற்றம் சுமத்தி மரணதண்டனை கொடுக்கிறான்.<br />
<br />
மரணத்தின் வாசலில், நான் வருவேன் என்ற நம்பிக்கையுடன் இருக்கும் நம் வீரர்களை காப்பாற்று ரானா என்று ஒரு மகனிடமும், மன்னரை காப்பதே நம் கடமை சேனா என்று சொல்லி மற்றொரு மகனிடம் தன் தளபதி வாளை கொடுத்து விடை பெறுகிறார் கோச்சடையான், <br />
<br />
மகன்கள் இங்கு பிரிகிறார்கள், தந்தை மரணத்தை கண்முன் கண்ட மகன் ரானா, தன் தந்தை மீதுள்ள பழியை போக்கி அதே மக்கள் துணையோடு மன்னனை வஞ்சம் தீர்க்கிறார், அந்த இடத்தில் மன்னரை காப்பதே நம் கடமை என்று சொல்லி கோச்சடையான் கொடுத்த வாளுடன் வந்து நிற்கிறார் இன்னொரு ரஜினி சேனா, இருவரும் மோத வேண்டிய கட்(டாய)த்தில்.. தொடரும் என்று சொல்லி முடிக்கிறார்கள்.<br />
<br />
நிம்மதியாக போய் வாருங்கள் தந்தையே என்று கோச்சடையான் நெற்றியில் ரானா முத்தமிடும்போது இது ஒரு "Motion Capture" படம் என்பதயும் மறந்து "Apocalypto படம்" பார்ப்பது போல ஒரு உணர்வு வந்தது. <br />
<br />
(Note: The amount of work does not vary with the complexity or length of the performance to the same degree as when using traditional techniques. This allows many tests to be done with different styles or deliveries, giving a different personality only limited by the talent of the actor.)<br />
<br />
ஆக மொத்தம்....!<br />
<br />
புதிய தொழில் நுட்பத்தில் ரஜினியை கொடுத்த சௌந்தர்யாவுக்கு சந்தோசமாக ஒரு சபாஸ்.<br />
<br />
ரவிகுமாரின் உழைப்பு சந்தேகத்துக்கு இடமில்லாமல் அருமை, குறிப்பாக வசனங்கள் ஆக.... அட்டகாசம்.<br />
<br />
ரகுமான் சொல்லவே வேண்டாம் இசையும் பாடலும் தேனில் விழுந்த பலா போல் தித்திப்பு.<br />
<br />
இனி தலைவர்.....<br />
<br />
இளமை இனிமேல் போகாது.... முதுமை எனக்கு வாராது.... என்ற முத்து பாடல் வரிகளை இனி நிஜமாகிவிட்டது, அதிலும் "கோச்சடையாரின் சிவ தாண்டவமும், ராணாவின் மூங்கில் சண்டையும், இனி ரஜினியை எல்லா வகையிலும் பார்க்க முடியும் என்று உறுதி செய்து விட்டது.<br />
<br />
சிங்கை மருத்துவ மனையில் இருந்து சென்ற பிறகு திரையில் வரும் முதல் படம் என்ற நினைப்பில் சென்ற எனக்கு கொஞ்சம் நெருடலாக இருந்தாலும், அதே நடை, ஸ்டைல், அதே குரல் என்று சிறிது நேரத்தில் ரஜினியை உணர முடிந்தது. <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhrA5_pvBE-2LoBwd_kTw3ytIwDgj6Z0ZcXlEqgt9ZWWMu3rRBmaRrEiANhi-q-31AfjPi2LleMaLqtwUo_UvOG4sOrDFozy1mmN11XUIQFqe8QdqmCPSs1L8NDTE9n6F9WGCFG3fbi6Hk/s1600/kochadaiyaan_the_legend.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhrA5_pvBE-2LoBwd_kTw3ytIwDgj6Z0ZcXlEqgt9ZWWMu3rRBmaRrEiANhi-q-31AfjPi2LleMaLqtwUo_UvOG4sOrDFozy1mmN11XUIQFqe8QdqmCPSs1L8NDTE9n6F9WGCFG3fbi6Hk/s1600/kochadaiyaan_the_legend.jpg" height="188" width="320" /></a></div>
<br />
பல காட்சிகளில் மற்றவர்கள் நடையும், ரஜினி மற்றும் தீபிகாவின் கண் அமைப்பும் இன்னும் கொஞ்சம் சரியாக கொண்டு வந்து இருக்க வேண்டும், 3-D யில் பார்த்தால் சரியாக வரும் என்று நினைக்கிறேன்<br />
<br />
நிறுத்து.... நீ ரஜினி ரசிகன் என்பதால் எல்லாமே உனக்கு மட்டும் நல்லாதான் இருக்கும், போப்பா போ....இதானே.... அப்படி இல்லை, <br />
<br />
நண்பர்களே, ஒரு விசையத்தை இங்கு நாம் கவனிக்க வேண்டும், ரஜினி ரசிகனை தவிர பொதுவாக மற்ற அனைவருக்கும், ரஜினி படம் பார்க்க போகும் போதே அது பாஷா, அண்ணாமலை என்ற ஒரு எண்ணம் இருக்கும், காரணம் அவர் ஒரு ஆக்சன் ஹீரோ.<br />
<br />
நான் இதுபோல கருத்துக்கள் வரும் போதெல்லாம் சொல்லும் ஒரு விஷயம், வெறும் பாஷாவும், அண்ணாமலையும் அல்ல ரஜினி. <br />
<br />
ஒரு நடிகனான வில்லன், இரண்டாம் கதாநாயகன் என்று, நகைச்சுவை, திருடன், அடியாள் கதாநாயகன் முதல் அறிவியல் ஆராச்சியாளர் வரை, ரஜினிக்கு பல முகம் உண்டு, அதில் பல விசையங்கள் ரஜினியை தவிர வேறு யார் செய்து இருந்தாலும், சகிக்கவே முடியாத விசையமாகி இருந்து இருக்கும் என்பதை பொதுவாக அனைவருமே ஏற்றுக்கொள்வார்கள்.<br />
<br />
அதே போல, மாறி வரும் தொழில் நுட்பத்தில் உலக நாடுகளுக்கு இணையாக அதுவும் குறிப்பாக இந்திய சினிமாவில் இப்படி ஒரு படத்தை எடுக்க முடியும் என்றால், அது ரஜினி என்ற மத்திரத்தை தவிர வேறு எந்த ஒரு நடிகராலும் துணிந்து செய்யமுடியாத ஒன்று என்பதை மட்டும் என்னால் தெளிவாக சொல்ல முடியும்.<br />
<br />
மொத்தத்தில் பத்து வருடத்திற்கு முன் மொபைல் என்பதும், முப்பது வருடத்திற்கு முன் ஜீன்ஸ் என்பதும் இந்தியாவில் எப்படி இருந்து என்றும், இன்றும் அது நம் தெருக்களில் எப்படி கிடைக்கிறது என்பதும் நாம் அனைவரும் பார்பதுதான்.<br />
<br />
அதே போல், இனி இந்திய சினிமா வரலாற்றில் இது போல, ஏன் இதை விட இன்னும் நேர்த்தியாக கூட பல படங்கள் வந்து மறைந்தாலும், இதன் துவக்கம் "கோச்சடையான்" என்பதும் அது அன்று இருந்த சூழ்நிலையில் ரஜினியால் மட்டுமே சாத்தியம் என்பதும் சினிமா வரலாற்றில் என்றுமே அழிக்க முடியாத கல்வெட்டாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.<br />
<br />
மொத்தத்தில், கோச்சடையான், ரஜினியின் பாஷாவோ அண்ணாமலையோ அல்ல, ஆனால் இந்திய சினிமாவில் ஒரு மைல்கல் என்ற எண்ணத்தோடு இந்த படத்தை பாருங்கள்.<br />
<br />
முதல் காட்சி பார்த்து முடிந்ததும் தலைவருக்கு என் ட்விட்: After watching first show in singapore, I felt, Kochadaiyaan is not a Masterpiece of Rajini. it's a MileStone of Indian Cinema.<br />
<br />
எல்லாம் சொல்லி இதை சொல்லாமல் எப்படி முடிப்பது.....!<br />
<br />
நாங்கள்லாம் ரஜினி பட போஸ்டரையே நாலு மணி நேரம் நகாராம பாப்போம், அப்படி இருக்க கோச்சடையாரின் தாண்டவத்தை கேட்கவா வேண்டும்.<br />
<br />
All the Rajni Fan's Don't Miss this Chance....!<br />
<br />
நன்றி, மீண்டும் சந்திப்போம். <br />
<br />
சம்போபோபோ மகா தேவா................!</div>
சிங்கக்குட்டிhttp://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-952520241038452238.post-18751415563856851042012-02-02T13:15:00.000+09:002012-02-02T14:15:10.498+09:00நாம் நூறாவது குரங்காக கூட இருக்கலாம்!வணக்கம் நண்பர்களே,<br /><br />மனிதனோடு மிக நெருங்கிய வாழ்கை முறையை கொண்ட மிருகம் குரங்கு எனபதை நாம் அனைவரும் அறிவோம், சமீபத்தில் இதை பற்றிய ஒரு நல்ல தகவல் எனக்கு கிடைத்தது, அதை இங்கு உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.<br /><br />சிங்கையில் எனக்கு முரளி என்று ஒரு நண்பர் இருக்கிறார், மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கொண்ட அவருடன் அடிக்கடி சந்தித்து கருத்து பரிமாற்றம் செய்வது எங்கள் வழக்கம். <br /><br />ஆன்மிகம் மட்டுமின்றி அது போல நேரத்தில் இருவருக்கும் தெரிந்த ஆரோக்கியமான கருத்துக்களை மற்ற உலக நடப்புகளை பற்றி இருவருமே பகிர்ந்து கொள்வோம்.<br /><br />அது போல பேசிக்கொண்டு இருந்த ஒரு நேரத்தில் அவர் சொன்ன ஒரு தகவல்தான் இது. <br /><br />அவரின் ஆன்மீக ஆர்வத்தை தொண்டு என்ற போர்வையில் இடைத்தரகர்கள் பயன்படுத்தி கொள்கிறார்கள் என்று நான் சொல்ல, அதற்கு அவர் ஆன்மீகம் பற்றி ஒரு நல்ல விளக்கம் கொடுத்தார்.<br /><br />மாறுபட்ட நல்ல சமூக சிந்தனை மற்றும் அப்படி மனதில் பட்டதை அதே போல செய்வது சுவாமி விவேகானந்தர் போல ஒரு சிங்கத்தால்தான் முடியும், என்பது எப்படி மறுக்க முடியாத உண்மையோ, அதே போல அனைவருமே அவரைப்போல வீர துறவியாக இருக்க முடியாது என்பதும் உண்மையே.<br /><br />ஆகவே, இந்த மாதிரி ஒரு வாழ்கை முறையில் இருக்கும் நான் ஒரு நூறாவது குரங்காக இருப்பதில் எனக்கொன்றும் வருத்தமில்லை என்றார்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgF4b8iGhWtzIkt5ci870Q-izy57jX05HJ5zPg993se4tqP2IX0XUGbUIQDiB7CvTSzRBuIRy_TGjymdScdlydnhESAqF6Tfk9IFqWhYqqUfXnChKbq5V7Jg4Bgw64QAWYFdkuebVdlTUU/s1600/hmf.png" target="new"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgF4b8iGhWtzIkt5ci870Q-izy57jX05HJ5zPg993se4tqP2IX0XUGbUIQDiB7CvTSzRBuIRy_TGjymdScdlydnhESAqF6Tfk9IFqWhYqqUfXnChKbq5V7Jg4Bgw64QAWYFdkuebVdlTUU/s320/hmf.png" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5704394152099247554" /></a><br /><br />அது என்ன நூறாவது குரங்கு என்று நான் கேட்க? அவர் சொன்னது இதுதான்.<br /><br />கடந்த நூறாண்டின் துவக்கத்தில், குரங்குகளை வைத்து ஒரு ஆராச்சி நடந்ததாம், ஜப்பானுக்கு அருகே உள்ள ஒன்றுகொன்று தொடர்பில்லாத சில மழைகாடு தீவுகளில் பல குரங்குகளை கொண்டு விட்டு விட்டாகளாம், அதன் பின் அந்த குரங்குகள் உணவுக்காக பலவகை பழங்களை அந்த தீவுகளில் இருந்த குப்பைகளில் குறிப்பாக சகதிகளில் கொட்டிவிட்டு நடப்பதை கண்காணிக்க துவங்கினார்களாம்.<br /><br />பசியின் காரணமாக குரங்குகளும் அந்த பழங்களை எடுத்து உண்டன, இப்படியே நாட்கள் நகர ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு ஒரு குரங்கு சகதியில் இருந்து எடுத்த பழத்தை ஊதி விட்டு பின் சாப்பிட, ஆராய்ச்சியாளர்களின் கண்காணிப்பு ஆர்வம் அதிகரித்ததாம்.<br /><br />ஒரு சில நாட்களுக்கு பிறகு அந்த கூட்டத்தில் இருந்து வந்த ஒரு குட்டி குரங்கு, தன் உணவை எடுத்துக்கொண்டு தனியாக ஓடுவதை கண்டு அந்த குரங்கை கண்காணிக்க, சகதியில் இருந்து எடுத்த பழத்தை கொண்டு சென்ற குட்டி குரங்கு அருகே இருந்த நீரோடையில் அந்த பழத்தை கழுவி விட்டு பின் சாப்பிட துவங்கியதாம்.<br /><br />அன்று முதல் அனைவரும் கூர்ந்து கண்காணிக்க, இந்த குரங்கு மட்டும் தொடந்து உணவை கழுவிவிட்டு உண்பதை கைவிடவில்லையாம்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjgGWQzYSwPxVr8i1lQb23Vb-_8mYWtCmOPoHP4o6sKXDqindZkaoBT4OvufXD0s3EsoMB2seXJwRjvYZyomOxbeZw0zpLVmCus9Fy1_AGPtX3pxT6PdYxfZPZNexEheSkBEmuX2GVh9CA/s1600/mef.jpg" target="new"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 233px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjgGWQzYSwPxVr8i1lQb23Vb-_8mYWtCmOPoHP4o6sKXDqindZkaoBT4OvufXD0s3EsoMB2seXJwRjvYZyomOxbeZw0zpLVmCus9Fy1_AGPtX3pxT6PdYxfZPZNexEheSkBEmuX2GVh9CA/s320/mef.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5704394532237842274" /></a><br /><br />இப்படியாக ஒரு குறிப்பிட்ட காலம் நகர ஒவ்வொன்றாக மற்ற அனைத்து குரங்குகளும் அதே போல உணவை சகதியில் இருந்து கழுவிவிட்டு உண்பதை கண்டதும் ஆராய்ச்சியாளர்களுக்கு சந்தோசம் ஒரு புறம் இருக்க, ஒரு வேலை இந்த குட்டி குரங்கை பார்த்து மற்ற குரங்குகள் சக்தியை கழுவவேண்டும் என்று பழகி இருக்குமோ என்று சந்தேகமும் வந்ததாம்.<br /><br />இப்படி சில காலம் நகர நகர, ஒன்றுகொன்று தொடர்பில்லாத அந்த மழைகாடு தீவுகளில் இருந்த ஒவ்வொரு தீவிலும் இருந்த குரங்குகள் தன் உணவை சகதியில் இருந்து எடுத்து கழுவி விட்டு உண்பதை காண முடிந்ததாம்.<br /><br />இந்த ஆராய்சியின் முடிவில் அத்தனை குரங்குகளும் இதே போல் செய்வதை கொண்டு மனித நாகரீக வளர்ச்சியை பற்றி ஒரு புத்தகம் வெளிவிட பட்டதாம்.<br /><br />இதன் மூலம் நமக்கு புரியும் கருத்து என்பது, நல்ல சிந்தனைகள் மற்றும் செயல்கள் செய்யும் போது, அதில் உள்ள குறை நிறைகளை பற்றி கவலை படாமல் தொடந்து செய்வதன் மூலம் அது நீண்ட தூரம் பயணம் செய்து பலரை நல்வழி படுத்தும் என்பதுதான் என்று நண்பர் சொல்லி முடித்தார்.<br /><br />நண்பர் சென்று நீண்ட நேரம் ஆகியும் எனக்கு இந்த கதையை கேட்ட திருப்தியில் கிடைத்த சந்தோசம் மட்டும் குறையவே இல்லை, காரணம் இதையே வெவ்வேறு மத துறவிகள் அவர்கள் சமூகத்திற்கு வேறு வேறு வார்த்தைகளில் சொல்லி இருப்பதை எப்போதே படித்தது நினைவில் வந்தது.<br /><br />நபிகள் பற்றி படித்த போது அவர் சொன்ன ஒரு தகவல், எல்லா சமூககத்தினரும் அவர்கள் இனத்தின் மீது பற்று கொண்டு இருக்க வேண்டும், அதே நேரத்தில், தன் இனத்தில் மீது வெறி கொண்டவன் தீவிரவாதியாகிறான்.<br /><br />அப்படி வெறி கொண்ட யாரையும் எந்த சமூகத்தினரும் மன்னிக்கவே கூடாது, இல்லையெனில் அந்த வெறி தீ பொறிபோல பரவிவிடும்.<br /><br />இதே கருத்தை சுவாமி விவேகானந்தரும் சொல்லி இருக்கிறார், நாம் யார் என்பதை நம் எண்ணங்களே உருவாக்குகின்றன, ஆகவே நல்ல விசையத்தை பற்றி சிந்தியுங்கள், காரணம் எண்ணங்கள் நீண்ட தூரம் பயணம் செய்யும் சக்தி கொண்டவை, வார்த்தைகள் எல்லாம் இரண்டாம் பட்சம்தான்.<br /><br />“We are what our thoughts have made us; so take care about what you think. Words are secondary. Thoughts live; they travel far.” - Swami Vivekananda.<br /><br />அவ்வளவு ஏன், "பெரியதாக கனவு காணுங்கள்" அந்த நல்ல சிந்தனை ஒரு நாள் நிஜமாகும் என்று நம் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சொல்லி இருக்கிறார் இல்லையா?.<br /><br />நண்பர்களே, நாம் என்ன செய்கிறோம், ஏன் செய்கிறோம், என்பதை விட, நல்ல விசையங்களை பற்றி சிந்திக்க செய்தாலே போதும். அது தானாகவே காற்றில் கலந்து மற்ற அனைத்து மக்களையும் சென்று சேர்ந்து விடும்.<br /><br />இதைத்தான் இந்து மதத்தில், இந்த பிரபஞ்சம் அனைத்து கேள்விகளுக்கும் விடையை திறந்து வைத்து இருக்கிறது. அதை நல்ல சிந்தனையுடன் மனதை ஒரு நிலை படுத்தும் யார் வேண்டுமானாலும் பெற முடியும் என்று சொல்லி இருக்கிறார்கள்.<br /><br />நன்றி மீண்டும் சந்திப்போம்.சிங்கக்குட்டிhttp://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-952520241038452238.post-12556906374331269582012-01-31T22:00:00.002+09:002012-02-01T00:10:33.938+09:00புகையிலை விரிச்சா போச்சு! பெண் பிள்ளை சிரிச்சா போச்சு!வணக்கம் நண்பர்களே, <br /><br />நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.<br /><br />ஒரு நாட்டை விட்டு இன்னொரு நாட்டுக்கு குடிபெயர்வது எனக்கு ஒன்றும் புதிய அனுபவம் இல்லை என்றாலும், இந்த முறை எனக்கு ஒரு புதிய அனுபவமாகவே இருந்தது.<br /><br />எப்போதும் எனக்கென்று ஒரு ஊர், எனக்கென்று சில மக்கள் என்று ஒரு பெட்டியுடன் கண் மூடி கண் திறக்கும் முன் கடல் கடந்து இனம் மொழி பாராமல் கிடைப்பதை உணவாக கொண்டு அந்த உள்ளூர் மக்களோடு மக்களாக கலந்து விடுவேன்.<br /><br />ஆனால் இந்த முறை, புதிய வேலை, மனைவி, குழந்தைகள், அவர்கள் தங்கும் இடம், படிக்கும் இடம் என்று ஒவ்ஒன்றாக பார்த்து பார்த்து செய்து முடிக்கும் முன் போதும் போதும் என்று இருந்தாலும், அதுவும் ஒரு இனம் புரியாத சுகமாகவே இருந்தது. <br /><br />அது, இது என்று ஒரு வழியாக எல்லாம் முடிந்து இயல்பு வாழ்கைக்கு திரும்பியதும், நம் <a href="http://giriblog.com" target="new">கிரி</a> (இப்போது இருவர் வீடும் அடுத்தடுத்த தெருவில்) என்ன பாஸ் எழுதுவதை விட்டு விட்டதை போல் தெரிகிறது என்று சொன்ன போதுதான், எனக்கு வலைப்பூ என்று ஒன்று இருப்பதே நினைவில் வந்தது.<br /><br />என் முன்னைய பதிவில் சொன்னதை போல, சிங்கையை பற்றி என்னால் புதிதாக வேறு யாரும் சொல்லாததை எதுவும் எழுதி விட முடியாது.<br /><br />என்னை விட பெரிய ஜாம்பவான்கள் நிறைந்த களம் இது. அதே நேரம் என்னை சுற்றி நடக்கும் சில நல்ல விசையங்களை எனக்கு தெரிந்த எழுத்து நடையில் சொல்வதுதான் இந்த வலைப்பூவில் இனி என் நோக்கம்.<br /><br />சிங்கையில் எனக்கு மிக பிடித்த விசையங்களில் ஒன்று, இரவு உணவுக்கு பிறகு பாடல் கேட்டுக்கொண்டே ஒரு சிறிய நடை பயணம்,<br /><br />அன்று வானம் மப்பும் மந்தாரமுமாய் பல நிறத்தில் மேகங்கள் முட்டிக்கொண்டு இருந்தது.<br /><br />அருமையான காற்றுடன் மிக லேசான மழை தூறல் என் மனதை வருட, காதுக்கு "என் மேல் விழுந்த மழை துளியே, இத்தனை நாளாய் எங்கிருந்தாய்!" பாடலை கொடுத்து விட்டு மெதுவாக சாலை ஓரமாக நடக்க துவங்கினேன். <br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgwkgcn3CaVkIjVjXejhbKJwtrfKFyxFGBFbT6-fIfkL1RYZ1wA2PGMOTcOSQZy2gll2JQ0hO7Nyrpmf_2cCtamlAVfTvgcTXo_uHjm_roMQ6qJxYSaSs8br0vg1AfWvmF7hoclJfmWNvk/s1600/bsr.jpg" target="new"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgwkgcn3CaVkIjVjXejhbKJwtrfKFyxFGBFbT6-fIfkL1RYZ1wA2PGMOTcOSQZy2gll2JQ0hO7Nyrpmf_2cCtamlAVfTvgcTXo_uHjm_roMQ6qJxYSaSs8br0vg1AfWvmF7hoclJfmWNvk/s320/bsr.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5703722637489512258" /></a> <br /><br />இரவு நேரம் மட்டுமில்லாது, மழை பெரிதாகி விடும் என்று நினைத்து மக்கள் யாரும் சாலையில் இறங்கவில்லை என்றாலும், காற்றோடு கலந்து மழை நீரையும் கிழித்துக்கொண்டு சர்ர்ர்ர்ர் என்று சொல்லும் சில வாகனங்கள் என் பாடலின் அமைதியை திசை திருப்ப, அடுத்து வந்த சிறிய சாலைக்குள் என் நடையை திருப்பினேன்.<br /><br />எதிர்பார்த்ததை போலவே கருப்பு போர்வையின் இருபக்கமும் மஞ்சள் புள்ளி வைத்ததை போல நீண்ட சாலையின் இருபக்கமும் தெருவிளக்கின் வெளிச்சத்தை தவிர வேறு யாரும் இல்லை.<br /><br />ஒரு ஐந்து நிமிடம் கடந்து இருக்கும் சற்று தூரத்தில் தெரிந்த பேருந்து நிறுத்தத்தில் இருவர் அமர்ந்து இருப்பது விளக்கின் வெளிச்சத்தில் நிழலாக தெரிந்தது. <br /><br />விளக்கின் கீழ் மஞ்சள் ஒளியில் மழைதூறல் அதன் கீழ் பேருந்து நிறுத்த குடை அதன் கீழ் இரு உருவம் நிழலாக பார்க்க அருமையாக இருந்தது. <br /><br />புகைப்படம் எடுக்க முடியாமல் போன வருத்ததுடன், பாட்டை நிறுத்தி விட்டு ஆப்பிள் கை தொலைபேசியில் பார்த்தால் படம் எடுக்கும் படி ஒன்றுமே தெரியவில்லை.<br /><br />அப்படியே பார்த்துக்கொண்டே நடந்து எங்களுக்குள் இருந்த தூரம் குறைய, அந்த பெண்ணின் குரல் சற்று சத்தமாகவே அந்த இரவில் எனக்கு கேட்டது.<br /><br />ஆர்வத்துடன் அவர்கள் பேசுவதை கேட்க சற்று மெதுவாகவே நடந்து அருகே செல்ல, அந்த பெண்ணின் குரலில் இருந்த அளவு இளமை அவர் வயதில் இல்லை.<br /><br />அது ஒரு தத்தாவும் பாட்டியும் என்று பார்த்தவுடன் புரிந்தது, ஆனால் அந்த பாட்டி சற்று பதட்டத்துடன் இருந்தார்.<br /><br />பாட்டியின் கையை பிடித்து கொண்டு சாமாதானம் சொன்ன விதத்தில் இருந்து பாட்டியின் அருகே இருந்தவர் அவர் கணவர் என்று புரிந்தது.<br /><br />இந்த நேரத்தில் இவர்களுக்கு என்னவாக இருக்கும் என்ற ஆர்வத்துடன் பேருந்துக்கு நிற்ப்பதை போல நானும் நின்று அவர்கள் பேசுவதில் என் காதை கொடுத்தேன்.<br /><br />கேட்டவுடன் புரிந்தது அவர்கள் பேசுவது சீன மொழி என்று, ஆனால் புரியாதது அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது தான்.<br /><br />ஒருவேளை உடல் நிலை முடியாமல் மருத்துவமனை செல்ல இருக்கிறார்களோ என்று நினைக்கவும் முடியவில்லை, காரணம் அந்த நேரத்தில் சென்ற இரண்டு வாடகை கார்கள் காலியாகவே சென்றது. எங்கள் அருகில் வந்தபோது மெதுவடைந்து நாங்கள் வரவில்லை என்று உறுதியானவுடன் தான் எங்களை கடந்து சென்றது.<br /><br />பாட்டி இன்னுமும் படபடப்பாக பேச, அந்த முதியவர் அவரை சமாதான படுத்தும் அதே நேரத்தில் கை தொலை பேசியையும் பேருந்து வரும் சாலையிலும் கண்களை மாற்றிக்கொண்டுதான் இருந்தார்.<br /><br />ஒருவேளை அவர்களிடம் வாடகை காரில் செல்ல பணமில்லையோ? நாம் வேண்டுமானால் உதவலாமா என்று நினைத்தேன். ஆனால் அவர்கள் பிரச்சனை வேறாக இருந்து நம்மை தவறாக நினைத்துவிடுவார்களோ என்று என் மனம் என் எண்ணங்களுக்கு தடை போட்டது.<br /><br />சரி, என்னதான் நடக்கிறது என்று இன்னும் சற்று நேரம் பார்ப்போம் என்று நினைத்து கொண்டு, என் பார்வையை முதல் முறையாக அவர்கள் பக்கம் திருப்பும் அதே நேரத்தில், அந்த பாட்டி என்னிடம் எதோ கேட்டார். <br /><br />அது சீன மொழியல்ல, மலாய் மொழி என்பது மட்டும்தான் எனக்கு புரிந்தது, அவர் என்னை மலாய் மொழி பேசுபவர் என்று நினைத்து இருக்க வேண்டும். <br /><br />என் பார்வையில் இருந்த அர்த்தத்தை புரிந்து கொண்ட தாத்தா, இந்த நேரத்தில் வரவேண்டிய இரவு பேருந்து போயிருக்குமோ? என்று ஆங்கிலத்தில் கேட்டார்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVOUxU81Tm-jMA3BcRhZHLJ90hEQHtRuSYujGmRHt-bhp8Ybvcxndf6oU7rpymuryidU3UQExKnxtAcgr_cp0jTbXsEN9i6mcAUBcVT8OIoE8_L9hP1eEYj3KdLTaCXXDbh0hMhBQPRbs/s1600/ocbs.jpg" target="new"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 227px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVOUxU81Tm-jMA3BcRhZHLJ90hEQHtRuSYujGmRHt-bhp8Ybvcxndf6oU7rpymuryidU3UQExKnxtAcgr_cp0jTbXsEN9i6mcAUBcVT8OIoE8_L9hP1eEYj3KdLTaCXXDbh0hMhBQPRbs/s320/ocbs.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5703722785967662626" /></a><br /><br />எனக்கும் தெரியாமல் கையில் இருந்த என் ஆப்பிளை (கை தொலைபேசி) கேட்க, அது இன்னும் ஏழு நிமிடத்தில் ஒரு பேருந்தும் அதற்கடுத்து பதினாறு நிமிடத்தில் ஒரு பேருந்தும் வரும் என்று சொன்னதை சொன்னதோடு, அவர்கள் இருவரும் மீண்டும் படபடப்புடன் பேச தொடங்கி விட்டார்கள்.<br /><br />நானும் அடுத்தவர் விசையத்தை கேட்பது நாகரீகமாகாது என்று அவர்களிடம் எதுவும் பேசவில்லை.<br /><br />ஆக, இவர்கள் பேருந்துக்குதான் காத்து இருக்கிறார்கள் எனபது புரிந்தது.<br /><br />ஒருவேளை குடும்ப சண்டையாக இருக்குமோ?, கோவம் கொண்டு அம்மா வீட்டுக்கு போக இருக்கும் மனைவியை இவர் சமாதான படுத்துகிறாரோ! என்று நினைத்த அதே நேரம், என்னை நானே மனதுக்குள் குட்டிகொண்டேன்.<br /><br />இவரே பாட்டி, இவரின் அம்மா என்றால், அவர் இது வரை இருப்பது இந்நேரம் உலக அதிசியமாக இருந்தால்தான் உண்டு. <br /><br />அடகெப்பா உன்னை யாரப்பா இப்படியெல்லாம் யோசிக்க சொல்வது? என்று செந்திலை கேட்கும் கவுண்டரின் குரல் மனதுக்குள் ஒலிக்க, மெதுவாக சிரித்துக் கொண்டேன்.<br /><br />மழை லேசாக வேகம் எடுக்க துவங்கினாலும், குடை இல்லாமல் நடந்து வீட்டுக்கு போக முடியும் என்று தோன்றியதால், அப்படியே நிற்பதை தொடர்ந்தேன். <br /><br />சாலை முடிவில் பேருந்து வந்து திரும்பும் வெளிச்சம் தூரத்தில் தெரிந்ததும் இருவருமே படபடப்புடன் எதோ சொல்லிகொண்டே எழுந்து நின்று விட்டார்கள். <br /><br />அந்த பேருந்து அருகே வரும் போதே, ஒரு இளம் பெண் படிக்கட்டில் எட்டி பார்த்துகொண்டே வந்தார்.<br /><br />அருகில் வந்தவுடன் அது ஒரு இளம் வயது பள்ளி மாணவி என்று அவரின் சீருடை சொன்னது. இவர்கள் வயதோடு அந்த பெண்ணின் வயதை பார்த்தால் கண்டிப்பாக மகளாக இருக்க முடியாது, பேத்தியாகத்தான் இருக்கும் என்று எனக்கு புரிந்தது. <br /><br />பேருந்து முழுவதுமாய் நிற்கும் முன்னவே பாட்டி எதோ கத்த, அதை காதில் வாங்காமல், தன் கை தொலை பேசியை நீட்டி தன் தாத்தாவிடம் எதோ சொல்லிகொண்டே அந்த பெண் இறங்கினாள்.<br /><br />கை தொலை பேசியில் சார்ஜ் இல்லை என்று சொல்லுகிறாள், என்று எனக்கு நானே புரிந்து கொண்டேன். <br /><br />கோபத்துடன் கத்திகொண்டே சென்ற பாட்டி ஒரு அறை வைக்க போகிறார் என்று நான் நினைத்ததை போல எதுவும் இல்லாமல், அவர் தன் பேத்தியை அரவணைத்து தலையை தடவி அந்த பெண்ணை மேலிருந்து கீழ் வரை பார்க்க, தத்தா அவளிடம் இருந்த கை பையை வாங்கி கொண்டார்.<br /><br />ஆனாலும் பாட்டி இன்னமும் பேசுவதை (கத்துவதை) நிறுத்தவில்லை, அந்த பெண்ணும் இப்போதும் அதை காதில் வாங்காமல் தாத்தாவிடம் பேசுவதை நிறுத்தியபாடில்லை.<br /><br />என்னவென்று புரியாமல் நின்ற என்னிடம் அந்த தாத்தா, இது தன் மகளின் மகள், இவள் படிப்புக்காக நாங்கள் இவளோடு இங்கு தங்கி இருக்கிறோம், இன்று இவள் வர தாமதமானதால், பாட்டி பயந்து விட்டதாக ஒற்றை வார்த்தையில் சொல்லிகொண்டே மூவரும் பேருந்து நிறுத்தத்தின் பின் புறம் இருந்த பாதையில் நடக்க துவங்கி விட்டார்கள்.<br /><br />புகையிலை விரிச்சா போச்சு, பெண் பிள்ளை சிரிச்சா போச்சு, ஒரு பெண்ணை வளர்த்து நல்ல ஒருவரிடம் சேர்க்கும் வரை, பெற்றவர்கள் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு இருப்பது போல, என்று நம்ம ஊர் பாட்டிகள் சொல்லவது நினைவில் வர, எனக்கும் எதோ என் மகள் பத்திரமாக வந்து சேர்ந்ததை போல மனம் இதமாக, சிரித்துக்கொண்டே மீண்டும் நடக்க துவங்கினேன்.<br /><br />இனம் மொழி நாடு எதுவாக இருந்தாலும் சரி, எல்லா தாய்மையும் பெண்மையை ஒரே பாசத்தோடும் பயத்தோடும் தான் பாதுகாக்கிறார்கள்.<br /><br />பதிவை முடிக்கும் முன், நான் சிங்கை வந்ததும் என்னை சந்தித்த, தொலை பேசியில் அழைத்து பேசிய நண்பர்கள் <a href="http://www.giriblog.com" target="new">கிரி</a>, <a href="http://www.w3schools.com" target="new">சத்ரியன் </a> மற்றும் அனைவருக்கும் என் நட்புடன் நன்றி!.<br /><br />நன்றி, மீண்டும் சந்திப்போம்.<br /><br /><a href="http://www.singakkutti.blogspot.com" target="new"><img src="http://i1023.photobucket.com/albums/af360/singakkutti/th_Lion.gif" border="0" alt="Photobucket" ></a><br /><br /><a href="http://www.singakkutti.blogspot.com" target="new"><img src="http://i1023.photobucket.com/albums/af360/singakkutti/th_Singakkutti-R.gif" border="0" alt="Photobucket" ></a>சிங்கக்குட்டிhttp://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-952520241038452238.post-25550191887288364332011-08-10T20:16:00.003+09:002011-08-10T21:23:03.780+09:00வணக்கம் சிங்கப்பூர்!வணக்கம் நண்பர்களே, தென்கொரிய புயல் கரையை கடந்து விட்டது.
<br />
<br />வாழ்கை என்பதே ஒரு பயணம், அதில் நமக்கு சொந்தமானது என்பது எதுவுமே இல்லை என்பதை உறுதியாக நம்புகிறவன் நான்.
<br />
<br />ஆனால், வாழும்வரை நம்மை சுற்றி இருக்கிற விசையங்கள் மற்றும் நடக்கும் நிகழ்சிகளை பொறுத்தே நம் வாழ்கை முறையும் இருக்கும் என்பதையும் நான் மறப்பதில்லை.
<br />
<br />அதனால்தான் என்னவோ, நான் வசிக்கும் ஊர் மற்றும் இருக்கும் இடத்தை தேர்வு செய்வதில் மிக கவனமாக இருப்பேன்.
<br />
<br />தென்கொரியாவில் முழுதாக நான்கு ஆண்டுகள் ஓடிவிட்டாலும், தென்கொரியா என்னவோ எனக்கு சலிப்பே தட்டவில்லை, அவ்வளவு நிம்மதியான மற்றும் அழகான வாழ்கை முறை அங்கு.
<br />
<br />இருந்தாலும், ஒரு தனிமனிதன் குடும்ப சக்கரத்தில் நுழைந்தவுடன், சில சொந்த விருப்பு வெறுப்புகளை கட்டாயமாக மாற்றி கொள்ள வேண்டிய சூழ்நிலை வந்து விடுகிறது.
<br />
<br />இதில் தப்பி விட நான் ஒன்றும் அவதாரம் இல்லை என்பதால், சில தனிப்பட்ட காரணத்தை கருத்தில் கொண்டு தென்கொரியாவை விட்டு வரவேண்டிய நிர்பந்தம் உண்டாகி விட்டது.
<br />
<br />இந்த முறை இந்தியா அல்லது இந்தியாவிற்கு அருகில் இருக்கும் நம் தமிழ் கலாச்சாரத்தை கொண்ட இடத்திற்குத்தான் போக வேண்டும் என்ற ஒரு கட்டுப்பாடும் இதில் சேர்ந்து கொண்டது, காரணம் தென்கொரியாவை விட்டு வரும் நோக்கமே குழந்தைகளின் ஆரம்ப கல்விக்காகத்தான்.
<br />
<br />வெறும் ஆங்கில வழி அல்லது கொரிய மொழி கல்வி என்பதில் எனக்கும் சரி, என் குடும்பத்தினருக்கும் சரி விருப்பமில்லை,. தாய் மொழி இல்லாத வாழ்கை என்ன ஒரு வாழ்கை என்பதே அதன் உண்மையான காரணம்.
<br />
<br />அதன் காரணமாகவே இந்த முறை மிக கவனமாக நான் தேர்ந்து எடுத்தது "சிங்கப்பூர்".
<br />
<br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHpqI7Zz23FDNjR6Gq5xC2a34oHDvpELKwjdpjJe-rTufK_t4pb6PbyD-0E_V6eImm6r_O9Dhvf_53TeAVzDHG-qs0Iwq9Zwz7YIti6cbvR8gx1f2RrliuQfCo1pQRAIEVRckgp5PKLYg/s1600/UniqSingapore.jpg" target="new"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHpqI7Zz23FDNjR6Gq5xC2a34oHDvpELKwjdpjJe-rTufK_t4pb6PbyD-0E_V6eImm6r_O9Dhvf_53TeAVzDHG-qs0Iwq9Zwz7YIti6cbvR8gx1f2RrliuQfCo1pQRAIEVRckgp5PKLYg/s320/UniqSingapore.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5638839749841126018" /></a>
<br />
<br />சிங்கப்பூரை பொறுத்த வரை எல்லாம் பார்த்து பழகிய இடங்கள்தான், அதே போல மாற்றம் என்பது சிங்கையில் புதிது இல்லை என்றாலும், நான் பார்த்த சிங்கை இப்போது ரொம்பவே மாறி இருக்கிறது, மக்கள் தொகையும் அதிகமாக தெரிகிறது.
<br />
<br />மொத்த சிங்கப்பூரையும் கையடக்க ஆப்பில் தொலைபேசியில் அடக்கி வைத்து இருக்கிறார்கள், போகும் இடம், வழி முதல் அடுத்த பேருந்து வரும் நேரம், அருகில் இருக்கும் இடம், வாடகை வீடு, அங்காடி, மருத்துவமனை என்று அனைத்தையும் தொலைபேசியே சொல்லி விடுகிறது.
<br />
<br />மாற்றம் பல இருந்தாலும் எப்போதும் போலவே பொலிவு குறையாத "புது பெண்" போல சிங்கை வழக்கத்தை விட அதிகமாகவே என் மனதை கவர்கிறது,
<br />
<br />முதல் நாள் சாலை ஓர உணவு விடுதியில் இரவு உணவுக்காக சென்ற நான், என் தேவையை கேட்டு உதவி செய்ய வந்த பெண்ணிடம் பேசிய போதுதான், கேட்டு பழகிய உள்ளூர் தமிழ் வார்த்தைகள் என்றாலும், கடந்த நான்கு ஆண்டு கொரிய வாழ்கையில் சுத்தமாக அதை நான் மறந்து விட்டேன் என்று புரிந்தது.
<br />
<br />கோழி சோறுடன் டைகர் பீர் (புலிப்பால்) கேட்க நினைத்து, ஆன்டி டைகர் பீர் கேன் (beer can) என்று சொல்ல, சற்றும் தன் புன்னகை மாறாமல் "கேன் கேன் லா" (can can la), "போத்தில் ஆர் டின்"(Bottle or Tin) என்று பதில் கேள்வி கேட்க, "பீர் டின்" என்று சொல்லவேண்டும் என்பதை நினைத்து இருவருமே சிரித்து விட்டோம்.
<br />
<br />இனி தென்கொரியாவை போல என்னை சுற்றி இருக்கும் நகரத்தை பற்றி எழுதுவது என்பது சற்று சிரமம் என்பதை நான் நன்கு அறிவேன், காரணம் என்னை விட மூத்த பதிவர்கள் இங்கு அதிகம் மற்றும் அவர்கள் எழுதாத புதிய இடம் எதுவும் இங்கு என் கண்ணில் பட்டு விடப்போவதில்லை.
<br />
<br />ஆகவே, வழக்கம் போல என்னை சுற்றி நடக்கும் விசையங்களை சார்ந்த நல்ல பதிவுகளுடன் உங்களை இனி அடிக்கடி இணையத்தில் சந்திக்க முயற்சிக்கிறேன்.
<br />
<br />மொத்தத்தில் சிங்கையின் நாற்பத்தி ஆறாவது பிறந்தநாளை கொண்டாடும் சிங்கை மக்கள் மற்றும் தமிழ் பதிவர்களுடன் நானும் சேர்ந்து கொண்டேன்.
<br />
<br />ஆம், வாழ்கை பயணத்தில் அடுத்தது என்ன என்று தெரியும்வரை...!
