Thursday, November 25, 2010

தென்கொரியா போர் பதட்டம்!

எப்போதும் போலத்தான் அன்று மதியமும் இலையுதிர் கால குளிரில் நடுங்காமல் இருக்க அலுவலக ஹீட்டர் எங்களை சூடேற்றிக்கொண்டு இருக்க, மதிய உணவாக உள்ளே சென்ற கோழியும் சிலபல இலைதழைகளும் எங்கள் கண்களை சொருக வைத்துக்கொண்டு இருந்தாலும், நாங்கள் அலுவலக கணினியை வெறித்துக்கொண்டு இருந்தோம்.

திடீரென்று ஒரு பலத்த சத்தம் கட்டடங்கள் ஆடுவதை போல உணர்வு, எங்கும் ஒரே தீ மற்றும் புகை, மக்கள் பதட்டமாக வட கொரியா குண்டு போடுகிறது ஓடி பதுங்குங்கள் என்று கத்தியபடி பதுங்கு குழியை தேடி இங்கும் அங்கும் ஓடும் ஒரு சில நிமிடங்களில் இன்னும் பல குண்டுகள் வந்து விழுகின்றன.

இந்நிலையில் உள்ளே நுழைந்த தென் கொரிய ராணுவ ஹெலிகாப்டர்கள் பதிலுக்கு தாக்க எங்கும் ஒரே குண்டு மழை...!

எனக்கும் வேறு வழி எதுவும் தெரியவில்லை, உடனே குடையை விரித்துக்கொண்டு எடுத்தேன் பாருங்க ஓட்டம்...!

என்ன புரியலையா?

அதான் ஒரே குண்டு "மழைன்னு" சொன்னோம்ல :-)...!

சரி, சரி முறைக்க வேண்டாம், வெட்டி பில்டப்பை முடிந்து கொண்டு விசையத்துக்கு வருவோம்.


கடந்த சில நாட்களாகவே இது போல் ஏதாவது நடக்கக்கூடும் என்று எதிர் பார்த்த தென்கொரிய அரசு மிக சரியாக பாதுகாப்பு முறைகளை தயார் நிலையில் வைத்திருந்தது, போர் கால அவசர நடவடிக்கைகள், பொது மக்கள் தற்பாதுகாப்பு முறைகள் போன்றவை எஸ்.எம்.எஸ் மூலம் அவப்போது வந்த வண்ணம் இருந்தது.

உலக நாடுகள் குறிப்பாக ஜப்பான், ரஷ்யா மற்றும் அமெரிக்கா மிக உன்னிப்பாக இந்த விசையத்தை நேரடியாக கண்காணிப்பதால் அப்படி எதுவும் நடக்காது என்று இருந்த மதிய வேலை, வடகொரியா தன் சேட்டையை துணிந்து காட்டிவிட்டது.

தென்கொரியாவின் இயாங்பியாங் தீவில் ஐம்பது முறை F-16 பீரங்கி குண்டுகளை வீசி திடீர் தக்குதல் நடத்த, அந்த தீவில் இருந்த தென்கொரியாவின் ராணுவ தரப்பில் இருந்து எம்பது ரவுண்டு துப்பாக்கி சூடு தற்காப்புக்காக நடத்த பட்டது.

அதன் பின் இரு நாடுகளும் முதலில் தாக்குதலை தாங்கள் துவக்கவில்லை என்று அறிவித்து இருக்கிறது.



வடகொரியா தென்கொரியா எல்லையை நிலத்திலும் நீரிலும் (DMZ) பிரித்தது முதல் இருநாடுகளுக்கும் பிரச்னை இருந்து கொண்டுதான் இருக்கிறது, இந்த நிலையில் இந்த தக்குதல் போர் வரும் சூழ்நிலையை கொடுத்திருப்பதால், சீனா, ரஷ்யா, ஜப்பான் நாடுகள் இந்த பதட்டத்தைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன, அமெரிக்கா தென்கொரியாவுக்கு ஆதரவாகப் போராடும் என்று அறிவித்து இருக்கிறது.

தென்கொரியா அரசு தரப்பில் இருந்து வடகொரியா தன் செயலை உடனடியாக நிறுத்திக் கொள்ளா விட்டால் மிக மோசமான ஒரு சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டி வரும் என்று எச்சரித்து இருக்கிறது.

