Saturday, May 24, 2014

கோச்சடையான் ரஜினியின் பாஷா இல்லை...!

வணக்கம் நண்பர்களே,

வருடம் கூட கூட தன் வயதை குறைத்து கொண்டு ஓட்டத்தில் வேகத்தை கூட்டும் சிங்கையின் வேகத்துக்கு இணையாக என் வாழ்கை வேகத்தை கூட்ட வயது கூடிக்கொண்டே போகும் நான் ஓட முயன்று கொண்டு இருப்பதால், இணையம், பதிவுகள் பக்கம் வர முடியாத சங்கடத்தை சந்திக்கும் படியாகிவிட்டது.

எத்தனயோ தடைகளையும், சங்கடங்களையும் தாண்டி திரைக்கு வந்து ஆனந்த தாண்டவம் போட்டுகொண்டு இருக்கிறார் மாவீரன் கோச்சடையான்.


நான் திரை விமர்ச்சனம் எழுதுவது கிடையாது (எழுதுறதே இல்ல இதுல எதுக்கு இந்த படம் அதான...சரி விடுங்க விடுங்க ), அதனால் இது கண்டிப்பாக கோச்சடையான் விமர்ச்சனம் அல்ல, ரஜினி ரசிகனாக என் முதல் பார்வையில் கோச்சடையான் அவ்வளவுதான்.

சினிமா என்பது ஒரு தொழில், அதில் "வந்து விட்டீர்களா சுவாமி", "போகாதீர்கள் நாதா" என்பது முதல் " இஸ்தலக்கடி லாலா சுந்தரி கோல கொப்பற கொய்யா" என்பது வரை பல கால கட்டங்களில் பலரால் பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல பட்டு இருக்கிறது.

இந்த வரிசையில் அடுத்த படி அல்லது மைல்கல் முதல் முயற்சிதான் "கோச்சடையான்".

சரித்திர கதையையும், நடிகர்களின் நடிப்பையும் பற்றி பலரும் திரை விமர்ச்சனமாக கொடுத்து கொண்டு இருப்பதால், அதே விசையத்தை வேறு வாரத்தைகளை போட்டு இங்கு நான் கொடுக்க போவதில்லை.

மாவீரன் கோச்சடையான் மீது மக்கள் கொண்டுள்ள புகழ் பிடிக்காத மன்னனே எதிரி நாட்டிடம் வீரர்களை அடிமை படுத்தியாதாக சூது செய்து நயவஜகமாக ராஜ துரக குற்றம் சுமத்தி மரணதண்டனை கொடுக்கிறான்.

மரணத்தின் வாசலில், நான் வருவேன் என்ற நம்பிக்கையுடன் இருக்கும் நம் வீரர்களை காப்பாற்று ரானா என்று ஒரு மகனிடமும், மன்னரை காப்பதே நம் கடமை சேனா என்று சொல்லி மற்றொரு மகனிடம் தன் தளபதி வாளை கொடுத்து விடை பெறுகிறார் கோச்சடையான்,

மகன்கள் இங்கு பிரிகிறார்கள், தந்தை மரணத்தை கண்முன் கண்ட மகன் ரானா, தன் தந்தை மீதுள்ள பழியை போக்கி அதே மக்கள் துணையோடு மன்னனை வஞ்சம் தீர்க்கிறார், அந்த இடத்தில் மன்னரை காப்பதே நம் கடமை என்று சொல்லி கோச்சடையான் கொடுத்த வாளுடன் வந்து நிற்கிறார் இன்னொரு ரஜினி சேனா, இருவரும் மோத வேண்டிய கட்(டாய)த்தில்.. தொடரும் என்று சொல்லி முடிக்கிறார்கள்.

நிம்மதியாக போய் வாருங்கள் தந்தையே என்று கோச்சடையான் நெற்றியில் ரானா முத்தமிடும்போது இது ஒரு "Motion Capture" படம் என்பதயும் மறந்து "Apocalypto படம்" பார்ப்பது போல ஒரு உணர்வு வந்தது.

(Note: The amount of work does not vary with the complexity or length of the performance to the same degree as when using traditional techniques. This allows many tests to be done with different styles or deliveries, giving a different personality only limited by the talent of the actor.)

ஆக மொத்தம்....!

புதிய தொழில் நுட்பத்தில் ரஜினியை கொடுத்த சௌந்தர்யாவுக்கு சந்தோசமாக ஒரு சபாஸ்.

ரவிகுமாரின் உழைப்பு சந்தேகத்துக்கு இடமில்லாமல் அருமை, குறிப்பாக வசனங்கள் ஆக.... அட்டகாசம்.

ரகுமான் சொல்லவே வேண்டாம் இசையும் பாடலும் தேனில் விழுந்த பலா போல் தித்திப்பு.

இனி தலைவர்.....