<br />
<br />இனி நான் சிங்கைவாசி...! மறுபடியும் மறந்து விட்டேன் பாருங்கள், மன்னிக்கவும், இனி நான் <b>சிங்கைவாசி "லா" :-).</b>
<br />
<br />நன்றி மீண்டும் சந்திப்போம்.சிங்கக்குட்டிhttp://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.com33tag:blogger.com,1999:blog-952520241038452238.post-24968685468721219022011-07-03T23:34:00.000+09:002011-07-03T23:34:17.204+09:00தாஜ்மஹாலுக்கு பின்னால்...!எல்லா மதங்களும் நல்ல மதங்களே, ஆனால் எல்லா மனிதர்களும் நல்ல மனிதர்கள் அல்ல, அதிலும் அவர்களுக்கு "மதம்" என்னும் "மதம்" பிடித்து போகும் போது அவர்கள் மனிதர்களாகவே இருப்பது இல்லை.<br /><br />இதையே நபிகள் நாயகம் சொன்னார், நல்ல மனிதன் என்பவன் தன் மதத்தின் மீது பற்று கொண்டு இருக்க வேண்டும், ஆனால் தன் மதத்தில் அல்லது மதத்தின் பெயரில் ஒருவன் தவறு செய்யும் போது, அந்த தவறை கண்டிக்காமல் அவனுக்கு துணை போகிறவன் தீவிரவாதியாகிறான் என்று. <br /><br />இதை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால், இது இன மத ரீதியாகவோ அல்லது இந்தியாவின் அடையாள சின்னங்ககளில் ஒன்றின் பெருமையை குறைக்கவோ எழுதவில்லை.<br /><br />நான் கடந்து வந்த பாதையில் பல இடங்களில் பல தரப்பட்ட மனிதர்களால் <b>வாய்வழி சொல்லாக கேள்வி பட்ட தகவல்களை இங்கு தொகுப்பதே என் நோக்கமே தவிர, இதில் எது உண்மை, எது உண்மையல்ல என்று எனக்கும் தெரியாது.</b><br /><br />ஆனால், என்னை விட இதை பற்றி அதிகம் தெரிந்தவர்கள், நான் அறிந்த தகவல்களை ஆதாரத்தோட உறுதி படுத்தவோ அல்லது தவறாக எதுவும் இருந்தால் அதை சரியாக மாற்றவோ உதவும் என்ற நோக்கில் இங்கு இதை பகிர்கிறேன்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2JJ1UkdPRYzMCVp5UXyC49NcPhKnCc61swJJLbOXriM0AaAqoODLx9jWvIV1li-Ojr2s7A1XgTb2UmPk4sWPPhkyuYvtfSTtPALrY4FJhLw5r16MUGohM_pnw4sM4K52M9TKZAQV5SZw/s1600/Taj-Mahal.jpg" target="new"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2JJ1UkdPRYzMCVp5UXyC49NcPhKnCc61swJJLbOXriM0AaAqoODLx9jWvIV1li-Ojr2s7A1XgTb2UmPk4sWPPhkyuYvtfSTtPALrY4FJhLw5r16MUGohM_pnw4sM4K52M9TKZAQV5SZw/s320/Taj-Mahal.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5618396656180122674" /></a><br /><br />இன்று உலக அளவில் மிக பிரபலமாக இருக்கும் இந்திய உணவு "பிரியாணி" இதை கண்டு பிடித்தவர் தாஜ்மஹாலில் உறங்கும் மும்தாஜ்தான், அவர் கறி பிரட்டலில் பிரியாணி சமைக்கும் வாசம் அந்த பகுதியையே மயக்கி பசியை தூண்டுமாம்.<br /><br />இங்கு ஒரு கிளை தகவல் வந்து சேர்க்கிறது.<br /><br />இஸ்லாமியர்களில் ஒரு வழக்கம் இருக்கிறது, இளம் மனைவியை விதவையாக்கி விட்டு செல்லும் கணவனின் மூத்த அல்லது இளைய சகோதரர்களில் ஒருவர் அந்த இளம் விதவையின் வாழ்கை தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் அவரை திருமணம் செய்து கொள்ளவேண்டும். <br /><br />அப்படி திருமணம் செய்யும் போது அவருக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்தாலும், இன்னொரு மனைவியாக ஏற்றுக்கொள்வதில் தடையேதும் இல்லை.<br /><br />இதை இங்கு சொல்ல காரணம், மும்தாஜ் திருமணமாகி இளம் வயதில் தன் கணவனை இழந்ததால் அவர் கணவரின் திருமணமான சகோதரர் மும்தாஜையும் தன் மனைவியாக்கிகொண்டார்.<br /><br />இவ்வாறு ஒருநாள் தன் வீட்டில் மும்தாஜ் பிரியாணி சமைத்துக்கொண்டு இருக்க, வழக்கம் போல வாசனை அந்த பகுதியை தூக்கியது.<br /><br />அப்போது அந்த பகுதியில் தன் சுற்றங்களுடன் வலம் வந்த "ஷாஜஹான்" இந்த வாசத்தில் மயங்கி தன் சேவகனை சென்று அது என்ன என்று பார்த்து வர அனுப்பினார்.<br /><br />அரசாங்க சேவகன் மூலம் அரசர் தான் சமைக்கும் உணவின் வாசத்தில் மயங்கியதை கேட்டு மகிழ்ந்த மும்தாஜ் அவருக்கு ஒரு தட்டில் வைத்து கொடுத்து அனுப்பினார்.<br /><br />அந்த புது உணவை சுவைத்து மகிழ்ந்த ஷாஜஹான், இத்தனை சுவையான உணவை சமைத்தவருக்கு நான் ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும் என்று சொல்லி அவரை அழைத்து வர சொன்னார்.<br /><br />அரசன் முன் வந்து நின்ற மும்தாஜை பார்த்ததும், அவரின் அழகில் மயங்கி மும்தாஜை தன் காதல் மனைவியாக்கி கொள்ளவிரும்புவதாக சொல்லி (கணவரை மிரட்டி என்றும் கேட்டதுண்டு) அவரை தன்னோடு அழைத்து சென்று விட்டார். <br /><br />ஷாஜஹானுக்கும் ஏற்கனவே திருமணமாகி இருந்தாலும், அழகில் அதிக நாட்டம் கொண்ட ரசிகனாம் அவர்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjwpA5tWix4OVqXlFjE2acpyJPesxX1u9DWEmzOrDUzA98W9ZUZcFK6hkKEpgeGEoWwole-32Cc_IKJDZG3RV2PAMTfOXB8NeAV02q6o8cbvExcxhupCnengHtJpn4BBGw-GBMtpY3ClrA/s1600/ShahJahan-Mumtaz.jpg" target="new"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 228px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjwpA5tWix4OVqXlFjE2acpyJPesxX1u9DWEmzOrDUzA98W9ZUZcFK6hkKEpgeGEoWwole-32Cc_IKJDZG3RV2PAMTfOXB8NeAV02q6o8cbvExcxhupCnengHtJpn4BBGw-GBMtpY3ClrA/s320/ShahJahan-Mumtaz.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5618396941286385458" /></a><br /><br />பின்னாளில் மும்தாஜ் மீது மிகுந்த காதல் கொண்டிருந்த ஷாஜஹான், 1631 ஆம் ஆண்டு புர்ஹாம்புரில் உள்ள புலாரா மஹாலில் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்துவிட்டு மும்தாஜ் மரணமடைந்துவிட, அவர் மீது கொண்ட காதலால் மும்தாஜுக்கு ஒரு நினைவு சின்னம் கட்டவேண்டும் என்று ஷாஜகான் விரும்பினார்.<br /><br />அதன் விளைவாகவே ஆக்ராவில் யமுனையாற்றின் கரையில் தாஜ்மஹால் கட்டப்பட்டது.<br /><br />தாஜ்மஹால் வேலைகள் முடிந்து மும்தாஜின் உடலை இங்கு அடக்கம் செய்யும் வரை மும்தாஜின் உடல் புர்ஹாம்புரில் உள்ள புலாரா மஹாலில்தான் வைக்கப்பட்டிருந்ததாம்.<br /><br />முழுவதும் வெள்ளை சலவைகள் மூலம் தாஜ்மஹால் கட்டப்பட்டதால் நாட்டின் பொருளாதரமே பாதிக்கப்பட்டதாம், ஆனாலும் அதை பற்றி வருந்தாமல் யமுனையாற்றின் மறு கரையில் தாஜ்மஹால் போலவே கருப்பு சலவைகள் மூலம் தனக்கு ஒரு நினைவு சின்னம் எழுப்பி தான் இறப்புக்கு பிறகு தான் உடலை மும்தாஜின் சமாதியை பார்ப்பது போல அமைக்கும் வேலையில் இறங்கிவிட்டாராம்.<br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjP2PARq_9AHAhH82tvWXSOu2SABS6dMJ4sLKYXPDt3DwyYx0fOse1mdbexerJ2fKWxVMsgpzXyChUQvudlxPrQ6nsbJP_TNOqbZEl6gWUpHYweinnwMMKSqotYvV8MFZUZoTvlQkNPwhg/s1600/Black-Taj-Mahal.jpg" target="new"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 264px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjP2PARq_9AHAhH82tvWXSOu2SABS6dMJ4sLKYXPDt3DwyYx0fOse1mdbexerJ2fKWxVMsgpzXyChUQvudlxPrQ6nsbJP_TNOqbZEl6gWUpHYweinnwMMKSqotYvV8MFZUZoTvlQkNPwhg/s320/Black-Taj-Mahal.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5618397218183266530" /></a><br /><br />இதில் கோவம் கொண்ட அவர் பட்டத்து வாரிசான ஷாஜஹானின் மகன் ஓரங்கசிப் தந்தை என்றும் பாராமல் அவரை சிறையில் வைத்து தான் ஆட்சியை எடுத்து நடத்தினாராம். <br /><br />தன் <a href="http://www.agraonline.co.in/tajmahal_black.php" target="new">கருப்பு தாஜ்மஹால்</a> ஆசை நிறைவேறாமல் போனதால் சிறையில் இருந்த தன் கடைசி காலத்தில் ஷாஜஹான் தன்னையும் மும்தாஜின் சமாதிக்கு அருகில் அடக்கம் செய்யுமாறு கேட்டுகொண்டாராம்.<br /><br />இது இப்படி போக, இன்னொரு பக்கம் அது தாஜ்மஹாலே அல்ல என்றும், அது ஷாஜஹானின் காலத்துக்கு முன்பே இருந்த ராஜபுத்திர கட்டிடகலை அமைப்பில் உருவாக்க பட்ட கோவில் என்றும் வெவ்வேறு ஆதாரம் மற்றும் புகை படங்களோடு பல கட்டுரைகள் வருகின்றன. <br /><br />இவர்கள் சொல்வது, கரையான்கள் கட்டிய வீட்டை நல்ல பாம்பு தன் வீடாக்கி கொண்டதை போல, மொகலாய ஆட்சியில் இந்த கோவில் தாஜ்மஹாலாக மாற்ற பட்டு விட்டதாகவும், உலகில் எந்த இஸ்லாமிய கட்டிடகலை அமைப்பிலும் தாஜ்மஹால் போல இல்லை என்றும், மேலும் "மஹால்" என்று முடியும் எந்த கட்டிடமும் தாஜ்மஹாலுக்கு முன் கட்டும் வழக்கம் மொகலாய, இஸ்லாமிய கட்டிடகலையில் இல்லை என்றும் தங்கள் பக்க கருத்துக்களை முன் வைக்கிறார்கள்.<br /><br />ஒரு கோடி ஆண்டுக்கு முன் விசையங்களை தோண்டி எடுக்கும் ஆய்வாளர்கள், வெறும் முந்நூறு வருடத்துக்கு முன்னய ஆதாரத்தை தோண்டி எடுப்பது என்ன பெரிய விசையமா என்றும் கேள்வி கேட்கிறார்கள்? <br /><br />இதை பற்றி அதிகம் படிக்க, படங்களை பார்க்க இணைப்பை இங்கு கொடுத்துள்ளேன்.<br /><br /><center><br /><a href="http://www.stephen-knapp.com/was_the_taj_mahal_a_vedic_temple.htm" target="new">தாஜ்மஹாலா கோவிலா?</a> <br /></center><br /><br /><u>தாஜ்மஹால் பற்றிய கேட்ட சில சுவாரசியமான தகவல்கள்</u> <br /><br />இருபது ஆண்டுகளாக கட்டி முடிக்க பட்ட தாஜ்மஹாலின் வடிவமைப்பாலரின் கை விரல்களை வெட்டி எடுத்து அவரை சிறையில் அடைத்து விட்டாராம் ஷாஜஹான்.<br /><br />இனி வரும் நாட்களில் இதுபோல வேறு யாருக்கும் வடிவமைத்து கொடுக்ககூடாது என்பது ஷாஜஹானின் நோக்கம்.<br /><br />மரண படுகையில் இருந்த அந்த வடிவமைப்பாளர், இது போல நடக்கும் என்று தெரிந்துதான், அந்த கட்டிடத்தில் ஒரு குறையை வைத்து உள்ளேன்.<br /><br />அதாவது மழை வரும் போது ஒரு துளி நீர் மும்தாஜின் சமாதி வரை வடியும் என்றும், அதை தன்னை தவிர வேறு யாரும் இனி எந்த காலத்திலும் சரி செய்ய முடியாது என்பதுதான் அவர் சொன்ன தகவல்.<br /><br />அதே போல அக்குறையை இன்றுவரை யாராலும் சரி செய்ய அல்ல எப்படி, எங்கே இருந்து நீர் உள்ளே வருகிறது! என்று கூட கண்டு பிடிக்கக்கூட முடியவில்லையாம்.<br /><br /><u>இதே போல மற்றொரு சுவையான தகவல்.</u><br /><br />கடந்த நூற்றாண்டின் நடுவில் தாஜ்மஹாலில் பராமரிப்பு நடை பெற்ற போது, ஒரு இடத்தில ஓட்டை விழுவதை கண்டறிந்த ஆய்வாளர்கள் அதை எப்படி கட்டிடத்தின் மற்ற இடத்திற்கு பாதிப்பு வராமல் சரி செய்வது என்று குழம்பி விடை கண்டு பிடிக்க முடியாமல், தாஜ்மஹாலில் பராமரிப்பு புத்தகத்தை புரட்டினார்களாம்.<br /><br />அதில் இரநூறு வருடங்களுக்கு முன் இதே போல ஒரு இடத்தில வந்த ஓட்டையை அடைக்க வெள்ளியை காய்ச்சி ஊற்றி அடைத்ததாய் படித்து வியந்து, அதே போல செய்து பிரச்சனையை தாஜ்மஹாலுக்கு வேறு பாதிப்பில்லாமல் சரி செய்தார்களாம்.<br /><br />எது எப்படியோ, வரலாற்றில் எது உண்மையோ எனக்கு தெரியாது, ஆனால் இன மத காலத்தை கடந்து இந்தியாவின் ஒரு முக்கிய அடையாள சின்னமாக கம்பீரமாக நிற்கும் தாஜ்மஹாலை இன்று பார்த்தாலும் ஒரு நிமிடம் யாருக்கும் மூச்சு முட்டும் என்பது மறுக்க முடியாத உண்மை.<br /><br />நன்றி மீண்டும் விரைவில் சந்திப்போம்.<br /><br /><a href="http://www.singakkutti.blogspot.com" target="new"><img src="http://i1023.photobucket.com/albums/af360/singakkutti/th_Lion.gif" border="0" alt="Photobucket" ></a><br /><br /><a href="http://www.singakkutti.blogspot.com" target="new"><img src="http://i1023.photobucket.com/albums/af360/singakkutti/th_Singakkutti-R.gif" border="0" alt="Photobucket" ></a>சிங்கக்குட்டிhttp://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-952520241038452238.post-15670109395378743482011-05-09T19:59:00.001+09:002011-05-09T20:12:33.816+09:00"அட்சய திருதியை + புகைப்படம்"அட்சயத் திருதியை இரண்டு நாட்களாக மாற்றிவிட்டதாக வந்த செய்தியை படித்து சிரித்தாலும், இது காலப்போக்கில் பல ஆயிரம் ஆண்டுகளாக கொண்டாடி வந்த "சித்திரை தமிழ் புத்தாண்டை" அரசியல் ஆதாயத்துக்காக "தை" முதல் நாள் மாற்றியது போல, வியாபார உள் நோக்கோடு நம் வியாபாரிகளாய் மாற்றிக்கொண்டது என்பதை வரும் தலைமுறைகள் மறந்து தங்கள் சேமிப்பை கரைக்க போகிறார்கள் என்ற வேதனையும் நெருடுகிறது.<br /><br />யார் கொடுத்தார்கள் இவர்களுக்கு இந்த அதிகாரத்தை? என ஒரு சந்தேகமும் கூடவே வருகிறது?<br /><br />"அட்சயத் திருதியை" என்று இந்துமதம் சொல்வது என்ன? என்பதை புரிந்து கொள்ள எடுத்த முயற்சியே இந்த பதிவு.<br /><br />பூரியசஸ் மன்னரின் கதை சிறுவயது முதல் தமிழர் அனைவரும் அறிந்ததே, பூரியசஸ் மன்னருக்கு மகாவிஷ்ணு தரிசனம் கொடுத்த நாள்தான் திரிதியை.<br /><br />அந்த நல்ல நாளில் செய்யும் தான தருமங்கள் "அட்சய பாத்திரம்" போல அளவற்ற பலனைக் கொடுக்கும் என்பதால் திரிதியை தினத்தை "அட்சய திரிதியை" என்று சொல்லும் வழக்கம் வந்தது.<br /><br />இந்து மதத்தை பொறுத்தவரை "வளருதல் அல்லது என்றுமே குறையாதது" என்னும் பொருளே "அட்சயம்", பார்வதி தனது பிறந்த வீட்டுக்கு வந்ததும், பரசுராமர் அவதரித்ததும் அட்சய திருதியையன்றுதான்.<br /><br />கிருதயுகத்தில் வறுமையில் வாடிய குசேலர் தனது பால்ய நண்பர் கிருஷ்ணரை சந்திக்க தனது கந்தலான மேலாடையில் ஒரு படி அவலை எடுத்துக்கொண்டு வந்தபோது, அந்த அவலை பாசத்துடன் உண்ட கிருஷ்ணர் ‘அட்சயம்’ என சொல்ல, குசேலரின் மண் குடிசை மாளிகையாகி குசேலர் வற்றாத பெரும் செல்வத்துக்கு அதிபதியானார், இவை நடந்ததும் அட்சயத் திருதியை அன்றுதான்.<br /><br />ஆக, சித்திரை வளர்பிறையின் மூன்றாவது நாளான அட்சய திருதியையன்று செய்யும் எந்த ஒரு செயலும் விருத்தியாகும் என்றும், அதனால் அட்சயத் திருதியையன்று கடவுளுக்கு பூஜைகள் செய்து, தன்னால் ஆன தான தருமங்களை செய்து நல்ல முறைகள் வாழவே இந்து மதம் சொல்கிறது.<br /><br />அட்சய திருதியைக்கு பொருட்கள் மட்டுமே வாங்க வேண்டும் என்பது தவறான நம்பிக்கை.<br /><br />உண்மையில் அன்று சுமங்கலி பூஜைசெய்வது மற்றும் உணவு, ஆடை போன்ற நம்மால் முடிந்த வாழ்வின் அடிப்படை பொருட்களை தானம் கொடுப்பதுதான் மிக சிறந்த செயலாகும்.<br /><br />அன்றைய தினம் தானம் கொடுபவர்களிடம் எப்போதும் குறையாத அட்சய பாத்திரம் இருப்பது போல பலன் கிடைக்கும் என்பது இந்துமத நம்பிக்கை.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgLM6cmmP_t2iUPK-X9MwUaZ2g8wOS_YZwIT6JvfiB-1t-C893BBJtabwKXITFjRAFt7gKqL9GHkrD9jzLtGh17h_hIV9224yQk2unY4Q7uuhal15P25XERJiwVQQn8sU80VIwmttmnays/s1600/Glod.jpg" target="new"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgLM6cmmP_t2iUPK-X9MwUaZ2g8wOS_YZwIT6JvfiB-1t-C893BBJtabwKXITFjRAFt7gKqL9GHkrD9jzLtGh17h_hIV9224yQk2unY4Q7uuhal15P25XERJiwVQQn8sU80VIwmttmnays/s320/Glod.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5604289659487351330" /></a><br /><br />அட்சய திருதியைக்கு செல்வம் (தங்கம்) வாங்க வேண்டும் என்று ஏன் வந்தது என்றால்? அத்தினத்தன்று லட்சுமி குடியிருக்கும் பொருட்களை வாங்கலாம் என்பதும் இந்துமத நம்பிக்கை. <br /><br />இந்து பெண்கள் தாலி முதல் அனைத்து தங்க ஆபரங்களையும் செல்வத்துக்கு அதிபதியான லட்சுமியாக பார்ப்பதால் வந்த இடை சொருகல்தான் இந்த "தங்கம் வாங்க வேண்டும்" என்பது.<br /><br />உண்மையில் லட்சுமி குடியிருக்கும் பொருட்கள் என்று பார்த்தால், நாம் வாங்க வேண்டிய பொருட்கள் மஞ்சள், கைக்குத்தலில் வந்த முனை முறியாத பச்சரிசி மற்றும் "கல்"உப்பு போன்றவைதான் (நன்றி தினமலர் ஆன்மீக வினா விடை).<br /><br />நம் புது வீட்டின் கிரஹப் பிரவேசத்தில் முதன் முதலில் பசு நுழைய அத்துடன் "கல்"உப்பு மற்றும் அரிசியை முதலில் கொண்டு சென்று வைத்து, பின் கறந்த பசுவின்பாலை காய்ச்சுவது என்பது அந்தப் பொருட்களில் லட்சுமி குடியிருப்பதால் என்ற நம்பிக்கையில்தான் (இப்போது பக்கெட் பால்தான் எல்லாம் என்பது வேறு விசையம்).<br /><br />இது போல அட்சயத் திருதியை தினத்தில் லட்சுமிகரமான எந்த ஒரு மங்களகரமான பொருட்களையும் வாங்குவதே அடிப்படை அட்சயத் திருதியையின் அர்த்தம்.<br /><br />கற்காலத்தில் இடி, மின்னல், பாம்பு என்று தனக்கு தீங்கு அல்லது தன்னை விட சத்தி கொண்ட இயற்கை, வானம் பூமி என்று அனைத்தும் மனிதனுக்கு கடவுளாக தெரிந்தது.<br /><br />அந்த வழி வந்த நமக்கு இன்னும் நம் அடிப்படை எண்ணம் மாறாமல் இப்போது தங்கம் அல்லது பணத்தில் அதிக மதிப்பு கொண்டவை மட்டும் லட்சுமியாக(கடவுளாக) தெரிகிறது.<br /><br />அப்படி பார்த்தல் கூட சுக்கிரனை உரிய கிரகமாக கொண்ட லட்சுமிக்கு பொருத்தமாக அட்சயதிருதியை தினத்தில் வெள்ளி வாங்குவதுதான் குடும்ப நலனுக்கு பொருந்தும் என்பதுதான் சரியான கருத்து.<br /><br />ஆக, அட்சயதிருதியை அன்று லட்சுமியை மட்டும் மனதில் கொண்டு தங்கம் மட்டுமே வாங்க வேண்டும் என்று நினைப்பது அறியாமை.<br /><br />அட்சயதிருதியை அன்று லட்சுமி மட்டுமில்லாமல், சிவன் பார்வதி, நாராயணனனையும் மற்றும் நம் நலனுக்காக வாழ்ந்த முன்னோகளையும் நினைத்து பூஜை செய்தால், நம் பாவம் அனைத்தும் விலகி நல்ல வாழ்வை பெறலாம் என்பதை புரிந்து கொண்டு, நம் வாரிசுகளுக்கும் இந்த உண்மை கருத்தை சொல்லி அவர்களை சரியான பாதையில் கொண்டு செல்வது நம் கடமையாகும்.<br /><br />வழக்கம் போல பொதுவாக தெரிந்த விசையத்தை பற்றி என் சொந்த கருத்தை பகிர்வதோடு முடிக்காமல், இன்று நான் "கிளிக்"யத்தில் பிடித்தவை சில உங்கள் பார்வைக்கு (Sony DSC-H50).<br /><br />(புகைப்படத்தை சொடுக்கி பார்த்தல் இன்னும் அழகாக தெரியும்)<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSPTlnyRI3-J6kzsff5ZLAmawlB0geIVSI_SsMqF9YfqAmpetTQCVVgP2AMU4ucv9blaPuniI0i-Nc5sEYN47L-2kEsSWz7bc-Wg8wrnfu30CuIcDuFDD9Qkv6olV75LF1UO_VBChg-Hc/s1600/Bee-Flower.jpg" target="new"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 280px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSPTlnyRI3-J6kzsff5ZLAmawlB0geIVSI_SsMqF9YfqAmpetTQCVVgP2AMU4ucv9blaPuniI0i-Nc5sEYN47L-2kEsSWz7bc-Wg8wrnfu30CuIcDuFDD9Qkv6olV75LF1UO_VBChg-Hc/s400/Bee-Flower.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5604214449452128834" /></a><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg44VNgcsgM8BOafS_Na5CpuEQ4awQ2wpxU5m0GODPJi7-W0R_UCkXVqWUo9AxC84cWoaUni6AK8kqJrDnFP9nEojrkzYGEQCoE57Ji4_oH_rDJaaNhh0V74N3El-00wPW9JGWDRU5XL-E/s1600/BlueMoon.JPG" target="new"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg44VNgcsgM8BOafS_Na5CpuEQ4awQ2wpxU5m0GODPJi7-W0R_UCkXVqWUo9AxC84cWoaUni6AK8kqJrDnFP9nEojrkzYGEQCoE57Ji4_oH_rDJaaNhh0V74N3El-00wPW9JGWDRU5XL-E/s400/BlueMoon.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5604215939250212914" /></a><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSjU80lcTJce6T_5xuH1cVQjdJzLX2YUBXt9LsFVQetDOLOlHayZEyax07Fdl15Yrxjb4KdkiQdBdhHt6kULkdmnrzs7cQAmS8QDqh6fAsQkGFpFoeIgqmregwc1cK9xvvLNA_zQ1lSzA/s1600/GreenTree.JPG" target="new"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSjU80lcTJce6T_5xuH1cVQjdJzLX2YUBXt9LsFVQetDOLOlHayZEyax07Fdl15Yrxjb4KdkiQdBdhHt6kULkdmnrzs7cQAmS8QDqh6fAsQkGFpFoeIgqmregwc1cK9xvvLNA_zQ1lSzA/s400/GreenTree.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5604216168260602258" /></a><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgAs7qjm9LIMDaetVpwopHv4RhTzCAoVvNNqekUpaTwMiUBaigSHQ0elngW7mQtyiXym_ngbqptJ-WoW0lh1P8Yq_G61raeK4-JGIwSEekfYecRlzs1qDtUi8ZmLN2yoq3QELArYbmAh4Q/s1600/SpringTree.jpg" target=new"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 303px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgAs7qjm9LIMDaetVpwopHv4RhTzCAoVvNNqekUpaTwMiUBaigSHQ0elngW7mQtyiXym_ngbqptJ-WoW0lh1P8Yq_G61raeK4-JGIwSEekfYecRlzs1qDtUi8ZmLN2yoq3QELArYbmAh4Q/s400/SpringTree.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5604235890478635378" /></a><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5SiqsRY4HO5QnwGiax8hZkRbeXj3qg6OAo810jhEePl8kQexwGvHuVNGJbDAdcyALnxvtBjyIqY14kFlfNwXY97oaZH9ywVhnuKsfwkb_TrokBczY3Fzo9GtDHS-eGYb7BbnwNVu1w8Q/s1600/YelloAnt.jpg" target="new"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 270px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5SiqsRY4HO5QnwGiax8hZkRbeXj3qg6OAo810jhEePl8kQexwGvHuVNGJbDAdcyALnxvtBjyIqY14kFlfNwXY97oaZH9ywVhnuKsfwkb_TrokBczY3Fzo9GtDHS-eGYb7BbnwNVu1w8Q/s400/YelloAnt.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5604236234462526306" /></a><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhSmarW_vLALnY9GgVPCOAGHKEmdVrToQ0EaejqcWzPBA6xb47oDNfvIo2-G9zAbkwPrnARKCO2hIGVY0Vwk7qkYdHJEDx2anHlEhl5_4FCS6pN3bfk6AlPGkweCZeyy1tunIaBQEzRNxA/s1600/Sun.jpg" target="new"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 216px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhSmarW_vLALnY9GgVPCOAGHKEmdVrToQ0EaejqcWzPBA6xb47oDNfvIo2-G9zAbkwPrnARKCO2hIGVY0Vwk7qkYdHJEDx2anHlEhl5_4FCS6pN3bfk6AlPGkweCZeyy1tunIaBQEzRNxA/s400/Sun.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5604241494282817794" /></a><br /><br />நன்றி.<br /><br />என்றும் அன்புடன்,<br /><br /><a href="http://www.singakkutti.blogspot.com" target="new"><img src="http://i1023.photobucket.com/albums/af360/singakkutti/th_Lion.gif" border="0" alt="Photobucket" ></a><br /><br /><a href="http://www.singakkutti.blogspot.com" target="new"><img src="http://i1023.photobucket.com/albums/af360/singakkutti/th_Singakkutti-R.gif" border="0" alt="Photobucket" ></a>சிங்கக்குட்டிhttp://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.com17tag:blogger.com,1999:blog-952520241038452238.post-91344269822958034692011-04-25T19:44:00.001+09:002011-04-25T19:55:52.110+09:00சாய்பாபா...!இது சாய்பாபா கடவுளா இல்லையா என்றோ!, அல்லது அவர் இயற்கை எய்தியதை கிண்டல் செய்யவோ!, அல்லது மதசார்பான ஆன்மீக பதிவோ அல்ல.<br /><br />என் வாழ்கையில் சாய்பாபாவோடான அனுபவத்தையும் நான் புரிந்து கொண்டதையும் பகிர்ந்து கொள்வதே இங்கு என் நோக்கம்.<br /><br />எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் பிறப்பின் அடிப்படையில் இந்து மத முறையில் கடவுள் நம்பிக்கை கொண்ட குடும்பமானாலும், உயிரோடு வாழும் எந்த மனிதரையும் கடவுள் என்று காலில் விழும் பழக்கம் இல்லாததுதான் எங்கள் குடும்பம்.<br /><br />அதே போல நாங்கள் நம்பவில்லை என்பதால் மற்ற யாரையும் விமர்சனமும் செய்ததும் இல்லை.<br /><br />இந்த நிலையில் எங்கள் பக்கத்துக்கு வீட்டில் குடிவந்தவர்களுடன் எங்களுக்கு மிக நெருங்கிய பழக்கம் வந்தது, அவர்களும் ஆண் பிள்ளை இல்லை என்பதால் என் மீது சொந்த மகன் போல அன்பு செலுத்தினர்.<br /><br />"சாய்பாபா" என்ற வார்த்தையே முதன் முதலில் கேள்விபட்டது அவர்கள் மூலம்தான், அவர்கள் குடும்பம் அவர் மீது அதீத நம்பிக்கை கொண்டு அவரை கடவுளாக தொழுது வந்தனர். <br /><br />அப்போது எனக்கு ஒரு ஐந்து வயதிற்குள்தான் இருக்கும் என்று நினைக்கிறேன், ஒரு முறை வழக்கம் போல சாய்பாபாவின் அற்புதங்களை பற்றி பேசிக்கொண்டு இருந்த அந்த அம்மா, அவர் கொடைக்கானல் வருவதாகவும் அவரை நேரில் சந்திக்க எங்களையும் அழைத்து செல்வதாக சொல்ல...!<br /><br />அவர்களுடன் இருந்த நட்பின் அடிப்படையில் என் தாயும் சம்மதிக்க, ஒரு விடுமுறை பயணம் போல அனைவரும் தயாரானோம்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjxA1Ee7gk6n7l2X7CT9jQfxwCdaMtP2Q75PyooEp9LpVdGDsqapDE2IzluP6estz0ahIcQgUUHnFqP9mlSd1NWW__evD7TxFmWLjfXMAfGGeSZerFyNrm6YGZ6m5bkojrKr9D_GqZPB_s/s1600/ABK.jpg" target="new"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 226px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjxA1Ee7gk6n7l2X7CT9jQfxwCdaMtP2Q75PyooEp9LpVdGDsqapDE2IzluP6estz0ahIcQgUUHnFqP9mlSd1NWW__evD7TxFmWLjfXMAfGGeSZerFyNrm6YGZ6m5bkojrKr9D_GqZPB_s/s320/ABK.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5599461073037996002" /></a><br /><br />கொடைக்கானலில் அது ஒரு அழகான மற்றும் அமைதியான பங்களா, அதுதான் சாய் ஸ்ருதி ஆசிரமா என்று சரியாக எனக்கு நினைவில்லை. <br /><br />நாங்கள் காத்திருக்க, சிறிது நேரத்தில் முழு காவி உடையுடன் சாய்பாபா நடந்து வந்தார், நடை பாதைக்கு இருபுறமும் மக்கள் அவரை கும்பிட, அவர்களுக்கு ஆசிர்வாதம் செய்தபடி எங்களை கடந்து போனார்.<br /><br />சிறுவனாக அங்கு கொடுத்த சாய்பாபா படத்தை கையில் வைத்து விளையாடிக்கொண்டு இருந்த நான், என்ன நினைத்தேனோ, அவர் பின்னால் ஓடி, அவர் முன் சென்று பாதையில் நின்று அவரிடம் அந்த படத்தை நீட்டினேன்.<br /><br />அவர் நடக்கும் பாதையில் யாருமே போகவில்லை என்றாலும் நான் மிக சிறுவன் என்பதால் என்னை யாரும் தடுக்க வில்லை என்றே நினைக்கிறேன்.<br /><br />என்னை பார்த்து சிரித்த அவர் என் தலையில் தன் கையை வைத்து " பங்காரு...! பங்காரு...!" என்று சொன்னவர் (தெலுங்கில் பங்காரு என்றால் தங்கம் என்று அர்த்தம்) நான் நீட்டிய படத்தை வாங்கி "With Love Baba" என்று கையப்பமிட்டு மீண்டும் என்னிடமே கொடுத்து விட்டு சென்றார்.<br /><br />அதன் பின் அந்த படம் நீண்ட நாட்கள் எங்கள் வீட்டில் இருந்த நினைவு இருக்கிறது, ஆனால் இன்னும் இருக்கிறதா என்று தெரியவில்லை!. இதுதான் நான் அவரை சந்தித்த அனுபவம்.<br /><br />அதன் பின் நாட்கள் நகர வளரும் பருவத்தில் விவேகானந்தர் சுபாஸ் முதல் கீதை, குரான் பழைய (புதிய) ஏற்பாடு முதல் ஓசோ வழியாக கண்ணதாசனின் "கம்ப ரசம்" வரை (இது தடை செய்த புத்தகம் என்று நினைக்கிறேன்) கையில் கிடைத்த புத்தகத்தை எல்லாம் படிக்கும் விடலை பருவத்தில் சாய்பாபா மீது எனக்கு பெரிய அபிப்பிராயம் எதுவும் கிடையாது.<br /><br />காரணம் கையில் இருந்து விபூதி, மோதிரம், வாயில் இருந்து லிங்கம் எல்லாம் எடுத்துதான் ஒரு கடவுள் தன்னை கடவுள் என்று நிரூபிக்க வேண்டுமா? அல்லது ஒரு கடவுள் தன்னை தானே கடவுள் என்று சாதாரண மக்களிடம் உணர்த்த விரும்புவது ஏன்? என்று எனக்குள் பல கேள்விகளை கேட்டு கொள்வேன்.<br /><br />இப்படியாக நான் என் பாதையில் போக மொத்தமாக சாய்பாபா என்ற வார்த்தையையே மறந்து போனேன், அவர் சார்ந்த செய்திகளை கூட படிப்பதில்லை, ஆனாலும் "திரு.அப்துல்கலாம்" போல அறிவியல் விஞ்ஞானிகள் கூட இவர்கள் காலில் விழுவதை பார்த்து குழம்பி இருக்கிறேன்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAoSKbpmwHNW57UBv8O4aYYuA0Guj2pustuGQ1tS-IuXbWsA_xT7JReILoEMVWGWXbPdMf9ksE5WosvcKwtm7oeUmrZ98Z9Bks5fCXFan46ay3RVwGOrGg4Oyqa7OJwMBepIxdkeZkmek/s1600/st.jpg" target="new"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAoSKbpmwHNW57UBv8O4aYYuA0Guj2pustuGQ1tS-IuXbWsA_xT7JReILoEMVWGWXbPdMf9ksE5WosvcKwtm7oeUmrZ98Z9Bks5fCXFan46ay3RVwGOrGg4Oyqa7OJwMBepIxdkeZkmek/s320/st.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5599461493407123826" /></a><br /><br />இப்படி வருடங்கள் ஓட, மீண்டும் அவர் விசையத்தில் என் கவனம் போனது தெலுங்கு கங்கை கால்வாய் திட்டம் நடைமுறை படுத்தப்பட்டபோது, ஒரு நாட்டின் தேசிய அரசாங்க பணியில் ஒரு மத சாமியாரின் பங்கு என்னவாக இருக்க போகிறது, இவரை ஏன் முன்னிலை படுத்துகிறார்கள் என்று படிக்கும் போதுதான் புரிந்தது, சாய் சேவா என்று ஆங்காங்கே பஜனைகள் பாடிக்கொண்டு இருந்த ஒரு ஆன்மீக அமைப்பு "சாய் சேவா சமிதி" என்று நாட்டின் மிக பெரிய ஒரு சமூக சேவை அமைப்பாக வளர்ந்து இருப்பது.<br /><br />இந்த சேவை நிறுவனம் ஆந்திரா-தமிழக அரசுகள் கொண்டு வந்த தெலுங்கு கங்கை திட்ட கால்வாய் அமைக்கும் பணிக்காக அதாவது சென்னை நகரின் குடிநீர் பிரச்சினையை போக்க ரூ.100 கோடி நிதியை அந்த நிறுவனத்தின் தலைவரான சாய்பாபா தனது டிரஸ்ட்டில் இருந்து வழங்கியுள்ளார் என்று தெரிந்த போது, வியப்பை விட அந்த நிறுவனத்தின் மீது ஒரு நல்ல மதிப்பு எனக்கு வந்தது.<br /><br />எனக்கு தெரிந்து இந்திய வரலாற்றில் வேறு எந்த ஒரு ஆன்மீக மத சார்பான நிறுவனமும் இவ்வளவு பெரிய தொகையை நாட்டு மக்கள் நன்மைக்காக கொடுத்ததில்லை என்றுதான் நினைக்கிறேன்.<br /><br />இப்படி தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் ஆந்திரா,மராட்டியம், ஒரிசா மாநிலங்களிலும் தனது டிரஸ்ட்டின் மூலம் நிதி கொடுத்து குடிநீர் திட்டங்களை செய்து கொடுத்துள்ளார். <br /><br />ஆந்திரமாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 750 கிராமங்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுத்து கிட்டத்தட்ட12 லட்சம் மக்களுக்கு மேல் பயன் அடைந்து வருகின்றனர். <br /><br />இது தவிர இந்த ஆசிரம நிறுவனத்தின் மூலம் பல்கலைக்கழம், மருத்துவ கல்லூரியும் நடத்தப்பட்டு வருகிறது இதன் மூலம் பொதுமக்களுக்கு இலவச கல்வி, மருத்துவ சிகிச்சை என பல மாநிலங்களில் பிரமாண்டமாக ஏழைகளுக்கு அனைத்தும் இலவச மாக இந்த நிறுவனம் கொடுகிறது என்று தெரிந்த போது...!<br /><br />அவர் கடவுளோ இல்லையோ!, அது எனக்கு தெரியாது, தேவையும் இல்லை, ஆனால் இந்த நிறுவனத்தின் நல்ல செயல்கள் அனைத்தும் கடவுளின் செயலாகவே என் மனதில் பட்டது.<br /><br />எத்தனயோ லட்சம் மக்கள் தனி ஒரு நிறுவனத்தால் அல்லது அந்த நிறுவன தலைவரால் பயன் பெறுகிறார்கள் என்றால், அது இருப்பவனிடம் கொள்ளை அடித்து இல்லாதவனுக்கு கொடுக்கும் ஒரு கொள்ளைகார நிறுவனமாக இருந்தால் கூட பாராட்டலாமே...!<br /><br />அப்படி இருக்கும் போது, இது ஒரு சாதாரண ஆன்மீக அமைப்பு இதை பாராட்டுவதில் எனக்கு தவறாக எதுவுமே தோன்றவில்லை. <br /><br />தாகத்தை தீர்க்கும் நதி நீருக்கு யாரும் நதிமூலம் பார்ப்பதில்லை, அது போல அது எப்படி வந்த பணமாயினும் எதற்கு பயன் படுகிறது என்ற அடிப்படையில் இங்கு நான் ரிஷிமூலம் பார்க்க விரும்பவில்லை.<br /><br />ஒரு சில நூறுகளை கொடுத்து ஓட்டு வாங்கி கணக்கிடமுடியாத அளவு ஊழலை செய்யும் அரசியல் கட்சிகள் கூட மக்களுக்கு இப்படி எதுவும் செய்வதில்லையே? <br /><br />அப்படி இருக்க ஒரு தனிமனிதர் தன் நிறுவனத்தின் மூலம் இதை அனைத்தையும் சாதித்து இருக்கும் போது அவர் அந்த நிறுவன தொண்டர்களுக்கு கடவுளாக தெரிவதில் எந்த தவறும் இல்லை என்றே நினைக்கிறேன்.<br /><br />இவரால் மருத்துவ உதவி பெற்று உயிர் பிழைத்த அனைவருக்கும் இவர் வேறு எப்படி தோன்ற முடியும் நினைக்கிறீர்கள்? <br /><br />சற்று சிந்தித்து பாருங்கள்...!, இன்றைய அரசியல் கொள்ளையர்களை விட "சாய்பாபா" ஒன்றும் அத்தனை மோசமாக என் கண்களுக்கு தெரியவில்லை.<br /><br />எனவே, அவர் கடவுளா இல்லையா என்ற பைசாவுக்கு பெறாத விவாதங்களை ஒதுக்கிவிட்டு, பல நல்ல விசையங்களை செய்த ஒரு நல்ல நிறுவனத்தின் தலைவர் என்ற முறையில், உடலை விட்டு பிரிந்த அந்த ஆத்மா அமைதியில் உறங்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.சிங்கக்குட்டிhttp://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.com18tag:blogger.com,1999:blog-952520241038452238.post-70106492018038360262011-04-08T22:28:00.001+09:002011-04-08T22:28:11.085+09:00அன்னா ஹசாரேவை ஆதரிப்போம்.<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKZd60GJpsQgLd1O2d7cQhJKkWMyD3M186x9tUEMrAvnPkMa_6ipiMMLT3rUxrI0oeg6Ub_NOgG6r7FBPb0y3xntzNAvxUhDJ7cHITjwUaiR6qKrlU3NN27Wtpaz6_l-rdbc2P5xo0b8M/s1600/IAC.jpg" target="new"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKZd60GJpsQgLd1O2d7cQhJKkWMyD3M186x9tUEMrAvnPkMa_6ipiMMLT3rUxrI0oeg6Ub_NOgG6r7FBPb0y3xntzNAvxUhDJ7cHITjwUaiR6qKrlU3NN27Wtpaz6_l-rdbc2P5xo0b8M/s400/IAC.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5593192440465202146" /></a><br /><br />இந்த பதிவை பொறுத்த வரை இந்த விளம்பரத்தில் வரும் சிறுவனின் நிலையில் நான் என்னால் முடிந்த ஆதரவை தருகிறேன்.<br /><br /><center><br /><object width="425" height="349"><param name="movie" value="http://www.youtube-nocookie.com/v/pFs5vWxW-vc?fs=1&hl=en_US&rel=0"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube-nocookie.com/v/pFs5vWxW-vc?fs=1&hl=en_US&rel=0" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="349"></embed></object><br /></center><br /><br />காரணம் இது வார்த்தை ஜாலம் காட்டி சிரிக்க வைத்து ஓட்டு வாங்க பதிந்த பதிவு அல்ல.