Saturday, January 2, 2010

தமிழ் பதிவர்கள் அளித்த ஷாக்!

புது வருடத்தின் ஆரம்பமே அருமையாக இருக்கிறது என்று நினைக்கிறேன் :-).



அது எல்லாம் சரி, இடுகையின் தலைப்பு ஏன் நம்ம "கனவுகளே சுரேஷ்" இடுகை போலவே இருக்கிறது?

வருடத்தின் முதல் பதிவே "காப்பியா"! என்று கேட்க வேண்டாம்.

அதே போல அல்ல, இது அதே இடுகைதான் "நன்றி சுரேஷ்".
(அந்தந்த தளத்துக்கு செல்ல, அந்தந்த பெயர்களில் சொடுக்கவும்).

இன்று காலை நண்பர் சுரேசின் தமிழ் பதிவர்கள் அளித்த ஷாக் இடுகையை பார்த்து விட்டு, சரி நம்ம சுரேசுக்கு ஓட்டாவது போடுவோம் என்று தமிழ்மணம் தளத்துக்கு சென்றேன்.

வந்தது வந்தாச்சு,வேற யாருக்கு எல்லாம் ஓட்டு போடுவது என்று பார்த்தால்...நம்ப முடியவில்லை...வில்லை...ல்லை...லை.

அட நம்புயா, "எங்கம்மா சத்தியமா நானும் ரவுடிதாயா" என்று வடிவேலு சொல்லுவது போல் "பொருளாதாரம், வணிகம் தொடர்பான கட்டுரைகள்" பிரிவில் நம்ம கடன் அட்டை! தெரிந்ததும் தெரியாததும்! இடுகையும் இடம் பெற்று இருக்கிறது.



எத்தனையோ பெரிய பதிவர்கள் இருக்கும் களத்தில், என்னையும் முதல் சுற்றில் தூக்கி விட்ட பதிவர்கள் அனைவருக்கும் நன்றி...நன்றி...என் மனமார்ந்த நன்றி!.

மேலும் நண்பர்கள் அனைவரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

எனக்கு இருக்கும் அத்தனை ஓட்டையும் வீணாக்காமல் பகிர்ந்து கொடுத்து விட்டேன், நீங்களும் உங்கள் ஓட்டை தமிழ்மணம் சென்று நம் நண்பர்கள் வெற்றி பெற உதவலாமே?

நன்றி!.
 

Blogger Widgets