Wednesday, October 28, 2009

நான் ஆத்திகனா! நாத்திகனா!

குறை நிறைகளை மட்டும் தேடும் ஒரு மனிதனின் மனநிலையை சொல்வதை தவிர, இங்கு எந்த மத மற்றும் மத இதிகாசங்களை இழிவு படுத்துவது என் நோக்கமல்ல.

எந்த ஒரு தனிப்பட்ட மதத்தை மட்டும் விரும்பும் மதவாதிகளின் புத்திக்கு புரிந்தாலும், "மதவாத" மனம் ஏற்றுக் கொள்ளாது என்பதால், அவர்கள் இந்த பதிவை தவிர்ப்பதால், நாம் "தேவையற்ற" விவாதத்தை தவிர்க்கலாம்.


பிறந்தவுடன் நீ ஒரு இந்துவகிறாய் என்றார்கள் கீதையை படித்தேன், ஆகா எத்தனை அருமையான அறநெறி கருத்துகள்.



ஆனால், பிறப்பின் தவறுக்கு காரணமான அந்த பெண்ணுக்கு கிடைக்க வேண்டிய எல்லா துன்பமும் அவமானமும், ஏன் கர்ணனுக்கு மட்டும் இறக்கும் வரை துரத்தியது?

இத்தனைக்கும் அவன் நல்லவன் ,கொடைவள்ளல், அவனுக்கு மட்டும் "செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்தது" என்று ஏன் இங்கு ஒரு சப்பை கட்டு?

அதே போல் எந்த ஒரு "கடனும்" அந்த தாயை கடைசிவரை ராஜ மாதா அந்தஸ்தில் இருந்து இறக்கிவிட வில்லையே? என்றேன்!

ஏனிந்த "பக்(bug)" என்றேன்?

இந்துவாகிய பிறப்பின் காரணத்தால், உன்னை மன்னிக்கிறோம் என்று, என் கேள்வியே எனக்கு பதிலாய் தர பட....

அது கூட சரி, ஆனால் எல்லாம் "நானே" என்றுதானே சொல்லி இருக்கிறது!, பின் ஏன்? நாம் சைவம், வைணவம் என்று பேசுகிறோம்? அப்படி என்றால் ஹரியும் சிவனும் ஒன்னு இதை அறியாதவன் வாயில் மண்ணு என்பது உண்மை இல்லையா?

மேலும் இதில் மற்ற மத கோவில்கள் அவமதிப்பதை பற்றி இதில் ஒரு வார்த்தை கூட இல்லையே?

பின் ஏன்? வரலாற்றை காரணம் காட்டி, இப்போதுள்ள புனித கோவில்கள் இடிக்கப்படுகின்றன (இது எல்லா மதத்துக்கும் பொதுவான கேள்வி?) என்றேன்.

பகவத்கீதையை மதிக்க தெரியாத நீ... எப்படி இந்துவாக இருக்க முடியும் ஓடிப்போ என்றார்கள்.

எனக்கு வந்தது கோவம், கீதையில் படித்ததை போல பிடி சாபம் என்று,

"எது நடந்ததோ, நடக்கிறதோ, நடக்க போகிறதோ, அது நன்றாகவே நடந்தது, நடக்கிறது, நடக்கும்" என்ற கீதை வாசகத்தை நினைத்து கொண்டு...

கிரிஸ்துவ பள்ளியில் போய் சேர்ந்து விட்டேன், இங்கு படித்த ஏழு ஆண்டுகளில்,

கருனையின் திரு உருவமான இந்த மகானை வணங்கும் போது இருக்கும் நம் பணிவு, கருணை, ஏன்! மற்ற எல்லா இடத்திலும் நமக்கு மறந்து போகிறது என்றேன்?, நீ புதிது நன்றாக படி என்றது பதில்.

சரி என்று, பழைய ஏர்பாடு, புதிய ஏர்பாடு என்று இன்னும் ஆழமாக போக, முத்து முத்தான அன்பு, அமைதி வாழ்கையின் வழிகாட்டி கருத்துகள் அதில்.