எனக்கு புரிந்தவரை, உண்மையில் வடகொரியாவின் இந்த தாக்குதலில் அடிப்படை காரணம் என்பது, இந்த தக்குதல் நடந்த தீவில் இருக்கும் தென்கொரிய ராணுவமும் அமெரிக்கா ராணுவமும் கூட்டுப் பயிற்சி மேற்கொள்ளும் திட்டதின் படி அமெரிக்கா விமானம்தாங்கி போர்க்கப்பல் இங்கு வந்துள்ளது, இதற்கான எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் வடகொரியா செயல் பட்டு இருக்கிறது, காரணம் வடகொரியா மீது அமெரிக்கா பல பொருளாதாரத் தடைகளை விதித்தது இருக்கிறது.



மேலும் கடந்த மார்ச் மாதம் தென்கொரியாவின் போர்க் கப்பல் ஒன்று, வடகொரிய கடல் எல்லைக்கருகில் மர்மமான முறையில் மூழ்கடிக்கப்பட்டு அந்த கப்பலில் இருந்த 49 வீரர்களும் பலியானார்கள். இது வடகொரியாவின் செயல் என்றும் நீர்மூழ்கி குண்டு மூலம் தன் கப்பலை வடகொரியா மூழ்கடித்ததாக தென்கொரிய விசாரணைக் குழு அறிக்கை கடந்த மே மாதம் வடகொரியாவை குற்றம் சாட்டியது போன்றவைதான் காரணம்.

தக்குதல் நடந்த தீவில் வசிக்கும் மக்களோடு தென்கொரியவின் ராணுவ முகாம் இருக்கிறது, குண்டு வீச்சுக்குப் பின் பொது மக்கள் உடனடியாக ராணுவ பாதுகாப்பு கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டனர், காயம் பட்ட மக்கள் சிகிச்சைக்காக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர் மற்றும் தீவில் இருபவர்களுக்கு தேவையான பொருட்கள் தீவுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது.

தென் கொரியாவின் இரண்டு வீரர்கள் இந்த தாக்குதலில் தங்கள் தாய் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்து வீர மரணம் அடைந்து இருக்கிறார்கள், அவர்களுக்கு நாடெங்கும் அஞ்சலி செலுத்த படுகிறது.

தாக்குதலில் பதிப்படைந்த பகுதியில் ராணுவம், தீயணைப்பு மற்றும் மருத்துவ குழுக்கள் போர்கால சீரமைப்பு நடவடிக்கைகளில் இறங்கி இருக்கின்றன.

தென்கொரிய மக்கள் நாம் இதற்கு சரியான பதிலடி கொடுத்து வடகொரியாவுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்று அங்கங்கே வடகொரியாவுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள், நேற்று இரவுக்கு மேல் சம்பந்த பட்ட துறைகளை தவிர மற்ற இடங்களில் இயல்பு வாழ்கை பாதிக்காமல் தொடர்கிறது.

























இது போராக மாறும் பட்சத்தில் உடனடியாக பாதிக்க படும் ஜப்பான், ரஷ்யா மற்றும் சீனா நாடுகள் இப்படி துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையை தவிர்த்து இருநாடுகளும் பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்னையைத் தீர்த்துக் கொள்ளவேண்டும் என கூறியுள்ளன.

இரு நாடுகளின் போக்கையும் உன்னிப்பாகக் கவனித்து வரும் அரசியல் நிபுணர்கள், வடகொரியாவின் அணுகுண்டு தயாரிப்பில் தீவிரம் மற்றும் அரசியல் தலைமை மாற்ற அறிவிப்பு போன்றவற்றால் இப்பிரச்னை இன்னும் தீவிரமடையக் கூடும் என்று கருதுகின்றனர்.





நடப்பதெல்லாம் நன்மைக்கே மற்றும் எல்லா புகழும் இறைவனுக்கே என்ற எண்ணத்தோடு நானும் கவலைகளை விட்டு விட்டு இதை பற்றி பதிவு எழுத வந்து விட்டேன், இதில் என் அனுபவத்தையும் கொஞ்சம் கேளுங்க.

போர் தக்குதல் விசையம் பரவியதும், நம்ம போன் ரொம்ப பிசி, இந்தியா, சிங்கபூர், மலேசியா என்று கோபால் பல்பொடி விளப்பரம் மாதிரி எல்லா பக்கமும் இருந்து அழைப்புகள், அம்மா, அப்பா, நண்பர்கள் என்றும், கிரி போன்று பதிவுலக நண்பர்களும் மாறிமாறி நலம் விசாரிக்க உண்மையில் மனம் லேசாகி விட்டது.

