Friday, May 6, 2016

இந்து ஒரு மதமல்ல

வணக்கம் நண்பர்களே, ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் இணையத்தில் இணைவதில் மகிழ்ச்சி.

தலைப்பை வைத்து இது தனி ஒரு மதம் சார்த்த பதிப்பு என்ற எண்ணத்தோடு அல்லது என் மதத்தை பற்றி இங்கு குறை ஏதாவது இருக்குமா என்ற மதவாத தேடலோடு நீங்கள் இந்த பக்கத்திற்கு வந்து இருந்தால், மன்னிக்கவும் இது உங்களுக்கான பக்கமோ, பதிவோ இல்லை அதனால் உங்கள் நேரத்தை இங்கு வீணடிக்க வேண்டாம் .

இந்து மதம் அல்லது இந்து சமயம் (Hindu or Hindu Religion) என்றுதான்  பொதுவாக இப்போதெல்லாம் பேசப்படுகிறது, அது உண்மையல்ல மதம் சார்ந்த வார்த்தைகள் இடையில் வந்தவர்களால் திணிக்கப்பட்ட ஒன்றுதான்.

உண்மையில் இந்துவத்துவம் (Hinduism) என்பது ஒரு கலாச்சாரம் (Culture) மற்றும் அதுவே அவர்களின்  பாரம்பரியம் (Tradition) என்று சொல்லும் ஒருவரின் காணொளியை சமீபத்தில் எதார்த்தமாக கேட்க நேர்ந்ததின் பிரதிபலிப்பே இதை என்னை எழுத தூண்டியது என்பதுதான் உண்மை  

ஒரு பொதுவான இடத்தில நம்முடைய பெயரை கொண்ட யாரையோ வேறு யாரோ ஒருவர் அழைக்கும் போது, நாமும் நம்மையறியாமல் திரும்பி பார்ப்பது போல, இது என்னுடைய கலாச்சாரம் பற்றி பேச பட்டதால் என்னையறியாமல் மனம் அதனுள் நுழைந்தது.


இடையில் வந்த மதம் கொண்ட மனிதர்கள் இந்துவத்துவம் என்பதையும் மதம் என்று நினைத்து அப்படியே பேச, எழுத காலப்போக்கில் நமக்கும் இந்து மதம் என்றே மனதில் பதிந்து விட்டது.

இது எந்த ஒரு தனிப்பட்ட மதத்தையும் பின்பற்றும் மனதை காயப்படுத்த சொல்லவில்லை, காரணம் அப்படி அவர்கள் நினைத்ததில் அவர்கள் தவறும் எதுவும் இல்லை.

மதம் என்பது ஒரு சாரத்தின் அடிப்படை கொள்கைகளை ஒன்றாக்கி அது சார்த்த மக்களை நல்வழியில் நடத்த ஒருவர் துவக்கியதாகவும், அதை விரும்பி ஏற்றுக்கொண்டு அந்த கொள்கைகளை (Protocols) பின்பற்றிவர்களுக்கும் சொந்தமான ஒரு சொல்லாகும்.

இதில் கவனிக்க வேண்டியது, அப்படி ஒரு மார்கத்தில் செல்லும் போது அவர்களுக்கு தெரியும் நாம் எங்கிருந்து, எதற்காக, எங்கு செல்கிறோம் என்று. உதாரணமாக, கௌதம புத்தரை அடிப்படையாகக் கொண்டு பௌத்த சமயம் உருவாக்கப்பட்டது.

அதாவது சித்தார்த்த கௌதமர் என்ற தனி ஒரு மனிதன், தனது சொந்த முயற்சியாலும், அனுபவத்தாலும் உருவாக்கப்பட்ட வழியாகும் பௌத்தம், அதை அடிப்படையாக கொண்டு உருவானது பௌத்த மதம் அல்லது புத்த மதம் .

பௌத்த மதம் (Buddhism) முதன் முதலில் இந்தியாவில் தான் தோன்றியது,  எனவேதான் இன்றும் புத்த மதத்தின் தாய்நாடு இந்தியா என்றும் அது இந்து கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவும் கருதப்படுகிறது.