<br /><br />தமிழன் என்பதை தாண்டி இந்தியன் என்ற முறையில், என் நாட்டுக்காக களமிறங்கி இருக்கும் <b>தியாகி "அன்னா ஹசாரேவுக்கு" என் ஆதரவை தெரிவிக்கும் பதிவு மட்டுமே.</b><br /><br />அன்னா ஹசாரேவை பற்றியும் அவர் போராட்டம் பற்றியும் நான் புதிதாக உங்களுக்கு சொல்ல வேண்டியது இல்லை என்று நினைக்கிறேன்.<br /><br />அப்படியும் தெரியாத யாராவது இருந்தால், அவர்களுக்காக நண்பர் கிரி மற்றும் ராமலக்ஷ்மி எழுதிய இணைப்புகளை கீழே கொடுக்கிறேன், படித்து அனைவரும் உங்களால் முடிந்த ஆதரவை உங்கள் தளத்தில் தெரிவிக்க வேண்டுகிறேன்.<br /><br />கிரியின்<br /><br /><a href="http://www.giriblog.com/2011/04/anna-hazaare-against-corruption.html" target="new">ஊழலுக்கு எதிரான ஒரு போராட்டம்!</a><br /><br /><a href="http://www.giriblog.com/2011/04/hazaare-no-to-politicians.html" target="new">அரசியல்வாதிகளுக்குத் தடை – அன்னா ஹசாரே அதிரடி!</a> <br /><br /><a href="http://www.giriblog.com/2011/04/tamilnadu-avoid-anna-hazare.html" target="new">அன்னா ஹசாரேவை புறக்கணிக்கும் தமிழகம்</a><br /><br />ராமலக்ஷ்மியின்<br /><br /><a href="http://tamilamudam.blogspot.com/2011/04/blog-post_08.html" target="new">விதை விருட்சமாகும்,அன்னா ஹசாரேக்கு ஆதரவைத் தருவோம்.</a><br /><br /><a href="http://www.avaaz.org/en/stand_with_anna_hazare/?g-bpi-s-target=" target="new">இந்த இணையதளத்தில் உங்கள் ஆதரவை கையெழுத்து மூலம் கொடுக்க முடியும்!</a><br /><br />தாய் நாட்டையும் நாட்டுக்காக உண்மையாக பாடுபடும் தலைவர்களையும் நம் இரு கண்களை போல, நம் தாயை போல மதிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.<br /><br />இனம், ஜாதி, மதம், மொழி மறந்து இந்தியனாய் இதில் ஒன்றுபடுவோம் வாருங்கள்...!<br /><br /><center><br /><object width="425" height="349"><param name="movie" value="http://www.youtube-nocookie.com/v/MKFt2MUph4w?fs=1&hl=en_US&rel=0"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube-nocookie.com/v/MKFt2MUph4w?fs=1&hl=en_US&rel=0" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="349"></embed></object><br /></center><br /><br />வந்தே மாதரம்...!சிங்கக்குட்டிhttp://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-952520241038452238.post-44878707015229664082011-04-06T22:12:00.000+09:002011-04-06T22:12:12.511+09:00தேர்தல் கனவு...!வணக்கம் நண்பர்களே,<br /><br /><font color="#0000A0">உலக கோப்பையை வென்ற இந்திய வீரர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களுடன் இந்த பதிவை துவங்குவோம்.<br /><br />இந்த வெற்றி விழா கொண்டாட்டத்தில் சச்சினுக்கு இரண்டு புறமும் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் முதல் உலக கோப்பை நாயகன் கபில்தேவ் இருவரையும் அமர்த்தி பெருமை படுத்தினால் இன்னும் அமர்களமாக இருக்கும் என்பது என் விருப்பம்.</font><br /><br /><font color="#FF0000">தேர்தல் விதிமுறைகள்...!</font><br /><br /><u><font color="#FF0000">கட்சி விதிகள்</u></font><br /><br />எந்த ஒரு தனிப்பட்ட கட்சியும் மூன்று தேர்தல்களுக்குள் குறிப்பிட்ட அளவு தொகுதியில், அதாவது அந்த கட்சியை சேர்ந்த மொத்த வேட்பாளர்களில் இருபத்தைந்து சதவீதம் வெற்றி பெறாவிட்டால், அந்த கட்சியின் உரிமை ரத்தாகி, அந்த கட்சியை கலைத்து விடவேண்டும்.<br /><br />அப்படி ரத்தாகும் கட்சியின் தேர்தல் சின்னம் என்பது இனி யாருமே பயன்படுத்த முடியாமல் தடையாகி விடும்.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxFggTswjzSG7PYvE3gyT7kwpwVwlRGS6MS-EjjE3KtjVD-kB3bVdIZToWrGTj6mzPpuCZvONzrUFiWmEjE9zBJr42k7DDXNs7ObfFdaMWhVoEgNSP6ssy_Vm2pZ6TgxQqu8F_gbwKA_A/s1600/Vote-1.jpg" target="new"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 242px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxFggTswjzSG7PYvE3gyT7kwpwVwlRGS6MS-EjjE3KtjVD-kB3bVdIZToWrGTj6mzPpuCZvONzrUFiWmEjE9zBJr42k7DDXNs7ObfFdaMWhVoEgNSP6ssy_Vm2pZ6TgxQqu8F_gbwKA_A/s320/Vote-1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5588371322044630210" /></a><br /><br />நாட்டில் ஒரு தனி கட்சி என்பதே தனி கொள்கையின் அடிப்படையில் இருப்பதால், எந்த ஒரு கட்சியும் தேர்தலில் தனித்து மட்டுமே போட்டியிட முடியும்.<br /><br />அப்படி இன்னொரு கட்சியுடன் கூட்டணியாக இணைய விரும்பும் பட்சத்தில், இரண்டில் ஏதாவது ஒரு கட்சியை கலைத்து அதன் உரிமையை ரத்து செய்து, ஒரே கட்சியாக மட்டுமே செயல்பட, போட்டியிட முடியும்.<br /><br />ஒரு முறை இணைந்த பின் மீண்டும் பிரிந்தால், அதே கட்சியை துவங்க முடியாது, வேறு கட்சியை துவங்கினாலும், புதிய சின்னம் மட்டுமே கொடுக்க படும்.<br /><br />மேலும் ஒரு முறை சேர்ந்து பின் பிரிந்து மீண்டும் ஒரே ஒரு முறை மட்டுமே கட்சி துவங்க உரிமை கேட்க முடியும்.<br /><br />கட்சியின் பொது குழு தலைவர் மற்றும் இதர பொறுப்புகளில் ஒருவர் அறுபத்தைந்து வயது வரை மட்டுமே பதவி வகிக்க முடியும். அதன் பின் அவர் அனுபவத்தின் அடிப்படையில் அக்கட்சியின் வழிகாட்டியாக ஒரு மதியுரை அமைச்சர் பதவிக்கு மட்டுமே தகுதி பெறமுடியும்.<br /><br />யார் ஆட்சியாயினும் குடும்பத்தின் மொத்த வருமானத்தை, சொத்துக்களை கணக்கில் கொண்டு வறுமை கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு அரசு சலுகைகள் மட்டுமே தர முடியுமே தவிர, இலவசம் என்று எதுவும் கொடுக்க முடியாது.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEghKQeFfW3SSVBaJnZ4DK3f0AtYhdqDydp-n067IxBv_MbaU0CNrqxmTXdteUYH7h0yQeU7ZVA8lrm3wQ7p59ZZotEOxj4OhCNTUOduB4pXLNcQ7cZvdBJO4z7hnl10OkRLNF5wjyRAe0k/s1600/Votes.jpg" target="new"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 144px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEghKQeFfW3SSVBaJnZ4DK3f0AtYhdqDydp-n067IxBv_MbaU0CNrqxmTXdteUYH7h0yQeU7ZVA8lrm3wQ7p59ZZotEOxj4OhCNTUOduB4pXLNcQ7cZvdBJO4z7hnl10OkRLNF5wjyRAe0k/s320/Votes.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5588371714268589314" /></a><br /><br />இலவசமாக கொடுக்கும் அனைத்தும் லஞ்ச ஒழிப்பு விதிமுறைகளுக்கு கீழே கொண்டுவரப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.<br /><br />ஜாதி, மொழி சார்ந்த கட்சிகள் துவங்க முடியாது, எல்லா அரசு ஆவணங்களில் இருந்தும் ஜாதி பற்றிய விபரங்கள் உடனடியாக நீக்கி விடப்படும்.<br /><br />எந்த கட்சியும் அந்த கட்சி சார்பான தனிப்பட்ட தகவல் தொடர்பு தொலைக்காட்சி, பத்திரிக்கை, வானொலி நடத்த முடியாது, அப்படி வேறு தொடர்புகளில் நடத்தும் தகவல் தொடர்பு எதிலும் கட்சி சார்பான சின்னம், முத்திரை எதையும் பயன்படுத்த கூடாது. <br /><br />மேலும் அந்த தகவல் தொடர்பு மூலம் வரும் செய்திகள் உண்மையல்ல என்று எந்த ஒரு நிறுவனமும், குடிமகனும் நிரூபிக்கும் பட்சத்தில், அந்த தகவல் தொடர்பு நிறுவன உரிமை உடனடியாக ரத்து செய்வதோடு, அத்துறை சார்ந்த அத்தனை அசையும், அசையாத சொத்துக்களும் அரசாங்க சொத்தாகிவிடும்.<br /><br /><u><font color="#FF0000">அரசியல் பதவி விதிமுறைகள்</u></font><br /> <br />ஜனநாயக நாட்டில் அரசியல் பதவிக்கு போட்டியிட கிரிமினல் வழக்கு இல்லாத மற்றும் வங்கி கடன் மஞ்சள் நோட்டீஸ் கொடுக்காத குடிமகன் யாருக்கும் உரிமை உண்டு என்றாலும், அப்பதவியின் நிலையை கருத்தில் கொண்டு போட்டியிட தகுதியான குடிமகனை சில கட்டுப்பாடுகளுக்குள் உட்பட்டு மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டும்.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1Ei_OBhH-g3U42WMg4WmpxClUrbcv_JGuICdQFNDySu6Ykf5YVHR_Rciz1rMqIQgxP9pRCCmCsDhCR_hiFhgW5hpyDarUCkTMkHI4v71LeSEl1UkcQ8MXzAX-ewnY8g2EumVoyPlBMLE/s1600/Vote.jpg" target="new"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1Ei_OBhH-g3U42WMg4WmpxClUrbcv_JGuICdQFNDySu6Ykf5YVHR_Rciz1rMqIQgxP9pRCCmCsDhCR_hiFhgW5hpyDarUCkTMkHI4v71LeSEl1UkcQ8MXzAX-ewnY8g2EumVoyPlBMLE/s320/Vote.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5588372122728430786" /></a><br /><br />நாட்டின் குடிமகனாக நாள் முதல் இருப்பது வருடங்கள் உள்நாட்டில் வசித்திருக்க வேண்டும் (உயர் கல்விக்காக மட்டும் வெளிநாடு சென்றிருக்கலாம்).<br /><br />கண்டிப்பாக முதுகலை பட்டம், அதுவும் ஆரம்ப பள்ளி முதல் அனைத்தும் முழுநேர படிப்பின் மூலம் (மாலை, தொலைதூர மற்றும் திறந்தவெளி எல்லாம் செல்லாது) நாட்டின் அல்லது உலக முன்னணி பல்கலைகழகம் மூலம் பெற்றிருக்க வேண்டும்.<br /><br />குறைந்தது தாய் மொழி அல்லது போட்டியிடும் மாநில மொழி, இந்தியாவில் அதிகம் பேசும் மொழி ஹிந்தி, உலகில் அதிகம் பேசும் மொழி ஆங்கிலம் என்று மும்மொழிகளில் (செம்மொழி கதை எதுவும் விடாமல்) முறையாக பேச, படிக்க மற்றும் எழுத தகுதி, தகுந்த சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.<br /><br />குறைந்தது பத்து வருடங்கள் அவர் படிப்பு சார்ந்த துறையில் வேலை செய்த அனுபவமும் அதில் "பொதுமக்களிடம்" நல்ல பெயரும் பெற்று இருக்க வேண்டும்.<br /><br />அப்படி இருந்து ஒருவர் வெற்றி பெரும் வகையில், அவருக்கு அதே துறையை ஒதுக்க வேண்டும். உதாரணமாக ஒரு காவல் அல்லது போக்குவரத்து மந்திரி என்பவர் மற்ற விதிகளுக்கு உட்பட்டு இருந்தாலும், அதே துறையில் குறைந்தது பத்து ஆண்டுகள் நாட்டுக்காக பணி செய்து இருக்க வேண்டும்.<br /><br />மூன்று முறைக்கு மேல் ஒருவர் பொது தேர்தலில் போட்டியிட முடியாது, அவர் சார்ந்த கட்சியின் மதியுரை பதவிகளில் அவர் இருப்பதில் எந்த தடையும் கிடையாது.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2el9hK20VQuiS8h9ZLCentI2-y_O01gJkRSTPa50ofi_2iomu0sQUF2O_ABDTlu5LpFLPUd-WnPOYnMfvhQnSl2zScHv50WeAho8qF-NjpGP2otX7iNrY5oei4Z8f1DpuRpvmYSsDYy4/s1600/elections.jpg" target="new"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2el9hK20VQuiS8h9ZLCentI2-y_O01gJkRSTPa50ofi_2iomu0sQUF2O_ABDTlu5LpFLPUd-WnPOYnMfvhQnSl2zScHv50WeAho8qF-NjpGP2otX7iNrY5oei4Z8f1DpuRpvmYSsDYy4/s320/elections.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5588372574151124162" /></a><br /><br />ஒரு கட்சியின் சார்பில் பொது தேர்தலில் நின்று வெற்றி பெற்ற பின், அந்த வெற்றி வேட்பாளர் கட்சி மாறினால், கட்சியை விட்டு விலகும் போதே அவர் பதவியும் அவரை விட்டு விலகும். மேலும் அவர் அடுத்த பத்து தேர்தலில் எந்த ஒரு கட்சி சார்பாகவும் போட்டியிட முடியாது. <br /><br />அது மட்டும் இல்லாமல், அவர் பதவி விலகிய தொகுதியின் இடை தேர்தல் செலவு முழுவதும் அவரோ அல்லது அவர் போகும் புதிய கட்சியோ ஏற்று கொள்ள வேண்டும்.<br /><br />நாட்டின் அரசியல் தலைமை பொறுப்பில் இருக்கும் எந்த ஒரு அரசியல் தலைவரும் செய்த தவறு, ஊழல் நிரூபிக்கப்பட்டால், அதே தவறை செய்த குடிமகனுக்கு சட்டப்படி கிடைக்கும் தண்டனையை போல மூன்று மடங்கு அதிகமாக கிடைக்கும்.<br /><br />எந்த ஒரு நேர்மையான அல்லது எப்படி பட்ட அரசியல் தலைவராக இருப்பினும், அதை மட்டுமே தகுதியாக கொண்டு அவரின் வாரீசு அல்லது ரத்த உறவுகள் யாரும் மேலே உள்ள மற்ற அரசியல் தலைமை விதிகள் பொருந்தாத பட்சத்தில், அவர்கள் எந்த ஒரு அரசியல் பதவிகளுக்கும் போட்டியிட முடியாது.<br /><br />காவல் மற்றும் நீதித்துறை இரண்டும், ஜனாதிபதி மற்றும் மாநில கவர்னர் நேரடி கட்டுபாட்டில் இருக்கவேண்டும், இவர்கள் இருவரையும் நேரடியாக மக்கள் பொது தேர்தலில் மட்டுமே தேர்ந்து எடுக்க முடியும்.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEigWeZfy_0rTe4af6YubPXnX5V07gLZmbTHckc4JOgNDd7RTbge9OIOluap5EFkWeNIUZsXkKFJIBqXwaC_PSnas-_P3WfJ9VWBed6oDk6ThyphenhyphenrKE8dWU8C0oq9Cdu5-VnMee3-1y6SN0tY/s1600/iv.jpg" target="new"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 270px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEigWeZfy_0rTe4af6YubPXnX5V07gLZmbTHckc4JOgNDd7RTbge9OIOluap5EFkWeNIUZsXkKFJIBqXwaC_PSnas-_P3WfJ9VWBed6oDk6ThyphenhyphenrKE8dWU8C0oq9Cdu5-VnMee3-1y6SN0tY/s320/iv.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5588372882946121762" /></a><br /><br />மேலும் "ஜனாதிபதி மற்றும் மாநில கவர்னர்" இருவரும் எந்த கட்சியை சார்ந்தும் இருக்க முடியாது, இவர்கள் "தவறுகளை" முப்படை தளபதிகள், சுபிரீம் கோர்ட் நீதிபதிகள் குழு மற்றும் பிரதமர் ஆகியோர் இணைந்த குழு மட்டுமே கட்டுபடுத்த முடியும்.<br /><br />நாட்டின் எந்த ஒரு அரசியல் தலைவரையும் தகுந்த முறை மற்றும் காரணத்தோடும் எந்த ஒரு குடிமகனும் சந்திக்க முடியவில்லை என்றால், காவல் மற்றும் நீதித்துறையை நாட அவர்களுக்கு முழு உரிமை உண்டு.<br /><br /><font color="#0000A0">அட போதுங்க, அதான் கனவுன்னு சொல்லியாச்சுல்ல, இத்தோட இப்போதைக்கு முடிச்சுக்குவோம்...!<br /><br />போங்கப்பா, போய் புள்ள குட்டிகள படிக்க வைங்க, இன்னுமா இந்த உலகம் இதை நம்பிகிட்டு இருக்கு?.</font><br /><br />நன்றி, மீண்டும் சந்திப்போம்.சிங்கக்குட்டிhttp://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-952520241038452238.post-5715823393511738702011-03-26T01:41:00.004+09:002011-03-29T20:17:25.307+09:00இதுவா என் (தாய்) தமிழ்நாடு...!வணக்கம் நண்பர்களே,<br /><br />என்னடா இது...! காணாமல் போனவன் திடீர் என்று வருகிறானே என்று நினைக்க வேண்டாம், அது ஒரு பெரிய கதை அதை தனியாக இன்னொரு சமயம் பார்ப்போம்.<br /><br />சொர்க்கமே என்றாலும் அது நம்மூரை போல வருமா என்ற மகிழ்ச்சி சற்றும் குறையாமல் ஒரு அருமையான இந்திய பயணத்தை முடித்து கடந்த மாதம் திரும்பி வந்தாலும், சில பல காரணக்களால் பதிவுகள் பக்கம் வர முடியவில்லை.<br /><br />எப்போதும் போல இல்லாமல் இது ஒரு நீண்ட விடுமுறையாக இருந்த காரணம் நான் இந்த முறை சென்றது தனிப்பட்ட வேறு சில வேலைகளாக என்பதால்தான்.<br /><br />ஒவ்வொரு முறையும் நம் மண்ணின் வளர்ச்சியை, மாற்றத்தை பார்த்து பெருமை பொங்க திரும்ப வரும் நான், இந்த முறை சற்று மனம் தளர்ந்து வந்ததுதான் உண்மை.<br /><br />இந்த முறை நான் சென்ற வேலைகளுக்காக, மதுரை, பழனி, திருச்சி, திண்டுக்கல், நத்தம் என்று தென் தமிழ் நாட்டில் என் விடுமுறையை பயன் படுத்தினேன்.<br /><br />நான் கல்லூரியில் படித்த காலத்தில் இந்த பகுதிகளில் பஸ் பயணம் என்பது எங்கள் நண்பர்கள் அனைவருக்கும் மிக பிடித்த ஒரு விசையமாகும்.<br /><br />அதற்கு இரண்டு காரணங்கள், ஒன்று நடுவில் வரும் நெடுஞ்சாலை தவிர இரண்டு பக்கமும் பச்சை பாய் விரித்தது போல செழிப்போடு காட்சி அளிக்கும் வயல்வெளிகள், தூரத்தில் தெரியும் தென்னை மரங்கள் என்று மனதை மயக்கும் ஒரு அழகான தமிழ் தாய் நாட்டின் விவசாய அடையாளம்.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgnMAq32ExxotL95ZQJGiLONerx-ljOtPTab9HzTSxq7xW6fKpP9wbAjySNnKWhgqX15rPNLwrpEh3-6FXWYG1sc62ailsDdy8ZE07OctoDnvPem-OoDdR-1AvcgHP2uUtdLhDrUUFIbQ0/s1600/Vayal.JPG" target="new"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgnMAq32ExxotL95ZQJGiLONerx-ljOtPTab9HzTSxq7xW6fKpP9wbAjySNnKWhgqX15rPNLwrpEh3-6FXWYG1sc62ailsDdy8ZE07OctoDnvPem-OoDdR-1AvcgHP2uUtdLhDrUUFIbQ0/s320/Vayal.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5588054575147527506" /></a><br /><br /><br />மற்றொன்று இந்த சூழ்நிலைக்கு தகுந்து அந்த தனியார் பேருந்துகள் இசைக்கும் தமிழ் பாடல்கள்.<br /><br />குறிப்பாக மதுரை, பழனி, திண்டுக்கல், திருச்சி, மதுரை ரோட்டில் மதியம் மூன்று மணியளவில் அவர்கள் இசைக்கும் "ஒருநாளும் உனை மறவாத, முத்துமணி மாலை" போன்ற பாடல்களை விரும்பாத யாருமே இருக்க முடியாது.<br /><br />பல வருடம் கடந்து அதே பழைய நினைவுகளை சுமந்து கொண்டு போன எனக்கு இந்த முறை மிக பெரிய ஏமாற்றம் தான் மிச்சம்...!<br /><br />நான் பார்த்த வயல்வெளிகள் அனைத்தும் கூந்தலை இழந்த பெண்போல மொட்டையாக இருப்பதை பார்த்ததும், ஏனோ அது என் சொந்த பெண் போல மனம் லேசாக இல்லை, இல்லை கொஞ்சம் அதிகமாகவே வலித்தது.<br /><br />அதை விட கொடுமை, அது அனைத்தும் வீடு கட்டும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய பட்டிருப்பதை பார்க்க பார்க்க மன கொதிப்பு மட்டும் ஏனோ அடங்கவே இல்லை.<br /><br />என்னடா இது நம் மக்களா இப்படி மாறி விட்டார்கள் என்று விசாரித்தால், இந்த முறை நான் பார்த்த அனைவருமே சொன்னது ஒன்றே ஒன்றுதான்.<br /><br />அட உனக்கு என்னப்பா, கடல்தாண்டி சீமைல இருக்க, இங்க நாய் பேய் கூட சொந்த வீடு வாங்கிருச்சு, நம்ம மட்டும் என்ன குறைச்சலா?<br /><br />அதான் நம்ம நிலத்தை பிளாட் போட்டு கொடுத்தா சொந்த வீடும் கொடுத்து கையில் பணமும் தருவதாய் ரியல் எஸ்டேட் ஏஜென்ட் சொன்னார்.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgV4JD82h0ThnVlwl743jcUg4VmwD0qM26Q_g4DFSLuTwj-WROyw1nyaOd0vJYkt0W0xu2xPUNxI3sOAyPiUFMdXbr3XummvSchI5ZnqKq4KQ546NWYz6u501sbkvskhKGJVvRMd0umMAo/s1600/Vayal-2.JPG" target="new"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgV4JD82h0ThnVlwl743jcUg4VmwD0qM26Q_g4DFSLuTwj-WROyw1nyaOd0vJYkt0W0xu2xPUNxI3sOAyPiUFMdXbr3XummvSchI5ZnqKq4KQ546NWYz6u501sbkvskhKGJVvRMd0umMAo/s320/Vayal-2.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5588054862835098546" /></a><br /><br />சரி, நாமும் எவ்வளவு நாளுக்குதான் இப்படி சேற்றிலும் குடிசையிலும் கிடப்பது, நமமெக்கென்று ஒரு சொந்த வீடு வேண்டாமா என்று நிலத்தை கொடுத்து விட்டேன் என்பதுதான் அது!.<br /><br />இப்படி ஒன்றல்ல இரண்டல்ல வரிசையாக எல்லா நிலத்திலும் அந்த நகர், இந்த நகர் என்ற பெயர் பலகையை பார்க்கும் போது வெறுப்பு மட்டுமே மிஞ்சியது.<br /><br />நான் பார்த்த வரை நம் மக்களிடம் சொந்த வீடு வாங்குவது என்பது இப்போது ஒரு வாழ்க்கை லட்சியத்தில் முக்கிய ஒன்றாக மாறிவிட்டது.<br /><br />என்ன கொடுமை இது?<br /><br />நண்பர்களே, வீடு என்பது இயற்கை சீதோசன நிலைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள மனிதன் கண்டுபிடித்த நாகரீக வளர்ச்சியின் ஒரு பகுதிதானே தவிர, அது சமுதாயத்தில் நம்மை அடையாள படுத்துவது அல்ல அப்படி நாம் மாற்றினால் அது நம் வீழ்ச்சியின் ஆரப்பமே.<br /><br />மேலும் ஒரு வீட்டின் விலை என்பது, அது கட்ட பட்டிருக்கும் நிலத்தின் அரசால் மதிப்பிட பட்ட விலை, அதின் பயன் படுத்த பட்டிருக்கும் கல் மற்றும் மரத்தின் விலை, அதோடு அதை கட்ட வேலை செய்தவர்களின் கூலி என்பதே ஆகும்.<br /><br />ஆனால், இன்று அந்த கல்லையும் மணலையும் சேர்த்த கட்டிடத்தின் விலையை கண்மண் தெரியாமல் உயர்த்திக்கொண்டு போவது என்பது கொடுமை, அதை விட கொடுமை அதையும் நம் மக்கள் வங்கியில் கடன் வாங்கி வாங்குவது என்பது மிக மிக கொடுமை.<br /><br />எந்த ஒரு வங்கியிலும் வீட்டு கடன் வாங்கி இருக்கும் ஒருவர், தன் மாத தவணை மற்றும் தன் மொத்த தவணையின் கூட்டு தொகை என்ன என்பதை ஒரு பத்து நிமிடம் ஒதுக்கி கணக்கிட்டு பாருங்கள், உங்கள் வாழ்நாள் உழைப்பு இப்படியா வீண் போக வேண்டும் என்று தோன்றும்?<br /><br />இது ஒரு பக்கம் இருக்க, நம் சொந்த தொழிலான விவசாயத்தை அழித்து, அந்த நிலத்தில் கட்டிடம் கட்டுவது என்பது, சொந்த செலவில் சூன்யம் வைத்து நம்மை நாமே அழிப்பதற்கு சமம்.<br /><br />இப்படி விவசாயம் அழிந்து போவதால் இன்று காய்கறிகளின் விலை வாசி நினைத்து பார்க்க முடியாத அளவு உயர்ந்து இருப்பதோடு நம் தேவைக்கு பக்கத்து மாநிலங்களை நம்பி இருக்க வேண்டி இருக்கிறது.<br /><br />தற்போது அரசாங்கம் விளைநிலத்தை கட்டிடம் கட்ட விற்பனை செய்ய கூடாது என்று சட்டம் கொண்டு வருவதாக கேள்வி, ஆனாலும் விளைநிலங்களை அழிப்பது குறைந்த மாதிரி தெரியவில்லை.<br /><br />இப்படி விளை நிலத்தின் விலையை ரியல் எஸ்டேட் ஏற்றி விட்டுக்கொண்டிருக்கும் பண போதையில் நம் மக்கள் விளைநிலங்களை கண் மண் தெரியாமல் விற்பனை சந்தைக்கு கொண்டுவர, இடையில் புகுந்து கேரளா மக்கள் மொத்தமாக இந்த நிலங்களை வாங்கி போட்டு இருக்கிறார்கள்.<br /><br />இது இப்படியே தொடர்ந்தால் பிற்காலத்தில் நம் சொந்த மண்ணின் விலையை அவர்கள் நிர்ணயிக்ககூடும் அல்லது அவர்கள் விவசாயம் செய்து அதை நமக்கே விற்கக்கூடும், இந்தியன் என்ற தாய் பிள்ளையானாலும் வாயும் வயிறும் வேறுதானே?<br /><br />இப்படியே போனால், வடிவேல் (அவருக்கும் இப்போது நேரம் சரியில்லை என்று நினைக்கிறேன், இதை பற்றி வேறு பதிவில் பார்ப்போம்) காமிடியில் வருவது போல தமிழ் நாட்டில் விவசாயம் செய்ய தமிழனுக்கு எந்த இடமும் இல்லாமல் போய், ஒரு கேரட் இரநூறு ரூபாய் என்னும் நிலை வந்தாலும் ஆச்சரிய படுவதற்கில்லை.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMySCZsk5-5kI98wOwafDce7MjrfSzK7veL6llLi45jChUNOvpy68GOzLchTkdet4wo60Cq8YH9pacc8JVflbry5kS4RgLTdNuD7ZuIlEhJEa7sdt1c1ARDGxy2wpBJiyfcfWlEkxOdoM/s1600/Vayal-1.JPG" target="new"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMySCZsk5-5kI98wOwafDce7MjrfSzK7veL6llLi45jChUNOvpy68GOzLchTkdet4wo60Cq8YH9pacc8JVflbry5kS4RgLTdNuD7ZuIlEhJEa7sdt1c1ARDGxy2wpBJiyfcfWlEkxOdoM/s320/Vayal-1.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5588055084864160322" /></a><br /><br />ஒன்று மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் நண்பர்களே, இப்போதும் நமக்கு சிந்தித்து செயல்பட நேரம் இருக்கிறது. நாம் சேற்றில் "கால்" வைப்பதால் நம் மக்கள் சோற்றில் "கை" வைக்க முடிகிறது என்ற பெருமையோடு நம் பாரம்பரிய விவசாயத்தை அழிந்து விடாமல் காப்பது நம் தாய்மண்ணுக்கு செய்யும் கடமையாகும்.<br /><br />அப்படி நாம் உணரவில்லை என்றால் அது பணத்துக்காக தாயை விற்பதற்கு சமம் என்று காலம் ஒருநாள் கண்டிப்பாய் உணர்த்தும்.<br /><br />இயற்கை எவ்வளவு முடியுமோ அவ்வளவு சோதித்தாலும், சற்றும் மனம் தளராமல் ஜப்பானில் விவசாயம் செய்ய இடமில்லாமல் கிடைக்கும் இடத்தை (மலைகளை கூட வெட்டி) விளை நிலமாக்கி பட்ட படிப்பை முடித்த இளைய தலைமுறைகள் கூட விவசாயத்தில் ஆர்வம் காட்டுகிறார்கள்.<br /><br />ஆனால், நாம் இருக்கும் விளை நிலத்தை மலடாக்கி கட்டிடம் கட்டுகிறோம்?. <br /><br />நாகரீகத்தில் முன்னேறுகிறோம் என்று நினைத்து, நம் சொந்த அடையாளத்தை தொலைத்துக்கொண்டு இருக்கிறோம் என்று சொன்னால் அது இங்கு தவறாகாது என்று நினைக்கிறேன்.<br /><br />நான் இந்த முறை சென்ற வேலை என் வாழ்நாள் கனவின் முக்கிய ஒன்றாகும், சில ஏக்கர் நிலத்தை வாங்கி அதில் தென்னை மரங்களை வைத்து நடுவில் ஒரு வீட்டை கட்டி, அந்த வீட்டின் பின்புறம் எனக்கு தேவையான காய்கறிகளை நானே பயிர் செய்து என் முதுமை காலத்தில் வாழவேண்டும் என்பது என் கனவு.<br /><br />அதற்கான முதல் வேலையாக அமைதியான இடத்தில உள்ள விளை நிலங்களை தேடி சென்றபோது தான் மேல் சொன்ன அனைத்தும் என் கண்ணில் பட்டது.<br /><br />இந்த பரபரப்பான வாழ்க்கை சூழலில் அனைவரும் சொந்த நிலத்தில் விவசாயம் செய்வது என்பது சாத்தியமாகாது என்பது உண்மை.<br /><br />ஆனால், விவசாயத்தில் இருப்பவர்கள் அதை தொலைத்து விடாமல் பாதுகாக்கலாமே?<br /><br />மேலும், விவசாய இடமில்லாமல் நகரத்தில் இருப்பவர்கள் கூட, வீட்டில் ரோஜா தொட்டி வைப்பதை போல நமக்கு தேவையான மிளகாய், தக்காளி, கீரை போன்றவற்றை சொந்தமாக வளர்த்து பயன் படுத்தலாமே?.<br /><br />நம் குழந்தைகளும் இந்த வீட்டு விவசாய முறை மூலம் நம் பாரம்பரிய விவசாய தொழிலை மறக்காமல் இருக்க இது உதவும் என்பது என் நம்பிக்கை.<br /><br />நீங்கள் எவ்வளவு படித்து எந்த நாட்டிலும் எந்த நிலையில் இருந்தாலும் சரி, உங்கள் தாய்க்கு செய்யும் பிறவி கடமையை போல, உங்கள் தாய் நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால், அது எந்த ஒரு சூழ்நிலையிலும், விவசாய நிலையத்தை விவசாயத்தை தவிர மற்ற எந்த ஒரு பயன் பாட்டுக்கும் விற்காமல் இருப்பதே ஆகும்.<br /><br />நன்றி, மீண்டும் விரைவில் சந்திப்போம்.சிங்கக்குட்டிhttp://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.com19tag:blogger.com,1999:blog-952520241038452238.post-23641532881499635522010-12-13T22:20:00.004+09:002010-12-13T22:27:57.128+09:00தென்கொரியா வரும்முன் கவனிக்கவேண்டியது!வணக்கம் நண்பர்களே,<br /><br />தென்கொரியாவில் குளிர் காலம் ஆரமித்துவிட்டது, கடந்த வாரம் முதல் நல்ல பனிபொழிவு துவங்கிவிட்டது.<br /><br />தென்கொரியாவின் பருவநிலைகளை பற்றி சில பதிவுகளில் நான் குறிப்பிட்டு இருந்தாலும், இந்த பதிவு முழுதாக தென்கொரியாவின் தட்பவெட்ப நிலைகளை மட்டும் வைத்து எழுதுவதால், இனி இங்கு வரவிருக்கும் நம் மக்களுக்கு பயன்படும் என்று நினைக்கிறேன்.<br /><br />தென்கொரியாவை பொறுத்தவரை, மொழி, உணவு பிரச்சனைக்கு அடுத்த படியாக வருவது இங்குள்ள தட்பவெட்ப நிலைதான்.<br /><br />ஒரு வருடத்தில் நான்கு வகையான சீதோசன நிலைகள் வருகின்றது, அதை இங்கு பார்ப்போம்.<br /><br /><u>ஏப்ரல் முதல் ஜூன் வரை (Spring Session),</u> கடும் குளிர் காலம் முடிந்து வருவதால் இது மழையோடு துவங்கும், இதனால் குச்சியாக கிடந்த அத்தனை செடிகளும் மரங்களும் பசுமையாகி விடும்.<br /><br />இதை மழைகாலம் என்பதை விட பூக்களின் காலம் என்றுதான் சொல்ல வேண்டும், எங்கு பார்த்தாலும் வண்ணமயமாக பூக்கள்தான் தெரியும்.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtvvw8wA6dsbf2BL4n660uKp_xLLpW1i99wn-zVjH-Q2zxFOFCXTGVHqHjLYBnaAOVFv_vn6mOsb7mhr0h4W-Gmo4FROKVwEmUg9s4fccXA__6aE801eMNBkLVUgxl4_HPx8aes_m9ILI/s1600/skc.jpg" target="new"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtvvw8wA6dsbf2BL4n660uKp_xLLpW1i99wn-zVjH-Q2zxFOFCXTGVHqHjLYBnaAOVFv_vn6mOsb7mhr0h4W-Gmo4FROKVwEmUg9s4fccXA__6aE801eMNBkLVUgxl4_HPx8aes_m9ILI/s320/skc.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5550138301428272146" /></a><br /><br />நகரமே அத்தனை அழகாக இருக்கும், சாதாரன உடைகளுடன் ஒரு சுவட்டர் அல்லது லேசான குளிர்தாங்கும் ஜாக்கெட் போதுமானது.<br /><br />வெட்பநிலை 10 தல் 15 டிகிரி சென்டிகிரேட் போல இருக்கும்.<br /><br />செர்ரி பிளாசம் வருவதும் இந்த காலத்தில்தான், உலகெங்கும் இருந்து மக்கள் இதைகாண கொரியா, ஜப்பான் வருவது வழக்கம்.<br /><br />நான் செர்ரி பிளாசம் ஜப்பானில் இருந்த போதுதான் முதன் முதலில் பார்த்தேன். ஆனால் இங்கு வந்தவுடன்தான் என் வீட்டு வாசலிலேயே பார்த்தேன். தென்கொரியாவை பொறுத்தவரை எல்லா இடங்களிலும் பாரம்பரிய பூக்கள் பூக்கும் மரங்கள் இருகின்றன.<br /><br />இந்த காலத்தில் சீனாவில் இருந்து வரும் தூசி படலம் (Yellow sand dust) அதிகமாக காணப்படும். இது தோலுக்கும் குறிப்பாக கண்களுக்கு பாதிப்புகளை கொடுக்கும், அதனால் எப்போதும் வெளியே சென்று வந்தவுடன், முதலில் கை, கால் முகம் கண்கள் அனைத்தும் சுத்தமாக கழுவவேண்டும். சுத்தமாக கழுவும் முன் குறிப்பாக குழந்தைகளை கொஞ்சவோ முத்தமிடவோ கூடாது.<br /><br /><u>ஜூன் முதல் ஆகஸ்ட் வரை (Summer),</u> வெட்பநிலை மாறி கோடை காலம் வரும், மொத்தமாக பார்க்கும் போது வெட்ப நிலை 25 முதல் 28.3 டிகிரி சென்டிகிரேட்தான் என்றாலும், காற்றில் ஈர தன்மை வெகுவாக குறைத்திருக்கும்.<br /><br />சாதாரண உடையில் இருக்கலாம், ஆனால் என்னதான் சாதாரண உடையில் இருந்தாலும் வேர்வையும் பிசு பிசுப்பு தன்மையும் அதிகமாக இருக்கும், வீட்டில் குளிசாதனம் இல்லாமல் இருக்க முடியாது.<br /><br />தென்கொரியாவை பொறுத்த வரை வீட்டு பொருட்கள் வாங்குவது முதல் குடும்ப வரவு செலவு அனைத்தும் பெண்கள்தான் என்பதால், வெளியில் எங்கும் அதிகமாக பெண்களை மட்டுமே பார்க்க முடியும்.<br /><br />இந்த காலத்தில் வெயில் கூட கூட, பெண்கள் ஆடை குறையும், குளியலரையில் இருந்து அப்படியே வந்தது போல அரையும் குறையுமாக வண்ணமயமாக சுற்றிக்கொண்டு இருப்பார்கள். அவ்வளவு சின்ன டிடவுசரில் அவர்களை பார்த்தல் ஆண்களுக்கே வெக்கம் வந்துவிடும்.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPOXvvs6RLGOM6Xq_D5mEhYjq8E47TAHTBnFoUWt1mOneMTWrWfrtDGBZCkkWmnVQozEx2L9CMCPlkeMfs9CwVhyphenhyphenSzvUtuMZGdBFajPi0GSnbPFXUtNjzFKYmI84-yFqKo54WhGJ9fsCA/s1600/korean-beer-girls.jpg" target="new"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 218px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPOXvvs6RLGOM6Xq_D5mEhYjq8E47TAHTBnFoUWt1mOneMTWrWfrtDGBZCkkWmnVQozEx2L9CMCPlkeMfs9CwVhyphenhyphenSzvUtuMZGdBFajPi0GSnbPFXUtNjzFKYmI84-yFqKo54WhGJ9fsCA/s320/korean-beer-girls.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5550141456431054210" /></a><br /><br />ஆனா மக்களே "கபர்தார்" (ஜாக்கரதை)!, நம்ம ஊர் மாதிரி நினைத்துக்கொண்டு தவறாக ஏதாவது செய்தால் போலிஸ் வந்து நம் டிடவுசரை கழட்டிவிடும். <br /><br /><u>செப்டம்பர் முதல் நவம்பர் வரை (Autumn),</u> அப்படி இப்படின்னு கண்ணை கழுவி கோடை காலத்தை முடித்தால் வருவது அற்புதமான இலையுதிர் காலம், என்னை பொறுத்தவரை, தென்கொரியாவிற்கு வர இதுதான் சரியான சமயம்.<br /><br />வெட்பநிலை 10 டிகிரிக்கு கீழே இருந்தாலும், மரங்கள் எல்லாம் இலைகள் பழுத்து மஞ்சள் மற்றும் காப்பி நிறத்தில் நகரமே அவ்வளவு அழகாக இருக்கும்.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEis_s5GP5Ymn0IZl0rkJtCTZRbMfnVuwnHa74qc0W6AV2_NgS6Eb3EgvFs96EDk7FVMxwgCeAHTnMp5vEvxFUIBOJaIVjKmy5yw31Gr3vL9ueKmRANOUj27MjYvSmk5v1wwgQgpMTRDLBA/s1600/SKA.jpg" target="new"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEis_s5GP5Ymn0IZl0rkJtCTZRbMfnVuwnHa74qc0W6AV2_NgS6Eb3EgvFs96EDk7FVMxwgCeAHTnMp5vEvxFUIBOJaIVjKmy5yw31Gr3vL9ueKmRANOUj27MjYvSmk5v1wwgQgpMTRDLBA/s320/SKA.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5550138057974624866" /></a><br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhjnKyL_qnInSDM56RecgI7yvGzP6wpeXWrE7HWcKJbHYToFJW4H9yu-7g3Bl1Jz3-udbDThwuExBg8dCdo1T2Wn-UvYGHnASqEGp8WTMqIUEiTmMhDqPP2F__ZmNuVB_ideQL0rnQexaQ/s1600/SKA2.jpg" target="new"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhjnKyL_qnInSDM56RecgI7yvGzP6wpeXWrE7HWcKJbHYToFJW4H9yu-7g3Bl1Jz3-udbDThwuExBg8dCdo1T2Wn-UvYGHnASqEGp8WTMqIUEiTmMhDqPP2F__ZmNuVB_ideQL0rnQexaQ/s320/SKA2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5550137748012596338" /></a><br /><br />ஆசியாவில் இதை போல ஜப்பான் மற்றும் சீனாவில் ஒரு சில பகுதிகளில் மட்டுமே காணமுடியும் என்று நினைக்கிறேன், நகரை சுற்றி பார்க்க இது மிக சிறந்த நேரம்.<br /><br />இதே சமயத்தில் இங்கு திருவிழாக்கள் வருவதால் விடுமுறை, கேளிக்கை, கொண்டாட்டம் என்று எங்கும் மகிழ்ச்சி மயமாக இருக்கும்.<br /><br />இலையுதிர் காலம் முடிய போகும் போது ஓரிரு வாரம் காற்று அடிக்கும் பாருங்க, சும்மா நம்ம வீட்டையே நாலு தெரு தள்ளி கொண்டு போய் வைத்துவிடும் அப்படி பகலும் இரவும் பேய் காற்று அடிக்கும். <br /><br />சுட்டி பெண்கள் வேண்டும் என்றே (குட்டை)பாவாடையோடு வருவார்கள்.<br /><br /><u>டிசம்பர் முதல் மார்ச் வரை (Winter),</u> அடித்த காற்றில் எல்லா இலைகளும் உதிர்ந்து நகரமே மொட்டை அடித்தது போல இருக்கும் போது குளிர்காலம் துவங்கும்.<br /><br />பொதுவாக டிசம்பர் முதல் வாரத்தில் -01 முதல் -03 டிகிரி சென்டிகிரேட் என்று துவங்கும் பனிபொழிவின் அளவு கூடிக்கொண்டே போக போக வெட்ப நிலை எதிர்பார்க்காத அளவு குறைந்து கொண்டே போகும்.<br /><br />அதிக பட்சமாக -10 முதல் -15 டிகிரி சென்டிகிரேட்வரை போகக்கூடும், முப்பது வருடங்களுக்கு பிறகு கடந்த வருடம் ஜனவரியில் -20+ டிகிரி சென்டிகிரேட் சென்றது.<br /><br />குளிர் காலத்தின் துவக்கம் டிசம்பர் முதல் ஜனவரி பாதிவரை லேசான பனிபொழிவாக இருப்பதாலும் கிறிஸ்மஸ், புதுவருடம் என்று விடுமுறைகள் வருவதாலும், நகரமே வண்ண மயமாக அதுவும் இரவு நேரம் மிக ரம்யமாக இருக்கும்.