இவ்வளவு பேரை சொல்லிவிட்டு முக்கியமான நம்ம ஆளை சொல்லாமல் விடலாமா?

விசையம் தெரிந்து அவசராக அழைத்த தங்கமணி, என்னா மச்சி ஆரமிச்சிடானுகளா? இவிங்க எப்பவுமே இப்படித்தான், அட விடுங்க பாஸ், இதுக்கெலாம் பயந்தா தொழில் பண்ண முடியுமா?

சரி, சரி, நோட்டு பேனா எல்லாம் ரெடியா இருக்கு, சீக்கிரம் சொல்லுங்க, எங்க எல்லாம் இன்சூரன்ஸ் இருக்கு, எங்கே எல்லாம் இன்வெர்ஸ்மென்ட் இருக்கு, யார் யார் உங்களுக்கு எவ்வளவு தரனும், நீங்க யாருக்காவது தரணுமான்னு, நிறுத்தாம பேசுது என் செல்லம்?

எவ்வளவு கேள்வி? என்ன ஒரு அக்கறைன்னு, நான் அப்டியே ஷாக் ஆகி சொன்னேன்?முடிவே ஆகிடுச்சா? நான் வேணும்னா ஒரு மாப்ளையும் பார்த்து சொல்லவான்னு கேட்டா? அதுக்கும் அசரலையே!

ஐய்யய்யோ...திரும்பவும் மொதல்ல இருந்தாதாதாதா...மீ பாவம்ன்னு சொல்லுது அம்மிணி, ஐய்யோ ஐயோ...இன்னும் சின்ன புள்ளையாவே இருக்கு.

நன்றி.

Tuesday, November 23, 2010

கலையாத கனவு!

"இருபத்தி ஒரு வயதிற்கு உட்பட்டவர்கள்" இந்த பதிவை தவிர்க்கவும்.

மின் தடையான பவுர்ணமி இரவில் பாட்டு கேட்பதே சுகம்தான், அதிலும் லேசாக மழை தூறினால்!, ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு அந்த மழை வாசத்தோடு பாடல் கேட்கும் சந்தோசம் சொல்லாவா வேண்டும்!.

எங்கே நான் போனாலும் என் வாழ்வில் என்றும்...!, உன் நிழலில் இளைப்பார வருவேன் கண்ணே...!

மரணம்தான் வந்தாலும் பூ செண்டு தந்து...!, உன் மடியில் தலைசாய்த்து இறப்பேன் பெண்ணேணேணே...!


பாடல் ஓடிக்கொண்டு இருந்தாலும், ஏனோ தெரியவில்லை, என்றுமே இல்லாமல் இன்று மட்டும் உடல் லேசாக இருந்தது, மனம் எதோ சொல்ல முடியாத ஒரு உணர்வில் மிதந்தது, சுற்றி இருந்த எதுவுமே தெரியாத ஒரு இருட்டு ஆனாலும் அந்த பவுர்ணமி இரவின் தனிமை எனக்கு ஆனந்தமாகவே இருந்தது.



ஏதோ சத்தம் கேட்டு திரும்பினேன், கதவை திறந்து கொண்டு கையில் மெழுகுவர்த்தியுடன் உள்ளே வந்த அவளை பார்த்ததும் ஒரு நிமிடம் என் மொத்த உடலும் சிலிர்த்து மூச்சு முட்டியது.

என் வாசல் கதவின் பின்புறம் எப்படி குளியலரை போல் தெரிகிறது என்று ஒரு வினாடி யோசித்தாலும்!, அந்த மெழுகு வெளிச்சத்தில் செதுக்கி வைத்த சிலை போல் மின்னிய அவளின் அழகு என் கவனத்தை அவள் மேல் திசை திருப்பியது.

குளித்து முடித்து உடலை சுற்றிய துண்டுடன் இருக்கிறாள், சுருண்ட அவள் முடிகளின் நுனியில் இன்னும் நீர் துளிகள் சொட்டிகொண்டு இருக்கிறது, அவள் உடல் மேல் விழுந்திருந்த நீர் துளிகள் அந்த சிறிய வெளிச்சத்தில் எலுமிச்சை மீது விழுந்த நீர்துளி போல் மின்னியது.

பெரிதாக இருக்கும் அவள் கண்களில் இன்னும் பெரிதாக ஆச்ரியத்தை கொடுத்து, மெதுவாக கேட்டாள் என்ன அப்படி பார்க்கிறாய்! இதற்காதானே ஏங்கினாய் இத்தனை வருடமாய்!, இதோ வந்து விட்டேன்.