இப்படி பல இடங்களில் பல நல்ல மகான்கள் பல தத்துவங்களையும் பல சமயங்களையும்  உருவாக்கி இருக்கிறார்கள்.

எல்லாச் சமயங்களும் பணிவு, இரக்கம், பெருந்தன்மை, அன்பு என்று ஒரே நீதியையே போதிக்கின்றன, ஆனால் அதை அவர்கள் வாழ்ந்த, வாழும் பகுதி மற்றும் பழக்கத்தை பொருத்து அந்த பகுதி மக்களுக்கு புரியும் விதவிதமான சொற்களுடன், விதவிதமான பெயர்களைக் கொண்டு, விதவிதமான  உதாரணம் மற்றும் குறிகளைப் பயன்படுத்தி தங்கள் சமயங்களை விளக்குகின்றனர். 

இந்த வகையில் வந்த யாருமே எனக்கு தெரிந்து மற்ற சமயங்களைத் தவறு எனக் கூறுவதில்லை, இவ்வளவு ஏன், அவர்கள் யாருமே தங்களை கடவுளின் மகனாகவோ, கடவுளின் தூதுவராகவோகூடப் பிரகடனம் செய்து கொண்டதில்லை.

இடையில் வந்த தரகர்கள் மதத்தின் பெயரால் தவராக மக்களை ம(த)ன மற்றம் செய்ததின் விளைவே இன்று மக்கள் மனத்தால் மதத்தால் வேறுபட்டு இருகின்றனர் .


மக்கள் குறுகிய மனப்பான்மையோடு தங்கள் வழியுடன் மட்டும் ஒட்டிக்கொள்ளும் போதுதான், மற்ற சமயங்களை சகித்துக்கொள்ள முடியாமல், தன் வழி தான் சரி என்ற பெருமையும், தான் சொல்வது தான் சரி என்ற பிரிவினையும் வந்தது.

சரி, இதில் இந்து கலாச்சாரம் என்ன சொல்கிறது? அல்லது இவற்றில் இருந்து எவ்வாறு வேறு படுகிறது என்று ஒரு கேள்வியை யாரேனும் இந்த இடத்தில் வைக்க கூடும்.

உண்மையில் இந்து பாரம்பரியம் எதுவுமே சொல்லவில்லை என்பதுதான் நிதர்சனம்.

இதை நான் என் நம்பிக்கைக்காக மட்டும் சொல்லவில்லை, முதலில் இந்துவத்தில் மதத்திற்கு அடிப்படியான எந்த கொள்கைககளும் இல்லை, இதில் எந்த வரைமுறைகளும் இல்லை, இதுதான் கடவுள், இதைதான் படிக்கவேண்டும், இப்படிதான் பிராத்தனை செய்யவேண்டும் என்று எந்த இடத்திலும் சொல்லவில்லை.

அப்படி ஏதாவது எங்காவது இருந்தால் அது மேலே சொன்னபடி இடையில் வந்த தரகர்கள் செய்த வேலையாகத்தான் இருக்கும்.

இந்து கலாச்சாரத்தில், எதை வேண்டுமானாலும் படிக்கலாம், எதை வேண்டுமானாலும் கடவுளாக நினைக்கலாம்,  எப்போது வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் பிராத்தனை செய்யலாம்.

ஒரு இடத்தை கோவிலாக்கி அங்கே ஒருவர்  சூடம் வைக்கலாம், அதே இடத்தில் வேறு ஒருவர் சேவல், ஆடு என்று உயிர் பலியும் கொடுக்கலாம் , அதே இடத்தில் வேறு ஒருவர் சாராயம் படைக்க முடியும்.

இதற்கான காரணம் இந்து கலாச்சாரத்தில் எதுவுமே சொல்லப்படவில்லை, அதனால் அவரவர் விருப்பதிற்கு, அவரவர் சக்திக்கு, அவரவர் மனதில் பட்டதை அல்லது தன் முன்னோர்கள் சொல்லி கேட்டதை, செய்து பார்த்ததை செய்கிறார்கள் .