<br /><br />வானில் பனிமழை தூவ, தெருவெங்கும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு "லாஸ்ட் கிறிஸ்மஸ், ஜிங்கில் பெல்ஸ்" போன்ற பாடல்கள் ஒலிக்க, எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் தங்கள் துணையுடன் கொரியா டக்கீலா "சோஜு" சூட்டில் கட்டியணைத்துக்கொண்டு நடக்க, நாடே திருவிழா கோலத்தில் மிதக்கும்.<br /><br />வார இறுதி இரவு வாழ்கைக்கு மற்றும் தேனிலவு சுற்றுலாவுக்கு இது அற்புதமான காலம்.<br /><br />அதன் பின், குளிர் கூட கூட, அதிக அளவு குளிர்தாங்கும் ஆடைகள் இல்லாமல் வெளியே போக முடியாது, வீட்டில் ஹீட்டர் மூலம் வெட்ப நிலையை +20+ டிகிரிக்கு மாற்றாமல் இருக்க முடியாது.<br /><br />குழந்தைகளை இந்த காலத்தில் அதிக பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டும், அடிக்கடி அவர்கள் உடல் வெட்ப நிலையை கண்காணிக்க வேண்டும்.ஜனவரி கடைசி முதல் எப்படா ஏப்ரல் வரும் என்று ஏங்குமளவு குளிர் நம்மை படுத்தி எடுத்து விடும்.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbrRbaZOS82PHGS6c-tbA-7KfupX_S-hajKOjKGlPbOj1uax7k9Hf3vyzh0ZE44hnpZfw40WCPG0oCHLaR16Ps-pVNSN0YONs7UXaJLp7Vhx6Y-GUPtXe_diLb9r13AzEc9D9APHQlnrY/s1600/sks.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbrRbaZOS82PHGS6c-tbA-7KfupX_S-hajKOjKGlPbOj1uax7k9Hf3vyzh0ZE44hnpZfw40WCPG0oCHLaR16Ps-pVNSN0YONs7UXaJLp7Vhx6Y-GUPtXe_diLb9r13AzEc9D9APHQlnrY/s320/sks.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5550139008428835090" /></a><br /><br />இங்கு கட்டிட அமைப்புகள் இங்குள்ள சீதோசன நிலைக்கு சாதகமாக அமைக்கபட்டுள்ளன, வீட்டின் தரைகள் மரத்தால் செய்து அதன் அடியில் ஹீட்டர் இணைப்பு கொடுக்க பட்டு இருக்கும், நாம் நம் வீட்டின் மின்விசிறியின் அளவை கூட்டுவது போல, ஹீட்டர் மூலம் வீட்டின் தட்பவெட்ப நிலையை மாற்றி அமைத்துக்கொள்ள முடியும்.<br /><br />குடிநீர் முதல் அனைத்து பயன்பாட்டு நீரும் சூடாக அல்லது குளிர்ந்த நிலையில் என்று நமக்கு வேண்டியவாறு மாற்றி அமைத்துக்கொள்ள முடியும், இவை அனைத்தும் நம் வீட்டின் கேஸ் இணைப்பின் மூலம் செயல்படும். அடுப்பு மற்றும் மின்விளக்கு போன்றவை மட்டுமே மின்சாரத்தை பயன்படுத்தும்.<br /><br />இங்கு நான் குளிர் காலத்தில் இருந்து பலமுறை எல்லா இடங்களையும் பார்த்து விட்டதால், இந்த முறை புது வருடத்தை வரவேற்க விடுமுறைக்காக நான் இந்தியா செல்கிறேன்.<br /><br />ஆகவே,நடந்தது நடந்தவையாக இருக்க, இனி நடப்பது நல்லதாக இருக்க, உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தின் மீதும் என்றும் தன் புன்னகையை செலுத்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டி உங்கள் அனைவருக்கும் என் இனிய கிறிஸ்மஸ், புதுவருட மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கிறேன். <br /><br />நன்றி!.சிங்கக்குட்டிhttp://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.com15tag:blogger.com,1999:blog-952520241038452238.post-88849354882599583422010-12-05T16:54:00.000+09:002010-12-05T16:54:23.951+09:00விமான பயணம் கவனம்!இது நிறுவனங்களின் குறையை சுட்டி காட்டும் பதிவே தவிர, அதில் வேலை செய்யும் ஊழியர்களை குறை கூற அல்ல.<br /><br />மேலும், இது வாடிக்கையாளர் சேவையை பற்றிய பதிவு என்பதால், அவர்கள் வேலையில் உள்ள கஷ்டத்தை காட்டும் வகையில் மின் அஞ்சலில் வந்த ஒரு பகிர்வுக்கு பின் விசையத்தை பார்க்கலாம்.<br /><br /><center><br /><iframe title="YouTube video player" class="youtube-player" type="text/html" width="425" height="349" src="http://www.youtube.com/embed/WNATJ55O9x4?rel=0" frameborder="0"></iframe><br /></center><br /><br />பொதுவாகவே நம்மிடம் விமான பயணம் என்றதும் எதோ புதிய அல்லது உயர்தர வாழ்கை முறையை சார்ந்த ஒன்று என்ற எண்ணம் இருக்கிறது, இதை பயன் படுத்திக்கொண்டு இந்த நிறுவங்கள் செய்யும் அட்டகாசம் சொல்ல முடியாத அளவு வந்து விட்டது.<br /><br />விமான பயணமும் பஸ், ரயில் போல ஒரு பயண முறை மட்டுமே மற்ற பயண துறைகளுக்கு உள்ள எல்லா சட்டமும் இதற்கும் பொருந்தும் என்பதை நம்மில் எத்தனை பேர் கவனிக்கிறோம்?<br /><br />என்னிடம் இந்தியா செல்ல ஒரு விமான சீட்டு இருந்தது, ஆசியாவின் முன்னணி விமான நிறுவங்களில் அதுவும் ஒன்று, வேலை பளு மற்றும் அலுவலக விடுமுறை படி என்னிடம் இருக்கும் பயண தேதிக்கு இரண்டு நாள் மாறுபட, பயணதேதியை மாற்றி அமைக்க அந்த விமான நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவையை அழைக்க, அந்த பெண் என்னிடம் பேசியது, என்னை ஒரு அடிமுட்டாள் போல நினைப்பதாக இருந்தது.<br /><br />விமானசீட்டு விலை வேலை நாட்கள், வாரஇறுதி என்று பயண நாட்களை பொருத்து சற்று மாறுபடும் என்பது எனக்கு தெரியும். ஆனால், அவர் சொன்னது கிட்டதட்ட பதினாராயிரம் வித்தியாசம்!, இது கண்டிப்பாக சாத்தியமில்லை என்று எனக்கு புரிய, ஏன் என்று கேட்டேன்?<br /><br />அந்த பெண் நான் எதோ விமானத்தை முன்பின் பார்த்திராத போல் நீங்கள் வைத்திருக்கும் வகுப்பில் தற்போது இருக்கை காலி இல்லை என்பதால், நான் உங்களுக்கு வேறு வகுப்பில் இருக்கை தருகிறேன் என்று சொல்ல, நானும் "(C) Economy Class, (B) Business / Executive Class, (A) First Class" இதில் எந்த வகுப்பில் தருகிறீர்கள் என்று கேட்க? அவரிடம் பதில் எதுவுமில்லை, சிறிது நேரம் என்னை காக்க வைத்து விட்டு திரும்ப அவர் சொன்ன பதில் என் கோவத்தை இன்னும் அதிகமாகியது.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_OdePqtqz0u4cTBX3NGm5WrXWaeE6NVZ7Rj6DwK-5fUE34zifaue3PMbP8uvCvRezjXU0IiEVQomXcFjWrzG8jbZkOw74rhgkl-qRJ1_9iHq1BOOiROBn47WOYhszgJUy5sdf2xFRRSw/s1600/ATS.jpg" target="new"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 250px; height: 250px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_OdePqtqz0u4cTBX3NGm5WrXWaeE6NVZ7Rj6DwK-5fUE34zifaue3PMbP8uvCvRezjXU0IiEVQomXcFjWrzG8jbZkOw74rhgkl-qRJ1_9iHq1BOOiROBn47WOYhszgJUy5sdf2xFRRSw/s320/ATS.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5547086923686274130" /></a><br /><br />அதாவது தற்போது நான் வைத்திருக்கும் அதே வகுப்பில் பயண தேதியை இரண்டுநாள் தள்ளி மாற்றி தர இந்த கட்டணமாம், காரணம் நான் கேட்கும் தேதியில் தற்போது இருக்கை காலி இல்லையாம்.<br /><br />அந்த பெண்ணிடம் பேசிக்கொண்டே என் கணினியில் எனக்கு வேண்டிய தேதியில் புதிதாக சீட்டு வாங்க விலையை பார்த்தல், தற்போது நான் வைத்திருக்கும் சீட்டின் விலையை விட வெறும் நான்காயிரம் மட்டுமே வித்தியாசம் வருகிறது, அத்தனை இருக்கையும் காலியாக இருக்கிறது.<br /><br />ஏன் என்று மீண்டும் அந்த பெண்ணிடம் கேட்க, மீண்டும் என்னை காத்திருக்க சொல்லிவிட்டு சற்று நேரம் கழித்து வந்தவர், ஏதேதோ சம்மந்தம் இல்லாமல் விளக்கம் தந்தார்?<br /><br />நான் முடிவாக சரி, இதோ எனக்கு வேண்டிய தேதியில் இணையம் மூலம் நான் ஒரு புதிய சீட்டை வங்கி விட்டேன், அதனால் என் பழைய சீட்டை நான் ரத்து செய்து விடுகிறேன். <br /><br />ரத்து செய்ய ஆயிரத்து எண்ணூறு ரூபாய் அபராதம் வரும் என்று எனக்கு தெரியும், அதனால் மீத தொகையை என் வங்கி கணக்குக்கு அனுப்ப சொன்னேன்.<br /><br />பதினாராயிரம் கொடுத்து தேதியை மாற்றாமல் இப்படி பழைய சீட்டை ரத்து செய்து புது சீட்டு வாங்குவதன் மூலம் நான் ஒன்பதாயிரம் சேமிக்க முடியும் என்று சொன்னேன்.<br /><br />மீண்டும் என்னை காத்திருக்க சொல்லிவிட்டு சற்று நேரம் கழித்து வந்தவர், உங்கள் பழைய சீட்டை ரத்து செய்ய கட்டணம் ஆயிரத்து எண்ணூறு ரூபாய் அல்ல ஐய்யாயிரத்து ஐநூறு ரூபாய் என்று சொல்ல எனக்கு உச்சிக்கு போய் விட்டது கோபம்.<br /><br />என் பழைய சீட்டில் ரத்து செய்ய கட்டணம் ஆயிரத்து எண்ணூறு ரூபாய் என்று போட்டு இருக்கிறது, இப்போது நீங்கள் ஐய்யாயிரத்து ஐநூறு ரூபாய் என்று சொன்னால்! அதற்க்கான எழுத்து விளக்கம் எங்கே இந்த சீட்டில் இருக்கிறது என்று கேட்க? அவரிடம் பதில் எதுவும் இல்லை.<br /><br />இந்த முறை நானே அவரிடம் மீண்டும் என்னை காத்திருக்க சொல்லாமல், நீங்கள் பேசும் நபரிடம் அல்லது உங்கள் மேலாளரிடம் எனக்கு தொடர்பு கொடுத்தால் நானே நேரடியாக அவரிடம் விளக்கம் கேட்பேன் என்று சொல்ல, அதற்கும் அவர் தயாராக இல்லை?<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmHD_BdTW9d0TYYtYVXT2hKrXBJQNk93daPATVe3pSj5B0k2BvTY4p4JLLvExW873tthZcZT9jFDBXFv4Yl_9aVthOXajP_gID06aSQfrvb1gszoWxQ696qg9zYn37621ny5rDL6U0U4k/s1600/ATS1.jpg" target="new"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 226px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmHD_BdTW9d0TYYtYVXT2hKrXBJQNk93daPATVe3pSj5B0k2BvTY4p4JLLvExW873tthZcZT9jFDBXFv4Yl_9aVthOXajP_gID06aSQfrvb1gszoWxQ696qg9zYn37621ny5rDL6U0U4k/s320/ATS1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5547087066780536386" /></a><br /><br />சரி, இப்போது நீங்கள் எனக்கு இந்த சீட்டை ரத்து செய்ய ஐய்யாயிரத்து ஐநூறு ரூபாய் என்று எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்ப முடியுமா? என்று கேட்டால் அதற்கும் அவர் தயாராக இல்லை?<br /><br />நான் கடைசியாக சொன்னது, நீங்கள் வாங்கும் கூடுதல் பணத்திற்காக நான் பேசவில்லை, இது முறையாக அரசாங்கத்தின் கணக்கில் வருவதாய் இருந்தால், நீங்கள் இப்படி எந்த எழுத்து விளக்கமும் தராமல் பணம் எடுக்க தேவை இல்லை?<br /><br />மேலும் எனக்கு இந்த பணத்தால் பெரிய நஷ்டம் ஒன்றும் வந்து விட போவதில்லை, ஆனால் தின கூலி வேலைக்கு குடும்பத்தை நாட்டை விட்டு சென்று உழைக்கும் எத்தனயோ மக்களுக்கு இது மிக பெரிய தொகையல்லவா? இதற்காகத்தானே அவர்கள் இனம் மொழி தெரியாத நாட்டில் கஷ்டப்படுகிறார்கள்? அதனால்தான் கேட்டேன்.<br /><br />எப்படியோ நீங்கள் எடுக்க வேண்டிய தொகையை எடுத்து விட்டு மீதத்தை அனுப்பவும், ஆனால் அப்போதும் நான் என்னிடம் இருக்கும் பழைய சீட்டையும் நீங்கள் திரும்ப அனுப்பிய தொகையையும் கொண்டு உங்கள் தலைமை அலுவலகத்திலும் மற்றும் இது சம்மந்த பட்ட துறையிலும் புகார் செய்வேன் என்று சொல்லிவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் வைத்து விட்டேன்.<br /><br />விமான பயணிகள் ஒரு விமான சீட்டை வாங்கும் போது அதில் உள்ள அத்தனை விதிமுறைகளை பார்த்து வாங்கவும், அதே போல பயணத்தை ரத்து அல்லது மாற்றி அமைக்கும் போது, அவர்கள் எழுத்தில் கொடுத்துள்ள அந்த அபராத தொகைக்கு மேலே போகும் பட்சத்தில் அவர்களிடம் எழுத்து வடிவில் கேளுங்கள். இனம், மொழி தெரியாத நாடு என்று பயம் வேண்டாம், தேவை பட்டால் சம்மந்த பட்ட துறையில் புகார் கொடுக்கவும் அஞ்ச வேண்டாம்.<br /><br />மொபைல் போன் போல இது அனைவரின் பயன்பாட்டில் இல்லை என்றாலும், ஏமாற்றும் தொகையின் அளவு (3700 ரூபாய்) மிக பெரியது இல்லையா, கவனிக்காமல் நேரடியாக தேதியை மட்டும் நான் மாற்றியிருந்தால் இன்னும் அதிகமாக நஷ்டமாகியிருக்கும். <br /><br />மேலும் கணக்கில் வராமல் எழுத்தில் தராமல் எடுக்கும் ஒவ்வொரு பைசாவுமே ஊழல்தானே? அதை சிந்தித்து பார்த்து செயல் படுங்கள் நண்பர்களே.<br /><br />நன்றி!.சிங்கக்குட்டிhttp://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.com28tag:blogger.com,1999:blog-952520241038452238.post-89243106109277900602010-11-25T19:49:00.001+09:002010-11-25T19:49:15.252+09:00தென்கொரியா போர் பதட்டம்!<font color="#2554C7">எப்போதும் போலத்தான் அன்று மதியமும் இலையுதிர் கால குளிரில் நடுங்காமல் இருக்க அலுவலக ஹீட்டர் எங்களை சூடேற்றிக்கொண்டு இருக்க, மதிய உணவாக உள்ளே சென்ற கோழியும் சிலபல இலைதழைகளும் எங்கள் கண்களை சொருக வைத்துக்கொண்டு இருந்தாலும், நாங்கள் அலுவலக கணினியை வெறித்துக்கொண்டு இருந்தோம்.<br /><br />திடீரென்று ஒரு பலத்த சத்தம் கட்டடங்கள் ஆடுவதை போல உணர்வு, எங்கும் ஒரே தீ மற்றும் புகை, மக்கள் பதட்டமாக வட கொரியா குண்டு போடுகிறது ஓடி பதுங்குங்கள் என்று கத்தியபடி பதுங்கு குழியை தேடி இங்கும் அங்கும் ஓடும் ஒரு சில நிமிடங்களில் இன்னும் பல குண்டுகள் வந்து விழுகின்றன.<br /><br />இந்நிலையில் உள்ளே நுழைந்த தென் கொரிய ராணுவ ஹெலிகாப்டர்கள் பதிலுக்கு தாக்க எங்கும் ஒரே குண்டு மழை...! <br /><br />எனக்கும் வேறு வழி எதுவும் தெரியவில்லை, உடனே குடையை விரித்துக்கொண்டு எடுத்தேன் பாருங்க ஓட்டம்...! <br /><br />என்ன புரியலையா? <br /><br />அதான் ஒரே குண்டு "மழைன்னு" சொன்னோம்ல :-)...!<br /><br />சரி, சரி முறைக்க வேண்டாம், வெட்டி பில்டப்பை முடிந்து கொண்டு விசையத்துக்கு வருவோம்.</font><br /><br />கடந்த சில நாட்களாகவே இது போல் ஏதாவது நடக்கக்கூடும் என்று எதிர் பார்த்த தென்கொரிய அரசு மிக சரியாக பாதுகாப்பு முறைகளை தயார் நிலையில் வைத்திருந்தது, போர் கால அவசர நடவடிக்கைகள், பொது மக்கள் தற்பாதுகாப்பு முறைகள் போன்றவை எஸ்.எம்.எஸ் மூலம் அவப்போது வந்த வண்ணம் இருந்தது.<br /><br />உலக நாடுகள் குறிப்பாக ஜப்பான், ரஷ்யா மற்றும் அமெரிக்கா மிக உன்னிப்பாக இந்த விசையத்தை நேரடியாக கண்காணிப்பதால் அப்படி எதுவும் நடக்காது என்று இருந்த மதிய வேலை, வடகொரியா தன் சேட்டையை துணிந்து காட்டிவிட்டது.<br /><br />தென்கொரியாவின் இயாங்பியாங் தீவில் ஐம்பது முறை F-16 பீரங்கி குண்டுகளை வீசி திடீர் தக்குதல் நடத்த, அந்த தீவில் இருந்த தென்கொரியாவின் ராணுவ தரப்பில் இருந்து எம்பது ரவுண்டு துப்பாக்கி சூடு தற்காப்புக்காக நடத்த பட்டது. <br /><br />அதன் பின் இரு நாடுகளும் முதலில் தாக்குதலை தாங்கள் துவக்கவில்லை என்று அறிவித்து இருக்கிறது.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnfandir2IqNHk-OzTg1S-bAROhKkuMSSdQNXf3rbKT4X28mpdWKDNgo7NmhYSg1as-J-SPRQivt6LuMg-D1uKLadQn1_e-Wn5aYLKJwGiy5jxUnfMJ0oGUa33FCeEsjDTAmmVjEYyBxw/s1600/NSK-DMZ.jpg" target="new"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 271px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnfandir2IqNHk-OzTg1S-bAROhKkuMSSdQNXf3rbKT4X28mpdWKDNgo7NmhYSg1as-J-SPRQivt6LuMg-D1uKLadQn1_e-Wn5aYLKJwGiy5jxUnfMJ0oGUa33FCeEsjDTAmmVjEYyBxw/s320/NSK-DMZ.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5543429985594505170" /></a><br /><br />வடகொரியா தென்கொரியா எல்லையை நிலத்திலும் நீரிலும் (DMZ) பிரித்தது முதல் இருநாடுகளுக்கும் பிரச்னை இருந்து கொண்டுதான் இருக்கிறது, இந்த நிலையில் இந்த தக்குதல் போர் வரும் சூழ்நிலையை கொடுத்திருப்பதால், சீனா, ரஷ்யா, ஜப்பான் நாடுகள் இந்த பதட்டத்தைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன, அமெரிக்கா தென்கொரியாவுக்கு ஆதரவாகப் போராடும் என்று அறிவித்து இருக்கிறது.<br /><br />தென்கொரியா அரசு தரப்பில் இருந்து வடகொரியா தன் செயலை உடனடியாக நிறுத்திக் கொள்ளா விட்டால் மிக மோசமான ஒரு சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டி வரும் என்று எச்சரித்து இருக்கிறது.<br /><br />எனக்கு புரிந்தவரை, உண்மையில் வடகொரியாவின் இந்த தாக்குதலில் அடிப்படை காரணம் என்பது, இந்த தக்குதல் நடந்த தீவில் இருக்கும் தென்கொரிய ராணுவமும் அமெரிக்கா ராணுவமும் கூட்டுப் பயிற்சி மேற்கொள்ளும் திட்டதின் படி அமெரிக்கா விமானம்தாங்கி போர்க்கப்பல் இங்கு வந்துள்ளது, இதற்கான எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் வடகொரியா செயல் பட்டு இருக்கிறது, காரணம் வடகொரியா மீது அமெரிக்கா பல பொருளாதாரத் தடைகளை விதித்தது இருக்கிறது.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi46bmEDAq9qlS8SY-7D-ky29gqEK0d1vcxLQojNxJILz7GXnoSKpk1pEcRznlZ1-ynNEwvBmEQTWIEbprhEm9PN8nwBiKlFVJtI0n3Pkvx4vok6wvSn5LQWjJPfsUfyDr6SLQ8PvB35kE/s1600/ibb.JPG" target="new"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 211px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi46bmEDAq9qlS8SY-7D-ky29gqEK0d1vcxLQojNxJILz7GXnoSKpk1pEcRznlZ1-ynNEwvBmEQTWIEbprhEm9PN8nwBiKlFVJtI0n3Pkvx4vok6wvSn5LQWjJPfsUfyDr6SLQ8PvB35kE/s320/ibb.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5543430536002593378" /></a><br /><br />மேலும் கடந்த மார்ச் மாதம் தென்கொரியாவின் போர்க் கப்பல் ஒன்று, வடகொரிய கடல் எல்லைக்கருகில் மர்மமான முறையில் மூழ்கடிக்கப்பட்டு அந்த கப்பலில் இருந்த 49 வீரர்களும் பலியானார்கள். இது வடகொரியாவின் செயல் என்றும் நீர்மூழ்கி குண்டு மூலம் தன் கப்பலை வடகொரியா மூழ்கடித்ததாக தென்கொரிய விசாரணைக் குழு அறிக்கை கடந்த மே மாதம் வடகொரியாவை குற்றம் சாட்டியது போன்றவைதான் காரணம்.<br /><br />தக்குதல் நடந்த தீவில் வசிக்கும் மக்களோடு தென்கொரியவின் ராணுவ முகாம் இருக்கிறது, குண்டு வீச்சுக்குப் பின் பொது மக்கள் உடனடியாக ராணுவ பாதுகாப்பு கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டனர், காயம் பட்ட மக்கள் சிகிச்சைக்காக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர் மற்றும் தீவில் இருபவர்களுக்கு தேவையான பொருட்கள் தீவுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது.<br /><br />தென் கொரியாவின் இரண்டு வீரர்கள் இந்த தாக்குதலில் தங்கள் தாய் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்து வீர மரணம் அடைந்து இருக்கிறார்கள், அவர்களுக்கு நாடெங்கும் அஞ்சலி செலுத்த படுகிறது.<br /><br />தாக்குதலில் பதிப்படைந்த பகுதியில் ராணுவம், தீயணைப்பு மற்றும் மருத்துவ குழுக்கள் போர்கால சீரமைப்பு நடவடிக்கைகளில் இறங்கி இருக்கின்றன.<br /><br />தென்கொரிய மக்கள் நாம் இதற்கு சரியான பதிலடி கொடுத்து வடகொரியாவுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்று அங்கங்கே வடகொரியாவுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள், நேற்று இரவுக்கு மேல் சம்பந்த பட்ட துறைகளை தவிர மற்ற இடங்களில் இயல்பு வாழ்கை பாதிக்காமல் தொடர்கிறது.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh684zcr0BW5xF13PAEZam4FrUi1RYlQp2KoX18wKD9wWXg_zCjxu0_C1VlKvXUejJ5Hyk2ixR2RoSMe3KrQc238x9qY_auxESnJsr4BkRQRUqmjd74ylNtPX4s3KLRo4wfcnUsdhNFB1o/s1600/ebp.JPG" target="new"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 209px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh684zcr0BW5xF13PAEZam4FrUi1RYlQp2KoX18wKD9wWXg_zCjxu0_C1VlKvXUejJ5Hyk2ixR2RoSMe3KrQc238x9qY_auxESnJsr4BkRQRUqmjd74ylNtPX4s3KLRo4wfcnUsdhNFB1o/s320/ebp.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5543432564969521618" /></a><br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxoukzezjWy6lG8p18m0WkhpxB64NX-ZyHbtMpLqQJdmyI-4Tc77X6-wK8lbaBa-C4ZPU6Al5xiOYUlaRwTTCSH4FU-qmiDIUeVPaYqTnOfftJFdXl9uNCK4Cb4PP6FBGGLieUoqkKjJc/s1600/bpb.JPG" target="new"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 210px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxoukzezjWy6lG8p18m0WkhpxB64NX-ZyHbtMpLqQJdmyI-4Tc77X6-wK8lbaBa-C4ZPU6Al5xiOYUlaRwTTCSH4FU-qmiDIUeVPaYqTnOfftJFdXl9uNCK4Cb4PP6FBGGLieUoqkKjJc/s320/bpb.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5543432446766309394" /></a><br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjYJ7zoGpmaeHcbNZlnGmU_zOvdBrSeAyoELF9ysmBUl-YkpWqlj82_lTRAqulEcxu7qCyIihMomBBGmK682z3Hcyaa8_HgtEBxZoSDfN6S_P7HT2o6v3pTNDBeMZNe4F0eTa4GphecMYA/s1600/fs.JPG" target="new"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 208px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjYJ7zoGpmaeHcbNZlnGmU_zOvdBrSeAyoELF9ysmBUl-YkpWqlj82_lTRAqulEcxu7qCyIihMomBBGmK682z3Hcyaa8_HgtEBxZoSDfN6S_P7HT2o6v3pTNDBeMZNe4F0eTa4GphecMYA/s320/fs.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5543432305989117090" /></a><br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4B12zGslbiRGNUWPRuemFQ2kVcVkUU3DMZDaQBA_gpUTJnLxDoJ5Dh5VMKeAmpAWBBpHlqS7_P3y2c2MtnPHTiKltiPfF7-9T9HK5RFADpe-cUuX2x7t32O3po17rfrp_xLhWX-xHcqw/s1600/kbg.JPG" target="new"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4B12zGslbiRGNUWPRuemFQ2kVcVkUU3DMZDaQBA_gpUTJnLxDoJ5Dh5VMKeAmpAWBBpHlqS7_P3y2c2MtnPHTiKltiPfF7-9T9HK5RFADpe-cUuX2x7t32O3po17rfrp_xLhWX-xHcqw/s320/kbg.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5543432182865345970" /></a><br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLNGoAEf5L9wwkxpf-I42ddrt1y0F8bIA5E_ez2Fp_OUTJ4PnSeEbH0m7DjbaWXcOXoBS4kr8DFycPnok5Y5QIu1_uqyDVPXB0VztZuI6iVLmgjnu4gTcuAnAHNlbOiHg0ADi02YKUVY8/s1600/kfs.JPG" target="new"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 216px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLNGoAEf5L9wwkxpf-I42ddrt1y0F8bIA5E_ez2Fp_OUTJ4PnSeEbH0m7DjbaWXcOXoBS4kr8DFycPnok5Y5QIu1_uqyDVPXB0VztZuI6iVLmgjnu4gTcuAnAHNlbOiHg0ADi02YKUVY8/s320/kfs.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5543432059823314578" /></a><br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjFD7d_bSHIumoE9Y9pIMJIw3swDeUbCjsu9qJs8p9sB2inGQS_4sFlMbBuKntRrl-x8DycBtbZ95jQa32cqtd5gXKox_Vq6BcTLjSycDRMxuQdjQvDtPxsVN8xTHoJWKsj2AhjPenMv-w/s1600/sba.JPG" target="new"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 207px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjFD7d_bSHIumoE9Y9pIMJIw3swDeUbCjsu9qJs8p9sB2inGQS_4sFlMbBuKntRrl-x8DycBtbZ95jQa32cqtd5gXKox_Vq6BcTLjSycDRMxuQdjQvDtPxsVN8xTHoJWKsj2AhjPenMv-w/s320/sba.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5543431904133023234" /></a><br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhc3GSVzqd0IGAV6ftipX7hUR-RU233G7FSWOxHyPVxXOgIIXrfY_ZEfx_JUakomE8RvbLwfnQU_-k37r4BfX9E6x5NBIWuI1NkEoLQWkLurQJkuJw0O5oNLbf_2ov_DytVr7WDESZpZro/s1600/skti.JPG" target="new"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhc3GSVzqd0IGAV6ftipX7hUR-RU233G7FSWOxHyPVxXOgIIXrfY_ZEfx_JUakomE8RvbLwfnQU_-k37r4BfX9E6x5NBIWuI1NkEoLQWkLurQJkuJw0O5oNLbf_2ov_DytVr7WDESZpZro/s320/skti.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5543431755280250834" /></a><br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgNfiPDUIvrBlshVaQTCp-PLlBiait4SLCsnku24wHW-7hDXfcAbDc1YItIqzyl9cS5Qu-4mcKboSv6GY1GPbfnIlS-lkSsVftTblhjtVIWJHdckV-gNq-c9aNUGbwilZHSUae1LenBAZ8/s1600/pmo.JPG" target="new"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 218px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgNfiPDUIvrBlshVaQTCp-PLlBiait4SLCsnku24wHW-7hDXfcAbDc1YItIqzyl9cS5Qu-4mcKboSv6GY1GPbfnIlS-lkSsVftTblhjtVIWJHdckV-gNq-c9aNUGbwilZHSUae1LenBAZ8/s320/pmo.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5543431642379485170" /></a><br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjEKQbddXzMdUkxAwYt8xnhFnfR3CaEeJ-rZENZCdUQ1yE6xRfvLx0UpRk2y1MH73F6jJsaloB81KZRqJjeHhy_Xe9z8h0XL6FLfibqapycsIlguNltRVx1Z6yaV9Uz_tQuC81EXd8PNbU/s1600/pank.JPG"target="new"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 210px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjEKQbddXzMdUkxAwYt8xnhFnfR3CaEeJ-rZENZCdUQ1yE6xRfvLx0UpRk2y1MH73F6jJsaloB81KZRqJjeHhy_Xe9z8h0XL6FLfibqapycsIlguNltRVx1Z6yaV9Uz_tQuC81EXd8PNbU/s320/pank.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5543431483952628082" /></a><br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxlJzNgQYGI_TTzqiO0wQ_S9dwHDFx7sZwKiiu4fgUbmt1_cN2vWD9BC56IQGkrVT-kyPVPLyKHysYozmiNdjaFsBZjxv9pIH3rVNxCOe2slen9Bd0RQa6TJUuUWQCFyllhLyvaim5liY/s1600/SKA.JPG" target="new"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxlJzNgQYGI_TTzqiO0wQ_S9dwHDFx7sZwKiiu4fgUbmt1_cN2vWD9BC56IQGkrVT-kyPVPLyKHysYozmiNdjaFsBZjxv9pIH3rVNxCOe2slen9Bd0RQa6TJUuUWQCFyllhLyvaim5liY/s320/SKA.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5543431351556316066" /></a><br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhuyzSnl_M7lm3ndHjjiqzyQ_hsUIkv-6S0JABMVlv1I62sKZ_802nRhEUsI50zJvxvnclEXJ0D4f_2M0r4zfkkZIoiwj5lZ92mpuCv2qvlXcX97GvXCFf4Ws-bMISU6ihjJZD14wABnQM/s1600/nas.JPG" target="new"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhuyzSnl_M7lm3ndHjjiqzyQ_hsUIkv-6S0JABMVlv1I62sKZ_802nRhEUsI50zJvxvnclEXJ0D4f_2M0r4zfkkZIoiwj5lZ92mpuCv2qvlXcX97GvXCFf4Ws-bMISU6ihjJZD14wABnQM/s320/nas.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5543433543320188626" /></a><br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi6vmHwiKhvnomdCKlee9JY6NGo8ERx7h6mLk1CBpc_R8wWfYx53SBMb46Jfj8jPkedvLcECit08AxqKVdj62_LMhG-73LSFFBKJes5HtCDh-4_3OdRarCikMwPFEoUOLq5CNOmU1yM5mk/s1600/ask.JPG" target="new"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 210px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi6vmHwiKhvnomdCKlee9JY6NGo8ERx7h6mLk1CBpc_R8wWfYx53SBMb46Jfj8jPkedvLcECit08AxqKVdj62_LMhG-73LSFFBKJes5HtCDh-4_3OdRarCikMwPFEoUOLq5CNOmU1yM5mk/s320/ask.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5543432686055626706" /></a><br /><br />இது போராக மாறும் பட்சத்தில் உடனடியாக பாதிக்க படும் ஜப்பான், ரஷ்யா மற்றும் சீனா நாடுகள் இப்படி துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையை தவிர்த்து இருநாடுகளும் பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்னையைத் தீர்த்துக் கொள்ளவேண்டும் என கூறியுள்ளன.<br /><br />இரு நாடுகளின் போக்கையும் உன்னிப்பாகக் கவனித்து வரும் அரசியல் நிபுணர்கள், வடகொரியாவின் அணுகுண்டு தயாரிப்பில் தீவிரம் மற்றும் அரசியல் தலைமை மாற்ற அறிவிப்பு போன்றவற்றால் இப்பிரச்னை இன்னும் தீவிரமடையக் கூடும் என்று கருதுகின்றனர்.<br /><br /><center><br /><object id="wsj_fp" width="512" height="363"><param name="movie" value="http://s.wsj.net/media/swf/main.swf"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><param name="flashvars" value="videoGUID={F63EEF64-772E-4ECE-8688-1E6947E00D40}&playerid=1000&plyMediaEnabled=1&configURL=http://wsj.vo.llnwd.net/o28/players/&autoStart=false" base="http://s.wsj.net/media/swf/"name="flashPlayer"></param><embed src="http://s.wsj.net/media/swf/main.swf" bgcolor="#FFFFFF"flashVars="videoGUID={F63EEF64-772E-4ECE-8688-1E6947E00D40}&playerid=1000&plyMediaEnabled=1&configURL=http://wsj.vo.llnwd.net/o28/players/&autoStart=false" base="http://s.wsj.net/media/swf/" name="flashPlayer" width="512" height="363" seamlesstabbing="false" type="application/x-shockwave-flash" swLiveConnect="true" pluginspage="http://www.macromedia.com/shockwave/download/index.cgi?P1_Prod_Version=ShockwaveFlash"></embed></object><br /></center><br /><br /><font color="#2554C7">நடப்பதெல்லாம் நன்மைக்கே மற்றும் எல்லா புகழும் இறைவனுக்கே என்ற எண்ணத்தோடு நானும் கவலைகளை விட்டு விட்டு இதை பற்றி பதிவு எழுத வந்து விட்டேன், இதில் என் அனுபவத்தையும் கொஞ்சம் கேளுங்க.<br /><br />போர் தக்குதல் விசையம் பரவியதும், நம்ம போன் ரொம்ப பிசி, இந்தியா, சிங்கபூர், மலேசியா என்று கோபால் பல்பொடி விளப்பரம் மாதிரி எல்லா பக்கமும் இருந்து அழைப்புகள், அம்மா, அப்பா, நண்பர்கள் என்றும், கிரி போன்று பதிவுலக நண்பர்களும் மாறிமாறி நலம் விசாரிக்க உண்மையில் மனம் லேசாகி விட்டது.<br /><br />இவ்வளவு பேரை சொல்லிவிட்டு முக்கியமான நம்ம ஆளை சொல்லாமல் விடலாமா? <br /><br />விசையம் தெரிந்து அவசராக அழைத்த தங்கமணி, என்னா மச்சி ஆரமிச்சிடானுகளா? இவிங்க எப்பவுமே இப்படித்தான், அட விடுங்க பாஸ், இதுக்கெலாம் பயந்தா தொழில் பண்ண முடியுமா? <br /><br />சரி, சரி, நோட்டு பேனா எல்லாம் ரெடியா இருக்கு, சீக்கிரம் சொல்லுங்க, எங்க எல்லாம் இன்சூரன்ஸ் இருக்கு, எங்கே எல்லாம் இன்வெர்ஸ்மென்ட் இருக்கு, யார் யார் உங்களுக்கு எவ்வளவு தரனும், நீங்க யாருக்காவது தரணுமான்னு, நிறுத்தாம பேசுது என் செல்லம்? <br /><br />எவ்வளவு கேள்வி? என்ன ஒரு அக்கறைன்னு, நான் அப்டியே ஷாக் ஆகி சொன்னேன்?முடிவே ஆகிடுச்சா? நான் வேணும்னா ஒரு மாப்ளையும் பார்த்து சொல்லவான்னு கேட்டா? அதுக்கும் அசரலையே! <br /><br />ஐய்யய்யோ...திரும்பவும் மொதல்ல இருந்தாதாதாதா...மீ பாவம்ன்னு சொல்லுது அம்மிணி, ஐய்யோ ஐயோ...இன்னும் சின்ன புள்ளையாவே இருக்கு.<br /><br />நன்றி.</font>சிங்கக்குட்டிhttp://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.com20tag:blogger.com,1999:blog-952520241038452238.post-7668001935875104082010-11-23T00:05:00.006+09:002010-11-23T01:36:05.720+09:00கலையாத கனவு!<font face="courier" color="#B40404">"இருபத்தி ஒரு வயதிற்கு உட்பட்டவர்கள்" இந்த பதிவை தவிர்க்கவும்.</font><br /><br />மின் தடையான பவுர்ணமி இரவில் பாட்டு கேட்பதே சுகம்தான், அதிலும் லேசாக மழை தூறினால்!, ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு அந்த மழை வாசத்தோடு பாடல் கேட்கும் சந்தோசம் சொல்லாவா வேண்டும்!.<br /><br /><font color="#0000A0">எங்கே நான் போனாலும் என் வாழ்வில் என்றும்...!, உன் நிழலில் இளைப்பார வருவேன் கண்ணே...!<br /><br />மரணம்தான் வந்தாலும் பூ செண்டு தந்து...!, உன் மடியில் தலைசாய்த்து இறப்பேன் பெண்ணேணேணே...!</font><br /><br />பாடல் ஓடிக்கொண்டு இருந்தாலும், ஏனோ தெரியவில்லை, என்றுமே இல்லாமல் இன்று மட்டும் உடல் லேசாக இருந்தது, மனம் எதோ சொல்ல முடியாத ஒரு உணர்வில் மிதந்தது, சுற்றி இருந்த எதுவுமே தெரியாத ஒரு இருட்டு ஆனாலும் அந்த பவுர்ணமி இரவின் தனிமை எனக்கு ஆனந்தமாகவே இருந்தது.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwXj0-9b77F5EkedoiPgoksfSLJo8dSVlZuWa5XZ9rJGCLN9Hu7XZgbh7wSzyFC1Vhp7_rs2OsnR-XlMxUzoIUvn-F28vfmzsxOpWxqRPaV7MCQiZVNzPuyHbH2zUjKUbFF_MuhNdnXAE/s1600/fmn.bmp" target="new"><img style="float:left; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 306px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwXj0-9b77F5EkedoiPgoksfSLJo8dSVlZuWa5XZ9rJGCLN9Hu7XZgbh7wSzyFC1Vhp7_rs2OsnR-XlMxUzoIUvn-F28vfmzsxOpWxqRPaV7MCQiZVNzPuyHbH2zUjKUbFF_MuhNdnXAE/s320/fmn.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5542341099484846002" /></a><br /><br />ஏதோ சத்தம் கேட்டு திரும்பினேன், கதவை திறந்து கொண்டு கையில் மெழுகுவர்த்தியுடன் உள்ளே வந்த அவளை பார்த்ததும் ஒரு நிமிடம் என் மொத்த உடலும் சிலிர்த்து மூச்சு முட்டியது. <br /><br />என் வாசல் கதவின் பின்புறம் எப்படி குளியலரை போல் தெரிகிறது என்று ஒரு வினாடி யோசித்தாலும்!, அந்த மெழுகு வெளிச்சத்தில் செதுக்கி வைத்த சிலை போல் மின்னிய அவளின் அழகு என் கவனத்தை அவள் மேல் திசை திருப்பியது.<br /><br />குளித்து முடித்து உடலை சுற்றிய துண்டுடன் இருக்கிறாள், சுருண்ட அவள் முடிகளின் நுனியில் இன்னும் நீர் துளிகள் சொட்டிகொண்டு இருக்கிறது, அவள் உடல் மேல் விழுந்திருந்த நீர் துளிகள் அந்த சிறிய வெளிச்சத்தில் எலுமிச்சை மீது விழுந்த நீர்துளி போல் மின்னியது.<br /><br />பெரிதாக இருக்கும் அவள் கண்களில் இன்னும் பெரிதாக ஆச்ரியத்தை கொடுத்து, மெதுவாக கேட்டாள் என்ன அப்படி பார்க்கிறாய்! இதற்காதானே ஏங்கினாய் இத்தனை வருடமாய்!, இதோ வந்து விட்டேன்.