Friday, May 15, 2009

டெல்லி பாகம்- III - சோட்டுவின் தலைவலி நடிப்பு

எங்க குரூப்ல , நண்பன் காதரும், குரு ராஜேஷும் மட்டும் வேலை பாத்த நாட்கள் அது, மத்த நான், சோட்டு-கார்த்தி, வில்ஸ் விஜி,குமார், ஜான் எல்லோருக்கும் வேலை தேடுறது தான் வேலை, தினம் காலையில குருவும், நண்பனும் , வேலைக்கு போகும்போது, எங்களுக்கு அம்பது ரூபாவும் நாலு வில்ஸ் சிகரெட், நாலு கிளாசிக் ரெகுலெர் சிகரெட் (ரெண்டு பேரும் வேற வேற பிரண்ட்) குடுத்துட்டு போவாங்க, இந்த அம்பது ரூபா எதுக்குனா நாங்க "வாக் இன் இன்டெர்வியு" போக, மத்த நேரத்துல எதாவது படிக்கணும் இல்லேன்னா ஹிந்தி பழகனும்னு கண்டிசன்வேற (நாங்க ஹிந்தி பழகுன கதைய அடுத்த பதிவில் சொல்றேன்) கார்த்தியும் விஜியும் வயசு கம்மிங்கரதால அவங்களுக்கு கண்டிசன் ரொம்ப ஜாஸ்தி.

அப்ப சாப்ட்வேர் கம்பெனில ஜாவா ப்ரோக்ராமர் ஜன்னலுக்கு வெளில புல்லு மேஞ்ச மாடு கூட, அமரிக்காவுக்கு பிசினஸ் கிளாஸ்ல போய் பால் கறக்க முடியுற நேரம் (இப்போ ஒரு கல்ல எடுத்து ஜன்னலுக்கு வெளில கூட்டத்துல எரிஞ்சா, அது கண்டிப்பா ஜாவா ப்ரோகிராம் தெரிஞ்ச ஒருத்தர் மேலதான் படுங்கிறது வேற விஷயம்) அந்த அடிப்படை ஆர்வத்தில் மக்கள் எல்லாம் ஜாவா புக்கும், நான் நெட்வொர்க் புக்கும் எடுத்துட்டு படிக்க (படிக்கிற மாதிரி படம் காட்ட) உக்காந்துருவோம், நண்பனோட ஒரு சிஸ்டம் இருந்தது அதுல வேற போட்டி போட்டுக்கிட்டு ஆர்வமா படிக்கிற மாதிரி யாராவது உக்காந்துருவோம் எதுக்குனா, மக்கள் ரெண்டும் வேலைக்கு போனவுன்ன கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் "தல"யோட "என்ன சொல்ல போகிறாய்" பாட்ட போட்டுக்கிட்டு "டேவ்-2 கேம் விளையாட" .

அதையும் தாண்டி பசங்க எதாவது எசகு பிசகா பண்ணி நண்பன்கிட்ட மட்டிக்கிட்டா, "ராஜ் ஆர்யன் மல்கோத்ர" (ராஜேஷ்) தான் நண்பன் "நாராயண் ஷங்கர்" கிட்ட இருந்து காப்பத்த டிராம் அடிச்சுகிட்டே வருவாரு (Mohabbatein படம் பார்த்தவர்களுக்கு புரியும்) இந்த பேர இவங்களுக்கு யார் வச்துனு கண்டுபிடிக்க "யாரோ@யாஹூ.காம்" ன்னு ஒரு ஐடி எல்லாம் கிரியேட் பண்ணி ட்ரை பண்ணுனாங்க.

சரி, விஷயத்துக்கு வருவோம்,

இப்படியே, நாங்களும் நாள ஒட்டிகிட்டு காலைல வேலை தேட, மதியம் முழுக்க வீட்டுல தம்மடிக்க சீடி பாக்கனு பொழுத போக்குவோம், சரியா ஆறு மணியானா திரும்ப ரெண்டு பசங்களும் புத்தகம் சிஸ்டம்னு போய் உகந்துருவங்க, நண்பனும் குருவும் குளிர்காலமா இருந்தா ஓல்ட்மக் ரம், கோடை காலமா இருந்தா பீருன்னு ஏதாவது வாங்கிட்டு வர தினம் கல கலன்னு இருக்கும்.