இதில் கவனிக்க வேண்டியது "செய்கிறார்கள்", யாரும் எழுதிவைக்காமல், செய்ய சொல்லாமல், தானகவே செய்கிறார்கள் அததனால் தான் இந்து என்பது ஒரு கலாச்சாரம் அவர்களின்  பாரம்பரியம்.

இதில் யார் கடவுள்?, என்ற பேச்சே இல்லை கரணம், இங்கு எல்லாமே கடவுளாகத்தான் பார்க்கப்படுகின்றன, மண்ணும் கடவுள், பொண்ணும் கடவுள், மரமும் கடவுள், மயிலும் கடவுள், குழந்தையும் தெய்வம், இறந்தவரும் குல-தெய்வம்.

எப்படி இந்துவத்தில் யார் யார் கடவுள் என்று சொல்லவில்லையோ, அதே போல யார் எல்லாம் கடவுள் இல்லை என்றும் எங்கும் எதிலும் சொல்லவில்லை. அவ்வளவு ஏன், யார் வேண்டுமானாலும் புதிய கடவுளை படைக்க முடியும், அதுவும் யாரை வேண்டுமானலும் கடவுளாக்க முடியும்.       

இன்றும் நம் மக்களிடையே இதை பார்க்க முடியும், இறந்து போன தன் தாயின் சேலையை, இறந்து போன தன் குடும்ப கன்னி பெண்ணை, தன் குடும்பத்தை காப்பற்றிய நாயை, இப்படி புதிய கடவுள்களை படைத்தவர்கள் நம்மிடயே ஏராளம்.

சரியான உதாரணம் வேண்டுமானால் எதிரி நாட்டு ராணி விட்ட சாபத்தால், வாரிசு (குழந்தை) வரம் இல்லாமல் இன்றும் மைசூர் மகராஜா குடும்பம் சாபமிட்ட ராணி அலமேலம்மாவை  (ராயரின் மனைவியை)  உடையார் ராஜ வம்சத்தின் குல தெய்வமாக்கி வணங்கி வருகிறார்கள் என்பது 400 வருட வரலாற்று பதிவுகள்.   

ராஜ வம்சம் தொடர ஒவ்வொரு ராஜாவும் பட்ட அவஸ்தையும், சாபத்தின் படி. தலக்காடு மணல் மேடானதும், இன்றுவரை காவேரி நதி அங்கே மணல் கொண்டு சேர்ப்பதும் நாம் அனைவரும் அறிந்த உண்மை.
  

இன்னும் சொல்கிறேன், தட்டி பாருங்கள் கூகுளை (www.google.com) இயற்கை, மனிதன் மற்ற உயிர்களை கடவுளாக பார்த்ததை தாண்டி, புல்லட் கடவுள் (Shri Om Bana and Bullet Banna), வெளிநாடு விசா கடவுள் (Visa Chilkur Balaji Temple) என்று இந்துவத்தின் எல்லை பிரபஞ்சம் போல நாளுக்கு நாள் விரிந்து கொண்டே இருக்கிறது.

ஆக, இதில் மிக தெளிவான விசையம் என்னவென்றால், யார் அல்லது எது கடவுள் என்பதில் இங்கு எந்த குழப்பமும்  இல்லை, காரணம் இது ஒருவரால் சொல்லப்பட்டோ அல்லது எழுதப்பட்டு அதை படித்து வருபவை அல்ல.

எந்த கட்டாயமும் அல்லது தனித்து வைக்கும் கட்டுப்படும் இல்லாமல் பொது நல நோக்கோடு  காலம் காலமாக மக்களை எதோ ஒரு சக்தி ஒரு சமூக வட்டத்திற்குள் வழிநடத்தி செல்கிறது, அந்த சக்தி கடவுளா இல்லாயா என்பது பற்றி எழுதுவது இங்கு என் நோக்கம் அல்ல.