ஆனால், எதிரிக்கும் கருணை காட்டு, சுகமோ துக்கமோ, பழரசம் அருந்தி கொண்டாடுங்கள் என்றுதானே சொல்லி இருக்கிறது?

அதாவது தனியாக இனிப்பு, புளிப்பு, கசப்பு என்றில்லாமல், பழரசம் அருந்தும் ஒரு சமமான மன நிலையை, உணர்வை போல, வெற்றியும் தோல்வியும் சமமாக பாருங்கள், நண்பனையும் எதிரியையும் சமமாக மதியுங்கள் என்றுதானே இருக்கிறது.

அதற்க்கு எதுக்கு, நாம் நம் நாட்டில் கிடைக்கும் பழரசமெல்லாம் விட்டு விட்டு, வெளிநாட்டு திராச்சை மதுவகையை தேடுகிறோம்? எந்த ஒரு குறிபிட்ட காலாசாரத்தையும் பின் பற்றுங்கள் என்று இதில் எங்கும் சொல்ல வில்லையே?

அனைவரிடமும், கருணை காட்டு என்று சொன்ன எந்த இடத்திலும் இதில், மற்ற மத ஜாதி பாகுபாடுகளை குறை சுட்டி காட்டி, அவனை என்னிடம் கூட்டிக்கொண்டு வா என்றோ, ஒருவனை தாழ்த்தி என்னை உயர்த்து என்றோ, எங்கும் இதில் காணவே இல்லையே! என்றேன்?

பைபிளை மதிக்க தெரியாத நீ... எப்படி கிரிஸ்துவனாக முடியும் என்று வெளியே கை காட்டப்பட்டது,

"யார் உன்னை விட்டு பிரிந்தாலும் நான் உன்னை விட்டு ஒரு போதும் பிரிவதில்லை" என்ற பைபிள் வாசகத்தை நினைத்து கொண்டு, "தட்டுங்கள் திறக்கப்படும்" என்ற அவரின் சொல்லை சுவற்றில் மட்டும் வைத்திருப்பவர்களை பார்த்து சிரித்து கொண்டே ...

நான் வெழியில் வர, என் வாலிப வயது உள்ளே வந்தது, அது வரை சிறுவர்கள் நட்பாய் இருந்ததால் கவனிக்க தவறியது அப்போது புரிந்தது, என்னை பார்த்தால் முகத்தை மூடிகொண்டாள், இத்தனை வருடமாய் என்னோடு விளையாடிய பக்கத்து வீட்டு சகோதரி. ஏன்? என்று எனக்கு புரியாவிட்டாலும்.

அந்த இனிமையான தொழுகை ராகத்தை கேட்டுகொண்டே சூரியன் அடிவானத்தில் மறைந்து போவதை எப்போதும் போல் அன்றும் பார்க்க மொட்டை மாடிக்கு ஓடிய போது,
இஸ்லாமியத்தை, ஏன் படிக்க மறந்தாய் என்றது அடிமனது.

மாமன் மச்சான் என்று பழகிய, இத்தனை நண்பர்களின் குடியிருப்பு நம்மை சுற்றி இருந்தும், இத்தனை நாள் இது ஏன் தோணாமல் போய்விட்டது என்று?

அரபு புரியாததால் திருமறை குரானில் "லாஇலாஃக "இல்லல்லாஃ முஹம்மதுர் ரசூலுல்லாஃ" என ஆரம்பத்தில் பெரியவர்களிடம் இருந்து கேட்டறிந்தது.

வணக்கத்துக்குரிய நாயன் ஏக ஒருவனைத் தவிர வேறு இல்லை; முஹம்மது (சல்) அவர்கள் இறைவனின் திருத்தூதர் ஆகும்" என்பதை உள்ளப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதே இஸ்லாமியர் என்பதற்கான அடிப்படை தகுதியாகும், "இதை உறுதிபட ஏற்றுக்கொண்டவன்" திருக்குர்ஆனிலுள்ள ஏனைய மறைவான விடயங்களை ஏற்றுக்கொள்வது கடமையாகிறது என்பதில் தொடங்கி.

