Wednesday, May 13, 2009

டெல்லி பாகம்- II - "ஒரு ருபா பிச்சை"

டெல்லில தங்கி வேலை பார்த்த இனொரு நேரத்துல, என் நண்பர்கள், குமார், ஜான், சுரேஷ் என்கிற சுச்சு மாமா, எனோட குரு ராஜேஷ், அவரோட தம்பி கார்த்தி என்கிற சோட்டு, அவனோட நண்பன் விஜயன் என்கிற வில்ஸ் விஜி, எங்க எல்லோருக்கும் பொழுது போக்கே யாரயாவது ஓட்டுறதுதான், யாருமே கிடைகலனா, சில சமயம் எங்கள நாங்களே ஓட்டிகுவோம். அதுலேயும் "வில்ஸ் விஜிய (எப்பயுமே வில்ஸ் சிகரட் கைல வச்சு இருக்கறதால வில்ஸ் விஜி) கலாய்ச்சு மொக்கைய போடுறது எங்க எல்லோருக்குமே பிடிச்ச பொழுதுபோக்கு.

காரணம் என்னான, விஜி ஆளு பக்க ஆருஅடில நம்ம பொன்னம்பலம் மாதிரி இருப்பான், அலுவலகம் போற நேரம் தவிர, மத்த எல்லா நேரமும் ஒரே துணிலதான் இருப்பான், ஒரு அழுக்கு ட்ரவுசர், ஒரு அழுக்கு பனியன், அது உண்மைல என்ன கலர்னு எங்க யாருக்குமே சத்தியமா தெரியாது. அந்த கருமத்த துவைச்சா என்னடான்னு கேட்டா, அண்ணே இப்பதாண்ணே வங்கி ரெண்டு வருசமச்சுனு சொல்லி, சலிக்காம அதயும் போட்டுகிட்டே எங்கயும் வருவான்.

ஒரு சீடி விடாம வாங்கி பக்குரதுதான் அவனோட வேலை, அது என்ன மொழி சீடியா இருந்தாலும், ஆனா விஜி நல்ல புத்திசாலீ, அப்பவே அவன் படிக்குற புத்தகமும் சரி, பாக்குற சீடியும் சரி, பாதி எங்களுக்கு புரியவே புரியாது (சரி..சரி... இப்போ மட்டுமும் நாங்க என்ன ஒபாமாவுக்கு டியுசனா எடுக்க போறோம், இப்பயும் புரியாது தான்).

இப்படியே ஒரு நான் ராத்திரி சாப்பாட்டுக்கு நண்பர்கள் எல்லாம் வழக்கம் போல கீழ உள்ள ஒரு பஞ்சாபி கடைக்கு (அந்த கடை பஞ்சாபி ஆன்ட்டி படு அம்சமா இருப்பதால அந்த கடைக்கு நாங்க வச்ச பேரு "மடிப்பு அம்சா கடை" ) சாப்ட போனோம், தம்பி விஜியும், என்கிட்டே வழக்கம் போல தன் சந்தேகத்த கேட்க எல்லோரையும் மொக்கைய போட்டுகிட்டே வந்தோம்.

நான்: குமார், போன வாரம் நம்ம வீட்டுக்கு வந்த விருந்தாளிய என்னடா சொன்ன, இந்த வாரம் கூப்பிட்டதுக்கு வேலை இருக்குன்னு சொல்லிட்டாரு?

குமார்: இல்ல மாப்ஸ், நொய்டாலிருந்து வந்துட்டு ஒடனே கிளம்புறேன்னு சொன்னாரு, இருங்க பாஸ் போலாமுன்னு நானும் சோட்டும் சொன்னோம்

நான்: சரி, அதுக்கா அவரு கடுப்பனாறு? உண்மைய சொல்லுமா ?

குமார்: அதுக்கு இல்லடா, அவரு இல்ல இல்ல நான் போய் துணி துவைக்கனும்னு சொன்னாரா?

நான்: சரி,

குமார்: நான் சொன்னேன், இதுக்கு எதுக்குங்க முப்பது கிலோமீட்டர் போகணும், இந்தா நாங்க ரெண்டு பக்கெட் புல்லா நனைச்சு வச்சு இருக்கோம், போய் ஆசைதீர துவைங்கனு சொன்னோம், அது தப்பா மாப்ஸ்...

நான்: அது தப்பே இல்லடா, ஆனா அவன் போய் இந்த வாரம் ஆள கூட்டிகிட்டு வந்தா அப்ப வரும் தப்பு தாரை எல்லாம்.

