Thursday, November 25, 2010

தென்கொரியா போர் பதட்டம்!

எப்போதும் போலத்தான் அன்று மதியமும் இலையுதிர் கால குளிரில் நடுங்காமல் இருக்க அலுவலக ஹீட்டர் எங்களை சூடேற்றிக்கொண்டு இருக்க, மதிய உணவாக உள்ளே சென்ற கோழியும் சிலபல இலைதழைகளும் எங்கள் கண்களை சொருக வைத்துக்கொண்டு இருந்தாலும், நாங்கள் அலுவலக கணினியை வெறித்துக்கொண்டு இருந்தோம்.

திடீரென்று ஒரு பலத்த சத்தம் கட்டடங்கள் ஆடுவதை போல உணர்வு, எங்கும் ஒரே தீ மற்றும் புகை, மக்கள் பதட்டமாக வட கொரியா குண்டு போடுகிறது ஓடி பதுங்குங்கள் என்று கத்தியபடி பதுங்கு குழியை தேடி இங்கும் அங்கும் ஓடும் ஒரு சில நிமிடங்களில் இன்னும் பல குண்டுகள் வந்து விழுகின்றன.

இந்நிலையில் உள்ளே நுழைந்த தென் கொரிய ராணுவ ஹெலிகாப்டர்கள் பதிலுக்கு தாக்க எங்கும் ஒரே குண்டு மழை...!

எனக்கும் வேறு வழி எதுவும் தெரியவில்லை, உடனே குடையை விரித்துக்கொண்டு எடுத்தேன் பாருங்க ஓட்டம்...!

என்ன புரியலையா?

அதான் ஒரே குண்டு "மழைன்னு" சொன்னோம்ல :-)...!

சரி, சரி முறைக்க வேண்டாம், வெட்டி பில்டப்பை முடிந்து கொண்டு விசையத்துக்கு வருவோம்.


கடந்த சில நாட்களாகவே இது போல் ஏதாவது நடக்கக்கூடும் என்று எதிர் பார்த்த தென்கொரிய அரசு மிக சரியாக பாதுகாப்பு முறைகளை தயார் நிலையில் வைத்திருந்தது, போர் கால அவசர நடவடிக்கைகள், பொது மக்கள் தற்பாதுகாப்பு முறைகள் போன்றவை எஸ்.எம்.எஸ் மூலம் அவப்போது வந்த வண்ணம் இருந்தது.

உலக நாடுகள் குறிப்பாக ஜப்பான், ரஷ்யா மற்றும் அமெரிக்கா மிக உன்னிப்பாக இந்த விசையத்தை நேரடியாக கண்காணிப்பதால் அப்படி எதுவும் நடக்காது என்று இருந்த மதிய வேலை, வடகொரியா தன் சேட்டையை துணிந்து காட்டிவிட்டது.

தென்கொரியாவின் இயாங்பியாங் தீவில் ஐம்பது முறை F-16 பீரங்கி குண்டுகளை வீசி திடீர் தக்குதல் நடத்த, அந்த தீவில் இருந்த தென்கொரியாவின் ராணுவ தரப்பில் இருந்து எம்பது ரவுண்டு துப்பாக்கி சூடு தற்காப்புக்காக நடத்த பட்டது.

அதன் பின் இரு நாடுகளும் முதலில் தாக்குதலை தாங்கள் துவக்கவில்லை என்று அறிவித்து இருக்கிறது.



வடகொரியா தென்கொரியா எல்லையை நிலத்திலும் நீரிலும் (DMZ) பிரித்தது முதல் இருநாடுகளுக்கும் பிரச்னை இருந்து கொண்டுதான் இருக்கிறது, இந்த நிலையில் இந்த தக்குதல் போர் வரும் சூழ்நிலையை கொடுத்திருப்பதால், சீனா, ரஷ்யா, ஜப்பான் நாடுகள் இந்த பதட்டத்தைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன, அமெரிக்கா தென்கொரியாவுக்கு ஆதரவாகப் போராடும் என்று அறிவித்து இருக்கிறது.

தென்கொரியா அரசு தரப்பில் இருந்து வடகொரியா தன் செயலை உடனடியாக நிறுத்திக் கொள்ளா விட்டால் மிக மோசமான ஒரு சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டி வரும் என்று எச்சரித்து இருக்கிறது.

எனக்கு புரிந்தவரை, உண்மையில் வடகொரியாவின் இந்த தாக்குதலில் அடிப்படை காரணம் என்பது, இந்த தக்குதல் நடந்த தீவில் இருக்கும் தென்கொரிய ராணுவமும் அமெரிக்கா ராணுவமும் கூட்டுப் பயிற்சி மேற்கொள்ளும் திட்டதின் படி அமெரிக்கா விமானம்தாங்கி போர்க்கப்பல் இங்கு வந்துள்ளது, இதற்கான எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் வடகொரியா செயல் பட்டு இருக்கிறது, காரணம் வடகொரியா மீது அமெரிக்கா பல பொருளாதாரத் தடைகளை விதித்தது இருக்கிறது.