இனி "நீ, நான், நாம்" எப்படி வேண்டுமானாலும் விளையாடு என்று சொல்லி சிரிக்கும் போது அவள் கன்னத்தில் விழுந்த குழி என்னை இன்னும் மயக்கினாலும், எனக்கு உடல் தூக்கி வாரி போட்டு அந்த மழை இரவு குளிரையும் தாண்டி குப்பென்று வியர்த்து விட்டது.

அவளை பார்த்து உறைந்து போன மனதுக்கு சட்டென்று பொறி தட்டியதை போல மூளை செய்தியை அனுப்பியது, இந்த நொடியோடு அவளை பார்த்து 5702 நாட்கள் ஆகி விட்டது.ஆம், 15 வருடம், 7 மாதம், 9 நாட்கள்.

ஆனால், அவள் மட்டும் கடைசியாக பார்த்ததை விட இன்னும் இளமையாக, அழகாக, கவர்ச்சியாக இருக்கிறாள்!.

அது சரி, இவள் எப்படி இப்போது இங்கு வந்தாள்?

மின்னல் வெட்டியதை போல பல கேள்விகள் மனதில் தோன்றி வாய் வரை வந்தாலும் சத்தம் மட்டும் வரவே இல்லை!, இன்னும் கொஞ்சம் பேச முயற்சி செய்தால் உள்ளே இருக்கும் உடல் உறுப்புகள் எம்பி வாய் வழியே வந்து விடும் போல ஒரு உணர்வு.

இறுக்கி பிழிவதை போல திடீரென்று என் உடல் ஏன் இத்தனை இருக்கமாகிறது என்று யோசிக்கும் போதே, இன்னும் சிரித்த முகமாய் என்னை நோக்கி அவள் நகர, என் இதய துடிப்பு எனக்கே கேட்கும் அளவு எகிறியது.

ஏய் ஹீரோ!, என்னடா இத்தனை யோசனை என்று கேட்டு என் கையை அவள் தொட்ட வினாடி, அத்தனை எண்ணமும் சிதறி, மீண்டும் உடல் லேசாகி மனம் அவள் மேல் நழுவி விழுந்தது.

எந்த சிந்தனையும் இல்லாமால்அப்படியே என்னை யாரோ தூக்கி செல்வது போல அல்லது காற்றில் மிதப்பது போல நடக்க அவள் இன்னும் நெருக்கமாகி என்னுடல் உரசி நடந்தாள்.

கையில் இருந்த மெழுகுவர்த்தியை சோபாசெட் அருகில் இருந்த மெழுகுவர்த்தி ஸ்டாண்டில் வைக்க, மேலுடை எதுவும் இல்லாமல் இடுப்பில் ஒரு சிறிய துணியை மட்டும் கட்டிய பெண் சிலை கையில் ஒரு குடத்தை தூக்கி பிடித்திருக்கும்படி இத்தனை அழகான ஒரு மெழுகுவர்த்தி ஸ்டாண்டை, என் வீட்டில் இதற்கு முன் பார்த்த நினைவே எனக்கு சுத்தமாக இல்லை.

பக்கவாட்டில் சோபா முழுவதும் கால்களை நீட்டி அமர்ந்த அவள், சிலையாக நான் இங்கிருக்க! அந்த சிலையில் என்ன தேடுகிறாய் என்று என் கையை பிடித்து இழுத்து அவளோடு அமரவைத்தாள்.

அவளுக்கு முன் நான் அமர்திருக்க, பின்னிருந்து கைகளை என் தோளில் போட்டு என் தலையை அவள் மார்போடு சாய்க்க, ஜன்னல் வழியாக முழு நிலவு எங்கள் இருவருக்குமே தெளிவாக தெரிந்தது.

இன்னும் சந்தேகம் தீராமல், நான் தலையை திருப்பி அவள் முகத்தை பார்த்தேன், நிலவும் மெழுகும் கலந்த ஒளியில் அதனை நெருக்கத்தில் அவள் இன்னும் அழகாக தெரிந்தாள்.

எப்படி மறப்பேன் அவள் உடல் வாசம், அதே வாசம், இப்போது இன்னும் அதிகமாய், எதுவும் சொல்ல முடியாமல் அவள் கழுத்தில் என் முகம் புதைய ஆழமாக ஒரு முறை அவளின் வாசத்தை சுவாசித்த பின் மீண்டும் திரும்பி நிலவை பார்க்க தொடங்கி விட்டேன்.