இந்த ரெண்டுல விஜி எல்லா நேரமும் படுக்க தம் அடிக்கனு இருந்தாலும், நண்பன் கண்ன்னுல மட்டும் சரியா படிக்கிறப்ப மட்டும் தான் படுவான், சோட்டு-கார்த்தி எல்லாம் சரியாத்தான் பண்ன்னுவான், ஆனா ஏதாவது எடக்கு முடக்கா, பண்ணும் போது மட்டும் தான் மாட்டுவான், சுருக்கமா சொலனும்னா, நாள் பூர விஜி படம் பாக்க கேம் விளையடனு இருந்துட்டு புதம்கம் எடுக்கவும், சோட்டு-கார்த்தி நாள் பூரா படிக்க சிஸ்டம்ல வொர்க் பண்ணிட்டு ரிலாக்ஸ்சா ஒரு தம்ம பத்த வைக்கவும் நண்பன் பாக்கவும் சரியா இருக்கும், அன்னைக்கு பூரா எங்களுக்கு "டாம் & செர்ரி கார்டூன்" பார்த்த மாதிரி இருக்கும்.

ஒரு நாள் இப்படித்தான், நானும் விஜியும் படுத்துகிட்டு படம் பாத்துகிட்டு இருந்தோம், கார்த்தி சிஸ்டம்ல எதோ படிச்சிகிட்டு இருந்தான், அதோட இல்லாம விஜிக்கு அட்வைஸ் வேற பண்ணினான். விஜி வீணா மாட்டி பேச்சு வாங்காத, வா, வந்து எதாவது படி, இவர நம்பாத, இவர ஒன்னும் சொல்ல மாட்டங்க, அதயும் சேத்து நமக்கு தான் விழும்னு.

நானும் விஜியும், போ, தம்பி, போ ...எல்லாம் நாங்க பாத்துகிறோம், நீ ஒழுங்கா படிக்கிற வேலைய மட்டும் பாருன்னு சொல்லிட்டு, ஒரு புது பட சீடிய (திருட்டு சீடி) பாத்துக்கிட்டு இருந்தோம், நாங்க படம் பாக்க தாம் அடிக்கன்னு இருந்தது அவனுக்கு தாங்க முடியல, விஜி எதுக்கோ போக, இவனும் வந்து ஒரு தம்ம பத்த வச்சுக்கிட்டு படுத்துகிட்டு படம் பாக்க ஆரம்பிச்சான்.

திரும்பி வந்த விஜி போய் சிஸ்டத்துல ஒக்கார, நான் எதுக்கோ வெளிய வந்தேன், வரும் போதே நண்பன் வர்ரத பாத்துட்டு உள்ள போய் "சோட்டு, இப்படி படுத்துகிட்டு தம்மோட படிக்காம படம் பாக்குறத நண்பனோ, அண்ணனோ மட்டும் பாத்தா என்னடா பண்ணுவனு" அவன இழுத்து விட....

அவன் கொஞ்சம் கூட யோசிக்காம, படம் பாத்து கிட்டே சட்டுனு எழுந்துரிச்சு தலைல கைய வைச்சுகிட்டு " அண்ணே ஒரே தல வலிண்ணே-னு பிட்ட போட்டு எஸ்கேப் ஆவமுலான்னு சொல்லிகிட்டுடே திரும்ப" அங்க இவன் நிக்கிறதா பாத்தவுன்ன முகத்துல ஒரு எபெக்ட் கொடுத்தான் பாரு, இந்னிக்கும் எனக்கு அந்த முகம் நியாபகம் இருக்குனா பருங்க.

அவளோதான் நண்பனுக்கு ஒரே காண்டு, உடனே, எடு உன் பெட்டிய, கிளம்முமா நீ, இனி இங்க இருக்காத தமிழ் நாட்டுக்கு போனு செம வசை பாடிட்டான், இவனும் ஒன்னும் பேச முடியாம வெளியே போய் நின்னுகிட்டு இருந்தான்.

அப்பறம் வழக்கம் போல, டிரம் அடிச்சுகிட்டே "ராஜ் ஆர்யன்" (ராஜேஷ்) வந்து காப்பாத்தி விட்டார்.

இன்னைக்கு அமரிக்கவுல கிரீன் கார்டு BMW எல்லாம் வச்சு இருந்தாலும், எப்ப போன் பண்ணினாலும் மறக்க முடியுமான்னு கேட்பான்.










நன்றி மீண்டும் சந்திப்போம்
 

Blogger Widgets