<br /><br />இனி "நீ, நான், நாம்" எப்படி வேண்டுமானாலும் விளையாடு என்று சொல்லி சிரிக்கும் போது அவள் கன்னத்தில் விழுந்த குழி என்னை இன்னும் மயக்கினாலும், எனக்கு உடல் தூக்கி வாரி போட்டு அந்த மழை இரவு குளிரையும் தாண்டி குப்பென்று வியர்த்து விட்டது.<br /><br />அவளை பார்த்து உறைந்து போன மனதுக்கு சட்டென்று பொறி தட்டியதை போல மூளை செய்தியை அனுப்பியது, இந்த நொடியோடு அவளை பார்த்து 5702 நாட்கள் ஆகி விட்டது.ஆம், 15 வருடம், 7 மாதம், 9 நாட்கள். <br /><br />ஆனால், அவள் மட்டும் கடைசியாக பார்த்ததை விட இன்னும் இளமையாக, அழகாக, கவர்ச்சியாக இருக்கிறாள்!.<br /><br />அது சரி, இவள் எப்படி இப்போது இங்கு வந்தாள்? <br /><br />மின்னல் வெட்டியதை போல பல கேள்விகள் மனதில் தோன்றி வாய் வரை வந்தாலும் சத்தம் மட்டும் வரவே இல்லை!, இன்னும் கொஞ்சம் பேச முயற்சி செய்தால் உள்ளே இருக்கும் உடல் உறுப்புகள் எம்பி வாய் வழியே வந்து விடும் போல ஒரு உணர்வு.<br /><br />இறுக்கி பிழிவதை போல திடீரென்று என் உடல் ஏன் இத்தனை இருக்கமாகிறது என்று யோசிக்கும் போதே, இன்னும் சிரித்த முகமாய் என்னை நோக்கி அவள் நகர, என் இதய துடிப்பு எனக்கே கேட்கும் அளவு எகிறியது.<br /><br />ஏய் ஹீரோ!, என்னடா இத்தனை யோசனை என்று கேட்டு என் கையை அவள் தொட்ட வினாடி, அத்தனை எண்ணமும் சிதறி, மீண்டும் உடல் லேசாகி மனம் அவள் மேல் நழுவி விழுந்தது.<br /><br />எந்த சிந்தனையும் இல்லாமால்அப்படியே என்னை யாரோ தூக்கி செல்வது போல அல்லது காற்றில் மிதப்பது போல நடக்க அவள் இன்னும் நெருக்கமாகி என்னுடல் உரசி நடந்தாள்.<br /><br />கையில் இருந்த மெழுகுவர்த்தியை சோபாசெட் அருகில் இருந்த மெழுகுவர்த்தி ஸ்டாண்டில் வைக்க, மேலுடை எதுவும் இல்லாமல் இடுப்பில் ஒரு சிறிய துணியை மட்டும் கட்டிய பெண் சிலை கையில் ஒரு குடத்தை தூக்கி பிடித்திருக்கும்படி இத்தனை அழகான ஒரு மெழுகுவர்த்தி ஸ்டாண்டை, என் வீட்டில் இதற்கு முன் பார்த்த நினைவே எனக்கு சுத்தமாக இல்லை.<br /><br />பக்கவாட்டில் சோபா முழுவதும் கால்களை நீட்டி அமர்ந்த அவள், சிலையாக நான் இங்கிருக்க! அந்த சிலையில் என்ன தேடுகிறாய் என்று என் கையை பிடித்து இழுத்து அவளோடு அமரவைத்தாள்.<br /><br />அவளுக்கு முன் நான் அமர்திருக்க, பின்னிருந்து கைகளை என் தோளில் போட்டு என் தலையை அவள் மார்போடு சாய்க்க, ஜன்னல் வழியாக முழு நிலவு எங்கள் இருவருக்குமே தெளிவாக தெரிந்தது.<br /><br />இன்னும் சந்தேகம் தீராமல், நான் தலையை திருப்பி அவள் முகத்தை பார்த்தேன், நிலவும் மெழுகும் கலந்த ஒளியில் அதனை நெருக்கத்தில் அவள் இன்னும் அழகாக தெரிந்தாள்.<br /><br />எப்படி மறப்பேன் அவள் உடல் வாசம், அதே வாசம், இப்போது இன்னும் அதிகமாய், எதுவும் சொல்ல முடியாமல் அவள் கழுத்தில் என் முகம் புதைய ஆழமாக ஒரு முறை அவளின் வாசத்தை சுவாசித்த பின் மீண்டும் திரும்பி நிலவை பார்க்க தொடங்கி விட்டேன்.<br /><br />இதை நீ மறந்திருப்பாய் என்று நினைத்தேன்!, இந்த பழக்கத்தை இன்னும் நீ மறக்கவில்லையா என்று சிரித்த படி கேட்டு? என் பதிலுக்காக எதிர்பார்க்காமல் அவளே தொடர்ந்தாள.<br /><br />இருவரும் இப்படி அமர்ந்து பேசி எந்தனை நாட்கள் இல்லை, இல்லை எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது என்று பேசிகொண்டே அவள் கைகள் என் மார்பில் விளையாட, அப்போதுதான் நான் ஆடை எதுவும் இல்லாமல் இருப்பதை உணர்ந்தேன்?<br /><br />எப்போது நான் உடையை கழற்றினேன்? அல்லது இவள் கழற்றினாளா? இது என்ன கனவா? என்று மனம் குழம்பி நான் எழுந்து நிற்க முயற்சித்தாலும், ஏனோ முடியவில்லை.<br /><br />கல்லூரி நாட்கள் முதல் பழைய நினைவுகள் அத்தனையையும் ஒன்று விடாமல் பேசினாள், அவள் அணைப்பில் இருந்த படி அவள் பேசுவதை கேட்க தோன்றியதே, தவிர எனக்கு எதுவும் பேச வாய் வரவில்லை.<br /><br />இப்படி அவள் பேசுவதை கேட்பது எப்போதுமே என் விருப்பம் என்பது அவளுக்கும் தெரியும். <br /><br />இருவருக்குமே கண்களில் நீர் வடிந்தாலும், இருவருமே சோகமாக இல்லை, சந்தோசமாகவே உணந்தோம், மனமும் உடலும் லேசாக மிதப்பது போல இருக்க, எப்போது, எப்படி கண் மூடினேம் என்றே தெரியவில்லை.<br /><br />திடீர் என்று நான் கண் விழித்து, இது கனவா என்று தலையை திரும்பி பார்க்க, அதே நேரம் அவளும் கண் முழித்தாள். <br /><br />அப்படா...! இது கனவு இல்லை என்று நான் நினைக்கும் போதே, என் உதட்டை அவள் உடதுகளால் லேசாக ஈரமாக்கி விட்டு சொன்னாள்.<br /><br />என்னமா இங்க கஷ்டமா இருக்கா? சரி, வா படுக்கையில் போய் சாய்வோம் என்றாள்.<br /><br />அது இரவா பகலா என்றே தெரியாத லேசான வெளிச்சம் கலந்த இருட்டாக இருந்தது, நேரம் பார்க்க தோன்றினாலும், ஏனோ பார்க்காமல் அவளை பின் தொடர்ந்தேன்.<br /><br />படுகையில் என்னை தள்ளி என் மேல் விழுந்து அழுத்தமாக என் உதட்டில் முத்தமிட்டாள், எனக்கு எதோ புதிதாக பட்டது.<br /><br />கல்லூரி காலம் முதல் எத்தனையோ நாட்கள் இருவரும் இது போல் சேர்ந்து தூங்கி இருக்கிறோம், எத்தனயோ முத்தங்கள் கொடுத்திருப்பாள், அதில் எல்லாம் ஆழமான அவள் காதல் மட்டுமே தெரியும், ஆனால் இன்றுபோல் எப்போதும் நான் உணர்ந்தது இல்லை.<br /><br />காரணம் இன்று அவள் நோக்கம் முழுவதும் என் ஆண்மையை தூண்டுவதாய் இருந்தது, இதுவரை இப்படி ஒரு போதும் அவள் நடந்து கொண்டதும் இல்லை, இப்படி நான் யோசிக்கும் ஒரு சில வினாடிகளில் அவள் உதடுகள் என் உடலில் பரவ, நானும் முழுவதும் மனம் மாறி இருந்தேன்.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgd6mrLKuY6um-GbgWMa8nfqm-PavRaxqIKNyOOifvVo2HhnS8KrtPBR6LbBkqBLTkQWAj5NDw8EJdIui4YWGuFsqM8-Nx9t8J36rZwrfqqTRf41u2LUYP7z1fyA9bUJMS8dEJXLus6MXg/s1600/CLG.jpg target="new"" target="new"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 254px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgd6mrLKuY6um-GbgWMa8nfqm-PavRaxqIKNyOOifvVo2HhnS8KrtPBR6LbBkqBLTkQWAj5NDw8EJdIui4YWGuFsqM8-Nx9t8J36rZwrfqqTRf41u2LUYP7z1fyA9bUJMS8dEJXLus6MXg/s320/CLG.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5542342052897154994" /></a><br /><br />மனம் மறுக்க சொன்னாலும், ஏனோ புரியவில்லை என்னால் எதுவுமே சொல்ல முடியவில்லை, ஏன் என்றும் புரியவில்லை, எனக்காகவே பிறந்த கன்னி இவள் என்பது புரிந்தாலும், அவள் என்னவோ கலையில் மிக கை தேர்ந்தவளாக என்னை கையாண்டாள் இரவு முழுவதும்.<br /><br />எத்தனை முறை ஈரமானோம் என்று நினைவில்லை, எழுந்திரிக்க ஏனோ மனமில்லை, போதும் என்ற சொல்லே வராமல் போய்கொண்டே இருந்தது.<br /><br />இரு ராஜ நாகங்கள் இணைந்தாலும், இப்படி பின்னி பிணைய முடியுமா என்பது சந்தேகம் தான் என்று தோன்றியது.<br /><br />எனக்கு உண்மையில் இது என்ன உணர்வு என்றே புரியவில்லை? சுகமா, சந்தோசமா இல்லை போதையா என்றே விவரிக்க முடியாத ஒன்றாக இருந்தது, அப்படியே கிடந்தது எப்போது மயங்கி போனேன் என்றே தெரியவில்லை.<br /><br />ஜில்லென்று காற்று முகத்தில் பட்டு கண் விழிக்கும் போது, எனக்கு முன் அழகாக ஒரு அருவி கொட்டிக்கொண்டு இருக்கிறது சுற்றிலும் பசுமையான அடர்ந்த காடு, அதுவும் மழை அடித்து முடிந்த ஈரமான மரங்கள்.<br /><br />திரும்பி பார்த்தல் வெற்றுடம்போடு அவள் மரத்தில் சாய்ந்து அமர்திருக்க, அவள் மடியில் நான் படுத்திருக்கிறேன், என்ன பூவென்று தெரியவில்லை, வெண்மையும் ஊதாவும் கலந்த பூவினால் ஒரு மாலை மட்டும் அவள் கழுத்தில் இருக்கிறது.<br /><br />சட்டென்று எழுந்து, எங்கே இருக்கிறோம் நாம் என்றேன்? எப்படி என்று புரியவில்லை, இப்போது எந்த தடையும் இல்லாமல் பேசமுடிகிறது!. <br /><br />அவள் கொஞ்சமும் ஆச்சரிய படாமல் சொன்னாள், ஏன் என்னோடு எங்கிருந்தால் என்ன? இந்த இடம் பிடிக்க வில்லையா?<br /><br />அப்படியல்ல வெற்றுடம்போடு இங்கு என்ன செய்கிறோம்? நட வீட்டிற்கு போவோம் என்றேன். <br /><br />அவள் சிரித்த படி சொன்னாள், உனக்கு இன்னும் நேற்று இரவு மயக்கம் தெளியவில்லை, அங்கே பார் என்று கையை காட்டினாள்.<br /><br />அவள் கை காட்டிய இடத்தில என் படுக்கை அறை தெளிவாக தெரிகிறது, ஆனால் படுகையில் நான்?<br /><br />ஆடையோடுதான் இருக்கிறேன், ஆனால் நேற்று இரவு நாங்கள் கலைத்தது போலவே படுக்கை மட்டும் கலைந்து கிடக்கிறது.<br /><br />திகிலோடு திரும்பி அவளிடம் கேட்டேன், எனக்கு என்ன ஆகிவிட்டது?<br /><br />நான் தான் முதலிலேயே சொன்னேனே, இனி நீ, நான், நாம் என்று சிரித்தாள்.<br /><br />இல்லை, இல்லை, இங்கு என்ன நடக்கிறது என்று எனக்கு ஒன்றுமே புரியவில்லை!.<br /><br />அப்படி என்றால் நேற்று நடந்தது உண்மையில்லையா? <br /><br />அல்லது இன்று நான் இறந்து விட்டேனா? <br /><br />அல்லது நீ என்னை கொன்று விட்டாயா?<br /><br />இப்போதும் தன் புன்னகை மாறாமல் பதில் சொன்னாள்.<br /><br />என் காதலை நானே எப்படி கொல்ல முடியும்? <br /><br />நேற்று நடந்தது நிஜம் அதில் எந்த மாற்றமும் இல்லை. <br /><br />ஆனால் நீ இன்று இறந்து விட்டதாக நினைப்பது நிஜமல்ல, ஏன் என்றால்...!<br /><br /><font color="#B40404">நேற்று இரவு என்னை பார்த்தபோதே நீ எனக்காக மீண்டும் பிறந்து விட்டாய்,</font> அதை நீ இறப்பென்று நினைக்கிறாய்!.<br /><br />வா, நம் வாழ்கையை வாழ்வோம் என்று என் கை பிடித்து அழைத்து சென்றாள்.<br /><br />இப்போதுதான் எனக்கு புரிகிறது அவள் கழுத்தில் கிடக்கும் <font color="#0000A0">பூ மாலையும், நேற்றிரவு நான் கேட்டு கொண்டிருந்த பாடலின் அர்த்தமும்.</font> <br /><br />இனி இந்த கனவு கலையாது என்று தெளிவான என் மனதில் இப்போது துக்கமோ, ஆடை இல்லை என்ற கூச்சமோ இல்லை, அவளை என்னோடு நெருக்கி அணைத்து நடக்க தொடங்கினேன், அவள் தன் நாவினால் தன் உதடுகளை ஈரபடுத்தி கொண்டே என்னை இன்னும் நெருங்கினாள்.<br /><br />முற்றும்.சிங்கக்குட்டிhttp://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-952520241038452238.post-54270329918949198982010-10-27T22:35:00.009+09:002010-11-10T18:38:51.808+09:00விளையாட்டு பொம்மை விளையாட்டல்ல!இந்தியா என் தாய் நாடு இந்தியர் யாவரும் என் உடன் பிறந்தோர் ...! <br /><br />என்னாங்க எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா? உண்மையில் இன்றைய வாழ்கை முறை அப்படித்தான் பரபரப்பாக போய் கொண்டு இருக்கிறது.<br /><br />ஆனால், கொடுமை என்னவென்றால் எதற்காக நம் வாழ்கையை இத்தனை பரபரப்பாக மாற்றிக்கொண்டோம் என்ற அடிப்படை காரணத்தையே இந்த பரபரப்பில் மறந்து விடுகிறோம்.<br /><br />பண்டைய காலத்தில் ஒரு நாட்டின் மீது படை எடுத்து அந்த நாட்டின் வளத்தை மற்றும் இடத்தை தன் நாடாக மாற்றி கொண்டார்கள், மக்கள் அடிமைகளாக்க பட்டார்கள்.<br /><br />நாளைடைவில் நாகரீகம் வளர, கொள்கைகள் ஒத்து வராத நாடுகளுக்கு நடுவில் போர் வந்தது, அதை சரி படுத்த உலக சபைகள் வந்ததும், போர் என்று சண்டை போடுவது குறைந்தாலும், தங்கள் நாட்டை முன்னிலை படுத்த பல முயற்சிகள் கையாளப்பட்டன.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhgtVh_r70CeAO7lMMsNT_VVlKJXpz0_1OvauZ5wjv6-Ox3bk4thl-AIfO_gQ1rAbgX2WTEOh3VDez0Juxd8rwOuneBDbEPN3tkOZt-TVEZOc7MYVyRqbYxFDXs2n5rY8cB8DOMLOEfNBI/s1600/tedi.jpg" target="new"><img style="float:center; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 294px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhgtVh_r70CeAO7lMMsNT_VVlKJXpz0_1OvauZ5wjv6-Ox3bk4thl-AIfO_gQ1rAbgX2WTEOh3VDez0Juxd8rwOuneBDbEPN3tkOZt-TVEZOc7MYVyRqbYxFDXs2n5rY8cB8DOMLOEfNBI/s320/tedi.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5532715901731900930" /></a><br /><br />சோவியத் ரஷ்யா இருக்கும் வரை உலகம் இரு வல்லரசு நாடுகளை பார்க்கவேண்டும் என்ற ஒரே காரணத்தால் சோவியத் துண்டானது நாம் அறிந்த கதை.<br /><br />இதில் வல்லரசு நாடுகளுக்கும் அதன் ஜால்ரா நாடுகளுக்கும் ஒரு பிரச்னையும் கிடையாது, ஏழை நாடுகளுக்கு "சோறு கண்ட இடம் சொர்க்கம் என்பது போல" எவனாவது தங்களை அரவணைக்கும் பட்சத்தில் எந்த கவலையும் கிடையாது.<br /><br />இரண்டும் இல்லாமல் நடுவில் இருக்கும் அல்லது வளர்ந்து வரும் வல்லரசாகும் வாய்பிருக்கும் நாடுகள் படும் அவஸ்தைதான் மிக கொடுமையானது.<br /><br />இதெல்லாம் தெரிந்த கதைதானே இதை ஏன் இங்கு சொல்கிறான் என்று நினைக்க வேண்டாம்.<br /><br />ஒரு பக்கம் தீவிரவாதம், உலகின் தலை சிறந்த சுற்றுலாத்தளம் சிம்லா, ஜம்மு, காஸ்மீர் என்று அத்தனையும் பாகிஸ்தான் தீவிரவாத போரினால் ராணுவதலமாக மட்டுமே உள்ளது.<br /><br />இந்த பக்கம் அருணாச்சல பிரதேசம் எங்களுடையது என்று சீனா சொந்தம் கொண்டாடி குடைச்சல் கொடுகிறது, கீழே இலங்கை பிரச்னையை வைத்து உள்நாட்டில் அரசியல் நடக்கிறது.<br /><br />இப்படி எல்லைகளில் பிரச்சனை மட்டும் போதாது என்று, மும்பை, கல்கத்தா கோவை என்று தொழில் நகரங்களில் குண்டு வெடிப்பு தூண்டல் என்றும் அதை சரி கட்ட உலகவங்கி கடன் என்றும், வரலாற்றுப்படி இந்தியா ஒரு "தீபகர்ப்பம்" என்பதை நினைவில் கொண்டு வருகிறார்கள்.<br /><br />அதாங்க, மூன்று பக்கம் பிரச்சனையும் ஒரு பக்கம் கடனாலும் சூழப்பட்டு இருக்கிறதல்லவா!.<br /><br />இந்த நிலையில் நாமோ வியாபாரம் என்ற பெயரில் வந்து நூற்றுகணக்கான ஆண்டுகள் நம் நாட்டை ஆண்ட மாவைத்தான் இன்னும் அரைத்துக்கொண்டு இருக்கிறோம்.<br /><br />ஆனால், உலகம் இன்று போர் இல்லாமல், வியாபாரிகளே வராமல் வியாபார பொருட்கள் மட்டும் வந்து நாட்டை அடிமை படுத்தும் முயற்சியில் அதி வேகமாக எங்கோ போய் கொண்டு இருக்கிறது!.<br /><br />என்ன சொல்கிறேன் என்று புரியவில்லையா? சமீபத்தில் அனைவரும் அறிந்த சில செய்திகளில் தலைப்பை மட்டும் பார்ப்போம்.<br /><br />உடைக்க வந்த கப்பல் கழிவு மற்றும் நச்சு பொருட்களுடன் வந்து நாட்டை குப்பை தொட்டியாக்கும் முயற்சி.<br /><br />இயற்கை விவசாயத்தை கெடுக்கும் நோக்கத்தில் இறக்குமதியாகும் ஒட்டு அல்லது செயற்கை விதைகள்.<br /><br />இறக்குமதி செய்யப்பட்ட குழந்தைகள் பால் பவுடரில் கலப்படம் அதனால் குழந்தைகள் உயிருக்கு ஆபத்து. <br /><br />இறக்குமதி ரேடியோவில் உள்நாட்டு அரசாங்க வயர்லெஸ் பேச்சை கேட்க முடிகிறது.<br /><br />இவை எல்லாம் நம்மை அல்லது நம் நாட்டை உடனே பாதிக்காவிட்டாலும் மெதுவாக கொல்லும் விஷம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.<br /><br />சும்மா, ஒரு உதாரணத்துக்காக சொல்ல வேண்டும் என்றால் உள்நாட்டில் கேட்கும் ரகசிய அலைகளை அல்லது இணையத்தில் இருக்கும் அவர்கள் தயாரிப்பு கணினி நாம் செய்யும் தகவல் பரிமாற்றத்தையோ சேகரித்து அவர்களுக்கு அனுப்பும் படி வடிவமைப்பது என்ன சிரமமா?<br /><br />உள்நாட்டில் தயாரிக்க முடியாத செயற்கை விதைகளை குறைந்த விலையில் இன்று கொடுத்து, நம் இயற்கை விவசாயத்தை மெதுவாக அழித்து, பின் நம் நாட்டில் என்ன அல்லது எவ்வளவு விதைக்க வேண்டும் என்பதையும் அதன் விலையையும் அவர்கள் முடிவு செய்யும் படி, மீண்டும் நம்மை வணிக முறையில் அடிமை படுத்தும் ஒரு முயற்சியாகத்தான் இவை அனைத்தும் எனக்கு தோன்றுகிறது.<br /><br />அது சரி, அப்படி என்றால் அரசு என்ன செய்கிறது அத்தனையையும் தடை செய்ய வேண்டியதுதானே என்று ஒரு கேள்வி இங்கு பொதுவாக வரும், அந்த காரணத்தை புரிந்து கொள்ளவே வல்லரசுகளின் தூண்டுதலில் நம் அண்டை வீட்டுகாரர்கள் கொடுக்கும் "தீபகர்ப்ப" குடைச்சல்களை மேலே சொன்னேன்.<br /><br />ஒரு பக்கம் உள்நாட்டு ரியல் எஸ்டேட் தேச துரோகிகள் விளை நிலம் முதல் புதை (சுடுகாடு) நிலம் வரை உருமாற்றி விற்று விடுகிறார்கள், மீதம் இருப்பதையும் வெளிநாட்டு கலப்பு விவசாயத்தால் அடிமை படுத்த முயற்சி நடக்கிறது மற்றும் நம் பாரம்பரிய சொந்த மருந்து, மூலிகைகளின் காப்புரிமையை வேறு நாடுகள் வைத்திருகின்றன.<br /><br />இவை அனைத்தும் கண்டிப்பாக நாளை நம்மை அல்லது நம் சந்ததியை, நம் நாட்டை பாதிக்க போகிற விசையங்கள் தான்.<br /><br />இதில் இன்று நம் உடனடி கவனம் செலுத்த வேண்டிய, நடப்பில் நம்மை அறியாமலே நம் வருங்கால சந்ததியை பாதித்து கொண்டு இருக்கும் ஒரு விசையம் இருக்கிறது என்றால் அது மலிவு விலையில் சீனாவில் இருந்து இறக்குமதியாகும் விளையாட்டு பொருட்கள்தான்.<br /><br />சமீபத்தில் ஆசியாவில் பல முன்னணி நாடுகள் இதை பற்றி எச்சரித்து, பலமாக சோதித்து பல கப்பல் பொருட்களை தடை செய்து திருப்பி அனுப்பி இருக்கின்றன.<br /><br />கண்ணை கவரும் அடர் பளீர் நிறத்தில் இருக்கும் இந்த பிளாஸ்டிக் பொருட்கள் மெதுவாக இருக்கவும், பளபளப்பு குறையாமல் இருக்கவும், பொம்மைகளின் முடிகள் உண்மையான முடியை போலவும், மெதுவாகவும் தோன்ற கலக்கப்படும் ரசாயன நச்சு பொருட்களின் அளவு அதிகமாக இருப்பதே இதன் அடிப்படை காரணம் என்று கண்டறியப்பட்டு இருக்கிறது.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMyz1Y8p_2wpCD6YL5bKopIkiP1cbDgnPnX2rPlv6IDcXTCz8xIQTrMoDk_l265vNO__4VwsJvRmA_RpS794q_MVQiB9FZv7WMRbuXiUf8s40DMN5Al5gTjN1Grfc1MtarMT6Zr9y0Ppw/s1600/toys-1.jpg" target="new"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 260px; height: 232px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMyz1Y8p_2wpCD6YL5bKopIkiP1cbDgnPnX2rPlv6IDcXTCz8xIQTrMoDk_l265vNO__4VwsJvRmA_RpS794q_MVQiB9FZv7WMRbuXiUf8s40DMN5Al5gTjN1Grfc1MtarMT6Zr9y0Ppw/s320/toys-1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5532716387177652802" /></a><br /><br />பொதுவாகவே குழந்தைகள் எந்த ஒரு பொருளையும் வாயில் வைக்கும் பழக்கம் கொண்டவர்கள், அதை அதிகமாக கண்டிக்கும் பட்சத்தில் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாக்க படுகிறார்கள் என்று குழந்தைகள் நல மருத்துவர்கள் சொல்கிறார்கள்.<br /><br />இந்த நிலையில் இத்தகைய பொம்மைகளை அவர்கள் வாயில் வைக்கும் போது உள்ளே செல்லும் ரசாயனமமோ, முடியோ அல்லது வேறு பொருட்களோ குழந்தைகளை அதி தீவிரமாக பாதிக்கிறது என்று தெரியுமா உங்களுக்கு?<br /><br />உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் உங்கள் குடும்ப நல மருத்துவரிடம் இதனால் என்னென்ன பாதிப்புகள் குழந்தைகளுக்கு வரும் என்று ஒரு முறையாவது உங்கள் நேரத்தை ஒதுக்கி கேட்டு பாருங்கள், நீங்கள் எல்லை இல்லா அதிர்ச்சி அடைவது உறுதி.<br /><br />ஆம், உயிரே பாதிக்கும் அளவு கூட இந்த விசையம் குழந்தைகளை பாதிக்கலாம்.<br /><br />இந்த இடத்தில மீண்டும் இந்த பதிவின் முதல் வரியை நினைவு படுத்துகிறேன், நாம் இத்தனை பரபரப்பாக உயிரை கொடுத்து உழைப்பது யாருக்கு நாளை நம் சந்ததி வளமாக வாழத்தானே? <br /><br />அப்படி இருக்க, நாமே இத்தகைய பொருட்களை வாங்கி தருவது, நம் சொந்த சம்பாத்தியத்தில் சொந்த குழந்தைக்கு விஷம் வாங்கி தருவது போலதான் என்பது என் கருத்து.<br /><br />இதை நேரடியாக நாடு தடை செய்வதில் இருக்கும் "தீபகர்ப்ப" பக்க விளைவுகளை நாம் அறிவோம், ஆனாலும் இதை தடுக்க நாம் ஏதாவது செய்ய வேண்டும் அல்லவா?<br /><br />இதை பற்றி நான் யோசித்ததில் எனக்கு கிடைத்த ஒரு வழி இதுதான்.<br /><br />எப்படி இருந்தாலும் சில்லறை வியாபார பொருட்கள் என்பது பயன்பாட்டு சந்தையை மற்றும் அந்த சந்தையின் பண பலத்தை பொறுத்துதான் ஒரு நாட்டில் நுழைக்க படுகிறது.<br /><br />இத்தகைய பொருட்களின் வெற்றியும் தோல்வியும் அந்த பொருளுக்கு சந்தையில் கிடைக்கும் வரவேற்பு மற்றும் விற்பனையை பொறுத்துதான் தீர்மானிக்க படுகிறது.<br /><br />அப்படி இருக்க, விலை கொடுக்கும் நான் ஏன் எனக்கு என்ன வேண்டும் என்பதை தீர்மானிக்க கூடாது? <br /><br />விலை சற்று அதிகமாக கொடுத்தாலும் அது என் குழந்தைகளின் நலனுக்கு என்று நினைக்கும் போது, என் குழந்தையின் உயிரை, உடல் நலத்தை விட அந்த கூடுதல் தொகை ஒன்றும் எனக்கு முக்கியமாக படவில்லை.<br /><br />அதனால் எந்த ஒரு பொருளையும் வாங்கும் முன் அது பொம்மையோ கேமிராவோ கணினியோ, முதலில் நான் கேட்பது எந்த நாட்டு தயாரிப்பு என்பதுதான், சர்ச்சைக்கு மற்றும் சந்தேகத்துக்கு இடமாகும் சீன பொருட்களை கண்டிப்பாக நான் வாங்குவது இல்லை.<br /><br />சிங்கப்பூர், ஜப்பான், தென்கொரியா போன்ற மக்கள் நலனில் அக்கறை கொண்ட நல்ல தரமான நாடுகளால் தயாரிக்க, அங்கீகரிக்க பட்ட அல்லது பாரம்பரிய இந்திய தயாரிப்பில் புகழ் பெற்ற நிறுவனங்களின் பொருட்களையே வாங்குகிறேன<br /><br />முதலில் நான் இந்த கொள்கையை கடைபிடிக்க துவங்கிய போது என்னை வித்தியாசமாக பார்த்தாலும், என் குடும்பமும் நண்பர்களும் இதன் பலனை அறிந்து இப்போது இதே போல் பொருட்களை வாங்க துவங்கி உள்ளார்கள்.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhbgX2WWd4-yuMkz-ZrGBLb6DujU0FLdHa1dDBP4iKs9q4FwGNwRWWE1cQzYi7AESYsbaXJCYk8PLDPZDh9y2Ykt7KhiXhDwvc4NjiDBOSI9z_Dw6WDGaNrEEbstasosd0vr_GYjPPs_tE/s1600/toys.jpg" target="new"><img style="float:center; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 215px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhbgX2WWd4-yuMkz-ZrGBLb6DujU0FLdHa1dDBP4iKs9q4FwGNwRWWE1cQzYi7AESYsbaXJCYk8PLDPZDh9y2Ykt7KhiXhDwvc4NjiDBOSI9z_Dw6WDGaNrEEbstasosd0vr_GYjPPs_tE/s320/toys.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5532716820518905650" /></a><br /><br />நம் தாய்நாட்டுக்கு உடனடி தேவையான தனிமனித சுதேசியை பற்றி என் கருத்தை முன்பே <a href="http://singakkutti.blogspot.com/2009/08/blog-post_23.html" target="new">"அக்காமாலாவையும் கப்சியையும்" விடுங்கையா!"</a> பதிவில் எழுதி இருந்தேன், இதுவும் அதை போல ஒன்று தான்.<br /><br />நீங்கள் தெருவில் வாங்கும் ஒரு ரூபாய் பொம்மை முதல் லட்சத்தில் வாங்கும் ரேடியோ, கணினிவரை முதலில் எந்த நாட்டு தயாரிப்பு என்று பாருங்கள்.<br /><br />தயாரிப்பு நாட்டு விபரம் இல்லாத பொருட்களை அல்லது பிரச்சனைக்குரிய சீன தயாரிப்பை வாங்காமல் போவதோடு மட்டும் இல்லாமல், தயாரிப்பு நாட்டு பெயர் இல்லாத அல்லது இந்த நாட்டு தயாரிப்பு என்ற காரணத்தால் தான் மட்டுமே இதை வாங்கவில்லை என்பதை அந்த விற்பனையாளரிடம் மறக்காமல் சொல்லுங்கள்.<br /><br />கூடியவரை உள்ளாட்டு தயாரிப்பை வாங்குவோம் அல்லது அந்தந்த நாட்டு நேரடி தயாரிப்பை மட்டும் கேட்டு வாங்குவோம், "சோனி" என்றால் ஜப்பான் "சாம்சங்" என்றால் தென்கொரியா என்று ஒரு நாட்டின் நேரடி தயாரிப்பை சற்று விலையில் அதிகமானாலும் நலம் கருதி வாங்குவோம்.<br /><br />சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், நீங்கள் வேர்கடலையை விலையாக கொடுக்கும் பட்சத்தில் உங்களுக்கு "குரங்குதான்" கிடைக்கும், உங்கள் தேவை "டெடிபீர்" என்றால் நீங்கள் முத்திரி பருப்பைத்தான் விலையாக கொடுக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்திருங்கள்.<br /><br />இப்படி ஒவ்வொருவரும் துவங்கி அவர்கள் குடும்பம் நண்பர்கள் அவர்களை தொடந்து அவர்கள் குடும்பம் என்று இது சற்று மெதுவாக பரவினாலும் நமக்கும் நம் நாட்டுக்கும் நலம் கிடைப்பது என்னவோ உறுதி.<br /><br />சற்று சிந்தித்து பாருங்கள் விற்காத அல்லது மக்கள் விரும்பாத பொருட்களை எந்த நிறுவனமும் வாங்க போவதில்லை, விற்பனை ஆகாத பொருட்களை தொடர்ந்து இறக்குமதி அல்லது உற்பத்தி செய்யவும் போவதில்லை.<br /><br />நாடு சட்டம் அரசாங்கம் என்று அனைத்தும் மேலிருந்து தான் வரவேண்டும் என்று இல்லாமல், நம் நலம் மற்றும் நாட்டின் நலம் கருதி ஒரு நல்ல குடிமகன் என்ற முறையில் இப்படி கீழே இருந்து கூட நாட்டு நலனை காக்க முடியும் (Reverse Mapping) .<br /><br />நன்றி, மீண்டும் சந்திப்போம்!.சிங்கக்குட்டிhttp://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.com19tag:blogger.com,1999:blog-952520241038452238.post-23389226106006734662010-10-13T17:15:00.002+09:002010-10-13T18:40:50.150+09:00"பதிவு" எனப்படுவது யாதெனில்...!தமிழ் வானொலி கலந்துரையாடல் ஒன்றில் சமீபத்தில் கேட்ட " தமிழ் மொழிபெயர்ப்பு சொல்லும், உருவாக்க பட்ட சொல்லும்" எனும் செய்தியில் "வலைப்பூ" என்று மொழிபெயர்க்க பட்ட தமிழ் சொல்லைவிட, "பதிவு" என்று உருவாக்க பட்ட சொல்லே "ப்ளாக்" என்பதை குறிக்கும் சரியான சொல்லாகும், காரணம் நம் எண்ணங்களை, நடவடிக்கைகளை நம் சொந்த கருத்துக்கள் கொண்டு இணையத்தில் பதிவதே "ப்ளாக்" என்று எடுத்து சொன்னார்கள்.<br /><br />ஆரம்பத்தில் "கம்ப்யூட்டர்" என்பதை கூட "கணிப்பொறி" என்று மொழிபெயர்க்க பட்டு பின் "கணினி" என்று ஒரு சொல் உருவாக்க படும் போது "கணினி" என்று சொல்லுக்கு எதிர்ப்பு வந்தாலும், பின் அதுவே சரியான வார்த்தையாக ஏற்றுக்கொள்ள பட்டது, அதே போல் "வலைப்பூ" என்பதைவிட "பதிவு" என்ற சொல் விரைவில் ஏற்றுக்கொள்ளபட்டு அதிகம் பயன்படுத்த படும் என்று முடிந்தது அந்த நிகழ்ச்சி.<br /><br />எனக்கும் இது சரி என்று பட, இனி "பதிவு" என்ற சொல்லை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருக்கும் போது, என் மனதில் வேறு சில எண்ணங்கள் தோன்ற!, அந்த எண்ணங்களை இங்கு பதிவதே என் நோக்கம்.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjd72w2lgkDPojQQyrO4k6pwI5ATRwqQt7LB5rRrfemr-lGYoIuhv83dPJuYKhLfQh0gCCMANzVQxSqu4U4l6OqAKNdITMuz1BxeS76UBnuheCEcWIrTok0ZvldqYgjcyyP1Cn6S20S41M/s1600/blogboard.jpg" target="new"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 209px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjd72w2lgkDPojQQyrO4k6pwI5ATRwqQt7LB5rRrfemr-lGYoIuhv83dPJuYKhLfQh0gCCMANzVQxSqu4U4l6OqAKNdITMuz1BxeS76UBnuheCEcWIrTok0ZvldqYgjcyyP1Cn6S20S41M/s320/blogboard.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5527431710479091426" /></a><br /><br />பொதுவாகவே பதிவு எழுதும் விசையத்தில் நான் அவ்வளவாக அதிக நேரம் செலுத்துவதில்லை, காரணம் இது என் தொழிலோ, குடும்பமோ அல்ல. பதிவு எழுதுவது என்பது என் தனிப்பட்ட பொழுதுபோக்கு மட்டுமே.<br /><br />ஆகவே வேறு எந்த வேலைகளும் பாதிக்காத என் ஓய்வு நேரத்தில் கொஞ்சத்தை பதிவுக்காக ஒதுக்குவது என் வழக்கம்.<br /><br />அதனால்தான் தொடர்ந்து என் பதிவுகளை படித்து மறக்காமல் தங்கள் கருத்துக்களை சொல்லும் நண்பர்கள் பதிவுகளை கூட என்னால் தொடர்ந்து படித்து கருத்து சொல்ல முடிவதில்லை, ஒட்டு போடுவது மிக எளிது, ஆனால் பதிவை முழுவதும் படிக்காமல் கருத்து சொல்ல நான் நினைப்பதில்லை.<br /><br />சுருக்கமாக முன்பு ஒரு பதிவில் <a href="http://www.giriblog.com" target="new">"கிரி"</a> சொன்னது போல, பதிவை படிக்காமல் கும்மி பின்னூட்டம் போடுவதைவிட, பின்னூட்டமே கொடுக்காமல் இருப்பது மேல் என்று நினைப்பவன் நான்.<br /><br />பொதுவாக நான் யாருடைய பெயரையும் என் பதிவுகளில் அவர்கள் அனுமதி இல்லாமல் பயன் படுத்துவது கிடையாது, அதனால் என் பதிவுகளை தொடந்து படித்து என்னுடன் நட்புடன் இருக்கும் நண்பர்களுக்கும், தங்கமணியுடன் நட்புடன் இருக்கும் தோழிகளுக்கும் என் நன்றியை இங்கு தனியாக தெரிவித்து கொள்கிறேன்.<br /><br />எனக்கு கிடைக்கும் நேரத்தில் எல்லா பதிவுகளையும் படிக்க ஆசை பட்டாலும், இப்போதெல்லாம் எல்லா பதிவுகளையும் படிக்க உண்மையில் எனக்கு நேரம் சாத்திய படவில்லை, மேலும் இன்னொரு விசையம் எனக்கு பெரிய சவாலாக இருக்கிறது.<br /><br />நான் இணையத்தில் பொழுதுபோக்க வரும் போது, நான் பின்தொடரும் நண்பர்கள் பதிவை என்னால் என் பதிவு பக்கத்தில் "டாஷ்போர்ட்" பகுதியில் சென்று அவர்கள் புதிதாக எழுதியுள்ள பதிவை படிக்க முடியும், முடிந்த வரை கருத்து சொல்ல முடியும்.<br /><br />ஆனால், தினம் வருவது எனக்கு சற்று சிரமம் என்பதால், வரும்போது எல்லாம் கண்ணில் படும் பதிவுகளை படித்து விடுவேன், மற்ற எந்த பதிவையும் படிக்க எனக்கு திரட்டிகளின் உதவி அவசியமாகிறது, இங்குதான் எனக்கு கொஞ்சம் சிக்கல்.<br /><br />மேலே சொன்னது போல, பதிவு என்பது ஒரு தனிமனிதன் தன் சொந்த கருத்துக்களை, நடவடிக்கைகளை, எண்ணங்களை மற்றும் சமையல், கலை போன்ற தங்கள் தனி திறமைகளை இணையத்தில் மற்றவர்களுடன் பதிவதே ஆகும்.<br /><br />இதனால் பலருடைய திறமைகளை, எண்ணங்களை, கருத்துக்களை மற்றும் நடவடிக்கைகளை நாம் படிக்க முடிகிறது, சுருக்கமாக மனிதர்களை மற்றும் மனிதர் மனதை படிக்க பதிவுகள் பெரிதும் உதவுகின்றன.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCGCU41A3mhwsK670R4bGmXIy4fKHTkFz7iJMtXINCjkib6t1ofSiKcXhJa5_HeywY-GYSq0qy-4IGXjQ_ns1JPNwiYjt_25pKuMvJtt0O9hqN2O69h9a0xV1zZdo_9luSG-E_AFLKsRE/s1600/blog_logo.jpg" target="new"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCGCU41A3mhwsK670R4bGmXIy4fKHTkFz7iJMtXINCjkib6t1ofSiKcXhJa5_HeywY-GYSq0qy-4IGXjQ_ns1JPNwiYjt_25pKuMvJtt0O9hqN2O69h9a0xV1zZdo_9luSG-E_AFLKsRE/s320/blog_logo.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5527432773966510434" /></a><br /><br />இதில் என்னால் எல்லா பதிவுகளையும் படிக்கமுடியாமல் போக என் சிக்கல் என்னவென்றால், இப்போதெல்லாம் திரட்டிகளில் காணும் அனேக பதிவுகள் மேலே குறிப்பிட்ட உண்மையான பதிவு நோக்கத்தை விட்டு விலகி, "தின-செய்திதாள்" வேலையை செய்யும் போதுதான்.<br /><br />எனக்கு இணையத்தில் உலாவ கிடைக்கும் நேரத்தில் இத்தகைய செய்தி பதிவுகள் ஆனது மற்ற நல்ல பதிவுகளை தேடி கண்டு பிடிக்க முடியாமல் ஒளித்து வைத்து கொள்கிறது (பதிவின் தலைப்பை பொருத்து உள்ளே சென்றவுடன்தான் புரிகிறது). <br /><br />மற்றொரு காரணம் வீட்டை தவிர மற்ற இடங்களில் இருந்து பொது கணினியில் பதிவுகளை படித்து பின்னூட்டம் எழுத நினைத்தால், பெரும்பாலான இடத்தில பின்னூட்ட பகுதி தடை செய்ய பட்டு இருக்கிறது. சரி, மாலை வீடு திரும்பியது எழுதாலாம் என்று நினைத்தால், அதற்குள் அந்த பதிவையே இத்தகைய செய்தி பதிவுகள் திரட்டியில் எதோ ஒரு பக்கத்துக்குள் காணாமல் போய் விட செய்கிறது.<br /><br />கவனிக்க, <font color="#FF0000"><b>இங்கு யாருடைய பதிவையும் குறை சொல்வது என் நோக்கம் அல்ல.</b></font><br /><br />ஒரு உதாரணத்துக்கு <a href="http://ta.indli.com" target="new">தமிழிஸ்</a> என்ற ஒரு திரட்டியில் ஒரு நாளில் வரும் அத்தனை பதிவுகளையும் சலித்து தினசெய்திதாள்களில் செய்தியாக வராத பதிவுகளை தேடுவது என்பது! மற்றவர்களுக்கு எப்படியோ? ஆனால் எனக்கு கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் சாத்திய படவில்லை.<br /><br />இது போல் எத்தனை முன்னணி திரட்டிகள்!, அதில் எத்தனை நல்ல பதிவுகள் நம் கண்ணில் படாமல் தொலைந்து போகக்கூடும்? என்பதைத்தான் இங்கு நான் சிந்தித்து பார்கிறேன்.<br /><br />அதனால் செய்திகளை பதிவாக போடுவது தவறு என்று சொல்ல வரவில்லை, தின செய்திகளை அப்படியே திரும்ப திரும்ப பதிவாக போட்டு திரட்டிகளில் இடத்தை அடைக்காமல், முக்கியமான அல்லது கருத்துக்குரிய ஒரு செய்தியாயின் அந்த செய்திகளை பற்றிய தனிப்பட்ட கருத்துக்களை அல்லது எண்ணங்களை பதிவாக போலாமே என்பதுதான் இங்கு என் நோக்கம். <br /><br />அனைவருக்குமே தெரியும், இன்று இணையத்தில் இல்லாத தின பத்திரிகைகளே கிடையாது <a href="http://www.dinamalar.com" target="new">தினமலர்</a>, <a href="http://www.dailythanthi.com" target="new">தினதந்தி</a>, <a href="http://www.dinakaran.com" target="new">தினகரன்</a>,<a href="http://www.maalaimalar.com" target="new">மாலைமலர்</a>, <a href="http://www.thatstamil.com" target="new">தட்ஸ்தமிழ்</a>, <a href="http://www.tamilcinema.com" target="new">தமிழ்சினிமா</a> என்று அத்தனை தின செய்திகளையும் மற்றவர்களும் படிப்பார்கள் அல்லது படித்திருப்பார்கள்.<br /><br />எனவே எந்த ஒரு தின செய்தியையும் அப்படியே ஒரு பதிவாக பதியும் முன், ஒரு முறை யோசிப்பதே நல்ல பதிவராக நம்மை அடையாளம் காட்ட ஒரு சிறந்த வழி என்று நான் கருதுகிறேன்.<br /><br />மேலும், அவசியம் இத்தனை நாளுக்கு ஒரு பதிவு போடவேண்டும் என்பது கட்டாயம் இல்லையே? <br /><br />அப்படி நமக்கு பதிய எதுவும் புது விசையம் இல்லாத பட்சத்தில், தின செய்திதாளில் இருப்பதை, இருந்ததை அப்படியே பதிவாக்காமல்!, அந்த நேரத்தை மற்ற பதிவர்களின் "நல்ல பதிவுகளை" படித்து கருத்து சொல்லி வாக்களிக்க பயன் படுத்தலாமே? <br /><br />அதனால் அந்த நல்ல பதிவும் அனைவரின் பார்வைக்கும் வரும், மேலும் அப்படி செய்வதால் இணையத்தில் அதிக நேரம் உண்மையில் கிடைக்காதவர்கள் (என்னை போல) கண்ணில் படாமல் அந்த பதிவு காணாமல் போகாமல் நிறுத்தியதில் நமக்கும் ஒரு பெரிய பங்கு இருக்கும்.