இதை நீ மறந்திருப்பாய் என்று நினைத்தேன்!, இந்த பழக்கத்தை இன்னும் நீ மறக்கவில்லையா என்று சிரித்த படி கேட்டு? என் பதிலுக்காக எதிர்பார்க்காமல் அவளே தொடர்ந்தாள.

இருவரும் இப்படி அமர்ந்து பேசி எந்தனை நாட்கள் இல்லை, இல்லை எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது என்று பேசிகொண்டே அவள் கைகள் என் மார்பில் விளையாட, அப்போதுதான் நான் ஆடை எதுவும் இல்லாமல் இருப்பதை உணர்ந்தேன்?

எப்போது நான் உடையை கழற்றினேன்? அல்லது இவள் கழற்றினாளா? இது என்ன கனவா? என்று மனம் குழம்பி நான் எழுந்து நிற்க முயற்சித்தாலும், ஏனோ முடியவில்லை.

கல்லூரி நாட்கள் முதல் பழைய நினைவுகள் அத்தனையையும் ஒன்று விடாமல் பேசினாள், அவள் அணைப்பில் இருந்த படி அவள் பேசுவதை கேட்க தோன்றியதே, தவிர எனக்கு எதுவும் பேச வாய் வரவில்லை.

இப்படி அவள் பேசுவதை கேட்பது எப்போதுமே என் விருப்பம் என்பது அவளுக்கும் தெரியும்.

இருவருக்குமே கண்களில் நீர் வடிந்தாலும், இருவருமே சோகமாக இல்லை, சந்தோசமாகவே உணந்தோம், மனமும் உடலும் லேசாக மிதப்பது போல இருக்க, எப்போது, எப்படி கண் மூடினேம் என்றே தெரியவில்லை.

திடீர் என்று நான் கண் விழித்து, இது கனவா என்று தலையை திரும்பி பார்க்க, அதே நேரம் அவளும் கண் முழித்தாள்.

அப்படா...! இது கனவு இல்லை என்று நான் நினைக்கும் போதே, என் உதட்டை அவள் உடதுகளால் லேசாக ஈரமாக்கி விட்டு சொன்னாள்.

என்னமா இங்க கஷ்டமா இருக்கா? சரி, வா படுக்கையில் போய் சாய்வோம் என்றாள்.

அது இரவா பகலா என்றே தெரியாத லேசான வெளிச்சம் கலந்த இருட்டாக இருந்தது, நேரம் பார்க்க தோன்றினாலும், ஏனோ பார்க்காமல் அவளை பின் தொடர்ந்தேன்.

படுகையில் என்னை தள்ளி என் மேல் விழுந்து அழுத்தமாக என் உதட்டில் முத்தமிட்டாள், எனக்கு எதோ புதிதாக பட்டது.

கல்லூரி காலம் முதல் எத்தனையோ நாட்கள் இருவரும் இது போல் சேர்ந்து தூங்கி இருக்கிறோம், எத்தனயோ முத்தங்கள் கொடுத்திருப்பாள், அதில் எல்லாம் ஆழமான அவள் காதல் மட்டுமே தெரியும், ஆனால் இன்றுபோல் எப்போதும் நான் உணர்ந்தது இல்லை.

காரணம் இன்று அவள் நோக்கம் முழுவதும் என் ஆண்மையை தூண்டுவதாய் இருந்தது, இதுவரை இப்படி ஒரு போதும் அவள் நடந்து கொண்டதும் இல்லை, இப்படி நான் யோசிக்கும் ஒரு சில வினாடிகளில் அவள் உதடுகள் என் உடலில் பரவ, நானும் முழுவதும் மனம் மாறி இருந்தேன்.



மனம் மறுக்க சொன்னாலும், ஏனோ புரியவில்லை என்னால் எதுவுமே சொல்ல முடியவில்லை, ஏன் என்றும் புரியவில்லை, எனக்காகவே பிறந்த கன்னி இவள் என்பது புரிந்தாலும், அவள் என்னவோ கலையில் மிக கை தேர்ந்தவளாக என்னை கையாண்டாள் இரவு முழுவதும்.

எத்தனை முறை ஈரமானோம் என்று நினைவில்லை, எழுந்திரிக்க ஏனோ மனமில்லை, போதும் என்ற சொல்லே வராமல் போய்கொண்டே இருந்தது.