நான்: சரி, தம்பி நீ அந்த தோசை கடை மாஸ்டர்ர என்ன கண்ணு சொன்ன, அவன் ஒம்மேல கடுப்பா இருக்கான்?

சோட்டு: நாங்க சாப்ட போனப்ப, தோசைய நல்லா போடுங்கனு சொன்னதுக்கு, என்க்கேவா, நான் நாலு வருசமா தோசை போடுறேன் தெரியுமான்னு சொன்னாண்ணே.

நான்: நீ என்ன கண்ணா சொன்னா அத சொல்லு ?

சோட்டு: நான் நாலு வருசமாவா இன்னுமா எடுக்க முடியலானு சொன்னேன் அதுக்கு போய் அவன் கடுப்பானா நான் என்னாண்ணே பண்ண முடியும்?

விஜி: அத விடுங்கண்ணே, தினம் நான் கலைல போகும் போது ஒரு பொண்ணு விடாம பாத்தா என்னண்ணே அர்த்தம்?

நான்: நீ கதவ முடிட்டு போகலைனு அர்த்தம்?

விஜி: அண்ணே, அது இல்லானே, நான் ஆபீஸ் போகும் போது பாத்தா?

நான்: ஓ.. அதுவா, இந்த காட்டான் இருக்க ஏரியாலயா, நம்மளும் இருக்கமான்னு பாப்பா போல...

விஜி: இல்லண்ணே...பஸ் ஸ்டாப்லேயும் பாத்தா என்ண்ணே அர்த்தம்?

நான்: இவன் நிக்கிற இந்த பஸ் ஸ்டாப்புல, இனி ஜென்மத்துக்கும் நாம வரக்கூடாதுன்னு அர்த்தம்...

விஜி: போங்கண்ணே, அவ பஸ்ல ஏறியும் திரும்பி பாப்பா தெரியுமா..

சோட்டு-கார்த்தி: வேணாம் விஜி "டெல்லியில் இளம்பெண் தற்கொலைன்னு "தினத்தந்தில" வர காரணமா ஆகிராத...

குமார்: தம்பி அவனுக்கு பொறாமை, யு கேரி யான்...

நான்: அது தம்பி, ஒரு வேலை நீ அந்த பஸுல ஏரூறியான்னு பாக்கத்தான்...

விஜி: ஆமாண்ணே, அதுக்கு என்ண்ணே அர்த்தம், ஓர் வேலை நானும் அந்த பஸ்ல ஏரூனா...

நான்: அவ பாத்ததும், அதுக்கு தாம்மா, ஓர் வேலை நீயும் அந்த பஸ்ல ஏரூனா, அடுத்த நாளிருந்து அவ வேற பஸ்ல போக வேண்டி இருந்து இருக்கும் ...

விஜி: போங்கண்ணே,உங்களுக்கு ஒன்னுமே தெரியல, அதுனால நான் உங்களுக்கு குடுத்த "டாக்டர் மத்தர்பூதம்" பட்டத்த திரும்ப வங்கிக்கறேன்.

இப்படியாய் மொக்கைய போட்டுக்கிட்டு சாப்டு முடிச்சிட்டு திரும்ப வந்துகிட்டு இருந்தோம், வர்ற வழியல விஜி ஒரு சீடி கடைல போய் புது சீடி ஏதாவது இருக்கனு பாக்க நாங்க எல்லாம், பேசிகிட்டே முன்னடி நடந்தோம், தம்பி விஜி சீடியோ, பீடவோ வாங்க பணம் கம்மியா இருக்க, அண்ணே ஒரு ரூபா இருந்தா குடுங்கன்னு சொல்லிக்கிட்டு பின்னாடி ஓடி வர, எங்களுக்கு முன்னாடி வந்த வேற யாரோ தமிழ் மக்கள், இவன் உருவத்தையும், அழுக்கு துணியையும் பாத்துட்டு, ஐயோ பாவம்னு சொல்லிகிட்டு ஒரு ஒருருபா காச இவன் கையல வைக்க, நாங்க திரும்பி பாக்கவும் சரியா இருந்தது.

ஒரு விநாடி நாங்க எல்லாம் (விஜியும் சேத்து) அதிர்ச்சி ஆனாலும், நடந்தத யூகிச்சு, சிரிச்சா ...இன்னைக்கும் விஜினு சொன்ன நாங்க எல்லோரும் நினைச்சு சிரிக்க முடியுற ஒரு நிகழ்சி அது.
 

Blogger Widgets