<br /><br />அடிப்படையாகவே எந்த ஆதாயமும் இல்லமல் நாம் செய்யும் செய்கைகள் வெகுவாக குறைந்து விட்டன, அதனால் இப்படி செய்வதால் நமக்கு அல்லது நம் பதிவுக்கு என்ன ஆதாயம் என்று நினைக்க வேண்டாம்.<br /><br />ஒன்று, தினசெய்திதாள்களில் வந்த அதே செய்திகள் திரும்ப திரும்ப திரட்டிகளில் பக்கத்தை அடைத்துக்கொள்ளாமல் அந்த இடங்கள் நல்ல பதிவுகளுக்கு கிடைக்கும். <br /><br />இன்னொன்று, நல்ல பதிவுகளை நாம் தொடர்ந்து படித்து கருத்து சொல்லும் பட்சத்தில், நாம் எவ்வளவு இடைவெளி கொடுத்து சொந்த பதிவை பதிந்தாலும் மற்ற நல்ல பதிவர்கள் நம் பதிவை படித்து இன்னும் நம்மை மெருகேற்றுவார்கள்.<br /><br />அப்படி வரும் பதிவர்கள் அனைவரும் நல்ல மற்றும் தரமான பதிவர்களாக இருக்கும் பட்சத்தில், அவர்கள் வருகை அவர்களை பின் தொடரும் சக பதிவர்களையும் உங்கள் பதிவை நோக்கி திருப்பும், இதனால் நம் பதிவுகள் தரமான பதிவர் வரிசையில் இடம் பெரும்.<br /><br />அப்புறம் என்ன? அட இன்னுமா புரியல...! <font color="#FF0000"><b>பிரபல பதிவர்தான்... :-) .</b></font><br /><br />பதிவர்கள் இதை பற்றி சிந்தித்து ஒரு நல்ல வழியை பின் பற்றினால், நிறைய திறமையுள்ள மற்றும் புதிய புதிய பதிவர்களின் திறமை திரட்டிகளில் முதல் பக்கத்தில் பலரை சென்று அடைய இது வழிவகுக்கும் என்று நம்புகிறேன்.<br /><br />உங்கள் நேரத்துக்கு என் நன்றி!.சிங்கக்குட்டிhttp://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.com36tag:blogger.com,1999:blog-952520241038452238.post-61888875086877157772010-09-21T00:02:00.002+09:002010-11-27T15:26:36.255+09:00கதவை திறந்தால்தானே காற்று வரும்!இதன் முன் பகுதியை நீங்கள் படிக்கவில்லை என்றால், <a href="http://singakkutti.blogspot.com/2010/09/blog-post.html" target="new">கதவை திறந்தால் கண்டிப்பாக காற்று வரும்!</a> ஒரு முறை படித்துவிட்டு இதை தொடரலாமே? <br /><br />முந்தைய பதிவை தொடர்வது,<br /><br />நமக்கு என்ன தேவை?<br /><br />ஆரம்ப நிலையில் நம்முடைய தியானம் என்பது என்ன? <br /><br />குடும்ப வாழ்க்கை சூழலில் இருக்கும் நம்முடைய தேவை என்பது, நம்முடைய மனஉளைச்சலை தவிர்க்க, பிரச்சனைகளை எளிதாக சந்தித்து குழப்பமில்லாத முடிவெடுக்க தேவையான தெளிவான மன, உடல் நிலை மட்டுமே.<br /><br />இதற்கான சிந்தனையையும் உடல்நிலையையும் தியானம் செய்வதன் மூலம் எளிதாக பெறமுடியும் என்று நம்புகிறேன். <br /><br />தியானம் என்றவுடன், ஒரு யோகியை போல உச்ச கட்ட நிலையை பற்றி சிந்திக்காமல், நமக்கு தேவையான ஆரம்ப நிலையை பற்றி மட்டும் தற்போதைக்கு சிந்திப்பதுதான் இங்கு என் நோக்கம். <br /><br />சிந்தனைகளும், நினைவுகளும் நிறைந்ததே நம் மூளை, அதை நாம் கட்டுபடுத்த பழக வேண்டும், இதுவே நம் ஆரம்ப நிலை தியானம். <br /><br />இதற்காக நமக்கு தேவை ஒரு அமைதியான இடம் மட்டுமே, அது நம் வீட்டின் அல்லது நமக்கு பிடித்த எந்த ஒரு பகுதியாகவும் இருக்கலாம்.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhE-bmftEuSE_G-Pioke3VpjM5zMwL2WPIWZlzjw4vULD-T-p5F2fCoZsJJUj0Mz35ETM2TiF3a8by-26Jq_Rb-SaeQ-zTPlbhfnygv3ba5pu3ka15UjPKKSxNrJ9CtcywP3JTLJ2AtiSQ/s1600/CE-3.jpg" target="new"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 248px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhE-bmftEuSE_G-Pioke3VpjM5zMwL2WPIWZlzjw4vULD-T-p5F2fCoZsJJUj0Mz35ETM2TiF3a8by-26Jq_Rb-SaeQ-zTPlbhfnygv3ba5pu3ka15UjPKKSxNrJ9CtcywP3JTLJ2AtiSQ/s320/CE-3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5518904252033014658" /></a><br /><br />மூளையின் கட்டுபாட்டில் நாம் செல்லாமல் எடுத்தவுடன் நம் சிந்தனை அனைத்தையும் கட்டுபடுத்துவது என்பது சிறிது கடினமாயினும், தொடர்ந்து பயிற்சி செய்யும் போது அது சாத்தியப்படும். <br /><br />இங்கு மீண்டும் ஒருமுறை நினைவு படுத்துகிறேன், தியானத்திற்கும் ஜாதி மதத்திற்கும் எவ்வித சம்மந்தமும் கிடையாது, அது நடுவில் வந்த வியாபாரயுக்தி மட்டுமே. <br /><br />அதனால் இதை பற்றி குழப்பிக்கொள்ளாமல், உங்களுக்கு பிடித்த இடத்தில் வசதியான ஒரு முறையில் அமரவும், காரணம் நீங்கள் அமரும் முறை அல்லது அணிதிருக்கும் உடை உங்களை தொந்தரவு செய்யக்கூடாது.<br /><br />எனவே உங்களுக்கு ஏதுவான, எளிதான ஒரு முறையில் அமர்ந்து கண்களை மூடி நிதானமாக சுவாசிக்கவும்.<br /><br />நாம் பார்க்கும் எந்த ஒரு விசையத்தையும் பொருத்து நம் சிந்தனைகள் வளரக்கூடும் என்ற காரணத்தால்தான் கண்களை மூடுவது. <br /><br />அப்படியே அமைதியாக சுவாசத்தை இழுத்து விடுங்கள், ஆனால் சுவாசிக்கும் முறையை பற்றி சிந்திக்க வேண்டாம்.<br /><br />இப்படி உங்கள் உடல் ஒரு நிலையை அடைந்ததும், உங்கள் சிந்தனைகள் பலவாறு ஓட தொடங்கும், அந்த சிந்தனைகளை பின்தொடராதீர்கள்.<br /><br />சிந்தனைகள் நம் கட்டுபாட்டில் இருக்க வேண்டுமே தவிர, சிந்தனைகளின் கட்டுபாட்டில் நாம் ஒரு போதும் இருக்ககூடாது. <br /><br />We are what our thoughts have made us; So take care about what you think. Words are secondary. Thoughts live; They travel far. - Swami Vivekananda <br /><br />நிதானமாக சுவாசத்தை தொடருங்கள், உங்கள் சிந்தனைகள் நீங்கள் சுவாசிக்கும் அளவையும் ஆழத்தையும் பின் தொடராமல் பார்த்துக்கொள்ளுங்கள், சுருக்கமாக எந்த ஒரு சிந்தனையும் செயலும் இல்லாத அமைதியான நிலையில் இருக்கவும். <br /><br />ஆரம்ப கட்டத்தில் இது சற்று கடினமாக தெரிந்தாலும், நாளடைவில் மிக எளிதாகிவிடும், அப்படி மாற மாற தியானிக்கும் போது உங்கள் சிந்தனைகளின் அளவு குறைய ஆரமிக்கும். <br /><br />இப்படி உள்ளும் வெளியும் எந்த ஒரு சிந்தனையும் ,செயலும் இல்லாமல் உங்கள் சிந்தனைகள் குறைய குறைய, உடலின் சக்கரங்களில் சுழலும் உங்கள் சுவாசத்தின் அளவும் தானாக குறையும்.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4w3qFS2OyDPCcmoDVyQ7A6QXcZ620j1RLl94nyIWomHEIXmXcffCPmmphUi7LEAS28fhtIagLqC07zQz7EhGSu5FaD4zZ1CPolq3GgcPNcVwMP9swdFYMpgeCp5Oq1hCkPvNMjwMOExI/s1600/CE-2.jpg" target="new"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 214px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4w3qFS2OyDPCcmoDVyQ7A6QXcZ620j1RLl94nyIWomHEIXmXcffCPmmphUi7LEAS28fhtIagLqC07zQz7EhGSu5FaD4zZ1CPolq3GgcPNcVwMP9swdFYMpgeCp5Oq1hCkPvNMjwMOExI/s320/CE-2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5518904649628754674" /></a><br /><br />இதை தொடர்ந்து செய்து வர நாளடைவில் முழு சிந்தனை இல்லாத நிலையை அடையும் போது, நம் சுவாசத்தின் அழுத்தமும் குறைந்து குறைந்து நம்மை தியான நிலைக்கு எடுத்து செல்லும். <br /><br />இந்த நிலையை ஒருவர் அடையும் போது அவர் முழு தியான நிலையை அடைகிறார், நாசியில் சுவாசம் இருப்பது போலவே உணரமுடியாது, மனதில் எந்த சிந்தனையும் இருக்காது.<br /><br />இதுவே முழு தியான நிலை. <br /><br />இப்படி ஒரு தியான நிலையில் இருக்கும் போது நம் உடல் பிரபஞ்சத்தில் உள்ள சக்தியை (Cosmic Energy) பெறுகிறது, அந்த சக்தி நரம்புகளில் பரவி உடலின் உள்ள எல்லா பகுதிகளுக்கு செல்கிறது.<br /><br />எவ்வளவு அதிகமாக தியானம் செய்கிறோமோ, அவ்வளவு அதிகமாக நம் உடல் சக்தியை பெறுகிறது, அந்த சக்தி மனஉளைச்சல் மற்றும் உடலில் உள்ள தீமைகளை, நோய்களை அகற்றுகிறது (Cosmic Energy Healing for Health) என்று தியான நூல்களில் சொல்லப்படுகிறது. <br /><br />சாதாரணமாக ஒரு குடும்ப வாழ்கையில் இருக்கும் யாருக்கும் இதுவே தேவை.<br /><br />மேலும் இந்த நிலையில் தொடந்து தியானம் செய்து வர, மன நிலையும் உடல் நிலையும் ஒழுங்கு படும், நல்ல சிந்தனைகள் வளரும்.<br /><br />நம்மை நாமே யாரென்று அறிய இதுவே சிறந்த வழி.<br /><br />இதை தாண்டிய நிலைதான், மூன்றாவது கண்ணை திறப்பது, ஆன்மீக குருக்களை தியானத்தில் சந்திப்பது, தெரிந்த, தெரியாத புதிர்களுக்கு அவர்களிடம் விடை கேட்பது என்ற யோகியின் நிலை. <br /><br />அதையும் தாண்டிய நிலைதான் ஆன்மாவை பயணிப்பது, கடந்த, எதிர் காலத்தை பார்ப்பது என்று சித்தர் நிலையை (சமாதி நிலையை) அடைவது. <br /><br />ஆனால் இவை சாதாரண மனிதர்களுக்கு அத்தனை எளிதில் சாத்தியப்படாதவை.<br /><br />இதில் மிக தெளிவாக உணரவேண்டியது, இத்தகைய தியானமும், சித்தியும் ஒரு போதும் வியாபாரமாக்க முடியாது. <br /><br />அதாவது நீங்கள் பணம் கொடுத்து இதில் எந்த ஒரு நிலையையும் கண்டிப்பாக அடைய முடியாது.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5AS6cs0_S-_2zmwekhXfY9ISooy07lrTiURa88jk1j4uQdZ-UyUQC6C8fIK-81789eYbLHRqV0yG2OcoHG_1ydRnRmx7wVro8ZPby2wZ-cv5YB38GR2Bfjwxt0cYTwpwul6wpwxuBm94/s1600/CE-4.jpg" target"new"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 236px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5AS6cs0_S-_2zmwekhXfY9ISooy07lrTiURa88jk1j4uQdZ-UyUQC6C8fIK-81789eYbLHRqV0yG2OcoHG_1ydRnRmx7wVro8ZPby2wZ-cv5YB38GR2Bfjwxt0cYTwpwul6wpwxuBm94/s320/CE-4.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5518904989637785410" /></a><br /><br />அதனால் தான் எல்லா மத வேத நூல்களும் உடல் மற்றும் மன ஒழுக்கத்தை முன்னிறுத்தி தன் கருத்துக்களை சொல்கிறது.<br /><br />கலிகாலத்தில் அரை குறை வேதாந்திகள் மதத்தின் பெயரால் மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிப்பார்கள் என்று வேத நூல்கள் சொல்கின்றன, அதுதான் இன்று உண்மையில் நடக்கிறது.<br /><br />அதனால் எடுத்த எடுப்பில் குருவை தேடுகிறேன், பணம் கொடுத்து முக்தி அடைகிறேன் என்று உங்கள் நேரத்தையும், பணத்தையும் வீணடிக்காமல், மனதை ஒரு நிலை படுத்தி சரியான பாதையில் முறையாக தியானிக்கும் போது, உங்களுக்கு மிக சிறந்த தியானம் சாத்தியப்படும்.<br /><br />இதில் இன்னொரு விசையம் இருக்கிறது, யோகாசனம் என்பது வேறு தியானம் என்பது வேறு.<br /><br />(இந்த முறை இந்தியாவில் இருந்த போது சில குழந்தைகள் மற்றும் பெரியவர்களும் கூட, ஒரு நிறுவனத்தின் பெயரை சொல்லி நாங்கள் அங்கு தியானமும் யோகாசனமும் படிக்கிறோம் என்று ஒரு வலுவான தொகையை கட்டணமாக சொன்னார்கள்.)<br /><br />தியானத்தை பற்றி மேலே பார்த்துவிட்டோம். சுவாசத்தை கட்டுபடுத்தி சிந்தனையற்ற நிலைக்கு சென்று பிரபஞ்ச சக்தியை பெற தியானம் உதவும். <br /><br />யோகாசனம் என்பது உடற்பயிற்சி, காடுகளில் தியானம் (தவம்) செய்யும் முனிவர்களும் சித்தர்களும். எந்த உபகரணமும் இல்லாமல், உடலையே உபகரணமாக்கி உடற்பயிற்சி செய்து தங்கள் உடல் உறுப்புகளை தங்கள் கட்டுபாட்டில் கொண்டுவர பயன் படுத்தியதுதான் யோகாசனம். <br /><br />யோகாசனத்தின் ஒரு பகுதியாக தியானத்தையும் எடுத்துக்கொள்ளலாம், காரணம் மனம் ஒரு நிலையில் இல்லாத போது உடலை கட்டுபடுத்துவது சாத்தியமாகாது, எனவே எந்த ஒரு கலைக்கும் தியானம் மிக அவசியம்.<br /><br />ஆனால், உடற்பயிற்சி என்று வரும் போது அதை முறையாக தெரியாமல் தானாக முயற்சி செய்வது சரியல்ல.<br /><br />அதே நேரம் கற்றுக்கொள்ள சரியான (வியாபார நோக்கம் மட்டுமே குறியாக இல்லாத) ஆசிரியரை தேடி தேர்வு செய்வது மிக மிக அவசியம்.<br /><br />ஆக, இவை அனைத்துக்கும் நம் மனமும் உடலும் முயற்சியும் பயிற்சியும் தான் அடிப்படையே தவிர, மதமும் ஜாதியும் குறிப்பாக பணமும் அல்லது வியாபார குருக்களும் ஒரு போதும் தேவை இல்லை என்பதை உறுதியாக நம்புங்கள். <br /><br />இப்படி நமக்கு தேவையானதை உணர்ந்து, நம் மனம் என்னும் கதவை திறந்தால், அமைதி, முக்தி, ஞனம் என்னும் காற்று அளவில்லாமல் வந்து உங்கள் வாழ்கை உங்களுக்கு வசப்படும். <br /><br />நன்றி!.சிங்கக்குட்டிhttp://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.com21tag:blogger.com,1999:blog-952520241038452238.post-65322350638454821512010-09-16T00:40:00.000+09:002010-09-16T00:40:11.661+09:00இன்னுமா வெளிநாட்டு மோகம்!வணக்கம் நண்பர்களே,<br /><br />எத்தனை முறை எழுதினாலும், நம் மக்களுக்கு மீண்டும் மீண்டும் சீட்டு கட்டி திவால் ஆவதை போல, வெளிநாடு வந்து ஏமாராவிட்டால் அவர்களுக்கு ஒரு திருப்தி இருக்காது என்று நினைக்கிறேன். <br /><br />அவரவர் இருக்கும் நாட்டை, பகுதியை பற்றி பதிவிடுவது என்பது வெறும் பொழுது போக்குக்காக நகைக்க மட்டுமல்ல, நாமோ அல்லது நமக்கு தெரிந்தவர்களோ அந்த பகுதிக்கு செல்ல நேர்ந்தால், அதை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளவும்தான்.<br /><br />வேலை, வீடு என்று ஒப்பந்தம், ஒப்பந்த முறை என்பது ஒவ்வொரு நாட்டிலும் வேறு பட்டு இருக்கும் என்பது அனைவரும் தெரிந்து வைத்து இருக்க வேண்டிய அடிப்படை தகவல்.<br /><br />நான் கூட <a href="http://singakkutti.blogspot.com/2009/05/blog-post.html" target="new">கொரியாவில் ஒரு வாடகை வீடு</a> இடுகையில் இதை பற்றி தெளிவாக முன்பு சொல்லி இருந்தேன்.<br /><br />இப்போது அதே போல மீண்டும் ஒரு உண்மை சம்பவம், அதை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன், மீண்டும் யாரும் இந்த தவறை செய்யாதிருக்க இது பயன்படட்டும்.<br /><br />என் அலுவலகம் இருக்கும் அதே கட்டிடத்தில் இயங்கும் ஒரு மெக்கானிக்கல் தொழில் சார்ந்த நிறுவனத்தில் வேலை செய்ய இந்தியாவில் இருந்து வந்திருப்பதாக, மதிய உணவு நேரத்தில் இருவரை சந்தித்தேன், சற்று நேரம் பேசிவிட்டு பிரிந்து விட்டோம்.<br /><br />தங்கமணி ஊரில் இல்லாததால் இரவு வழக்கம் போல இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்தேன், ஒரு பத்து மணியளவில் யாரோ அழைப்பு மணியை அழுத்த, சென்று பார்த்தல், அந்த இருவரும் நின்று கொண்டிருந்தார்கள்.<br /><br />உள்ளே அழைத்து பரஸ்பரம் ஜூஸ் கொடுத்து பேச்சை ஆரமிக்க, அவர்கள் நிறுவனம் நான் தங்கி இருக்கும் அதே கட்டிடத்தில் வீடு பிடித்து கொடுத்திருப்பதாகவும், கீழே காவலர்கள் நாங்கள் ஒரு இந்திய குடும்பம் இருப்பதாகவும் சொன்னதால், சில தகவல்கள் கேட்க வந்ததாக சொன்னார்கள்.<br /><br />இருவரில் ஒருவர் ஐ.ஐ.டி யில் இப்போதுதான் முதுநிலை (M.Tech) புதிதாக முடித்து ஆறு மாதமாகிறது இன்னும் திருமணமாகவில்லை.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjcPkgPnt7utWlLc3Ged-SEIOn6-Zh54rrbIoEjPhp_dNtI4T5BGmQ-h5oKruK_OGefnJdESYAtAFpdJxchJmWAIS5RcLxDljn8tS2p_dhnfXEqHe4TVMdqfP3iSog8MlP416bPLRLOtqw/s1600/FL-1.jpg" target="new"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjcPkgPnt7utWlLc3Ged-SEIOn6-Zh54rrbIoEjPhp_dNtI4T5BGmQ-h5oKruK_OGefnJdESYAtAFpdJxchJmWAIS5RcLxDljn8tS2p_dhnfXEqHe4TVMdqfP3iSog8MlP416bPLRLOtqw/s320/FL-1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5517144523024990322" /></a><br /><br />இன்னொருவர் ஐ.ஐ.டி யில் முதுநிலை, டாக்டர் ஆறாய்ச்சி பட்டம் (M.Tech, PhD)பெற்று எட்டு வருடம் அனுபவம் இருப்பதாகவும், இந்தியாவில் 75000 ரூபாய் மாத ஊதிய அரசாங்க ஆராய்ச்சி வேலையை ராஜினாமா செய்து விட்டு, திருமணமாகி ஒரு வருடமான மனைவியை விட்டு விட்டு வந்திருப்பதாகவும், இந்த வேலைக்கு 120000 ரூபாய் ஊதியத்தில் வந்திருப்பதாகவும் சொல்ல, எனக்கு சரியான கடுப்பாகி விட்டது.<br /><br />அவராவது தேவலை இப்போதுதான் படிப்பை முடித்து அனுபவம் தேடி வந்ததாக சொல்லலாம், ஆனால் நீங்கள் அப்படி இந்தியாவை விட்டு வர காரணம் என்ன? அப்புறம் எப்படி நம் நாடு உருப்படும் என்று கேட்க நினைத்தாலும், புதிய அறிமுகம் என்பதால் நான் எதுவும் சொல்லவில்லை.<br /><br />சரி, உங்களுக்கு இப்போது நான் என்ன செய்ய முடியும் என்று கேட்க? <br /><br />இங்கு யாருக்கும் ஆங்கிலமே தெரியவில்லை, நாங்கள் வந்த தகவலை எங்கள் குடுபத்திற்கு மின்னஞ்சலோ அல்லது தொலைபேசியிலோ சொல்ல வேண்டும், உங்கள் கணினி அல்லது தொலைபேசியை சிறிது பயன் படுத்திகொள்ளலாமா என்று கேட்க? நானும் என் தொலைபேசியை கொடுத்தேன்.<br /><br />அவர்கள் பேசி முடித்ததும், தன் மனைவியை அழைத்து வர இருப்பதாகவும், இங்கு பாதுகாப்பு மற்றும் குடும்ப வாழ்க்கை முறை பற்றி கேட்க, நானும் எனக்கு தெரிந்ததை சொல்லி தாராளமாக இங்கு இருக்கலாம்.<br /><br />நாங்கள் தனியாக இருந்து பிரசவமே பார்த்து இருக்கிறோம், தற்போது என் மனைவி மற்றும் குழந்தைகள் விடுமுறைக்காக இந்தியாவில் இருப்பதாக சொல்லி, அன்று எங்கள் பேச்சை முடித்து கொண்டோம்.<br /><br />அவர்கள் புதிய வீட்டில் இணையம் கேபிள் என்று எந்த இணைப்பும் இன்னும் வராததால், மறுநாள் என் அறைக்கு இருவரும் வந்தார்கள். <br /><br />பேசிக்கொண்டு இருக்கும் போது, தன் மனைவியை அழைத்து வர போவதில்லை என்றும் தானும் இங்கு இருக்க விருப்பமில்லை என்றும் அதனால் திரும்ப இந்தியா போக போவதாக சொன்னார். <br /><br />மற்றொருவர் தனக்கு எந்த பிரச்னையும் இல்லாததால், இங்கேயே வேலை செய்து ஒரு வருட அனுபவம் தேட போவதாக சொன்னார்.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGQbc15DH7t-ziK__DzdN3eUHapBP8PirJGI7iXyUxdAoxkE8I3l0vdnFUhyt53swtkX4ZPoP_yos_CsqQv3xL9zy5Cc2ZLzinmiw0DwigLEolCyR9DsYvxFCKc-qZqe60BP4JkI8in1Y/s1600/FL-3.jpg" target="new"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 190px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGQbc15DH7t-ziK__DzdN3eUHapBP8PirJGI7iXyUxdAoxkE8I3l0vdnFUhyt53swtkX4ZPoP_yos_CsqQv3xL9zy5Cc2ZLzinmiw0DwigLEolCyR9DsYvxFCKc-qZqe60BP4JkI8in1Y/s320/FL-3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5517145125037198098" /></a><br /><br />நானும் என்னால் முடிந்த வரை ஒரு நாட்டை பற்றி வெறும் இரண்டு நாளில் முடிவெடுப்பது என்பது முறையல்ல, உங்கள் பிரச்சனைதான் என்ன என்று கேட்க, அவருக்கு இங்கு உணவு, மொழி, கலாச்சாசரம் என்று எதுவுமே ஒத்துவராது என்று சொன்னார்.<br /><br />அவர் முடிவில் அவர் ஆழமாக இருக்க, நாம் என்ன செய்ய முடியும் என்று நானும் அமைதியாய் இருக்க, நாளையே தன் முடிவை அலுவலகத்தில் சொல்லபோவதாக சொன்னார்.<br /><br />நானும் அது உங்கள் சொந்த விருப்பம் என்று முடித்துக்கொண்டேன்.<br /><br />மறுநாள் வெள்ளிகிழமை (ரமலான் தினம்) தன் அலுவலக எண்ணில் இருந்து எனக்கு தொலைபேசியில் அழைத்தார், தன் முடிவை சொல்லி விட்டதாகவும் அதற்கு நிறுவனமும் ஒப்புக்கொண்டதாகவும் சொன்னார்.<br /><br />மேலும் வந்து இரண்டு நாள்தான் ஆனதால் எனக்கு செய்த விசா கட்டணம் மற்றும் விமானசீட்டு கட்டணத்தை நான் திரும்ப தரவேண்டும் என்று சொன்னார்கள், நானும் அதை ஒப்புக்கொண்டேன் அது எவ்வளவு தொகை என்று கணக்கு பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்றார்.<br /><br />சரி, பிரச்னை முடிந்ததில் மகிழ்ச்சி என்று சொல்லி வைத்துவிட்டேன்.<br /><br />வேலை முடிந்து வீட்டிற்கு போகும் வழியில் அவர் மழையில் நனைந்து கொண்டே ஓடிவர, நான் அவரை அழைத்து என் குடைக்குள் சேர்ந்து நடந்தோம்.<br /><br />இன்னும் தொகை எவ்வளவு என்று சொல்லவில்லை என்றும், தனக்கு நாளையே (சனிக்கிழமை) இந்தியா பேகவேண்டும் என்பதால், சில அலுவலக பேப்பர்கள் மற்றும் பாஸ்போர்ட் எடுத்து செல்ல வந்தேன் என்றார். <br /><br />சரி போகும் போது நனைந்து கொண்டு போக வேண்டாம் என்று ஒரு குடையை கொடுத்து அனுப்பினேன், வேலை முடிந்ததும் இரவு சாப்பாடு மூவரும் சேர்ந்து போகலாம் என்பது முடிவு.<br /><br />சிறிது நேரத்தில் பதற்றமாக என் தொலைபேசியில் அழைத்தவர், மொத்தம் கிட்டதட்ட ஒரு லட்சம் பணம் கேட்பதாவும், தன் பாஸ்போர்ட்டையும் வாங்கி வைத்து கொண்டதாகவும் அழுகாத குறையாக சொன்னார். <br /><br />தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றும், கையிருப்பு மற்றும் இந்திய வங்கி கணக்கில் ஒரு 13000 இருக்கிறது, எனக்கு இங்கு வேறு யாரையும் தெரியாது, அதனால் நீங்கள்தான் எப்படியாவது உதவேண்டும், உங்கள் அறைக்கு வருகிறேன் என்று சொல்லி சிறிது நேரத்தில் வந்தார்.<br /><br />பணம் புரட்டுவது ஒன்றும் பிரச்சனையில்லை என்று அவருக்கு தைரியம் சொல்லி, ஆனால் அவர்கள் பாஸ்போர்ட்டை வாங்கி வைப்பது சட்டப்படி குற்றம், நான் வேண்டுமானால் பேசி பார்கிறேன் என்று சொல்லி என்னுடன் அழைத்து சென்றேன்.<br /><br />அவர்கள் அலுவலகத்தில் சென்று முறையாக பேசினேன், அவர்களும் இவர் ஒரு வருடம் வேலை செய்ய வந்து விட்டு, இரண்டு நாட்களில் போக வேண்டும் என்கிறார்.<br /><br />அதனால் தான் நாங்கள் கொடுத்த விமான கட்டணம், விசா கட்டணம், இதர நஷ்டங்களை இவரே கொடுக்கும் பட்சத்தில் இவர் திரும்ப போவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றார்.<br /><br />ஒரு வழி விமான கட்டணமும் விசா கட்டணமும் எப்படி ஒருலட்சம் வரும் என்று நான் கேட்க?<br /><br />அவர், உங்களுக்கு வேண்டுமானால் நான் கட்டண ரசீதை தருகிறேன் என்று சொல்லி இரு மடங்கு தொகையில் வாங்கியது போல டம்மி ரசீது ஒன்றையும் காட்டினார்.<br /><br />மற்றும் இவருக்காக ஏற்பாடு செய்த வீட்டின் கட்டணத்தை யார் தருவார்கள்? உங்களுக்கு கொரியா வீட்டு ஒப்பந்த முறைதான் தெரியுமே என்றார்.<br /><br />உண்மையில் அவர்கள் ஒரே ஒரு வீடுதான் பேசி இருக்கிறார்கள், அதில் தான் இருவரும் இப்போது இருக்கிறார்கள். ஆனால், இவர் மனைவியோடு தங்க இன்னொரு வீடு பேசி இருப்பதை போல கட்டி கொண்டார்கள்.<br /><br />சரி, இனி இதை இவர்களிடம் பேசுவதில் பலன் எதுவும் இருக்காது என்பதால், நான் சற்று குரலை மாற்றி, எப்படி நீங்கள் பாஸ்போட்டை வங்கி வைக்க முடியும்!, அது குற்றம் முதலில் பாஸ்போர்ட்டை திரும்ப கொடுங்கள் என்றேன். <br /><br />என் கோவத்தை புரிந்து கொண்டு என்னை சற்று ஆழமாக பார்த்த அவர், சற்று பொறுங்கள் என்று உள்ளே சென்று ஒரு ஒப்பந்த காதிங்களை எடுத்து வந்து என் முன் போட்டார்.<br /><br />இவருக்கு வேலை துவங்கிய நாள் (அதாவது இன்று ஒப்பந்தத்தின் மூன்றாவது நாள்) முதல் ஒரு வருடம் வேலை ஒப்பந்தம், இதில் நடுவில் இவர் இந்த ஒப்பந்தை உடைக்க நினைத்தால் அன்று முதல் மீதமிருக்கும் மாதத்தின் ஊதிய அளவை இவர் எங்கள் நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டும் என்பதே இந்த ஒப்பந்தம். <br /><br />உங்களை போல நானும் சட்டம் பேச நினைத்தால், இவர் மூன்றாவது நாளே ஒப்பந்தத்தை உடைப்பதால், மீதமுள்ள பதினோரு மாதம் இருப்பதி ஏழு நாட்களின் ஊதிய பணத்தை இவர் கட்ட வேண்டும் பாருங்கள் என்றார். <br /><br />எடுத்து பார்த்தல், ஒப்பு கொண்டதாக இரண்டு பக்கமும் கையப்பம் ஆகி இருக்கிறது.<br /><br />மேலும் அவர் சொன்னது, இவர் என்னிடம் பாஸ்போர்டை கொடுத்த ஆதாரம் ஏதாவது இருகிறதா? நாங்கள் வாங்கவே இல்லை என்று சொன்னால் என்ன செய்யமுடியும் யோசியுங்கள் என்றார்.<br /><br />அவர் பக்கம் இருக்கும் நியாயத்தையும் சாதகத்தையும் கருத்தில் கொண்டு சரி, நீங்கள் கேட்ட பணத்தை நாளை இரவுக்குள் கொடுத்து விடுகிறோம் என்று சொல்ல, அவரும் நாளை சனிக்கிழமை அதனால் பணம் தயாரானதும் நீங்கள் அலுவலகம் வரும் நேரத்தை எனக்கு சொல்லுங்கள் நானும் அலுவலகம் வருகிறேன் என்றார்.<br /><br />திரும்ப மூவரும் என் அறைக்கு சென்று விட்டோம், இப்படி ஒரு ஒப்பந்தத்தில் எப்படியப்பா கையப்பம் இட்டீர்கள் என்றால், ஏதேதோ அழுகாத குறையாக புலம்பினார்.<br /><br />சரி, இனி புலம்பி புண்ணியம் இல்லை என்று சொல்லி, அவர்களிடம் இருக்கும் பண இருப்பை கேட்டேன், அவர் கையிருப்பு மற்றும் இந்திய வங்கியில் கொஞ்சம் சேமிப்பு மற்றும் ஒரு கடன் அட்டை இதுதான் இருந்தது.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjATaK1aUgDjyyGjNVwemtllN_lsdy1fHwcyD6wA7KQMY5KcCu-wIXX60R-GvVqMNpPt2P1fPUKH7zRIGsh57pufUJUCHg8ziNfAW3FW18oW1QbTiX3etof1VCTgsi1Jw4y5lXIN89SSeM/s1600/FL-2.png" target="new"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 274px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjATaK1aUgDjyyGjNVwemtllN_lsdy1fHwcyD6wA7KQMY5KcCu-wIXX60R-GvVqMNpPt2P1fPUKH7zRIGsh57pufUJUCHg8ziNfAW3FW18oW1QbTiX3etof1VCTgsi1Jw4y5lXIN89SSeM/s320/FL-2.png" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5517145670890694722" /></a><br /><br />சரி, முதலில் இந்திய வங்கி பணத்தை எடுப்போம் என்று அதற்கான வங்கி ஏ.டி.எம் மை அந்த மழையில் தேடிக்கொண்டு சென்றோம். தென் கொரியாவில் எல்லா வங்கி ஏ.டி.எம்-மிலும் வெளி நட்டு வங்கி சேமிப்பு அல்லது கடன் அட்டையை கொண்டு பணம் எடுக்க முடியாது என்பது இங்கு குறிப்பிடதக்கது.<br /><br />ஒரு வழியாக வங்கி சேமிப்பில் இருந்த மொத்த பணத்தையும் எடுத்து விட்டு, கடன் அட்டையை போட்டால் அதில் பணம் எடுக்க முடியவில்லை, அங்கிருந்தே இந்திய வங்கி கடன் அட்டை சேவையை அழைத்தபோது, அவர்கள் இந்த கடன் அட்டையை கொண்டு பொருட்கள் மட்டுமே வாங்க முடியும், பணம் எடுக்க முடியாது, அந்த சேவை வேண்டுமென்றால் பகலில் வங்கிக்கு சென்று எழுதி கொடுக்கவும் என்றார்கள்.<br /><br />சரி, என்று திரும்ப அறைக்கு வந்ததும், அவர் காலில் விழாத குறையாக புலம்ப ஆரமித்து விட்டார். <br /><br />நானும் நாளை காலை வாருங்கள் இன்னொரு வழி இருக்கிறது, அதுவும் முடியவில்லை என்றால் நான் பணம் தருகிறேன், நீங்கள் இந்தியா சென்றதும் திரும்ப அனுப்பினால் போதும் என்று சொன்னவுடன்தான் சென்றார்.<br /><br />மறுநாள் நான் எழும் முன் அவர்கள் இருவரும் வந்து விட்டார்கள், இருவரிடமும் கொஞ்சம் அமெரிக்க டாலர் இருப்பதாகவும், அதையும் மாற்றிய பின், அவர் கடன் அட்டயை பயன் படுத்த முடியாவிட்டால் மீதமுள்ள பணத்தை நான் கொடுக்குமாறு வேண்டினார்.<br /><br />ஊருக்கு சென்ற மறுநாளே, உங்கள் இருவருக்கும் பணத்தை அனுப்பி விடுகிறேன், வேண்டுமானால் என் படிப்பு சான்றிதல் அனைத்தையும் வைத்துக்கொள்ளுங்கள் என்றார்.<br /><br />நான் சொன்னது , முதலில் கொஞ்சம் பொறுமையாக இருங்கள், நாம் செல்ல வேண்டிய இடம் நாற்பது கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது, நமக்கு இன்று முழுவதும் இருக்கிறது அதற்குள் முடித்து விடலாம் என்று சொல்லி தயாராகி அவர்களையும் அழைத்துக்கொண்டு சென்றேன்.<br /><br />அங்கு இருவரிடமும் இருந்த அமெரிக்க டாலர் மாற்றிய பின், இவருக்கு திரும்ப செல்ல விமானசீட்டு எடுக்க என் நண்பர் கடையை தேடி சென்று கடன் அட்டையை கொடுத்து சீட்டு வாங்கியபின், அவரை தனியே அழைத்து நிலைமையை எடுத்து சொல்லி கடன் அட்டையை செலுத்தி பணம் கொடுக்குமாறு கேட்டேன்.<br /><br />அவரும் சற்று யோசித்து விட்டு, கடன் அட்டையை தேய்க்கும் போது வரும் வரியையும் நீங்களே கொடுத்து விட வேண்டும். மேலும் நாளை இவர் நான் எந்த பொருளும் வாங்கவில்லை என்று ஏதாவது எனக்கு பிரச்சனை வந்தால் நீங்கள்தான் பொறுப்பு, காரணம் நான் உங்களை நம்பித்தான் பணம் கொடுக்கிறேன் என்று சொல்ல, நான் பொறுப்பேற்று கொண்டேன்.<br /><br />இப்படி பணம் கிடைத்ததும் கிட்டதட்ட தேவையான தொகையை நெருங்கி விட்டோம், இன்னும் மிக சிறிய தொகை மற்றும் நாளை மறுநாள் பயணத்தின் போது அவர் கைசெலவுக்கு சிறிது பணம், இதுதான் இப்போதைய தேவை. அதை நான் தருவதாக சொல்ல அப்போதுதான் அவர் முகம் பீதியில் இருந்து வெளியேவந்தது.<br /><br />ஒரு டாக்ஸ்யை பிடித்து மீண்டும் அவருடைய அலுவலகம் வந்து எல்லா தொகையையும் கட்டிவிட்டு, எல்லா ஒப்பந்த பேப்பர்களையும் சரியாக முடித்து விட்டதாக எழுதி வாங்கிகொண்டு பாஸ்போர்ட்டுடன் திரும்ப வந்து விட்டேம்.<br /><br />அடுத்த நாள் சிறிது சாக்லேட்களை அவர் வீட்டிற்கு வங்கி கொடுத்து விட்டு, எங்களுடன் தங்க வைத்து ஊருக்கு அனுப்பும் வரை, இந்த அனுபவத்தையும் முன் பின் தெரியாத எனக்கு நீங்கள் செய்த உதவியையும் என் வாழ்நாளில் என்றும் மறக்கவே மாட்டேன் என்பதையே திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டு இருந்தார்.<br /><br />இவ்வளவு படித்திருந்தும் வெளிநாட்டு மோகத்தால் என்ன நிலை என்று பார்த்தீர்களா, என்று மட்டும்தான் நான் அவருக்கு பதில் சொன்னேன்.<br /><br />இனி வருவது அவருக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் தேவையான சில அடிப்படை தகவல்கள் கண்டிப்பாக பயன்படும்.<br /><br />எந்த ஒரு நாட்டுக்கு செல்வதானாலும், ஒரு ஒப்பந்தத்தில் கையப்பம் இடும் முன் தெளிவாக படித்து புரிந்த பின் கையப்பம் இடுங்கள்.<br /><br />கையப்பம் இடும் இரண்டு தரப்புக்கும் பொது மொழியில் ஒப்பந்தம் இல்லாவிட்டால், அதன் ஆங்கில பதிப்பை கட்டாயம் கேட்டு வாங்குங்கள்.<br /><br />கையப்பம் இடும் எந்த ஒரு ஒப்பந்த நகலையும் உங்களுடன் ஒப்பந்தம் முடியும் வரை கட்டாயம் வைத்து இருங்கள்.<br /><br />சில அடிப்படை தொழிலாளர் வேலை முறை தவிர, வேறு எந்த உயர் பதவிக்கும், உங்கள் பாஸ்போட்டை வாங்கிவிட முடியாது. அப்படி வாங்கும் பட்சத்தில் நீங்கள் பாஸ்போட்டை கொடுத்த சான்று ஏதாவது உங்களிடம் கட்டாயம் இருக்க வேண்டும்.<br /><br />எந்த ஒரு ஒப்பந்தம் அல்லது பாஸ்போர்டையும் யாரிடமும் கொடுக்கும் முன் எல்லா பக்கத்தையும் நகல் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.<br /><br />வெளிநாடு செல்லும் போது அங்குள்ள நண்பர்கள் முகவரி, யாருமில்லாத பட்சத்தில் அங்கிருந்து நீங்கள் திரும்ப வர , அதுவரை தேவையான உங்கள் கையிருப்பு பணத்தை வைத்திருங்கள்.<br /><br />கடன் அட்டையை நம்பி செல்லும் பட்சத்தில், இந்தியாவில் இருந்து வெளியே செல்லும் முன் சம்மந்த பட்ட வங்கியை தொடர்பு கொண்டு உங்கள் கடன் அளவு, நேரடியாக பணம் எடுக்கும் அளவு மற்றும் நீங்கள் செல்லும் நாட்டில் இந்த கடன் அட்டை வேலை செய்யுமா என்று உறுதி படுத்தி கொள்ளுங்கள்.<br /><br />இவை அனைத்தையும் விட என் சொந்த அனுபாவத்தில் சொல்கிறேன்.<br /><br />வெளிநாட்டு வேலை என்பது, குடும்ப சூழ்நிலை, வேலையின்மை மற்றும் வேறு வழியில்லாமல் வருபவர்களுக்குதானே தவிர, இப்படி அரசாங்க உயர் பதவிகளை உதறி விட்டு வருவதற்கு அல்ல, என்பதை எப்போதும் மனதில் வைத்திருங்கள், உங்களுக்கு தெரிந்தவர்களிடமும் எடுத்து சொல்லுங்கள்.<br /><br />நன்றி!.சிங்கக்குட்டிhttp://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.com59tag:blogger.com,1999:blog-952520241038452238.post-2135224226334810792010-09-10T17:47:00.000+09:002010-09-10T17:47:54.715+09:00பதிவரசியல்!என்னாங்க நடக்குது இங்க?<br /><br />ஆனா, ஒன்று மட்டும் உறுதி பிரச்சனயை நோக்கி எறியப்படும் கற்களும், அதற்கு பதிலடி கொடுக்க எறியப்படும் கற்களும், இரண்டுமே பதிவுலகம் என்ற கண்ணாடி வீட்டிற்குள் இருந்துதான் எறியப்படுகிறது என்பதுதான் வேதனை.<br /><br />நினைவுகள் என்பது நம் மகிழ்ச்சியை பதிந்து வைக்கத்தானே தவிர, நம் தவறுகளை, வருத்தங்களை செதுக்கி வைக்க அல்ல. <br /><br />தவறுகளை, துக்கத்தை மறப்பதே எப்போதும் நல்லது. எங்காவது கல்யாண நிகழ்ச்சி புகைப்பட ஆல்பம் போல, இது எங்கள் வீட்டு இழவு நிகழ்ச்சி ஆல்பம் என்று பார்க்க முடியுமா? <br /><br />ஆனால், பதிவுலகில் அடுத்த தலைமுறை பதிவர்கள் அத்தகைய ஆல்ப பதிவுகளை கண்டிப்பாக பார்க்க முடியும்.<br /><br />(கவனிக்க; தவறுகள் எல்லை மீறும் போது அதை கண்டிக்க, தண்டிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை)<br /><br />பதிவர்கள் ஒன்று பட வேண்டும் அல்லது குழு வேண்டும் என்பதின் அடிப்படை நோக்கம் என்ன? நாளை பதிவர்கள் ஒரு பெரிய சக்தியாக, சமுதாய வழிகாட்டியாக வர வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தானே? <br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj1fadRzEsjWtUJFnLsbsdUXbJSRgC_c_xWraLwDB1XfBQy1R6MOHIk9GUenHuhXr1X9AynvW8CQT_WZUCB7riMSAyTkQrxxUeidGRzLMFLQciV1mGAWMz0X6UG28ZRKHuEUE8oOyIBaE8/s1600/bgf2.jpg" target="new"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 212px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj1fadRzEsjWtUJFnLsbsdUXbJSRgC_c_xWraLwDB1XfBQy1R6MOHIk9GUenHuhXr1X9AynvW8CQT_WZUCB7riMSAyTkQrxxUeidGRzLMFLQciV1mGAWMz0X6UG28ZRKHuEUE8oOyIBaE8/s320/bgf2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5515200343196369346" /></a><br /><br />பதிவுலகிலும் அது உண்மை எனில், நாளை ஒரு அங்கீகாரத்திற்காக அரசாங்கத்தையோ சம்மந்த பட்ட அதிகார குழுவையோ அணுகும் போது, இதுதானே நீங்கள் சொல்லும் பதிவுலகம் என்று, இன்று எழுதப்படும் பதிவரசியல் இடுகைகளும் மோசமான வார்த்தைகளும் உங்கள் முன் போடப்படுமா இல்லையா? சற்று சிந்தித்து பாருங்கள்.<br /><br />மேலும் இங்கு என்ன நடக்கிறது!.