எந்த ஒரு வழிகாட்டலும் தேவையில்லாமல் மக்களை தன் கட்டுக்குள் வைத்து சுழலும் அந்த பாரம்பரிய சக்தியே  என் எண்ணகளில் இந்து கலாச்சாரமாக தெரிகிறது.

ஆனாலும் இது எப்படி மதமாக காட்டபடுகிறது? இந்த கலாச்சாரம் எப்படி மதம் என்னும் வட்டதிற்குள் புகுத்தப்பட்டது என்று பார்த்தால் அதற்கும் மனிதனே பொறுப்பாகிறான் .

மேலே சொன்னபடி தனி ஒரு மனிதன், தனது சொந்த முயற்சியாலும், அனுபவத்தாலும் உருவாக்கப்பட்ட வழியாக வந்தது மதம், இது தடம் மாறி மனிதனுக்கு மதம் பிடிக்கும் போது, அவனால் மதம் இல்லாமல் வாழமுடியாமல் போகிறது.

இந்துவத்தில் இதை உருவாக்கியவர் என்று யாரும் இல்லை, மேலும் இதை வழிநடத்தவும் யாரும் தேவை இல்லை என்பதால் தான் என்னவோ, யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் இதை பற்றி விமர்சனம் செய்ய முடியும், அதை பற்றி இதில் யாரும்  கேள்வி கேட்க போவதில்லை எந்த ஒரு விமர்சனத்துக்கும் பதில் விமர்சனமும் வரபோவதில்லை.

ஆனால் மற்ற எந்த ஒரு மதம் அல்லது சமயத்தை இப்படி எதுவும் விமர்சனம் செய்து விட முடியாது என்பது இங்கு சிந்த்திக்க வேண்டியது.

இதை சாதமாக்கி இடையில் மதம் பிடித்த மனிதர்கள் புகுத்தல்தான் இந்து கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் என்பது இந்து மதமாக காட்டப்படுகிறது.

காரணம் எத்தனயோ மதங்கள் வந்தன எத்தனயோ மறைந்தும் போனது, ஆனால் யாரும் இல்லாமல் இது மட்டும் எப்படி தானாக சுழலுகிறது நாளுக்கு நாள் வளருகிறது என்று அவர்களால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

காலம் காலமாக முட்டையில் இருந்து வந்ததாவும் அது மட்டுமே பிறப்பின் தன்மை என்று நம்பிக்கொண்டு இருக்கும் ஒரு கோழியிடம் போய், ஒரு பெண்ணின் பிரசவ முறையை சொன்னால் அந்த கோழி என்ன நினைக்கும்?

அது எப்படி இந்த பெண்ணால் முட்டை ஓட்டை மட்டும் உள்ளே வைத்துக்கொண்டு தனியாக குட்டியை வெளியே அனுப்பமுடியும், அதும் ஒரே ஒரு முட்டை ஓடு வைத்துக்கொண்டு பல முறை பல குட்டிகளை மட்டும் அனுப்ப முடியும் என்றுதான் அதன் எண்ணம் இருக்கும்.

இது போலதான் மதம் பிடித்த மனிதர்கள், தனக்கு மதம் தவிர எதுவும் தெரியாது என்பதை அறியாமல், ஒரு கலாச்சாரத்தை தனக்கு தெரிந்த மதத்திற்குள் இழுத்து வர முயற்சி செய்தார்கள்,செய்கிறார்கள்,இனியும் செய்யலாம், ஆனால் அது அவர்கள் தவறு என்று சொல்லிவிட முடியாது என்பதை விட சொல்லகூடாது என்பதே சரியான முறை.

இந்து கலாச்சாரம் என்பது பாரம்பரியமாக கொண்டு போகவே தவிர யாரையும், எந்த இறை நம்பிக்கையையும் விமர்ச்சனம் செய்ய பயன் பட்டதும் இல்லை இனியும் பயன் பட கூடாது என்பதும் இந்த கலாச்சாரத்தின் ஒரு அங்கம் தான்.   