மேலும் கடந்த மார்ச் மாதம் தென்கொரியாவின் போர்க் கப்பல் ஒன்று, வடகொரிய கடல் எல்லைக்கருகில் மர்மமான முறையில் மூழ்கடிக்கப்பட்டு அந்த கப்பலில் இருந்த 49 வீரர்களும் பலியானார்கள். இது வடகொரியாவின் செயல் என்றும் நீர்மூழ்கி குண்டு மூலம் தன் கப்பலை வடகொரியா மூழ்கடித்ததாக தென்கொரிய விசாரணைக் குழு அறிக்கை கடந்த மே மாதம் வடகொரியாவை குற்றம் சாட்டியது போன்றவைதான் காரணம்.

தக்குதல் நடந்த தீவில் வசிக்கும் மக்களோடு தென்கொரியவின் ராணுவ முகாம் இருக்கிறது, குண்டு வீச்சுக்குப் பின் பொது மக்கள் உடனடியாக ராணுவ பாதுகாப்பு கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டனர், காயம் பட்ட மக்கள் சிகிச்சைக்காக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர் மற்றும் தீவில் இருபவர்களுக்கு தேவையான பொருட்கள் தீவுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது.

தென் கொரியாவின் இரண்டு வீரர்கள் இந்த தாக்குதலில் தங்கள் தாய் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்து வீர மரணம் அடைந்து இருக்கிறார்கள், அவர்களுக்கு நாடெங்கும் அஞ்சலி செலுத்த படுகிறது.

தாக்குதலில் பதிப்படைந்த பகுதியில் ராணுவம், தீயணைப்பு மற்றும் மருத்துவ குழுக்கள் போர்கால சீரமைப்பு நடவடிக்கைகளில் இறங்கி இருக்கின்றன.

தென்கொரிய மக்கள் நாம் இதற்கு சரியான பதிலடி கொடுத்து வடகொரியாவுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்று அங்கங்கே வடகொரியாவுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள், நேற்று இரவுக்கு மேல் சம்பந்த பட்ட துறைகளை தவிர மற்ற இடங்களில் இயல்பு வாழ்கை பாதிக்காமல் தொடர்கிறது.

























இது போராக மாறும் பட்சத்தில் உடனடியாக பாதிக்க படும் ஜப்பான், ரஷ்யா மற்றும் சீனா நாடுகள் இப்படி துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையை தவிர்த்து இருநாடுகளும் பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்னையைத் தீர்த்துக் கொள்ளவேண்டும் என கூறியுள்ளன.

இரு நாடுகளின் போக்கையும் உன்னிப்பாகக் கவனித்து வரும் அரசியல் நிபுணர்கள், வடகொரியாவின் அணுகுண்டு தயாரிப்பில் தீவிரம் மற்றும் அரசியல் தலைமை மாற்ற அறிவிப்பு போன்றவற்றால் இப்பிரச்னை இன்னும் தீவிரமடையக் கூடும் என்று கருதுகின்றனர்.





நடப்பதெல்லாம் நன்மைக்கே மற்றும் எல்லா புகழும் இறைவனுக்கே என்ற எண்ணத்தோடு நானும் கவலைகளை விட்டு விட்டு இதை பற்றி பதிவு எழுத வந்து விட்டேன், இதில் என் அனுபவத்தையும் கொஞ்சம் கேளுங்க.

போர் தக்குதல் விசையம் பரவியதும், நம்ம போன் ரொம்ப பிசி, இந்தியா, சிங்கபூர், மலேசியா என்று கோபால் பல்பொடி விளப்பரம் மாதிரி எல்லா பக்கமும் இருந்து அழைப்புகள், அம்மா, அப்பா, நண்பர்கள் என்றும், கிரி போன்று பதிவுலக நண்பர்களும் மாறிமாறி நலம் விசாரிக்க உண்மையில் மனம் லேசாகி விட்டது.

இவ்வளவு பேரை சொல்லிவிட்டு முக்கியமான நம்ம ஆளை சொல்லாமல் விடலாமா?

விசையம் தெரிந்து அவசராக அழைத்த தங்கமணி, என்னா மச்சி ஆரமிச்சிடானுகளா? இவிங்க எப்பவுமே இப்படித்தான், அட விடுங்க பாஸ், இதுக்கெலாம் பயந்தா தொழில் பண்ண முடியுமா?

சரி, சரி, நோட்டு பேனா எல்லாம் ரெடியா இருக்கு, சீக்கிரம் சொல்லுங்க, எங்க எல்லாம் இன்சூரன்ஸ் இருக்கு, எங்கே எல்லாம் இன்வெர்ஸ்மென்ட் இருக்கு, யார் யார் உங்களுக்கு எவ்வளவு தரனும், நீங்க யாருக்காவது தரணுமான்னு, நிறுத்தாம பேசுது என் செல்லம்?

எவ்வளவு கேள்வி? என்ன ஒரு அக்கறைன்னு, நான் அப்டியே ஷாக் ஆகி சொன்னேன்?முடிவே ஆகிடுச்சா? நான் வேணும்னா ஒரு மாப்ளையும் பார்த்து சொல்லவான்னு கேட்டா? அதுக்கும் அசரலையே!

ஐய்யய்யோ...திரும்பவும் மொதல்ல இருந்தாதாதாதா...மீ பாவம்ன்னு சொல்லுது அம்மிணி, ஐய்யோ ஐயோ...இன்னும் சின்ன புள்ளையாவே இருக்கு.

நன்றி.
 

Blogger Widgets