மலக்குகள், முன்னைய வேதங்கள் மற்றும் இறைதூதர்கள், இறப்பின் பின் வாழ்க்கை, நம்பிக்கை (கலிமா), பிரார்த்தனை (தொழுகை), நோன்பு (விரதம்), தானம் (சக்காத்து), புனித பயணம் (ஃஅஜ்), மற்ற கடமைகள், இறைவனை நினைவுகூர்தல், சன்னி மற்றும் சியா சுஃபி போன்ற பிரிவுகள், உணவு மற்றும் உடை என்று முஹம்மது நபிக்கு எல்லாம் வல்ல இறைவனால் கொடுக்கப்பட்டதை படிக்கும் போது, எவ்வளவு நல்ல கருத்துக்கள் இந்த 6666 வசனங்களுக்குள், இறைவனை தவிர இதை யாராலும் தர இயலாது என்று புரிந்தது.



ஆனால், இத்தனை நல்ல புனித கருத்துக்களில், முகத்தை மறைப்பது போல சில நடைமுறை வழக்கங்கள் கட்டாயமாக்கப்படவில்லையே? அப்படி என்றால் முகத்தை மறைகாதவர் இஸ்லாமியர் இல்லையா?

மேலும் இதன் முதல்வரியே "இல்லல்லாஃ முஹம்மதுர் ரசூலுல்லாஃ" என்பதை உள்ளப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதே இஸ்லாமியர் என்பதற்கான அடிப்படை தகுதியாகும், "இதை உறுதிபட ஏற்றுக்கொண்டவன்" திருக்குர்ஆனிலுள்ள ஏனைய மறைவான விடயங்களை ஏற்றுக்கொள்வது கடமையாகிறது என்று தானே சொல்லி இருக்கிறது.

இதை ஏற்காத மற்றவர்களை பற்றி கவலை பட இதில் எதுவுமே இல்லாத போது, நாம் ஏன்? இதை புரியாத அல்லது ஏற்காதவர்களிடம், நாம் ஏற்றுக்கொண்டது "சரி" என்று வாதிட அல்லது புரியவைக்க முயற்சிக்க வேண்டும்?

மேலும் இதை ஏற்று கொள்வதாய் சொல்லும் ஒருவனோ ஒருத்தியோ, இதை ஏற்காத குடும்பம் என்று தெரிந்தும், அன்பை காதலெனும் விதையாக்கி, இதை ஏற்றால்தான் இணைய முடியும் என்று மற்ற வழிகளை அடைத்து அந்த இருவரின் சந்தோசத்துக்காக, மாறு பட்ட கொள்கையையுடைய இரு குடும்பத்தை ஏன்? துன்பத்துக்கு ஆளாக்க வேண்டும்?

நம்மால் நிகழும் ஒவ்ஒரு துன்பத்துக்கும், எல்லாம் வல்ல இறைவனிடம் தண்டனை உண்டு என்று, இறப்பின் பின் வாழ்க்கை பகுதியில் சொல்லப்பட்டு உள்ளதே?

இது எதோ, கடவுளுக்கு துளியும் சம்மந்தம் இல்லாத, நடுவில் ஒருசில மதவாதிகளின் "சிறுபான்மை பெருபான்மை" தலைமுறை பெருக்க அரசியல் போல உள்ளதே? என்றேன்.

திருக்குரானை மதிக்க தெரியாத நீ... எப்படி இஸ்லாமியனாக முடியும் என்று இங்கும் வெளியே கை காட்டப்பட...