மொத்தத்தில் ஒரு பெரிய நூலகத்தில் இருந்து ஒருவர் ஒரே ஒரு புத்தகத்தை எடுத்து வருகிறார், எடுத்தவருக்கு தெரியும் இதை போல பல புத்தகங்களை கொண்ட நூலகம் ஒன்று இருக்கிறது அதில் இருந்து நாம் கடைபிடிக்க அல்லது கற்க நிறைய இருக்கிறது என்று.

ஆனால், அவரிடம் இருந்து அந்த ஒரு புத்தகத்தை மட்டும் வங்கி படித்த மற்ற ஒருவருக்கு இது புரியாது, அவரை பொறுத்தவரை இது மட்டும் தான், இதில் நாம் அனைத்தும் படித்து முடித்து விட்டோம் வேறு எதுவும் இங்கே இல்லை என்பதுதான், இதையே அவர் தனக்கு அடுத்து வருபவருக்கு அவர் அவருக்கு அடுத்து அடுத்து சொல்லக்கூடும் அதில் அவர்கள் தவறு எதுவும் இல்லை.

இந்து கலாச்சாரம் பழகுபவர்கள் மற்ற சமய இன மதத்தவர்களுடன் இணைந்து இந்த பாரம்பரியதில் நடப்பதும், மற்ற மதம், சமய மக்கள் அந்த இந்து கலாச்சாரம் எப்படி பாரம்பரிமாக வருகிறது, எது உயர்ந்தது, எது தாழ்ந்தது, ஏன் அது மதமாக இருக்கவில்லை? என்று அர்த்தமற்ற பாகுபாடு பார்க்காமல், ஒரே குலம், ஒரே இனம் அது மானித இனம், அதில் பல கலாச்சாரம், பல பாரம்பரியம், அதில் அனைவரும் சமம் என்று உணர்ந்து நடப்பதே நம் மனித குலத்திற்கும், நாம் விரும்பும் மதத்திற்கும் செய்யும் உண்மையான பிறவி கடமை ஆகும்.

நன்றி மீண்டும் சந்திப்போம்.

Saturday, May 24, 2014

கோச்சடையான் ரஜினியின் பாஷா இல்லை...!

வணக்கம் நண்பர்களே,

வருடம் கூட கூட தன் வயதை குறைத்து கொண்டு ஓட்டத்தில் வேகத்தை கூட்டும் சிங்கையின் வேகத்துக்கு இணையாக என் வாழ்கை வேகத்தை கூட்ட வயது கூடிக்கொண்டே போகும் நான் ஓட முயன்று கொண்டு இருப்பதால், இணையம், பதிவுகள் பக்கம் வர முடியாத சங்கடத்தை சந்திக்கும் படியாகிவிட்டது.

எத்தனயோ தடைகளையும், சங்கடங்களையும் தாண்டி திரைக்கு வந்து ஆனந்த தாண்டவம் போட்டுகொண்டு இருக்கிறார் மாவீரன் கோச்சடையான்.


நான் திரை விமர்ச்சனம் எழுதுவது கிடையாது (எழுதுறதே இல்ல இதுல எதுக்கு இந்த படம் அதான...சரி விடுங்க விடுங்க ), அதனால் இது கண்டிப்பாக கோச்சடையான் விமர்ச்சனம் அல்ல, ரஜினி ரசிகனாக என் முதல் பார்வையில் கோச்சடையான் அவ்வளவுதான்.

சினிமா என்பது ஒரு தொழில், அதில் "வந்து விட்டீர்களா சுவாமி", "போகாதீர்கள் நாதா" என்பது முதல் " இஸ்தலக்கடி லாலா சுந்தரி கோல கொப்பற கொய்யா" என்பது வரை பல கால கட்டங்களில் பலரால் பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல பட்டு இருக்கிறது.

இந்த வரிசையில் அடுத்த படி அல்லது மைல்கல் முதல் முயற்சிதான் "கோச்சடையான்".