இரு ராஜ நாகங்கள் இணைந்தாலும், இப்படி பின்னி பிணைய முடியுமா என்பது சந்தேகம் தான் என்று தோன்றியது.

எனக்கு உண்மையில் இது என்ன உணர்வு என்றே புரியவில்லை? சுகமா, சந்தோசமா இல்லை போதையா என்றே விவரிக்க முடியாத ஒன்றாக இருந்தது, அப்படியே கிடந்தது எப்போது மயங்கி போனேன் என்றே தெரியவில்லை.

ஜில்லென்று காற்று முகத்தில் பட்டு கண் விழிக்கும் போது, எனக்கு முன் அழகாக ஒரு அருவி கொட்டிக்கொண்டு இருக்கிறது சுற்றிலும் பசுமையான அடர்ந்த காடு, அதுவும் மழை அடித்து முடிந்த ஈரமான மரங்கள்.

திரும்பி பார்த்தல் வெற்றுடம்போடு அவள் மரத்தில் சாய்ந்து அமர்திருக்க, அவள் மடியில் நான் படுத்திருக்கிறேன், என்ன பூவென்று தெரியவில்லை, வெண்மையும் ஊதாவும் கலந்த பூவினால் ஒரு மாலை மட்டும் அவள் கழுத்தில் இருக்கிறது.

சட்டென்று எழுந்து, எங்கே இருக்கிறோம் நாம் என்றேன்? எப்படி என்று புரியவில்லை, இப்போது எந்த தடையும் இல்லாமல் பேசமுடிகிறது!.

அவள் கொஞ்சமும் ஆச்சரிய படாமல் சொன்னாள், ஏன் என்னோடு எங்கிருந்தால் என்ன? இந்த இடம் பிடிக்க வில்லையா?

அப்படியல்ல வெற்றுடம்போடு இங்கு என்ன செய்கிறோம்? நட வீட்டிற்கு போவோம் என்றேன்.

அவள் சிரித்த படி சொன்னாள், உனக்கு இன்னும் நேற்று இரவு மயக்கம் தெளியவில்லை, அங்கே பார் என்று கையை காட்டினாள்.

அவள் கை காட்டிய இடத்தில என் படுக்கை அறை தெளிவாக தெரிகிறது, ஆனால் படுகையில் நான்?

ஆடையோடுதான் இருக்கிறேன், ஆனால் நேற்று இரவு நாங்கள் கலைத்தது போலவே படுக்கை மட்டும் கலைந்து கிடக்கிறது.

திகிலோடு திரும்பி அவளிடம் கேட்டேன், எனக்கு என்ன ஆகிவிட்டது?

நான் தான் முதலிலேயே சொன்னேனே, இனி நீ, நான், நாம் என்று சிரித்தாள்.

இல்லை, இல்லை, இங்கு என்ன நடக்கிறது என்று எனக்கு ஒன்றுமே புரியவில்லை!.

அப்படி என்றால் நேற்று நடந்தது உண்மையில்லையா?

அல்லது இன்று நான் இறந்து விட்டேனா?

அல்லது நீ என்னை கொன்று விட்டாயா?

இப்போதும் தன் புன்னகை மாறாமல் பதில் சொன்னாள்.

என் காதலை நானே எப்படி கொல்ல முடியும்?

நேற்று நடந்தது நிஜம் அதில் எந்த மாற்றமும் இல்லை.

ஆனால் நீ இன்று இறந்து விட்டதாக நினைப்பது நிஜமல்ல, ஏன் என்றால்...!

நேற்று இரவு என்னை பார்த்தபோதே நீ எனக்காக மீண்டும் பிறந்து விட்டாய், அதை நீ இறப்பென்று நினைக்கிறாய்!.

வா, நம் வாழ்கையை வாழ்வோம் என்று என் கை பிடித்து அழைத்து சென்றாள்.

இப்போதுதான் எனக்கு புரிகிறது அவள் கழுத்தில் கிடக்கும் பூ மாலையும், நேற்றிரவு நான் கேட்டு கொண்டிருந்த பாடலின் அர்த்தமும்.

இனி இந்த கனவு கலையாது என்று தெளிவான என் மனதில் இப்போது துக்கமோ, ஆடை இல்லை என்ற கூச்சமோ இல்லை, அவளை என்னோடு நெருக்கி அணைத்து நடக்க தொடங்கினேன், அவள் தன் நாவினால் தன் உதடுகளை ஈரபடுத்தி கொண்டே என்னை இன்னும் நெருங்கினாள்.

முற்றும்.
 

Blogger Widgets