<br /><br />"ஆதரிக்கும் குழு, எதிர்க்கும் குழு" என்று எல்லா பிரச்னைகளிலும் குழு சேர்க்கும் முயற்சி மட்டுமே நடக்கிறது, அதில் அடிப்படை உண்மை பிரச்சனை அடிபட்டு போய் விடுகிறது, வழக்கம் போல இதற்கு பகடை காயாக இப்போதும் சில பதிவர்கள் சிக்கி விட்டார்கள்.<br /><br />இதில் நான் எந்த குழுவையும் சாராதவன் என்ற உடன் சந்தர்ப்பவாதியாகி நடுநிலைமையாக காட்டிக்கொள்ள பார்க்கிறாய் என்று சொல்ல வேண்டாம், அதுவல்ல சரியான காரணம்.<br /><br />இங்கு பிரச்சனை சித்தரிக்கப்படும் (திசை திருப்ப படும்) அடிப்படை முறையே சரியாக இல்லை என்பதால்தான். ஒரு பிரச்சனையை எழுதும் போது கருத்தின் ஆழம் தேவையே தவிர அதில் அடுக்கு மொழியோ கவிதையோ தேவை இல்லை.<br /><br />இங்கு இரண்டு பதிவர்களுக்கு நடுவில் மனஸ்தாபம், ஒருவருக்கு ஒரு பதிவர் செய்வது சரி என்று படுவது போல மற்றொருவருக்கு இன்னொரு பதிவர் செய்வது சரி என்று படலாம், அதை அவர் ஆதரிக்கலாம், இதில் எந்த தவறும் இல்லை.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGVrfIV9EA6XOvkKGaAeJlWa_My1qa2AaC9YILunpiBYi8nSZIFB_06N6LRwv1DQ6ovvCYc01f8TnkVc8P6IwgqmofrxFBCUC4BJC3I4mDA7MDOxI3LASSepYD5Cc5ICr04flMi06_UeU/s1600/BGF.bmp" target="new"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 302px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGVrfIV9EA6XOvkKGaAeJlWa_My1qa2AaC9YILunpiBYi8nSZIFB_06N6LRwv1DQ6ovvCYc01f8TnkVc8P6IwgqmofrxFBCUC4BJC3I4mDA7MDOxI3LASSepYD5Cc5ICr04flMi06_UeU/s320/BGF.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5515200016244150434" /></a><br /><br />ஆனால் நான் இதில் நான் கவனித்தது என்னவென்றால், பிரச்சனை இரண்டு பதிவர்களுக்கு, இரண்டுமே மனிதர்கள்தான், இருவருமே பதிவர்கள்தான் இதில் பாலினம் எங்கிருந்து வருகிறது? <br /><br />அது ஆண் பெண் பேதமாகி, பெண்ணடிமை ஆணாதிக்கம் என்று ஏன் திசை திருப்பி விடப்படுகிறது?<br /><br />ஒன்று மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் நண்பர்களே, ஒரு ஆணை விட, ஒரு பெண்ணுக்கும் தன்னையும் தன் மானத்தையும் காக்கும் சக்தி அதிகமாகவே இறைவனால் கொடுக்கப்பட்டு இருக்கிறது. <br /><br />உடல் அமைப்பில் நம் இனத்தை பெருக்க இருவரும் மாறுபட்டு இருப்பதை தவிர, இருபாலுக்கும் மனித இனம் என்பதுதான் சரியான அடையாளம், பிரச்சனைகளை சந்திக்கும், சமாளிக்கும் திறன் இருவருக்குமே சமமாகத்தான் இருக்கிறது, நல்லவர்கள் கெட்டவர்கள் இரண்டிலும் கலந்துதான் இருக்கிறார்கள்.<br /><br />அதனால் ஆணாதிக்கம் பெண்ணடிமை என்று பதிவுலகத்திலும் இல்லாத ஒன்றை உருவாக்க தேவை இல்லை, காரணம் யாரும் யாருக்கும் அடிமையும் கிடையாது, அடிமை படுத்தவும் முடியாது. <br /><br />அன்பை தவிர வேறு எதுவும் யாரையும் அடக்க உதவாது என்பதுதான் உண்மை.<br /><br />கட்டிய சொந்த மனைவியாக இருந்தாலும், நீ எனக்கு பெண்ணடிமையாக இரு என்றால், நடுவிரலை முகத்துக்கு நேரே காட்டி விட்டு போய் விடும் காலம் இது.<br /><br />இப்படி இருக்கும் நிலையில் உலகம் மறந்து மாறி போன பெண்ணடிமை, ஆணாதிக்கம் போன்ற போர்வைகளை எடுத்து விடுவோமே!.<br /><br />மனிதன் நட்பாக பழகி, பின் சேர்ந்து வாழ்ந்து சந்ததிகள் பெருகி, பின் உறவுகள் வந்து, இப்படித்தானே சமயம், மதம், ஜாதி அனைத்தும் வந்திருக்கும், இப்படி அனைத்திற்கும் அடிப்படியாக இருக்கும் நட்புக்கும் மதிப்பு கொடுப்போம், ஆண் பெண் பேதம் வேண்டாம்.<br /><br />அதில் பதிவர்கள் என்ற வகையில் நமக்கு ஒத்து போகும் கருத்துக்களுடன் சேர்ந்து நடப்போம், அதே நேரத்தில் மற்றவருக்கும் கருத்துரிமை இருக்கிறது என்பதை நாம் ஒரு போதும் மறந்து விடக்கூடாது.<br /><br /><FONT COLOR="#FF0000"><b>ஆண்மை என்பது தன் துணையை தவிர உதவி, நட்பு நாடி வரும் பெண்ணை தன் குடும்ப பெண்கள் போல சகோதரத்துடன் பார்ப்பதில் தான் இருக்கிறது. <br /><br />பெண்மை என்பது தன் துணையுடன் உடல் ரீதியாகவும் மற்ற அனைத்து மக்களிடமும் உயிரினதிடமும் மனரீதியாக தாய்மை உணர்வுடன் அன்பாக இருப்பதில்தான் முழுமையடைகிறது.</b></FONT><br /><br />நல்லது கெட்டது இரண்டு பக்கமும் கலந்துதான் இருக்கிறது, தேவையை பொறுத்து அதன் சதவீதம் மாறுபடுகிறது, இதில் இன்னும் ஏன் இந்த ஆண் பெண் பேதம்?.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-CvIeihhJk7XD_kG5yM4MUQ0ptyErzlK-QJK1-CX-nrFkhytjQN_m5pRr9YcQ5SuqZvmA2S19BT7WiMcgtrGJcxupdf4qiHjIk69dm1l04DzoCy0KbrCdkQFLXHPS58-51H0rQ1oNhUg/s1600/bgf3.jpg" target="new"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 274px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-CvIeihhJk7XD_kG5yM4MUQ0ptyErzlK-QJK1-CX-nrFkhytjQN_m5pRr9YcQ5SuqZvmA2S19BT7WiMcgtrGJcxupdf4qiHjIk69dm1l04DzoCy0KbrCdkQFLXHPS58-51H0rQ1oNhUg/s320/bgf3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5515200656342983314" /></a><br /><br />பிடித்த பதிவர்களை விரும்பி பின் தொடர்வதை போல, ஒருவரின் நடவடிக்கை மற்றும் கருத்து பிடிக்கவில்லை என்றால் விலகி இருப்பதே நல்லது, அதை விட்டுவிட்டு, அவரையோ அவர் பதிவுகளையோ கொச்சை படுத்தி எழுதுவது என்பது அசிங்கம். <br /><br />இதில் யார் வரம்பு மீறினாலும் கண்டிக்க தேவை பட்டால் சட்டரீதியாக தண்டிக்க பட வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த கருத்து வேறு பாடும் இருக்காது என்று நம்புகிறேன்.<br /><br />இதை விட்டுவிட்டு பதிவர் குட்டையை குழப்பி அதில் மீன் பிடிக்க நினைப்பது, பதிவர் என்ற முறையில், நம் மீது நாமே சேற்றை பூசிக்கொள்வதற்கு சமம்.<br /><br />கடைசியாக என் மனதில் பட்டது, மன்னிப்பு கேட்பது எப்படி ஒரு நல்ல மனித தன்மையோ, அதே போல் மன்னிப்பது இறை குணம், ஆகவே காயங்களை வடுவாக்கி காலம் முழுவதும் எடுத்து செல்லாமல், மனித நேயத்தோடு கழுவி துடைத்து விட்டு, புதிய பாதையை நிமிர்ந்து பாருங்கள், பதிவுலகில் நீங்களும் பதிவுலகமும் சாதிக்க எவ்வளவோ நல்ல விசையங்கள் இருக்கிறது.<br /><br />உங்கள் இடுகையால் மற்றவர் மனம் காயப்படும் என்று உங்கள் மனசாட்சி சொன்னால், வேண்டாம் அந்த இடுகை அழித்து விடுங்கள், அது ஒன்றும் கோழைத்தனம் கிடையாது.<br /><br />இந்த நல்ல நாளில், மன வருத்தம், ஆதங்கத்தில் இருக்கும் பதிவர்களுக்கு பகையை மறந்து மனதில் நல்ல முடிவை தோன்ற செய்து, தவறு செய்தது யாராக இருப்பினும் அதை உணர்ந்து மற்றவரிடம் சமாதானமாக போக அருள் செய்யுமாறு அந்த திருவண்ணாமலை இறைவனை வேண்டுவதோடு!,<br /><br />பசியின் கொடுமையை உணர்ந்து, இறை அருள் பெற விரதமிருந்து, ஏழை வரியை கொடுத்த பின் தொழுகை முடித்து பெருநாள் பண்டிகையை கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும், அல்லா உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தின் மீதும் என்றும் தன் புன்னைகையை செலுத்த என் மனமார்ந்த பெருநாள் வாழ்த்துக்களை சொல்லி!,<br /><br />இன்று படித்த "வேத வரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து" என்ற செய்தி இந்த இடுகைக்கு சரியாக ஒத்து போவதால் அதை உங்களுடன் பகிர்ந்து இந்த இடுகையை முடித்துக்கொள்கிறேன்.<br /><br />நீதியில் இருந்து பிறழாதீர்! <br /><br />ஒருவன் தன் சமூகத்து மக்களை நேசிப்பது இனவெறியாகுமா?' என ஒருவர் நபிகள் நாயகம் அவர்களிடம் வினவினார். <br /><br />அதற்கு நபிகள் நாயகம் அவர்கள் இல்லை!, மாறாக மனிதன் தன் சமுதாயத்தார் (பிற மனிதன் மீது) கொடுமை செய்ய முற்படும்போது அவர்களுக்குத் துணை புரிவது தான் இனவெறியாகும் என்றார்கள்.<br /><br />எவன் அநீதியான விஷயத்தில் தன் சமுதாயத்தினருக்கு உதவி புரிகின்றானோ அவன் கிணற்றில் விழுந்து கொண்டிருக்கும் ஒட்டகத்தின் வாலைப் பிடித்துக் கொண்டிருப்பவனைப் போன்றவனாவான். அந்த ஒட்டகத்துடன் சேர்ந்து அவனும் கிணற்றில் வீழ்வான்.<br /><br />நீதி செலுத்துங்கள்! அது உங்களுக்கோ உங்கள் பெற்றோருக்கோ நெருங்கிய உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் சரியே! எந்தவொரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள பகைமை உங்களை நீதியிலிருந்து பிறழச் செய்துவிடக் கூடாது.<br /><br />இன, மத, மொழி வெறியின் அடிப்படையில் மக்களை அழைப்பவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன்; அதற்காகப் போராடுபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன்; அதற்காக உயிரை விடுபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன். <br /><br />நன்றி!. மீண்டும் சந்திப்போம்!.<br /><br /><FONT COLOR="#FF0000">டிஸ்கி: இந்த இடுகை முழுக்க முழுக்க என் மனதில் பட்ட எண்ணமே தவிர, யாரையும் காயப்படுத்துவதவோ அல்லது எந்த பிரச்சனையையும் கிண்டுவதோ இங்கு என் நோக்கமல்ல.</FONT>சிங்கக்குட்டிhttp://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-952520241038452238.post-74497365909742445382010-09-06T23:10:00.002+09:002010-09-07T00:49:11.314+09:00கதவை திறந்தால் கண்டிப்பாக காற்று வரும்!வணக்கம் நண்பர்களே,<br /><br />சூட்டோடு சூடாக செய்திகள் பரபரப்பாக இருக்கும் போது, பத்தோடு பதினொன்றாக எழுத விரும்பாத காரணத்தால், பரபரப்பு அடங்கும் வரை காத்திருந்தேன்.<br /><br />காரணம் இன்றைய பரபரப்பான வாழ்கை சூழலில், காலை காபியுடன் படிக்கும் செய்திதாளிலோ அலுவலகம் போகும் வழியில் காரில் கேட்கும் வானொலி செய்திகளிலோ மக்கள் தங்கள் தூக்கத்தில் இருந்து வெளியே வர மட்டுமே பரபரப்பு செய்திகள் பயன் படுகிறதே தவிர, விசாரணை கமிசன் போல், எந்த ஒரு பரபரப்பான செய்திக்கும் முடிவே இருந்திருக்காது என்பது தான் உண்மை.<br /><br />ஊடகங்களில் செய்திகள் பழையதானதும் பரபரப்பு குறைகிறது, தூக்கம் கலைய மாறுகிறது, அதனால் விற்பனை குறைகிறது, ஆகவே அடுத்த புது செய்தி பரபரப்புக்காக தேவை படுகிறதை தவிர, இதில் சமூக அக்கறை ஏதும் இருப்பதாய் எனக்கு தெரியவில்லை.<br /><br />நேற்று வரை காசை கொடுத்தவர்கள் கடவுள் என்று போற்றினார்கள். <br /><br />ஏமாற்ற பட்டது தெரிந்ததும் பணம், மானம் போன கோவத்தில் மிருகம் என்று தூற்றினார்கள். <br /><br />பரபரப்பு குறைந்ததும், இதோ இயல்பு வாழ்கை திரும்பி விட்டது, <br /><br />மீண்டும் இன்று காசை வாங்குபவர்கள் கடவுள் என்று போற்றுகிறார்கள்.<br /><br />அமைதி படை படத்தில் வரும் வசனம் போல், கட்டம் கட்டி போட்டு தள்ளு "உஸ்ஸ்சு"...! மன்னிப்பு கடிதம் கொடுத்து பதவி விலகினால் "புஸ்ஸ்சு"...!<br /><br />ஆக, மொத்தத்தில் "உஸ்ஸ்சு" "புஸ்ஸ்சு", இவ்வளவுதாம்பா நம்ம நாட்டு அரசியல் என்பதுதான் உண்மை. அதற்கு பிறகு யாரும் அதை பற்றி நினைக்க கூட நேரம் இருப்பதில்லை.<br /><br />(வரலாறு முக்கியம் மங்குனி பாண்டியரே, இறநூறு வருடம் கழித்து வரப்போகும் முட்டாள்களுக்கு, நாம் இன்று எப்படி இருந்தோம், என்ன செய்தோம் என்று தெரியவா போகிறது!)<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhz1PkG_UCUKg6nES60JtyRKVN-ZY84NwSauoNipTimxyuWbJ4YOMvHtd8x_5Gl4p52U3c6TGEDAIvj01jQ6jOrdNHC7Mny82t87XvdQhNT9By105tZxZc1LHY9FCz04eu3GxwNJQdUP7o/s1600/Medi-2.jpg" target="new"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhz1PkG_UCUKg6nES60JtyRKVN-ZY84NwSauoNipTimxyuWbJ4YOMvHtd8x_5Gl4p52U3c6TGEDAIvj01jQ6jOrdNHC7Mny82t87XvdQhNT9By105tZxZc1LHY9FCz04eu3GxwNJQdUP7o/s320/Medi-2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5513750509437120162" /></a><br /><br />சரி, இதற்கு காரணம் அவரா, இவரா என்ற அர்த்தமில்லாத ஆராய்ச்சி நமக்கு இப்போது தேவை இல்லை. <br /><br />ஆனால், நாம் ஏன் இப்படி படித்தும் பதராய் ஆகிவிட்டோம்? என்று நம்மை நாமே உணர்ந்து மாறுவதுதான் இப்போதைய தேவை.<br /><br />எனக்கு புரிந்த காரணம் என்னவோ மிக எளிது, அவசர உலகத்தில் எல்லாம் அவசரமாக்க பட்டு அனைத்தையுமே வெறும் பணத்தால் விரைவாக அடைய முடியும் என்ற தவறான கண்ணோட்டம்தான்.<br /><br />நாம் என்ன செய்கிறோம்!, நமக்கு என்ன தேவை! என்ற அடிப்படை எண்ணம் கூட தெளிவாக இல்லாத நிலையில், நாம் மற்றயாரையும் குறை கூறுவதில் அர்த்தமில்லை.<br /><br />ஒரு உதாரணத்துக்கு, முன்பு பார்த்தல், ஒரு கடைக்கு பத்து கடை பார்த்து, ஒரு துணியை வாங்குவோம், நமக்கு நன்கு அறிமுகமான தையல்காரரிடம் அதை தைக்க கொடுத்து பத்து நாட்கள் பொறுத்திருந்து வாங்கியபின் தான் நம் புது சட்டை தயாராகிறது.<br /><br />ஆனால் இன்று, இந்த மொத்த பணத்தை விட சற்று அதிகமாக பணம் கொடுத்தால், ரெடிமேட் சட்டை உடனடியாக கிடைக்கிறது.<br /><br />இப்படியே உணவு, உடை, தகவல் தொடர்பு வரிசையில் இறுதியாக ஆன்மீகம் என்று எல்லாவற்றிலும் நாம் ஒரு "ரெடிமேட்" கலாச்சாரத்துக்கு பழகிவிட்டேம்.<br /><br />முன்பெல்லாம் ஒரு புத்தகம் எழுதுவது என்பது மிக பெரிய ஆராய்ச்சி மற்றும் அறிவு சார்ந்த ஒரு விசையம்.<br /><br />ஆனால், இன்று அது சார்ந்த பத்து புத்தகங்களை புரட்டி, அதில் எடுத்த குறிப்புகளை வெவ்வேறு வார்த்தைகளை கொண்டு தனியாக தொகுத்தால் ஒரு புது புத்தகம் தயாராகி விடுகிறது.<br /><br />(அப்படியே நமக்கு நாமே கம்பனுக்கு அடுத்து, பாரதி போல, சுஜாதாவுக்கு அப்புறம் என்று சுய விளம்பர பில்டப் கொடுத்துக்கலாம்)<br /><br />இதை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்பது உங்களுக்கு இனி வரும் வார்த்தைகளில் புரியும்.<br /><br />பண்ட மாற்று முறையில், அளவு முறையும் சேமிப்பு முறையும் மாறுபடுகிறதே என்று அதை சமபடுத்த, மனிதனாய் பார்த்து முறையான வாழ்கைக்கு வடிவமைக்க பட்ட பணம்தான், இன்று மனிதனை முறையற்ற வாழ்கைக்கு உள்ள அத்தனை வழியையும் திறந்து விடுகிறது.<br /><br />பணம் கொடுத்தால் எல்லாம் கிடைத்து விடும், அதுவும் உடனே கிடைத்து விடும் என்ற முட்டாள் தனமான நம்பிகையே இதன் அடிப்படை. இதனால் பெரும்பாலும் நம் எண்ணம் இப்படித்தான் போகிறது.<br /><br />குடும்ப வாழ்கை வேண்டும், தொழில் வேண்டும், மொத்தத்தில் விடுமுறைக்கு செல்வதை போல பணம் எடுத்துக்கொண்டு ஆசிரமத்தை தேடி போய் பணம் கொடுத்தால் மட்டும் போதும்.<br /><br />வெளியே வரும் போது நாம் ஒரு விவேகானந்தராய், புத்தராய், நபியாய், கிறிஸ்துவாய் மாறிவிடலாம் (என்ற நினைப்புதான் இன்று பெரும்பாலான மக்களின் பிழைப்பை கெடுக்கிறது).<br /><br />அதிலும் வேடிக்கை அப்படி ஆனபின், விடுமுறை முடித்ததை போல திரும்பவும் நாம் குடும்ப வாழ்கைக்கு திரும்பி, நம் தொழிலை பார்க்க போய்விடலாம்.<br /><br />இப்படி பட்ட எண்ணம் மக்கள் மனதில் இருக்கும் வரை, மற்ற யாரையும் நாம் குறை சொல்வதில் என்ன அர்த்தம் இருக்க போகிறது, சிந்தித்து பாருங்கள்!.<br /><br />சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் எனக்கு தெரிந்த நான்கு ஆன்மீக புத்தகங்கள் உள்ளன, அவற்றில் இல்லாத எந்த ஒரு கருத்தையும், கடந்த சில நூறாண்டில் வந்த எந்த ஒரு புத்தகத்திலும் நீங்கள் காட்ட முடியாது என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும், அந்த புத்தகங்கள் உலகின் அத்தனை மொழியிலும் கிடைகிறது.<br /><br />இராமாயணம், பகவத்கீதை, திருகுரான், பைபிள் தான் அந்த புத்தகங்கள், இவற்றில் இல்லாத எந்த ஒரு புது விசையத்தையும் எனக்கு தெரிந்த எந்த ஒரு கார்பரேட் துறவியோ, சாமியாரோ சொன்னதோ எழுதியதோ கிடையாது.<br /><br />அப்படி என்றால், ஆன்மீகத்தில் ஈடு பாடு கூடாதா? அப்படி ஆன்மீகத்தில் ஈடுபடும் பட்சத்தில், ஒரு குரு இல்லாமல் நாம் எப்படி மனம் அமைதியடைய முடியும்? யார் நமக்கு வழிகாட்டுவார்கள்? <br /><br />என்று பலதர பட்ட எதிர்வாத கேள்விகள், இங்கு வரக்கூடும்.<br /><br />நான் சொல்வதின் அர்த்தம் அப்படி இல்லை என்பதை விளக்கி சொல்ல வேண்டியது இங்கு என் பொறுப்பாகிறது.<br /><br />எனக்கு தெரிந்த ஆன்மீகத்தின் முதல் அடிப்படை மற்றும் உச்சகட்ட கடைசி நிலை, இந்த இரண்டு பாடமுமே "நம்மை நாமே உணர வேண்டும்" என்பதுதான்.<br /><br />இதன் அடிபடையில் நாம் யார், இப்போது நமக்கு என்ன தேவை என்பதை நாம் முதலில் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.<br /><br />இதில் மிக முக்கியமானது, எந்த ஒரு கால கட்டத்திலும் விளம்பரம் மற்றும் விற்பனை செய்யப்படுவது ஆன்மீகம் ஆகாது.<br /><br />எடுத்த எடுப்பில் குருவை தேடும் அளவு நாம் முழுநேர மற்றும் பொதுநோக்கு ஆன்மீகவாதி(துறவி) இல்லை. <br /><br />அப்படியே ஒரு சித்தரை போலவோ விவேகானந்தரை போலவோ ஒரு புனித ஆத்மாவாக யாரேனும் இருப்பின், அந்த ஆத்மா தக்க சமயத்தில் தானே தன் குருவை அடையாளம் கண்டு அவரை வந்து அடையுமே தவிர, பணம் கொடுத்து குருவை வாங்க வேண்டிய அவசியம் இருக்காது.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjlWSDvDvgK7l8-zLE3Q2NSfIvlpe3RT39O3faXVzZ1D0RvisybZsA6eixCM4kQ92X62cZwkCACJl9Gpy2x7kIl6LBHNbTqlDgHBsRbnCPgb4dgr86Ss_t6MIsRyv7ezsJ2nG_GXqDfOvY/s1600/Medi-1.jpg" target="new"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 246px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjlWSDvDvgK7l8-zLE3Q2NSfIvlpe3RT39O3faXVzZ1D0RvisybZsA6eixCM4kQ92X62cZwkCACJl9Gpy2x7kIl6LBHNbTqlDgHBsRbnCPgb4dgr86Ss_t6MIsRyv7ezsJ2nG_GXqDfOvY/s320/Medi-1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5513750810338179570" /></a><br /><br />குடும்ப வாழ்வின் பிரச்சனை சக்கரத்தில் சுற்றி சுற்றி, மூளையின் இடைவிடாத வெவ்வேறு சிந்தனைகளால், நரம்புகளும், நாடி வேர்களும் பாதிக்கப்பட்டு உடல் இயக்கம் சீராக இல்லாமல் மனம் அமைதி பாதிக்க பட்டிருக்கும் பொதுவான மக்களின் ஆன்மீக நாட்டம், தேடல் என்பது மன உளைச்சலை குறைக்க அல்லது தவிர்க்க மட்டுமே என்பதை தெளிவாக நாம் உணர வேண்டும்.<br /><br />பொதுவாக நமக்கு நாமே கேட்டு பார்த்தல், கஷ்டம் வரும் போது கடவுளை நினைக்கும் அல்லது நாடும் எத்தனை பேர், சந்தோசம் வரும் போது கடவுளை நினைக்கவோ அல்லது நன்றி சொல்லவோ செய்கிறோம்?<br /><br />ஆக, சுக துக்கத்தை ஒன்றாக பாவித்து பொது நல ஆன்மீக வாழ்கை பயணம் என்பது வேறு, அவை ஒரு போதும் கார்பரேட் நிறுவனங்கள் போல பணத்தின் அடிப்படையில் அல்லது விற்பனை முறையில் நடைபெறாது.<br /><br />தன் கஷ்டங்களுக்கு மனஅமைதி, வடிகால் தேடும் ஆன்மீக நாட்டம் என்பது வேறு, இதற்காக ஒரு போதும் நிம்மதியை விலை கொடுத்து வாங்க முடியாது.<br /><br />இந்த நிலையில் நாம் செய்யக்கூடியது தான் என்ன?<br /><br />பரபரப்பு வாழ்கையின் இடைவிடாத ஓட்டத்தால் தளர்ச்சியடையும் மனதிற்கும் உடலுக்கும் ஒரு அமைதி மற்றும் சக்தி தேவை, அதற்காக சரியான வழி தியானம் மட்டுமே.<br /><br />ஆனால், அது சரியான முறையா? தியானம் என்ற மிக பெரிய விசையத்தில் உள்ள சூத்திரங்கள் எதுவுமே நமக்கு தெரியாதே என்ற பயமும் குழப்பமுமே நாம்மை தவறான முடிவெடுக்க வைத்து, தவறான மனிதர்களை நாட வைக்கிறது.<br /><br />இதில் சில அடிப்படை விசையங்களை நாம் புரிந்து கொள்ளவேண்டும். <br /><br />மூளை என்பது வேறு எதுவும் அல்ல, சிந்தனைகளும், நினைவுகளும் நிறைந்ததே நம் மூளை, குடும்ப வாழ்கை சக்கரத்தின் இன்ப துன்பங்களின் இடைவிடாத தொடர் இயக்கத்தால், நம் உடலின் சத்தி குறைகிறது, நாட்கள் இப்படியே பரபரப்பாக நகர நகர, அந்த பாதிப்பு உடலின் நரம்புகள் மூலம் மற்ற பகுதிக்கு சென்று அவையும் தளர்ச்சி அடைகிறது.<br /><br />ஒரு குழந்தை எப்போதும் உடல் சக்தியுடன் ஓடியாடி சுறுசுறுப்பாக இருக்கிறதே! என்று எப்போதாவது கவனித்து பார்த்ததுண்டா? காரணம் குழந்தையின் மூளையில் நினைவுகள் தங்குவதில்லை. <br /><br />இளம் கன்று பயமறியாது என்ற சொல் படி, வாழ்கையை பற்றி, அடுத்த நாளை பற்றி குழந்தை ஒரு போதும் சிந்திப்பது கிடையாது, அதனால் பிரபஞ்சத்தில் உள்ள சக்தியை (Cosmic Energy Healing for Health) காற்றில் மூலம் அந்த குழந்தை அதிகமாக பெறுகிறது. அதே போல் எந்த சிந்தனையும் இல்லாமல் படுத்த உடன் தூங்கி (தியான நிலைக்கு போய்) விடுகிறது அப்போது இன்னும் அதிக சக்தியை அந்த உடல் பெறுகிறது.<br /><br />நாம் கூட தூங்கி எழுந்தவுடன் களைப்பு நீங்கி சுருசுப்பாகி விடுகிறோம் இல்லையா? காரணம் தூக்கமும் ஒரு வகை தியானம் தான், தூக்கம் எப்படி ஒரு நினைவற்ற (Unconcious Mind) தியானமோ, அதே போல தியானம் என்பது ஒரு வகையான நினைவுள்ள தூக்கம் என்று கூட எடுத்துக்கொள்ளலாம். <br /><br />தூக்கத்தில் நமக்கு கிடைக்கும் அளவான சக்தியை போல தியானத்தின் மூலம் அளவில்லா உடல் சக்தியை பெற முடியும்.<br /><br />இப்படி தியானத்தின் மூலம் நம் மன அமைதியை நாமே பெற முடியும்.<br /><br />இதன் அடுத்த நிலையை அடைந்து நாம் யார் என்று நமக்கு புரியும் போது, நம் குருவை நாமே சரியாக அடையாளம் கண்டுகொள்ள முடியும், அதற்காக நாம்மிடம் குருவும் எந்த பிரதி பலனையும் எதிர் பார்க்க மாட்டார்.<br /><br />அதெப்படி நானே தியானிக்க முடியும்? குருவில்லாத ஒரு கலை எப்படி முழுமையடைய முடியும் என்று எடுத்த எடுப்பில் முடிவை தேடாமல், முதல் அடியாக நம் முயற்சியை அடிமேல் அடி தொடர்ந்து எடுத்து வைத்தாலே போதும்.<br /><br />தியானம் பற்றி எனக்கு புரிந்ததை விரைவில் சுருக்கி சொல்ல முயற்சிக்கிறேன். <br /><br />நான் மேலே சொன்னபடி இவை அனைத்தும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக எல்லா ஆன்மீக குறிப்புகளிலும் எழுதி வைக்கப்பட்டது.<br /><br />அதனால் இதில் நானே சொந்தமாக சொல்ல எதுவும் இல்லை, நான் படித்ததை அதில் எனக்கு புரிந்ததை, சுருக்கமாக ஒரு இடுகைக்குள் வருமாறு உங்களுடன் பகிர்வது மட்டுமே என் நோக்கம். <br /><br />நன்றி!, மீண்டும் சந்திப்போம்.சிங்கக்குட்டிhttp://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.com23tag:blogger.com,1999:blog-952520241038452238.post-79452591739672570652010-08-23T23:52:00.002+09:002010-08-23T23:57:39.584+09:00இது புதுசு கண்ணா புதுசு!இன்று உலகம் முழுவதுமே சவாலாக இருக்ககூடிய விசையம் என்றால் அது புகை பிடிப்பதை கட்டுப்படுத்துவது என்பதுதான்.<br /> <br />அந்த அளவுக்கு ஆண் பெண் என்றில்லாமல் உலக மக்கள் புகைக்கு அடிமையாக இருக்கிறார்கள் என்பது மட்டுமில்லாமல்,இறப்பு விகிதமும், மலட்டு தன்மையும் அதிவிரைவாக கூடிக்கொண்டு வருவதற்கு இது ஒரு மிக முக்கிய காரணமாக இருக்கிறது.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgRv1rX40Hl3bbDBRKIFCO4HFBV4ugmBPtQ5Oab-zFkmHFDEeG8s2mNgAJRnf9WYk4uFq-xNeWkY9XiAvI6EnTSz14n8m8gvTPEbxBqjnogMtDV9j6GTxAN-WmblSumnRCxeiUkriu5KBs/s1600/e-cigarette-6.jpg" target="new"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 208px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgRv1rX40Hl3bbDBRKIFCO4HFBV4ugmBPtQ5Oab-zFkmHFDEeG8s2mNgAJRnf9WYk4uFq-xNeWkY9XiAvI6EnTSz14n8m8gvTPEbxBqjnogMtDV9j6GTxAN-WmblSumnRCxeiUkriu5KBs/s320/e-cigarette-6.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5508506721941754162" /></a><br /> <br />சிகரட்டை பொறுத்தவரை கடந்த சில வருடங்களாக பல மாற்று வழிகள் கண்டு பிடித்த போதும், சுவிங்கம், மாத்திரை போன்ற எந்த ஒரு மாற்று வழியும் சரியான பலனை தரவில்லை என்பதுதான் உண்மை.<br /><br />மேலும் உண்மையை சொல்ல வேண்டும் என்றால், தானாக விரும்பி விட்டால் தவிர, புகைப்பதை கைவிட மாற்றுவழி கண்டு பிடிப்பது என்பது ஒரு பெரும் சவாலாகவே இருந்து வருகிறது.<br /> <br />மாற்றுவழியாக கண்டுபிடிக்க படும் பொருட்கள் வெற்றி பெறாத காரணத்தை ஆராய்ந்தால் அதன் அடிப்படை இரண்டாகவே இருக்கும்.<br /> <br />I- புகைத்ததை போல உணர்வே வரவில்லை!.<br /> <br />II- என்னதான் இருந்தாலும் சிகரட்டை கையில் பிடிக்க கூடியதை போல உணர்வும் புகையும் இல்லாததுதான்.<br /> <br />காரணம் புகை வராத ஒரு பொருளை வைத்திருப்பது சிலருக்கு சங்கோஜத்தையும் சிலருக்கு பின் விளைவுகளையும் கொடுத்தது.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgOWX5B3SujKADCoPggIqXGU-hMp4dlEb7eFBJ7VWz0zOvsZmVkHpzNM88lzMF3bpoMa8OfKznLDC3TcBwLutCjKJeG1bDfNvfleFjUGMqAUMhJcPvH2JT3jJV1KVCYPI_z8BjDJ5I-GWo/s1600/e-cigarette-1.gif" target="new"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 104px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgOWX5B3SujKADCoPggIqXGU-hMp4dlEb7eFBJ7VWz0zOvsZmVkHpzNM88lzMF3bpoMa8OfKznLDC3TcBwLutCjKJeG1bDfNvfleFjUGMqAUMhJcPvH2JT3jJV1KVCYPI_z8BjDJ5I-GWo/s320/e-cigarette-1.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5508507296114542338" /></a><br /> <br />இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு சந்தைக்கு புதிதாக வந்திருப்பதுதான் இ-சிகரட்(படங்களை சொடுக்கி தெளிவாக பார்க்கவும்).<br /> <br />Electronic Cigarette என்பதின் சுருக்கமே E-Cigarette, பேட்டரியில் இயங்கும் இவை, ஒரு முறை சார்ச் செய்தால் ஆறு மணிநேரம் முதல் இரண்டு நாட்கள் வரை பயன்படுத்தும் வகையில் இருக்கிறது. <br /><br />மற்ற அனைத்து தயாரிப்பை விட இது குறுகிய காலத்தில் வெற்றி பெற்று இருக்கிறது என்றுதான் நினைக்கிறேன், காரணம் இது சாதாரண சிகரட் போலவே வடிவம், புகை வருகிறது, குறிப்பாக புகைத்ததை போல சுவையும் உணர்வும் இருக்கிறது, பக்க விளைவுகள் எதுவும் இல்லை என்று சொல்லப்படுகிறது.<br /> <br />மேலும் இதன் வெற்றிக்கு முக்கிய காரணம், இதில் தீங்கு வரும் நிக்கோடின், தார் போன்ற எந்த நச்சு பொருட்களும் இல்லை என்று சான்றுகள் தரப்படுகிறது.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxZ3pZmEHnXwdjFCHStKBbKwUOy-SavmAoBkmlYHTp-KNUtUv_Wpbs5Ewvfm9uI3oxmm4s49M6EHFJsWRDloJT50ge4Ut5aNey4v5c2HkOb972THWGK1G4wWCYsCFDAUZDJf_5LCMg5oQ/s1600/e-cigarette-2.jpg" target="new"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 286px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxZ3pZmEHnXwdjFCHStKBbKwUOy-SavmAoBkmlYHTp-KNUtUv_Wpbs5Ewvfm9uI3oxmm4s49M6EHFJsWRDloJT50ge4Ut5aNey4v5c2HkOb972THWGK1G4wWCYsCFDAUZDJf_5LCMg5oQ/s320/e-cigarette-2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5508508324282630082" /></a><br /><br />சாதாரண சிகரட் சுவை முதல் பல்வேறு சுவைகளில் இ-சிகரட் கிடைகிறது, இதில் வரும் புகை அருகில் இருப்பவர்களுக்கு, மற்ற சாதாரண சிகரட் புகை போல எரிச்சலையோ, வெறுப்போ ஏற்படுத்துவது இல்லை, அதனால் இதை அந்த அந்த நாட்டு சட்டத்துக்கு உட்பட்டு எங்கும் புகைக்க முடியும் என்று விளம்பரப்படுத்த படுகிறது.. <br /> <br />சில நாடுகளில் அரசாங்கமும் இதை அங்கீகரித்து இருக்கின்றன, சாதாரண சிகரட் புகைக்கு தடை விதித்து இருக்கும் பகுதிகளில் கூட இ-சிகரட் புகைக்க அனுமதி கொடுத்திருக்கிரார்கள். அதே நேரம் சில நாடுகளில் இதை இன்னும் அங்கிகரிக்கவில்லை என்பதும் உண்மை.<br /> <br />எது எப்படியோ புகைப்பதை நிறுத்த இ-சிகரட் ஒரு சிறந்த மாற்று வழியாக இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.<br /> <br />ஆனாலும், இ-சிகரட் வாங்கும் முன் பொதுவாக சில சுய பரிசோதனை விசையங்களை கருத்தில் கொள்ளவது என்பது அவரவர் சொந்த பொறுப்பாகிறது.<br /> <br />இந்த தயாரிப்பை வாங்கவோ அல்லது பொது இடங்களில் பயன் படுத்தவோ உள்ள விதி முறைகளை நீங்கள் இருக்கும் நாட்டின் சட்டத்தில் இருந்து தெளிவாக முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.<br /><br />மற்றவர்கள் நிறுத்த சொல்கிறார்கள் என்பதற்காக இல்லாமல், உங்கள் அடி மனதில் புகைப்பதை நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் வேண்டும்.<br /> <br />இதை தவிர மற்ற புகை பிடிக்கும் சமந்த பட்ட அனைத்து பொருட்களையும் உடனே கண்ணில் படாமல் கடாசி விட்டு, இதை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhrZeJ5c13n69LU9Bi_oBFYwYhFACh96gHsrAcxn730YyfB5zvPvpV9BUrxKnjS-jQzUOckSu0zm1sX941Ac-iiEIP1fXA_9L6JiTA1_6MdQqWohtjGV9Q6iiI1B1s0Aoz_ezSE3W1aShQ/s1600/e-cigarette-3.jpg" target="new"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 142px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhrZeJ5c13n69LU9Bi_oBFYwYhFACh96gHsrAcxn730YyfB5zvPvpV9BUrxKnjS-jQzUOckSu0zm1sX941Ac-iiEIP1fXA_9L6JiTA1_6MdQqWohtjGV9Q6iiI1B1s0Aoz_ezSE3W1aShQ/s320/e-cigarette-3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5508509028787080226" /></a><br /> <br />இது புகைப்பதை படிப்படியாக குறைத்து ஒரேடியாக நிறுத்துவதற்கான ஒரு சிகிச்சைதான், இதையும் விரைவில் நிறுத்தி விட வேண்டும் என்று ஒவ்வொரு முறை புகைக்கும் போதும் நினைவில் வைத்திருந்து, ஒரு நாள் சுத்தமாக நிறுத்தி விட வேண்டும்.<br /> <br />இறுதியாக, எந்த ஒரு பொருள் சந்தைக்கு வந்தாலும் அதன் அடிப்படை பலனை இழந்து விட்டு, வெறும் விலையை மட்டும் கருத்தில் கொண்டு குறைந்த விலையில் சில போலி தயாரிப்புகளும் உடனே சந்தைக்கு வந்து விடும்.<br /> <br />விலை குறைவு என்பதை மட்டும் பார்க்காமல், தகுந்த நிபுணர்களை அல்லது மருத்துவரை கலந்து ஆலோசித்து சரியான தயாரிப்பை விலை சிறிது அதிகமானாலும் வாங்குவதன் மூலம் மட்டுமே இ-சிகரட்டின் உண்மையான பலன் பெற முடியும்.<br /><br /><center><br /><object width="480" height="360"><param name="movie" value="http://www.youtube.com/v/eqz6TvAKcBQ?fs=1&hl=en_US&border=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/eqz6TvAKcBQ?fs=1&hl=en_US&border=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="360"></embed></object><br /></center><br /><br /> <br />இனி சுவாரஸ்சியமான ஒரு குட்டி தயாரிப்பை பற்றி பார்ப்போம்.<br /><br />எவ்வளவோ பெரிய பெரிய பொருட்கள் சந்தைக்கு வந்தாலும், ஆக சிறிய பொருளை தயாரிப்பதில் இருக்கும் ஆர்வம் எந்த ஒரு நிறுவனத்துக்கும் குறையவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.<br /><br />இதோ இங்கு படத்தில் இருப்பது ஏதோ பென்சில் சீவ அல்லது விளையாட்டு பொருள் என்று நினைக்க வேண்டாம். இது ஒரு ஆயுதம் என்றால் உங்களால் நம்ப முடியுமா? <br /><br />ஆனால் உண்மை அதுவே, ஆம் இது "கெனான்" நிறுவம் தயாரித்துள்ள ஆக சிறிய பீரங்கி.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjTDefhLQ0aLi6Bya_pBnldQyQAfd9QKkGIITqHXwfmhOnw71UWLvGinWraodynjT72ImJfvLvWJxv5f7NCq_Zqgu3VUyo8_6MJ9CoNXeiBWgdRq1dSnmkvi7fIaqBu0sU2bzuPBM7j9pQ/s1600/canon_1.JPG" target="new"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 178px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjTDefhLQ0aLi6Bya_pBnldQyQAfd9QKkGIITqHXwfmhOnw71UWLvGinWraodynjT72ImJfvLvWJxv5f7NCq_Zqgu3VUyo8_6MJ9CoNXeiBWgdRq1dSnmkvi7fIaqBu0sU2bzuPBM7j9pQ/s320/canon_1.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5508462962398413794" /></a><br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLdELNMX7oArMmit7_18MVyYoJ9LAyxoDGmBDUStYTeKFGvRcPwgNyLnoJ4CMV6PkjxgxnHA1GDPYAkPtfs4cixh2YwrsSQYEto6DTC51VEzX0_nMF2jdUN65DdXomiGcmqNX7xbwvh_4/s1600/canon_2.JPG" target="new"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 185px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLdELNMX7oArMmit7_18MVyYoJ9LAyxoDGmBDUStYTeKFGvRcPwgNyLnoJ4CMV6PkjxgxnHA1GDPYAkPtfs4cixh2YwrsSQYEto6DTC51VEzX0_nMF2jdUN65DdXomiGcmqNX7xbwvh_4/s320/canon_2.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5508463206306137250" /></a><br /><br />கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல, உருவத்தில் சிறிதாக இருந்தாலும் இதன் சக்தி அதிகமாகவே இருக்கிறது. <br /><br /><center><br /><object width="480" height="360"><param name="movie" value="http://www.youtube.com/v/Wi4g_U0hoOg?fs=1&hl=en_US&border=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/Wi4g_U0hoOg?fs=1&hl=en_US&border=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="360"></embed></object><br /></center> <br /><br />என்னதான் சொல்லுங்கள், ஆயுதம் என்றாலே ஆபத்துதானே?<br /> <br />அதிலும், இத்தகைய பொருட்கள் தப்பி தவறி கூட குழந்தைகள் கையில் கிடைத்து விட்டால்!, அது உயிருக்கே உலை வைத்து விடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.<br /><br />உங்கள் நேரத்திற்கு நன்றி, மீண்டும் சந்திப்போம்.