சரித்திர கதையையும், நடிகர்களின் நடிப்பையும் பற்றி பலரும் திரை விமர்ச்சனமாக கொடுத்து கொண்டு இருப்பதால், அதே விசையத்தை வேறு வாரத்தைகளை போட்டு இங்கு நான் கொடுக்க போவதில்லை.

மாவீரன் கோச்சடையான் மீது மக்கள் கொண்டுள்ள புகழ் பிடிக்காத மன்னனே எதிரி நாட்டிடம் வீரர்களை அடிமை படுத்தியாதாக சூது செய்து நயவஜகமாக ராஜ துரக குற்றம் சுமத்தி மரணதண்டனை கொடுக்கிறான்.

மரணத்தின் வாசலில், நான் வருவேன் என்ற நம்பிக்கையுடன் இருக்கும் நம் வீரர்களை காப்பாற்று ரானா என்று ஒரு மகனிடமும், மன்னரை காப்பதே நம் கடமை சேனா என்று சொல்லி மற்றொரு மகனிடம் தன் தளபதி வாளை கொடுத்து விடை பெறுகிறார் கோச்சடையான்,

மகன்கள் இங்கு பிரிகிறார்கள், தந்தை மரணத்தை கண்முன் கண்ட மகன் ரானா, தன் தந்தை மீதுள்ள பழியை போக்கி அதே மக்கள் துணையோடு மன்னனை வஞ்சம் தீர்க்கிறார், அந்த இடத்தில் மன்னரை காப்பதே நம் கடமை என்று சொல்லி கோச்சடையான் கொடுத்த வாளுடன் வந்து நிற்கிறார் இன்னொரு ரஜினி சேனா, இருவரும் மோத வேண்டிய கட்(டாய)த்தில்.. தொடரும் என்று சொல்லி முடிக்கிறார்கள்.

நிம்மதியாக போய் வாருங்கள் தந்தையே என்று கோச்சடையான் நெற்றியில் ரானா முத்தமிடும்போது இது ஒரு "Motion Capture" படம் என்பதயும் மறந்து "Apocalypto படம்" பார்ப்பது போல ஒரு உணர்வு வந்தது.

(Note: The amount of work does not vary with the complexity or length of the performance to the same degree as when using traditional techniques. This allows many tests to be done with different styles or deliveries, giving a different personality only limited by the talent of the actor.)

ஆக மொத்தம்....!

புதிய தொழில் நுட்பத்தில் ரஜினியை கொடுத்த சௌந்தர்யாவுக்கு சந்தோசமாக ஒரு சபாஸ்.

ரவிகுமாரின் உழைப்பு சந்தேகத்துக்கு இடமில்லாமல் அருமை, குறிப்பாக வசனங்கள் ஆக.... அட்டகாசம்.

ரகுமான் சொல்லவே வேண்டாம் இசையும் பாடலும் தேனில் விழுந்த பலா போல் தித்திப்பு.

இனி தலைவர்.....

இளமை இனிமேல் போகாது.... முதுமை எனக்கு வாராது.... என்ற முத்து பாடல் வரிகளை இனி நிஜமாகிவிட்டது, அதிலும் "கோச்சடையாரின் சிவ தாண்டவமும், ராணாவின் மூங்கில் சண்டையும், இனி ரஜினியை எல்லா வகையிலும் பார்க்க முடியும் என்று உறுதி செய்து விட்டது.

சிங்கை மருத்துவ மனையில் இருந்து சென்ற பிறகு திரையில் வரும் முதல் படம் என்ற நினைப்பில் சென்ற எனக்கு கொஞ்சம் நெருடலாக இருந்தாலும், அதே நடை, ஸ்டைல், அதே குரல் என்று சிறிது நேரத்தில் ரஜினியை உணர முடிந்தது. 