இளமை இனிமேல் போகாது.... முதுமை எனக்கு வாராது.... என்ற முத்து பாடல் வரிகளை இனி நிஜமாகிவிட்டது, அதிலும் "கோச்சடையாரின் சிவ தாண்டவமும், ராணாவின் மூங்கில் சண்டையும், இனி ரஜினியை எல்லா வகையிலும் பார்க்க முடியும் என்று உறுதி செய்து விட்டது.

சிங்கை மருத்துவ மனையில் இருந்து சென்ற பிறகு திரையில் வரும் முதல் படம் என்ற நினைப்பில் சென்ற எனக்கு கொஞ்சம் நெருடலாக இருந்தாலும், அதே நடை, ஸ்டைல், அதே குரல் என்று சிறிது நேரத்தில் ரஜினியை உணர முடிந்தது. 


பல காட்சிகளில் மற்றவர்கள் நடையும், ரஜினி மற்றும் தீபிகாவின் கண் அமைப்பும் இன்னும் கொஞ்சம் சரியாக கொண்டு வந்து இருக்க வேண்டும், 3-D யில் பார்த்தால் சரியாக வரும் என்று நினைக்கிறேன்

நிறுத்து.... நீ ரஜினி ரசிகன் என்பதால் எல்லாமே உனக்கு மட்டும் நல்லாதான் இருக்கும், போப்பா போ....இதானே.... அப்படி இல்லை,

நண்பர்களே, ஒரு விசையத்தை இங்கு நாம் கவனிக்க வேண்டும், ரஜினி ரசிகனை தவிர பொதுவாக மற்ற அனைவருக்கும், ரஜினி படம் பார்க்க போகும் போதே அது பாஷா, அண்ணாமலை என்ற ஒரு எண்ணம் இருக்கும், காரணம் அவர் ஒரு ஆக்சன் ஹீரோ.

நான் இதுபோல கருத்துக்கள் வரும் போதெல்லாம் சொல்லும் ஒரு விஷயம், வெறும் பாஷாவும், அண்ணாமலையும் அல்ல ரஜினி.

ஒரு நடிகனான வில்லன், இரண்டாம் கதாநாயகன் என்று, நகைச்சுவை, திருடன், அடியாள் கதாநாயகன் முதல் அறிவியல் ஆராச்சியாளர் வரை, ரஜினிக்கு பல முகம் உண்டு, அதில் பல விசையங்கள் ரஜினியை தவிர வேறு யார் செய்து இருந்தாலும், சகிக்கவே முடியாத விசையமாகி இருந்து இருக்கும் என்பதை பொதுவாக அனைவருமே ஏற்றுக்கொள்வார்கள்.

அதே போல, மாறி வரும் தொழில் நுட்பத்தில் உலக நாடுகளுக்கு இணையாக அதுவும் குறிப்பாக இந்திய சினிமாவில் இப்படி ஒரு படத்தை எடுக்க முடியும் என்றால், அது ரஜினி என்ற மத்திரத்தை தவிர வேறு எந்த ஒரு நடிகராலும் துணிந்து செய்யமுடியாத ஒன்று என்பதை மட்டும் என்னால் தெளிவாக சொல்ல முடியும்.

மொத்தத்தில் பத்து வருடத்திற்கு முன் மொபைல் என்பதும், முப்பது வருடத்திற்கு முன் ஜீன்ஸ் என்பதும் இந்தியாவில் எப்படி இருந்து என்றும், இன்றும் அது நம் தெருக்களில் எப்படி கிடைக்கிறது என்பதும் நாம் அனைவரும் பார்பதுதான்.

அதே போல், இனி இந்திய சினிமா வரலாற்றில் இது போல, ஏன் இதை விட இன்னும் நேர்த்தியாக கூட பல படங்கள் வந்து மறைந்தாலும், இதன் துவக்கம் "கோச்சடையான்" என்பதும் அது அன்று இருந்த சூழ்நிலையில் ரஜினியால் மட்டுமே சாத்தியம் என்பதும் சினிமா வரலாற்றில் என்றுமே அழிக்க முடியாத கல்வெட்டாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மொத்தத்தில், கோச்சடையான், ரஜினியின் பாஷாவோ அண்ணாமலையோ அல்ல, ஆனால் இந்திய சினிமாவில் ஒரு மைல்கல் என்ற எண்ணத்தோடு இந்த படத்தை பாருங்கள்.

முதல் காட்சி பார்த்து முடிந்ததும் தலைவருக்கு என் ட்விட்: After watching first show in singapore, I felt, Kochadaiyaan is not a Masterpiece of Rajini. it's a MileStone of Indian Cinema.

எல்லாம் சொல்லி இதை சொல்லாமல் எப்படி முடிப்பது.....!

நாங்கள்லாம் ரஜினி பட போஸ்டரையே நாலு மணி நேரம் நகாராம பாப்போம், அப்படி இருக்க கோச்சடையாரின் தாண்டவத்தை கேட்கவா வேண்டும்.

All the Rajni Fan's Don't Miss this Chance....!

நன்றி, மீண்டும் சந்திப்போம்.

சம்போபோபோ மகா தேவா................!
 

Blogger Widgets