"இந்த குர் ஆனைப்போல ஒன்றை கொண்டு வருவதற்காக, அவர்களில் சிலர், சிலருக்கு உதவி புரிபவர்களாக இருந்தாலும் கூட இது போன்ற ஒன்றை அவர்களால் கொண்டு வர முடியாது. - (திருக் குர்ஆன்-17:88)" - என்ற குரானின் வாசகத்தை நினைத்து கொண்டு வெளியே வரும் போது...

உலக நாயகன் கமல் போல என்னை நானே கேட்டுக்கொண்டேன்!

வெல்... நான் என்ன கீதையை, பைபிளை, குரானை மதிக்க வேண்டாம் என்றா சொன்னேன், அதில் உண்மையாக இருக்கும் கருத்துக்களை எல்லோரும் மதித்து அதன் படி உண்மையாய் நடந்தால்! நல்லா இருக்கும் என்று தானே சொன்னேன்.

சரி, யார் என்ன சொன்னால் நமகென்ன, நம் மனதை கேட்டு பார்ப்போம், உண்மைல நீ யாரூடா செல்லம்? என்று எனக்குள் நானே குழம்பியபோது.

அட என்னப்பா இது? எப்படி சுருக்கினாலும் ஒரே பதிவில் முடிக்க முடியவில்லை?, அதுனால சின்னதா ஒரு சிங்கப்பூர் ட்ரிப் போயிட்டு வந்து நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம்.

தேடல் தொடரும்...

Sunday, October 25, 2009

சண்டே ஸ்பெஷல்

இது என் அடுத்த பதிவிற்காக தயார் பண்ணியது இல்லை, அவசர உப்புமா போல் இன்று மதியம்தான் தயார் பண்ணியது. இருந்தாலும் உங்களுக்கு பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

இன்று மதியம் வழக்கம் போல் என் ஜன்னலுக்கு வெளியில் கண்ணை கழுவிக்கொண்டு இருக்கும் போது, அடுத்த கட்டிடத்தை சுத்தம் செய்வதை பார்த்தேன்.

பல முறை, பல இடங்களில், கட்டிடம் சுத்தம் செய்வதை பார்த்து இருந்தாலும், தென்கொரியாவில் மிக வித்தியாசமாக இருப்பதை பார்த்தேன்.

ஒரு பாதுகாப்பு கயிறு கூட இல்லாமல், அவர்கள் அசாத்தியமாக இந்த வேலையை செய்கிறார்கள். வேலைக்கு நடுவில் ஒருவர் தன் செல்போனில் பேசியது என்னை வியப்பின் உச்சிக்கு கொண்டு சென்றது.

அவர்கள் அந்த வேலையை முடித்துவிட்டு வீட்டிக்கு போகும் முன், அது இங்கு உங்கள் பார்வைக்கு.

தென்கொரியா கட்டிட துப்புரவு வீடியோ



மேல் உள்ள வீடியோவை பார்க்க முடியாதவர்கள், இங்கு சொடுக்கி யு-டியூபில் பார்க்கவும்.


தென்கொரியா கட்டிட துப்புரவு படங்கள்

அசாதரணமாக அந்த கட்டிட உச்சியில், மூவர் வந்து கயிற்றை கட்டினார்கள்.



பலகையை தூக்கி வெளியில் போட்டார்கள்.



ஈர தரையில் கூட நாம் நடக்க யோசிப்போம், ஆனால் அவர்கள் யோசிக்காமல் தண்ணீரை "கண்ணாடி சுவர்" முழுவதும் அடித்தார்கள்.



இடுப்பில் ஒரு பாதுகாப்பு கயிறு கூட இல்லாமல், அசாதரணமாக ஒருவர்
வெளியில் குதித்தார்.



அவர் பலகையில் உக்காரும் வரை வெளியில் இருந்து பார்த்த இன்னொருவரும் குதித்தார்.



இருவரும் பலகையில் அமர்ந்த படி, தங்கள் கயிற்றை தாங்களாகவே இறக்கி கழுவ ஆரமித்தார்கள்.