சிங்கக்குட்டிhttp://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.com43tag:blogger.com,1999:blog-952520241038452238.post-17066540960266575412010-08-18T19:34:00.003+09:002010-08-18T22:48:09.898+09:00யார்? ஏன்! எப்படி?<a href="http://eppoodi.blogspot.com/2010/08/blog-post_17.html" target="new">எப்பூடி</a> யார் அழைத்து இருந்தாலும், அது <a href="http://eppoodi.blogspot.com/2010/08/blog-post_17.html" target="new">எப்பூடி</a>? என்று கேட்டிருக்க முடியும்!. ஆனால், அழைத்ததே <a href="http://eppoodi.blogspot.com/2010/08/blog-post_17.html" target="new">எப்பூடி</a> எனும்போது, அது <a href="http://eppoodi.blogspot.com/2010/08/blog-post_17.html" target="new">எப்பூடி</a>, <a href="http://eppoodi.blogspot.com/2010/08/blog-post_17.html" target="new">எப்பூடி</a>-கிட்டேயே <a href="http://eppoodi.blogspot.com/2010/08/blog-post_17.html" target="new">எப்பூடி</a> என்று <a href="http://eppoodi.blogspot.com/2010/08/blog-post_17.html" target="new">எப்பூடி</a> கேட்க முடியும் சொல்லுங்க?<br /><br /><FONT COLOR="#151B8D">டேய்ய்ய்ய்ய்ய்ய்...அடங்குடா!, உன்னையும் மதிச்சு ஒருத்தர் தொடர் பதிவுக்கு அழைத்ததுக்கு ஓவர் ஆட்டமா?</FONT> என்று நீங்கள் நினைப்பது புரிவதால், ஹி ஹி ஹி தொடருகிறேன்.<br /><br /><FONT COLOR="#FF0000">1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?</FONT><br /><br />ட்டி......குட்டி.......சிங்கக்குட்டி....!<br /><br />(நேற்றுதான் வால்டர் வெற்றிவேல் பார்த்துக் கொண்டு இருந்தேன் அந்த பாதிப்புதான்)<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg2C0pOY2ZgVgB1qSvdTsNA4DlQfKeMVnvreh31XgHqbzTEfVBwN0JqN_XoGvkVhUcwXGoDSzNcvVuvwFrLcurLlti1HVwBOTmzneevs4lZ2Y4V9oK1MOB9nGWAdCPp4TXGQ7YsjfgRAIo/s1600/blogger.jpg" target="new"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg2C0pOY2ZgVgB1qSvdTsNA4DlQfKeMVnvreh31XgHqbzTEfVBwN0JqN_XoGvkVhUcwXGoDSzNcvVuvwFrLcurLlti1HVwBOTmzneevs4lZ2Y4V9oK1MOB9nGWAdCPp4TXGQ7YsjfgRAIo/s320/blogger.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5506329634113329218" /></a><br /><br /><br /><FONT COLOR="#FF0000">2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?</FONT> <br /><br />என்னப்பா இது விட்டா, சிங்கம் உங்க வீட்டுக்கு வந்துச்சா! இல்ல <FONT COLOR="#FF5600">(ஹேய் நோ நோ மம்மி பாவம் மம்மி பாவம்)</FONT> உங்கப்பா காட்டுக்கு போனாரான்னு கேட்பீங்க போல?<br /><br />அந்த கதையை சொல்கிறேன் கேளுங்க..! <br /><br />எது, சிங்கக்கதையா? ஹேய் என்ன சின்னபுள்ளதனாமா இருக்கு, நான் சொல்ல வந்தது பெயர் கதையை, ஒழுங்கா கேளுங்க.<br /><br />எனக்கு ஒரு பதினோரு பனிரெண்டு வயசு இருக்கும், அப்ப நான் ஆறாவது படித்துக்கொண்டு இருந்தேன்? <br /><br /><FONT COLOR="#151B8D">டேய் இப்பவரையும் நீ ஆறாவதுதாண்டா படிச்சிருக்க!.</FONT><br /><br />நோநோநோ...யாரது கூட்டத்துல இருந்து குரல் கொடுக்குறது....! கதைய கேளுங்க.<br /><br />புலவர் இராமசாமி இராமசாமி-ன்னு ஒரே ஒரு அருமையான தமிழ் ஆசிரியர், ரெட்டை சுழியில் ஒரு சுழி முன் சுழியோடு சாமிக்கு விட்டிருந்த முடி பிடரிவரை தொங்க அழகாக இருந்த என்னை...!<FONT COLOR="#FF5600">(இப்ப இல்லங்க சின்னபுள்ளைல அழகா இருத்தேன், அட எங்கம்மா சத்தியமா அழகாத்தான் இருந்தேன் நம்புங்கையா)</FONT> எதோ காரணத்தில் அவருக்கு என்னை பிடித்துப்போக, வாடா "சிங்கக்குட்டி" என்றுதான் அழைப்பார்.<br /><br />அதை தொடந்து என் நண்பர்கள், அவர்கள் குடும்பம் என்று அதே பெயரில் அழைக்க, பின் அதுவே என் நிரந்தர பெயராகிவிட்டது.<br /><br />ஹும்ம்... அது ஒரு காலம்...ஒன்ஸ் அப்பான டைம் மண்டை மேலே எவ்ளோ முடி!. <br /><br />இதன் உச்ச கட்டமாக பல வருடம் சென்றும், என் பால்ய நண்பன் ஒருவன் அவன் கல்லூரி நண்பனுக்கு என்னை அறிமுக படுத்தும் போது கூட "மீட் மை பெஸ்ட் பிரன்ட் மிஸ்டர் சிங்கக்குட்டி" என்று பீட்டர் விட, அவன் நண்பர் என்னை பார்த்த பார்வை எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது.<br /><br />அவ்ளோதாம்பா என் பெயர் கதை. இப்ப திருப்தியா...! சரி போங்க மிச்சத்தையும் படிங்க.<br /><br /><FONT COLOR="#FF0000">3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி....</FONT><br /><br />உண்மையை சொல்லப்போனால் அப்போது வலைபதிவுன்னா எனக்கு என்னான்னே தெரியாது <FONT COLOR="#FF5600">(இப்போது மட்டும் தெரியுமாக்கும் என்றெல்லாம் கேட்க கூடாது, ஓகே).</FONT><br /><br /><FONT COLOR="#800517">அடுத்த சில வரிகளை மட்டும் உங்களுக்கு பிடித்த நடிகை குரலில் படிக்கவும்.<br /><br />நான் வன்ததே ஒரு விப்த்துதான், ஏன்னா அப்பே என்கு டமில் எழத கூட டெரியாது, அப்த்தான் நம்ம கிரி சார் சொல்ச்சு, ஒன்னும் கவ்லை படாதே, உன்கு நல்ல எதிர் காலம் இர்க்கு, நீ நல்லா கோவாப்ரேட் பண்ணி துநிஞ்சு வல்பதிவு உலகில் கால்டி எத்து வைன்னு, அதான் இன்க்கு நாம் உங்க முன்னாடி பதிவரா நிக்து.<br /><br />அத் மட்ம் நட்கலைனா, அமரிக்காவுல நா பட்ச்சுகிட்டு இருந்த டாக்டர் படிப்பை முடிச்சு, நம்ம <a href="http://kanavukale.blogspot.com" target="new">பழனி சுரேசுக்கு எதிரா "நினைவுகளே"</a> அப்டின்னு கடை போட்டிருக்கும்.</FONT><br /><br />அப்புறம் என்னாங்க, நான் என்ன சினிமா நடிகையா? <br /><br />அட எல்லோரையும் போலவே, வழக்கம் போல கூகிளில் எதையோ தேடும் போது, நம்ம <a href="http://www.giriblog.com" target="new">கிரி எழுதிய பழைய "சிங்கபூர் தை பூசம்"</a> இடுகை கண்ணில் பட, அதை தொடந்து தமிழில் தேட கற்றுக்கொண்டு தேடும் போது <a href="http://yesuvadian.blogspot.com" target="new">என் கனவில் தென்பட்டது நசரேயன் எழுதிய "அமெரிக்காவில் பீர் குடித்த கதை"</a> பட...!<br /><br />எப்படி இவர்கள் தமிழில் எழுதுகிறார்கள் என்ற ஆர்வத்தில் அப்படியே படிச்சு படிச்சு, தட்டி தடவி எதை எதையோ எழுதியாச்சு.<br /><br />ஆனாலும், எழுத வந்த சில மாதங்களிலேயே, நம்ம எழுதுனதையும் மதிச்சு படிச்சு "தமிழ் மணம் 2009" விருதை வாங்கி கொடுத்து ஊக்கப்படுத்திய அத்தனை நண்பர்களுக்கும் இங்கு என் நன்றியை மீண்டும் சொல்ல நான் கடமை பட்டு இருக்கிறேன் <FONT COLOR="#FF5600">(எங்க வச்சேன் பாத்தீங்களா டச்சிங்).</FONT><br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7rzwR9RTVZQTb7u2rt1i-wBMlV2qbxSwZ3IhaGiPamQPUhMhGNlJfS9anFXprwhrRFgqb7wP70i4r1fUGm6NcR0Qxr31Ablpchcrc5SWOGQIqTL1aF81-wabZHq9h3v3nMjdAPt1KOeU/s1600/blogger-1.jpg" target="new"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 202px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7rzwR9RTVZQTb7u2rt1i-wBMlV2qbxSwZ3IhaGiPamQPUhMhGNlJfS9anFXprwhrRFgqb7wP70i4r1fUGm6NcR0Qxr31Ablpchcrc5SWOGQIqTL1aF81-wabZHq9h3v3nMjdAPt1KOeU/s320/blogger-1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5506330366053868226" /></a><br /><br /><FONT COLOR="#FF0000">4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?</FONT> <br /><br />என்னது...! என் வலைப்பதிவு பிரபலமடைந்து விட்டதா...! சொல்லவேவேவேயில்ல...! <br /><br />ஹலோ, என்ன வைச்சு காமிடி கீமிடி பண்ணலையே!<br /><br />அடடே வடை போச்சே? <br /><br />இது தெரியாம நான் ஒரு ஆறேழு தடவை சரக்கடிக்கும் போது கூட, எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, எப்படி என் வலைப்பதிவை பிரபலமடையச் செய்யவது என்று யோசித்து இருக்கேனே? <br /><br />ஆனா! தம்பி, "டீ" இன்னும் வரவில்லை? <br /><br />நல்லாத்தான் எழுதுறோம் அப்புறம் ஏன் "ஹிட்டு, ஓட்டு" ஒன்னும் தேறமாட்டேங்குது? எப்படித்தான் கண்டு பிடிக்கிறதோ!.<br /><br /><FONT COLOR="#FF0000">5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?</FONT><br /><br />இல்லை, காரணம் வலைப்பதிவு என் பொழுது போக்கு மட்டுமே, அது ஒரு போதும் என் சொந்த வாழ்கையை பாதிப்பதை நான் விரும்பவில்லை. <br /><br />ஆம், <a href="http://singakkutti.blogspot.com/2010/08/blog-post.html" target="new">"திருமண உறவுகள் சொந்தமாகவா! பகையாகவா?"</a> என்ற குழப்பத்தை தெளிவு படுத்திக்கொள்ள நினைத்து, மற்றவர்கள் அனுபவத்தை தெரிந்து கொள்ள எழுதினேன். <br /><br />விளைவு; அனைவருக்குமே இப்படிதான் என்று புரிந்து கொண்டு, வீட்டுக்கு வீடு பல் பொடி...சீ...வாசப்படி என்று மன சமாதானம் ஆகி விட்டேன், <br /> <br /><FONT COLOR="#FF0000">6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?</FONT><br /><br />ஏலே யாரப்பத்து நாக்கு மேல பல்ல போட்டு என்ன வார்த்த கேட்டுபுட்ட? <br /><br />ஏ பசுபதி, அந்த கிழக்கால இருக்க தென்ன தோப்பையும், இதோ வடக்க கண்ணுக்கு தெரியுற வரை இருக்க நெல்லு காட்டையும், ஆ அப்படியே உள்ர இருக்க ஆயிரம் பவுனு நகையையும், நம்ம <a href="http://eppoodi.blogspot.com/2010/08/blog-post_17.html" target="new">"எப்பூடிக்கு"</a> எப்படியோ போகட்டும்னு தானமா கொடுல...! <br /><br />நீதில...நேர்மைல...இ பெத்த ராயுடு எந்துக்குல "ப்லாக்குல" சம்பாதிக்கணும், நேனு அத்தனையும் "வைட்ல" சம்பாதிக்கும்ல...!<br /><br />ஹி ஹி ஹி, பொழுது போக்குக்கே ஒன்னும் ஆணி புடுங்க முடியவில்லை, இதுல "சம்பாதிப்பதற்காகவா" என்று கேட்டால் என்னத்தை சொல்வது? <br /><br />எனக்கு அப்படி எந்த எண்ணமும் இல்லை.<br /><br /><FONT COLOR="#FF0000">7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?</FONT> <br /><br />சந்திரமுகி தலைவர் டைலாக்தான் " ஒருத்தனுக்கு எந்திருச்சே நிக்க முடியலையாம், இதுல ஒம்ப்பதெட்டு பொஞ்சாதி கேட்டாதாம்". <br /><br />ஹுக்ஹும், இருக்க ஒன்னுக்கே முடியலயாம், இதுல இன்னொன்னு!, அதுவும் வேற மொழியில வேற தேவையா? <br /><br />ஹேய்ய்ய்...! நான் "ப்லாக்க" சொன்னேன். <br /><br /><FONT COLOR="#FF0000">8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?</FONT> <br /><br />அத வேற ஏங்க நியாபக படுத்துறீங்க? நேத்து கூட சரக்கடிச்சு மனசு ஏங்குச்சு, கோபம், பொறாமைல பொங்குச்சு. <br /><br />அது ஒன்னுமில்லீங்க, நம்ம <a href="http://today24news.com/entertainment/britney-spears-twitter-profile-has-5-million-followers-01426" target="new">"பிரிட்னி ஸ்பியர்ஸ்"</a>- க்கு பின் தொடருபவர்கள் ஐந்து மில்லியனாம்.<br /><br />ஹும், அந்த பொண்ணுக்கு இருக்கது, நமக்கு இல்லாம போச்சேன்னு! பொறாமை மற்றும் கோபம். <br /><br />என்னது எதுவா? ஹலோ நோ பேட் திங்க்கிங்ஸ், நான் "பின் தொடருபவர்களை" சொன்னேன்...! ஓகே.<br /><br /><FONT COLOR="#FF0000">9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..</FONT> <br /><br />முதன் முதலில் பின்னூட்டத்தில் பாராட்டிய மனிதர் <a href="http://govikannan.blogspot.com" target="new">கோ.வி.கண்ணன்</a>, நல்ல மனிதர், அவர் பாராட்டியதில் மகிழ்ச்சி.<br /><br />நம்ம பதிவை படிக்கிற கொடுமை போதாதா? இதுல போன் போட்டு வேற இவனோட பேசனுமான்னு நினைத்தார்களோ என்னவோ? என்னை தொடர்புகொள்ள இது வரை யாரும் என் தொலை பேசி எண்ணை கேட்டதில்லை.<br /><br />ஆனால், துபாயில் இருந்து என் பதிவை விரும்பும் நண்பர் ஒருவர் திருமண அழைப்பு கொடுத்தார்.<br /><br /><FONT COLOR="#FF0000">10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்..</FONT> <br /><br />எம்.ஜி.ஆர் உடல்கட்டு, சிவாஜி கர்ஜனை குரல், ரஜினி ஸ்டைல்+சுருசுருப்பு, கமல் கலர் என்று ஒரு கம்பீரமான சிங்கத்தை, இது வரை படத்தில் பார்த்திருப்பீர்கள்...! டி.வி.யில் பார்த்திருப்பீர்கள்...! சினிமாவில் பார்த்திருப்பீர்கள்...! ஏன், ஜூ-வில் பார்த்திருப்பீர்கள்...! <br /><br />ஆனா, எட்டு டன் எடையில் கம்பீரமாக தெருவில் நடந்து யாராவது பார்த்திருக்கீர்களா...! பார்த்திருக்கீர்களாளா...! பார்த்திருக்கீர்களாளாளாளாளாளா...!<br /><br /><FONT COLOR="#151B8D">ஹலோ! உங்களைப் பற்றி கேட்டால், இப்ப எதுக்கு தேவை இல்லாமல் ஏதேதோ பேசுகிறீர்கள்?</FONT> இதுதானே உங்கள் கேள்வி?<br /><br />இல்லங்க நானும் பாத்ததில்லை, அதான் யாராவது பார்த்திருந்தால்! எங்கேன்னு கேட்டு, ஓடிப்போய் நானும் ஒரு தடவை பார்த்துவிட்டு வரலாம்னு ஒரு ஆசை! ஹி ஹி ஹி!.<br /><br />நான் யாருன்னு எனக்கே இன்னும் சரியா புரியல? இதுல பதிவுலகத்துக்கு தனியா என்னாத்த சொல்வது?<br /><br /><FONT COLOR="#FF0000">இந்த பதிவை தொடர நான் அழைப்பவர்கள்.</FONT><br /><br />நீண்ட நாட்கள் கழித்து திரும்ப வந்திருப்பதால், யார் இந்த தொடர் பதிவை எழுதிவிட்டார்கள், யார் இன்னும் எழுதவில்லை என்று தெரியாது, அதனால்!<br /><br />திருச்சி, திண்டுக்கல், மதுரை,பழனி, பெரியகுளம், தேனி, கம்பம், போடி, நத்தம், காரைக்குடி என்று தென் தமிழ்நாட்டை சேர்ந்த பதிவர்கள் யார் வேண்டுமானாலும் அவர்கள் உள்ளூர் தமிழில் தொடருங்க, நாங்க சந்தோசமா படிக்கிறோம்.<br /><br />உங்கள் அன்புக்கும் நேரத்திற்கும் மிக்க நன்றி!.சிங்கக்குட்டிhttp://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.com37tag:blogger.com,1999:blog-952520241038452238.post-46319983291719537212010-08-16T12:40:00.000+09:002010-08-16T12:41:17.955+09:00தினம் தினம் உடல் நலம்!கடந்த முறை வரை விடுமுறைக்கு செல்லும் போது எல்லாம், பொதுவாக கேள்விப்படும் விசையம் என்பது, அவனுக்கு திருமணம் ஆகிவிட்டது, இவனுக்கும் பெண் பார்த்து நிச்சியம் ஆகி விட்டது, அவளுக்கு வேலை கிடைத்து விட்டது என்றுதான் இருக்கும்.<br /><br />ஆனால் இந்த முறை நடுத்தர வயதிற்குள் நுழைந்து விட்டதால் என்னவோ, கேள்விப்பட்ட அனைத்தும் இப்படித்தான் இருந்தது.<br /><br />இல்ல மாப்ஸ், எனக்கு சர்க்கரை இருக்கிறது, அதுவா, அவனுக்கு நீரழிவு, இவனுக்கு ரத்த கொதிப்பு என்றும், அதிக பட்சமாக அவன் மாரடைப்பில் இறந்து விட்டான், இவன் குடிபோதையில் விழுந்து இறந்து விட்டான் என்பதுதான்.<br /><br />இதில் வேதனை என்னவென்றால், இவை அனைத்தும் முப்பது முதல் முப்பதைந்து என்று நாற்பதை தொடாத நண்பர்கள் வட்டம்தான்.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-bIeXF_KDibgVF5nYLsFQxnos7MBFuEfos6WMwuLQ7ydb8wPh0Vpvoi0ig6eMRgnyyfRbfU2NLX6wyTbojEmDAlwr955D9xo16ni1SyJyPx81b098QTm1wDpkOAUJwoDMJOUpEdU71QE/s1600/HL-1.jpg" target="new"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 207px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-bIeXF_KDibgVF5nYLsFQxnos7MBFuEfos6WMwuLQ7ydb8wPh0Vpvoi0ig6eMRgnyyfRbfU2NLX6wyTbojEmDAlwr955D9xo16ni1SyJyPx81b098QTm1wDpkOAUJwoDMJOUpEdU71QE/s320/HL-1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5505580625741295794" /></a><br /><br />ஏன் இப்படி? என்று ஊரில் இருந்த இருபது நாளும் அவர்கள் வாழ்க்கை முறையை உடன் இருந்து பார்த்ததில் கிடைத்தது இதுதான்.<br /><br />அளவுக்கு அதிகமான குடி, கட்டுப்பாடில்லாத உணவு முறை, உடற்பயிற்சி எதுவுமே இல்லாத சொகுசு வாழ்கை என்று இதுதான் அடிப்படை காரணமாக தெரிகிறது.<br /><br />பதினைந்து வருடங்களுக்கு முன் கல்லூரி மாணவனாக இருந்ததை விட இப்போது ஆட்டம் அதிகமாக இருக்கிறதே தவிர எதுவுமே குறையவில்லை.<br /><br />புகை கூட பிடிக்காத என் நண்பன் ஒருவன் வைத்தவாய் எடுக்காமல் அரை பாட்டில் பிராந்தியை குடிப்பதை கண்டு உண்மையில் நான் அதிர்ந்து விட்டேன்.<br /><br />நான் ஒன்றும் வாழ்கையை அனுபவிக்க வேண்டாம் என்றோ , மது மாமிசம் இல்லாமல் சாமியாரை போல் இருக்க வேண்டும் என்றோ சொல்ல வரவில்லை.<br /><br />ஆனால் அற்புதமான இந்த மனித வாழ்கையை வெறும் சிற்றின்பத்தில் குறுகிய காலத்தில் பறிகொடுக்க வேண்டுமா? என்பதுதான் இங்கு என் கேள்வி.<br /><br />அதே போல் இதற்காக நாம் ஒன்றும் தனியாக உடற்பயிற்சி நிலையம் சென்று கட்டுடல் கொண்டு வரவேண்டும் என்றில்லை.<br /><br />வயதிற்கு தக்க நம் அன்றாட வாழ்கை முறையை சிறிது மாற்றி அமைத்தாலே போதுமானது.<br /><br />நண்பர்களே, இளமை வாழ்கையை சந்தோசமாக அனுபவிக்க நம் உணர்ச்சிகள் எவ்வளவு சூடாக இருக்க வேண்டுமோ, அதே அளவு நம் உடல் குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதை நாம் ஒரு போதும் மறந்து விடக்கூடாது.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEijA04UUSf68dfSooePDoBSlzuWBrn1HsWoaF5zjI5j4KlkTEeLLXj1iPQrePUKBurBm5R7v3oyQxtu5PsXd6ghZYAVMwRTm2vJN7USHEb1No9qsjtSVlvlGyaSI9BHG2MQyIzeM7fb_L0/s1600/HL-3.gif" target="new"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 279px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEijA04UUSf68dfSooePDoBSlzuWBrn1HsWoaF5zjI5j4KlkTEeLLXj1iPQrePUKBurBm5R7v3oyQxtu5PsXd6ghZYAVMwRTm2vJN7USHEb1No9qsjtSVlvlGyaSI9BHG2MQyIzeM7fb_L0/s320/HL-3.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5505581761737510466" /></a><br /><br />சரி இதற்கும் நம் அன்றாட வாழ்கை முறைக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்டு விட முடியாது!, நாமும் அதிகமாக ஒன்றும் செய்ய தேவை இல்லை.<br /><br />குடிப்பது புகைப்பது அவரவர் விருப்பம், ஆனால் அதை அளவே வைத்துக்கொள்வது மிக மிக முக்கியம்.<br /><br />எல்லா சிறு சிறு வேலைகளுக்கும் பைக், கார் என்று இல்லாமல், ஒரு நாளைக்கு குறைந்தது முப்பது நிமிடம் நடக்கலாமே அல்லது சைக்கிளை பயன் படுத்தலாமே? <br /><br />இதில் ஒன்றும் அந்தஸ்த்தோ அவமானமோ இல்லை.<br /><br />அல்லது குழந்தைகளுடன் ஒரு முப்பது நிமிடம் ஓடியாடி விளையாடலாமே.<br /><br />அவசர தேவை இல்லாத இடங்களில் லிப்ட்டை தவிர்த்து படிக்கட்டுகளை பயன் படுத்துவதும் உடலுக்கு மிக நன்மைதான்.<br /><br />உணவு முறையில், கலையில் பால் பழச்சாறு என்றும் மற்ற இரண்டு வேலை அதிக கீரை வகைகள், காய் கறிகளுடன் கூடிய அரை வயிறு உணவு மற்றும் கால் வயிறு தண்ணீர் என்று அளவாக பார்த்துக்கொண்டாலே போதுமானது. <br /><br />எப்போதாவது மாமிசம் உண்பதில் தவறில்லை, ஆனால் எப்போதும் கண்ட கொழுப்பு சத்து கொண்ட உணவுகளை அளவில்லாமல் எடுத்துக்கொள்வது கண்டிப்பாக உடல் நிலையை மோசமடைய செய்யும்.<br /><br />இதை தவிர தினம் வயதிற்கு தக்க தியானம் (முப்பது வயது என்றால் முப்பது நிமிடம்) என்பது மன அழுத்தத்தை குறைக்க ஒரு சிறந்த வழியாகிறது.<br /><br />தியானம் என்றவுடன் நான் கடவுள் படத்தில் வருவது போல தலைகீழாக நிற்கவோ அல்லது தியான நிலையம் சென்று தனியாக பணம் கட்டி படிக்கவோ வேண்டும் என்று தவறாக நினைக்க வேண்டாம்.<br /><br />வீட்டிலோ பூஜை அறையிலோ உங்களுக்கு விருப்பப்பட்ட ஒரு இடத்தில் அமர்ந்து, கண்களை மூடி வேறு எதையும் பற்றி நினைக்காமல் (முதலில் கொஞ்சம் கடினம்தான், ஆனால் தொடாந்து முயற்சி செய்யும் போது சாத்தியமாகி விடும்) வெறும் மூச்சை மட்டும் நிதானமாக விட்டால் போதும்.<br /><br />வெறும் மூச்சு விடுவதில் எப்படி மனஅழுத்தம் குறையும் என்று நினைக்க வேண்டாம், தியானத்தின் அடிப்படை சாவியே இதுதான்.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiIvWYmvtbWjCMS9rRj9adGgWjXQKMpMqLPWSqZrJSw_DQ47cGZ0UanoP-OH1jFlQKKE7YmgFsIkgzdAXrRqfjBPw8QU-ImUbhu4RMNPNknxjXUOTl450ooqsnuOzZppmqRPquZ5kp32Dk/s1600/HL-2.jpg" target="new"><img style="float:left; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 200px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiIvWYmvtbWjCMS9rRj9adGgWjXQKMpMqLPWSqZrJSw_DQ47cGZ0UanoP-OH1jFlQKKE7YmgFsIkgzdAXrRqfjBPw8QU-ImUbhu4RMNPNknxjXUOTl450ooqsnuOzZppmqRPquZ5kp32Dk/s320/HL-2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5505580912986811474" /></a><br /><br />அடுத்து பண மற்றும் வெளி பிரச்னைகளை வீட்டில் காட்டாமல் முடிந்த வரை அனைவரிடமும் அமைதியாகவும் அன்பாகவும் இருந்தாலே போதும்.<br /><br />இந்த சூழ்நிலையில் வாழ்கை துணையின் அன்பும் அரவணைப்பும் நல்ல தாம்பத்தியமும் இதை எளிதில் சாத்தியமாகி விடும் என்பதும் மறுக்க முடியாத உண்மை.<br /><br />இது முதலில் சிறிது கடினமாக இருந்தாலும், நாளைடைவில் நல்ல பலனை தரும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.<br /><br />இப்படி நமக்கு நாமே அன்றாடம் எளிதாக செய்யக்கூடிய வேலைகளை செய்து மனதை கட்டு படுத்தினாலே ஆரோக்கியம் என்பது தானாக வரும். <br /><br />ஆக, வாழ்கையை அனுபவிப்பதாக நினைத்து அழித்து கொள்ளாமல், நல்ல முறையில் வாழ்கையை அனுபவிக்கவாது நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்று நினைத்து தினம் வாழ்ந்தால், தினம் தினம் உடல் நலம் தான் நண்பர்களே.<br /><br />உங்கள் நேரத்திற்கு நன்றி!, மீண்டும் சந்திப்போம்.சிங்கக்குட்டிhttp://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-952520241038452238.post-61345500757588477792010-08-10T20:48:00.003+09:002010-08-11T00:21:57.576+09:00திருமண உறவுகள் சொந்தமாகவா! பகையாகவா?என்னடா பொல்லாத வாழ்க்கை...! என்னடா பொல்லாத வாழ்க்கை...! <br /><br />யாரையும் நம்பி நம்மை பெற்றாளா அம்மா?, அட போகும் இடம் ஒன்னுதானே பொறுங்கடா சும்மா...!<br /><br />இதுக்கு போயி அலட்டிக்கலாமா...! அட இதுக்கு போயி அலட்டிக்கலாமா...!<br /><br />வணக்கம் நண்பர்களே, என்ன பாட்டு பலமாக இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?விசையம் இருக்கிறது.<br /><br />என் இந்திய பயணம் எப்போதையும் விட இந்த முறை பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் மொத்தத்தில் ஒரு மசாலா படம் பார்த்தது போல மிக அருமையாக இருந்தது.<br /><br />சாதாரணமாக விடுமுறை முழுவதும் நண்பர்களுடன் என் வீட்டை சுற்றியே இருக்கும் நான், இந்த முறை சென்னை, திருவண்ணாமலை, சதுரகிரி, சிங்கை என்று நேரமே கிடைக்காமல் சுற்றி கருகருத்து திரும்பி இருக்கிறேன்.<br /><br />தமிழ்நாட்டில் பல வருடங்களாக நடந்து கொண்டிருந்த ஆறு வழி நெடுஞ்சாலை வேலைகள் முடிந்து, இரவில் கூட பளபளவென்று முதலிரவில் நகையோடு ஜொலிக்கும் புது பெண் போல வழு வழுவென்று இருக்கிறது.<br /> <br />இத்தனை செய்தும் எப்போதும் பறந்து கொண்டிருக்கும் தூசியை மட்டும் தண்ணீர் அடித்து கழுவாமல் வைத்திருப்பதன் அர்த்தம் புரியவில்லை.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjC8HgZ8yLNfCPMh0uXRhuSFKKaQGmNwYrNQIFP3YcFynC_HoMGoWaTEiyqPD-fEBoP0QbldWrQNeaVbcw3rH5EJ7kT3UuZ6K18IwysaXF4yCPdHIDUBveNHMzNUYcBVgJEOFSIAXwjrFw/s1600/Alone1.jpg" target="new"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjC8HgZ8yLNfCPMh0uXRhuSFKKaQGmNwYrNQIFP3YcFynC_HoMGoWaTEiyqPD-fEBoP0QbldWrQNeaVbcw3rH5EJ7kT3UuZ6K18IwysaXF4yCPdHIDUBveNHMzNUYcBVgJEOFSIAXwjrFw/s320/Alone1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5503724016663431058" /></a><br /> <br />கார் கண்ணாடி ஏற்றி விடாமல் போக முடியாது, கண்ணாடி ஏற்றினாலும் ஏற்றாவிட்டாலும் ஏசி இல்லாமல் போக முடியாது என்பது போல சூடாகவே இருக்கிறது. <br /><br />வோடா போன் போல மொபைல் நிறுவனங்கள் வழக்கம் போல, இலவச சேவையில் கேட்கும் கேள்விக்கு அவசரமாக சம்மந்ததா சம்மந்தமில்லாமல் ஏதாவது பேசி (உளறி), இந்த நாள் இனிய நாளாகட்டும்.<br /><br />உங்களுக்கு வேண்டிய தகவலை அறிய, நிமிடத்திற்கு முப்பது பைசா செலவாகும் இந்த எண்ணுக்கு அழைக்கவும் என்று வேறு எண்ணுக்கு திருப்பிவிட்டு, அங்கு நிதானமாக பேசி கல்லா கட்டுகிறார்கள். <br /><br />மற்ற படி முன்பு அரசியல் கட்டவுட்டுகள் போல, இப்போது அவர்கள் வாரிசுகள் தயாரிப்பாளர்கள் போர்வையில் எல்லா சினிமா போஸ்டரிலும் கதாநாயகனை விட பெரிதாக நிற்கிறார்கள்.<br /> <br />ஒரே ஆறுதலான விசையம், மக்களின் ஆடம்பர பண புழக்கம் விலைவாசியை போலவே நிறையவே மாறி இருக்கிறது (போகும் இடமெல்லாம் தேங்காய் விலை கேட்கும் பயணங்கள் முடிவதில்லை கவுண்டமணியை போலத்தான் என்னை பார்த்தார்கள் என்பது வேறு விசையம்).<br /> <br />இவ்வாறாக நான் எழுத சென்ற தேர்வு வேலைகளும் இனிதாக முடிந்தததில் சென்ற வேலை முடிந்த திருப்தி எனக்கு.<br /> <br />இனி மேட்டருக்கு வருவோம், முன்பே இதை பற்றி கொஞ்சம் எழுதி இருந்தாலும்,மனதில் உறுத்துவதை தெளிவாக எழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன், அதை நானே இந்த முறை அனுபவப்பட்டு உணர்ந்து விட்டேன். <br /><br />எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் தனியாகவே வளர்ந்தவன் நான், சொந்தங்களும் அதிகமாக இல்லை, நானும் சொந்த ஊரில் அதிகமாக இல்லை.<br /> <br />எப்போதும் நண்பர்களுடன் கலகலப்பாக பொழுதை போக்கி, எதையும் விளையாட்டாகவும், தைரியமாகவும் செய்தே எங்கள் நாட்கள் ஓடின. <br /><br />ஆனாலும், நிறைய சொந்தம் மற்றும் அவர்கள் உறவுகள், திருவிழா என்று இருக்க முடியவில்லையே என்று ஒரு தனிமை எப்போதும் அடி மனதை பிசையும். <br /><br />அந்த வலி முகத்தில் தெரியாமல் உடன் இருந்த நண்பர்கள் நட்பில் ஓடிய நாட்கள் வருடங்களாக மாற இடையில் நண்பர்களும் வெவ்வேறு நாடுகளுக்கு பிரியும் படி அமைந்து விட்டது. <br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhmdN29mBWQK33ZRUADpQaZxrICBIyU-81y7-rObTuYLde-C3smlwTCgy3vwEe_cAwmE7yE2JzCug37Msk_uUetu2s4W3-jo6XZdaL-oLZ7IL0ZsBp2VtjGzA6OqOGD0bycsaZEHDZOWMg/s1600/alone.jpg" target="new"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 194px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhmdN29mBWQK33ZRUADpQaZxrICBIyU-81y7-rObTuYLde-C3smlwTCgy3vwEe_cAwmE7yE2JzCug37Msk_uUetu2s4W3-jo6XZdaL-oLZ7IL0ZsBp2VtjGzA6OqOGD0bycsaZEHDZOWMg/s320/alone.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5503724756988029410" /></a><br /><br />எப்போதும் உடன் இருந்த நண்பர்களும் இல்லாமல் வெளிநாட்டில் சுத்தமாக தனிமை பட, அந்த கொடுமையை சில வருடம் அனுபவிக்கும் படியாகி விட்டது.<br /><br />நண்பர்களுக்கு திருமணமாக, அவர்களையும் நினைத்த நேரத்தில் அழைத்து தொல்லை பண்ண முடியாது.<br /><br />சரி, நம் திருமணத்திற்கு பிறகு எல்லாம் சரியாகி விடும் என்று பார்த்தால், சொந்தங்களோடு இருந்த பெண்ணை நம் துணைக்கு கொண்டு வந்து தனிமை படுத்தியதை போல் ஆகிவிட்டது. <br /><br />இப்படி ஒருவருக்கொருவர் தனிமை கொடுமையை பகிர்ந்து, இதோ வந்து விட்டது விடுமுறை, அதோ வந்து விட்டது விடுமுறை! என்று மாதத்தை, வாரத்தை, நாட்களை எண்ணி சொந்த மண்ணுக்கு சென்றால்! அங்கேயோ நிலைமை இன்னும் தலைகீழாக இருக்கிறது.<br /> <br />அனைவருக்கும் அவரவர் சொந்த குடும்ப வேலைக்கு மட்டும்தான் நேரம்(மனம்) இருக்கும் போல? <br /><br />நண்பர்களுக்கு சரி, ஆனால், நெருங்கிய சொந்தங்களும் வெறும் கண் துடைப்புக்கு என்று நடந்து கொள்ளும் போது, மனம் தனிமையில் வலித்ததை விட கொஞ்சம் அதிகமாகவே வலித்தது. <br /><br />நேற்று வரை நம்மை சுற்றி சுற்றி வந்த சிறுசுகள் கூட, இன்று துணை கிடைத்ததும் சொந்தத்தை மறந்துவிடுவது எனக்கு மிக ஆச்சிரியமாகவே இருக்கிறது. <br /><br />அட, நேரில் வந்து கூட பார்க்க வேண்டாம், ஒரு இருபது பைசா செலவில் ஒரு போன் பண்ணக்கூட யாருக்கும் மனமில்லாமல் போனது என்னை கொஞ்சம் அதிகமாகவே பாதித்துவிட்டது. <br /><br />அதெல்லாம் சரி, நீ தனியாக இருந்து வருடங்கள் கழித்து வந்திருப்பதால், அனைவரும் உன்னை தேடி வர வேண்டும் என்று நினைப்பது எந்த விதத்தில் நியாயம்? என்று என்னை நானே சொந்த செலவில் மனதை சமாதன படுத்திகொள்ள...! <br /><br />அவர்கள் அழைக்காவிட்டால் என்ன? நீ அவர்களையும் சேர்த்து அழைத்து விருந்து கொடு அதுதான் "இன்னார் செய்தாரை உறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்" என்று உள்ளே சென்ற "ஜிம்பீம்" வேதாந்தம் சொல்ல, அதையும் ஒரு வார இறுதி ஞாயிறு தினத்தில் செய்து பார்க்கப்போய்!<br /><br />அது என்னவோ என் சொந்த செலவில் எனக்கே சூன்யம் வைத்துக்கொண்டது போல் இருந்தது. <br /><br />வெளிநாட்டில் தங்கள் வேலை தேவைக்கு என்னை நாடிய சொந்தங்கள் முதல் மற்றபடி அழைத்தவர்கள் அனைவரும் வராவிட்டால் கூட மனம் சமாதானம் ஆகியிருக்கும். <br /><br />என்ன பகையானாலும் கட்டாயம் முறைக்கு வரவேண்டிய சொந்தங்கள் கூட, எந்த பகையும் இல்லாதபோதும் வர நேரமில்லாமல் (மனமில்லாமல்) போனதை பார்த்தவுடன், சாமி இறங்கியதை போல மனம் கன்னா பின்னவென்று வயது வித்தியாசம் பார்க்காமல் அங்கேயே ஆடி தீர்த்து விட்டது.<br /><br />சும்மாவே நீ சாமியாடுவே, இதுல உடுக்கை அடிச்சு வேப்பிலைய வேற கைல கொடுத்துட்டானுக, இனி அடக்கவா முடியும்! விட்டுருங்க அதுவா மலை ஏறினாத்தான் ஆச்சு! என்று சொல்லி நண்பன் சிரிக்க...! <br /><br />இன்னொருவனோ, எந்த நாட்ல இருந்து வந்தா என்னா? என்னடா நம்ம கல்யாண, காதுகுத்து கலாச்சாரப்படி குடும்ப விழாவுல எதோ ஒன்னு குறையுதேன்னு பார்த்தேன், அது திருப்தியா முடிஞ்சுருச்சு மாப்ஸ்!, இப்பதான் நமக்கு சாப்பாடு உள்ள இறங்கும் என்றான். <br /><br />என்ன நடந்து என்ன? என் மன தவிப்பு மட்டும் அடங்கவேயில்லை. <br /><br />நாம் எதோ இந்தியாவில் பாடு பட்டு சேர்த்த சொத்தை எல்லாம் வெளிநாட்டில் இருந்து கொள்ளையடிக்க வந்திருப்பதை போல, சொந்த உறவுகளே நடந்து கொண்டது எனக்கு அவமானமாகவே பட்டது. <br /><br />என்ன கொடுமை இது? இவர்களையா காத்திருந்து தேடிவந்து பார்க்க நினைத்தோம்! என்று என்னை நானே கேவலமாக பார்க்கும் படி இருந்தது. <br /><br />இப்படி தேடி வந்து மனம் காயப்படுவதை விட, முகம் தெரியாத மக்கள் வசிக்கும் நாட்டில் தனியாக இருப்பது எவ்வளவோ மேல் என்று அடி மனதில் இன்னும் ஆழமாக பதிந்துவிட்டது.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjdGYnFGHLRUnyfEIvsBz8rleY2tyb61kcaeljyMnTbh9pCn2ont63lXjirhMxY3iwoaUjfg9pnR5_FNXYLsFJYWM2J5Wcp7wix2FTHPs3W1SUqMvmLxZT8oV7atGlzTCrTyLkK2cQg_J8/s1600/Alone2.jpg" target="new"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 213px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjdGYnFGHLRUnyfEIvsBz8rleY2tyb61kcaeljyMnTbh9pCn2ont63lXjirhMxY3iwoaUjfg9pnR5_FNXYLsFJYWM2J5Wcp7wix2FTHPs3W1SUqMvmLxZT8oV7atGlzTCrTyLkK2cQg_J8/s320/Alone2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5503725179432629218" /></a> <br /><br />இத்தனை நடந்தும், குடும்ப அரசியல் புரியாத குழந்தையாய் தங்கமணி, இன்னும் சில மாதம் அங்கேயே இருக்க விரும்பி இருப்பது எனக்கு இன்னும் ஆச்சரியமாகவே இருக்கிறது! பின் புத்தி பெண் மனதில் என்னவென்று யாருக்கு தெரியும்?. <br /><br />பெரிய பெரிய அலுவலக பிரச்னையை மற்றும் கூட்டு அரசியலை கூட சர்வ சாதாரணமாக எதிர்கொள்ளும் எனக்கு, திருமணதிற்கு பிறகு இந்த குட்டி குட்டி சொந்தபந்த குடும்ப அரசியல் மட்டும் ஏனோ புரியவே இல்லை? புரிந்து கொள்ளவும் விரும்பவில்லை. <br /><br />என்னதான் உள்ளுக்குள்ளேயே உள்ள சொந்தகளோடு மட்டும் பழகிய மக்களாயினும், வெளியில் இருந்து வந்த ஒருவரிடம் பழகாமலேயே, அவர் நல்லவரா கெட்டவரா! என்று மக்களால் எப்படி முடிவடுக்க முடிகிறது? அல்லது இப்படி நடந்து கொள்ளும் சொந்தங்களின் நோக்கம் தான் என்ன? <br /><br />சொந்த குடும்ப உறவுகளுக்குள் கூட இப்படி உட்பூசல், பகை, ஈகோ தேவையா? <br /><br />எது எப்படியோ, தாமரை இதழில் விழுந்த நீர் துளி போல, நான் நானாகவே இருக்கிறேன், ஆனால் அது சில நேரங்களில் சிலருக்கு என்னை தவறாக நிறம் காட்டி விடுகிறது,காரணம் அது பார்ப்பவரின் கோணத்தை பொறுத்து மாறுபடுகிறது.<br /><br />அதனால் இதில் எல்லாம் நான் அதிக ஆர்வம் காட்ட விரும்பாமல் விடுமுறை முடிந்து திரும்பிவிட்டேன்.<br /><br />இது உங்களுக்கு மொக்கையா, இல்லை திருமணமாகி போகும் குறிப்பாக வெளிநாட்டில் இருந்து போகும் அனைவருக்கும், பொதுவான பிரச்சனையா (சப்ப மேட்டரா) என்று எனக்கு தெரியவில்லை. <br /><br />புரிந்தவர்கள் மற்றும் அனுபவப்பட்டவர்கள் அல்லது இது சார்பாக இடுகை இருப்பின் பின்னூட்டத்தில் சொல்லவும். <br /><br />இப்போது புரியுமே முதல் வரியின் அர்த்தம்...! <br /><br />அட, இதுக்கு போயி அலட்டிக்கலாமா...! என்னடா பொல்லாத வாழ்க்கை...! <br /><br />யாரையும் நம்பி நம்மை பெற்றாளா அம்மா?, அட போகும் இடம் ஒன்னுதானே பொறுங்கடா சும்மா...! இதுக்கு போயி அலட்டிக்கலாமா...!சிங்கக்குட்டிhttp://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.com21