பல காட்சிகளில் மற்றவர்கள் நடையும், ரஜினி மற்றும் தீபிகாவின் கண் அமைப்பும் இன்னும் கொஞ்சம் சரியாக கொண்டு வந்து இருக்க வேண்டும், 3-D யில் பார்த்தால் சரியாக வரும் என்று நினைக்கிறேன்

நிறுத்து.... நீ ரஜினி ரசிகன் என்பதால் எல்லாமே உனக்கு மட்டும் நல்லாதான் இருக்கும், போப்பா போ....இதானே.... அப்படி இல்லை,

நண்பர்களே, ஒரு விசையத்தை இங்கு நாம் கவனிக்க வேண்டும், ரஜினி ரசிகனை தவிர பொதுவாக மற்ற அனைவருக்கும், ரஜினி படம் பார்க்க போகும் போதே அது பாஷா, அண்ணாமலை என்ற ஒரு எண்ணம் இருக்கும், காரணம் அவர் ஒரு ஆக்சன் ஹீரோ.

நான் இதுபோல கருத்துக்கள் வரும் போதெல்லாம் சொல்லும் ஒரு விஷயம், வெறும் பாஷாவும், அண்ணாமலையும் அல்ல ரஜினி.

ஒரு நடிகனான வில்லன், இரண்டாம் கதாநாயகன் என்று, நகைச்சுவை, திருடன், அடியாள் கதாநாயகன் முதல் அறிவியல் ஆராச்சியாளர் வரை, ரஜினிக்கு பல முகம் உண்டு, அதில் பல விசையங்கள் ரஜினியை தவிர வேறு யார் செய்து இருந்தாலும், சகிக்கவே முடியாத விசையமாகி இருந்து இருக்கும் என்பதை பொதுவாக அனைவருமே ஏற்றுக்கொள்வார்கள்.

அதே போல, மாறி வரும் தொழில் நுட்பத்தில் உலக நாடுகளுக்கு இணையாக அதுவும் குறிப்பாக இந்திய சினிமாவில் இப்படி ஒரு படத்தை எடுக்க முடியும் என்றால், அது ரஜினி என்ற மத்திரத்தை தவிர வேறு எந்த ஒரு நடிகராலும் துணிந்து செய்யமுடியாத ஒன்று என்பதை மட்டும் என்னால் தெளிவாக சொல்ல முடியும்.

மொத்தத்தில் பத்து வருடத்திற்கு முன் மொபைல் என்பதும், முப்பது வருடத்திற்கு முன் ஜீன்ஸ் என்பதும் இந்தியாவில் எப்படி இருந்து என்றும், இன்றும் அது நம் தெருக்களில் எப்படி கிடைக்கிறது என்பதும் நாம் அனைவரும் பார்பதுதான்.

அதே போல், இனி இந்திய சினிமா வரலாற்றில் இது போல, ஏன் இதை விட இன்னும் நேர்த்தியாக கூட பல படங்கள் வந்து மறைந்தாலும், இதன் துவக்கம் "கோச்சடையான்" என்பதும் அது அன்று இருந்த சூழ்நிலையில் ரஜினியால் மட்டுமே சாத்தியம் என்பதும் சினிமா வரலாற்றில் என்றுமே அழிக்க முடியாத கல்வெட்டாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மொத்தத்தில், கோச்சடையான், ரஜினியின் பாஷாவோ அண்ணாமலையோ அல்ல, ஆனால் இந்திய சினிமாவில் ஒரு மைல்கல் என்ற எண்ணத்தோடு இந்த படத்தை பாருங்கள்.

முதல் காட்சி பார்த்து முடிந்ததும் தலைவருக்கு என் ட்விட்: After watching first show in singapore, I felt, Kochadaiyaan is not a Masterpiece of Rajini. it's a MileStone of Indian Cinema.

எல்லாம் சொல்லி இதை சொல்லாமல் எப்படி முடிப்பது.....!

நாங்கள்லாம் ரஜினி பட போஸ்டரையே நாலு மணி நேரம் நகாராம பாப்போம், அப்படி இருக்க கோச்சடையாரின் தாண்டவத்தை கேட்கவா வேண்டும்.

All the Rajni Fan's Don't Miss this Chance....!

நன்றி, மீண்டும் சந்திப்போம்.

சம்போபோபோ மகா தேவா................!
 

Blogger Widgets