மூன்றாம் நபர் பக்க வாட்டில் வந்து பின்னால் இவர்களுடன் சேர்ந்து கொண்டார்.



கட்டிடத்தின் உயரத்தை பாருங்கள்.



எவ்வளவு சாதாரணமாக வேலை நடக்கிறது பாருங்கள்.





அவர்கள் கீழே வந்ததும், போய் கையை கொடுத்து விட்டு, வீட்டிற்கு போனவுடன் என் இணையதளத்தை பாருங்கள் என்று சொல்லிவிட்டு (சும்மா ஒரு விளம்பரம்) வந்தேன்.

அப்போது தான் புரிந்து கொண்டேன், இவர்கள் சாதாரண கட்டிட பணியாளர்கள் மட்டுமே (நம்ம சித்தாள் மாதிரி).

இவர்களே இப்படி என்றால், தென்கொரியாவின் தீயணைப்பு படை, ராணுவம், கமாண்டோக்கள் பற்றி நான் சொல்லவா வேண்டும்.

என்ன, பதிவ படிச்சாச்சுல, இன்னைக்கு லீவுதான? சும்மா இணையத்துல கண்ண கழுவாம, போய் வீட்ட கழுவுங்க.

மீண்டும் சந்திப்போம், நன்றி.

Tuesday, October 20, 2009

நிர்வாண அலுவலகம்

"இருபத்தி ஒரு வயதிற்கு உட்பட்டவர்கள்" இந்த பதிவை தவிர்க்கவும்.

தலைப்பை பார்த்த உடன், உங்களுக்கு இது எப்படி பட்ட பதிவு என்று புரிந்து இருந்தாலும், இங்கு மீண்டும் சொல்ல வேண்டியது என் கடமை.

என் எழுத்தில் ஆபாசம் இல்லை என்று நினைத்தாலும், உங்கள் பார்வைக்கு சம்மந்தபட்ட படத்தில் இருக்கலாம் என்பதால், விரும்பாதவர்களுக்கு இந்த பதிவில் இருந்து விடுமுறை (குறிப்பாக சகோதரிகளுக்கு).

பள்ளிக்கு விடுமுறை விட்டாலும் பின்னூட்ட திடலில் வந்து, யாரும் என்னை கபடி ஆடக்கூடாது.

அட யாரும் திட்டாதிங்கப்பான்னு, இதுக்குமேல எப்படிப்பா சொல்ல முடியும்.


Disclaimer: - This article contains “adult-oriented material” therefore by reading this “Disclaimer” you are here to agree that you are 21 years old or above but not below. If you are not the intended above mention age group, please close this page. Intent of this personal blog article is to share the world unique free public news with online friends community on own language and it is not payable. In addition, the intent is not to bypass any copy rights act of the message body covered in this page only.


கற்காலத்தில் ஆடைகளின்றி காடுகளில் சுதந்திரமாக சுற்றித்திரிந்த மனித இனம், படிப்படியாக பரிணாம வளர்ச்சி அடைந்து உடை, உணவு, இருப்பிடம், உறவுமுறை என்று நாகரிகத்துக்கு மாறினாலும், வாழ்க்கை சக்கரத்தின் சுழற்சியில் மீண்டும் ஆரம்பித்த இடத்துக்கே செல்வான்.

அதாவது பர பரப்பான, நகர வாழ்கையை விட்டு விலகி ஓய்வுக்காக கடற்கரை, காடுகளை நாடி விடுமுறைக்கு, அல்லது வேலை ஓய்வு பெற்ற பின் மிச்சமுல்ல வாழ்கையை அமைதியாக நடத்த விரும்பி செல்ல ஆரமிப்பதே இதன் ஆரம்பம்.

என்பதை, எங்கோ, எப்போதோ படித்தது எனக்கு நினைவில் இருந்தாலும், இந்த விசையத்தை படித்த போது, அது உண்மைதான் என்று நினைக்க தோன்றியது.

