இன்று மதியம் வழக்கம் போல் என் ஜன்னலுக்கு வெளியில் கண்ணை கழுவிக்கொண்டு இருக்கும் போது, அடுத்த கட்டிடத்தை சுத்தம் செய்வதை பார்த்தேன்.
பல முறை, பல இடங்களில், கட்டிடம் சுத்தம் செய்வதை பார்த்து இருந்தாலும், தென்கொரியாவில் மிக வித்தியாசமாக இருப்பதை பார்த்தேன்.
ஒரு பாதுகாப்பு கயிறு கூட இல்லாமல், அவர்கள் அசாத்தியமாக இந்த வேலையை செய்கிறார்கள். வேலைக்கு நடுவில் ஒருவர் தன் செல்போனில் பேசியது என்னை வியப்பின் உச்சிக்கு கொண்டு சென்றது.
அவர்கள் அந்த வேலையை முடித்துவிட்டு வீட்டிக்கு போகும் முன், அது இங்கு உங்கள் பார்வைக்கு.
தென்கொரியா கட்டிட துப்புரவு வீடியோ
மேல் உள்ள வீடியோவை பார்க்க முடியாதவர்கள், இங்கு சொடுக்கி யு-டியூபில் பார்க்கவும்.
தென்கொரியா கட்டிட துப்புரவு படங்கள்
அசாதரணமாக அந்த கட்டிட உச்சியில், மூவர் வந்து கயிற்றை கட்டினார்கள்.
பலகையை தூக்கி வெளியில் போட்டார்கள்.
ஈர தரையில் கூட நாம் நடக்க யோசிப்போம், ஆனால் அவர்கள் யோசிக்காமல் தண்ணீரை "கண்ணாடி சுவர்" முழுவதும் அடித்தார்கள்.
இடுப்பில் ஒரு பாதுகாப்பு கயிறு கூட இல்லாமல், அசாதரணமாக ஒருவர்
வெளியில் குதித்தார்.
அவர் பலகையில் உக்காரும் வரை வெளியில் இருந்து பார்த்த இன்னொருவரும் குதித்தார்.
இருவரும் பலகையில் அமர்ந்த படி, தங்கள் கயிற்றை தாங்களாகவே இறக்கி கழுவ ஆரமித்தார்கள்.
மூன்றாம் நபர் பக்க வாட்டில் வந்து பின்னால் இவர்களுடன் சேர்ந்து கொண்டார்.
கட்டிடத்தின் உயரத்தை பாருங்கள்.
எவ்வளவு சாதாரணமாக வேலை நடக்கிறது பாருங்கள்.
அவர்கள் கீழே வந்ததும், போய் கையை கொடுத்து விட்டு, வீட்டிற்கு போனவுடன் என் இணையதளத்தை பாருங்கள் என்று சொல்லிவிட்டு (சும்மா ஒரு விளம்பரம்) வந்தேன்.
அப்போது தான் புரிந்து கொண்டேன், இவர்கள் சாதாரண கட்டிட பணியாளர்கள் மட்டுமே (நம்ம சித்தாள் மாதிரி).
இவர்களே இப்படி என்றால், தென்கொரியாவின் தீயணைப்பு படை, ராணுவம், கமாண்டோக்கள் பற்றி நான் சொல்லவா வேண்டும்.
என்ன, பதிவ படிச்சாச்சுல, இன்னைக்கு லீவுதான? சும்மா இணையத்துல கண்ண கழுவாம, போய் வீட்ட கழுவுங்க.
மீண்டும் சந்திப்போம், நன்றி.