அப்படி என்ன கருத்து இது?

திங்கள் முதல் வெள்ளி வரை வேலை செய்யும் நாம், வாரத்தில் ஒரு நாள் வெள்ளி மட்டும் அலுவலக உடை (Formal Dresse) இல்லாமல் நமக்கு பிடித்த இதர உடை(Casual Dress) அணியமுடியும் இல்லையா.

ஆனால் உடையே இல்லாமல் நினைத்து பார்க்க முடியுமா? அதாவது "நிர்வாணமாக" அலுவலகம் செல்ல முடியுமா என்றால்?

நீங்கள் என்னை எப்படி பார்ப்பீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன். ஆனால் அதை உண்மையாக்கி இருக்கிறார் ஒரு தனியார் விற்பனை அலுவலகத்தின் தலைமை நடத்துனர் "டேவிட் டயலோர்" என்பவர்.

ஆம், அந்த அலுவலகத்தின் நிறுவனதலைமை நடத்துனர் "டேவிட்" தன் தொழிலாளர்களை "நிர்வாணமாக" அலுவலகம் வர அனுமதி கொடுத்து தன் பணியாளர்களை (இன்ப) அதிர்ச்சிக்கு உள்ளாகினார், இதன் மூலம் தன் பணியாளர்களை வேலை திறன் மற்றும் கூட்டு நடவடிக்கை அதிகரிக்கமுடியும் என்ற எண்ணத்தோடு, ஒரு நாள் மட்டும் தன் பணியாளர்களை நிர்வாணமாக அலுவலகம் வர அனுமதித்தார்.

ஆனால், அவரே ஆச்சரிய படும் வகையில்! அந்த அலுவலக மக்கள் அவரின் "நிர்வாணவெள்ளி" திட்டத்தை வரவேற்று ஆதரவு கொடுக்க, வியக்கதக்க வகையில் அதனால் அவர்கள் தொழிலும் பெரும் வளர்ச்சியை கொடுத்துள்ளது.

நிதி நெருக்கடியில் இருந்த தன் நிறுவனத்தை காப்பாற்ற, பல தரப்பட்ட விளம்பர முயற்சியை பற்றி சிந்தித்த அவர், தன் அலுவலக பணியாளர்கள், துணிகளை களைவதன் மூலம் தங்கள் மனதில் இருக்கும் அழுக்கான சிந்தனைகளையும் களைந்து விட்டு, ஒருவருக்கொருவர் "திறந்த மனதுடன்" வெளிப்படையாகவும், நேர்மையாகவும் பேசிக்கொள்ள இது உதவும் என்றார். இதனால் வேலைத்திறன் அதிகரிக்கும் என்பது அவர் நோக்கம்.

மேலும் அவர் ஆடைகளைகளைந்து விட்டு அலுவலகம் வர அழைத்துதான், இது வரை தான் கையாண்ட வியாபார யுக்திகளில் உச்சகட்டமான யுக்தியாகும் என்றார்.



இது கேட்பதற்க்கு விந்தையாக இருந்தாலும், இது தான் எதிர்பார்த்த பலனை கொடுத்துவிட்டது என்றும், இது வார்தைகளில் விவரிக்க முடியாத தன்னைதானே மற்றும் மற்றவர்களை நம்பும் முகபாவ உணர்ச்சியாகும் என்பது அவர் கருத்து.

இனி இதற்காக அவர்கள் கையாண்ட முறைகள் மற்றும் பயிற்ச்சிகள்.

அநேகமாக அலுவலகத்தில் அனைவரும் ஆடைகளை இல்லாமல் வந்தாலும், ஒரு ஆணும், ஓர் பெண்ணும் மட்டும் சிறிய கருப்பு நிற உள்ளாடையோடு வந்தார்களாம்.

அழகிய இருபத்தி மூன்றுவயது, திருமணமாகாத "சாம் ஜாக்சன்" என்ற இளம் பெண் முழுவதும் நிர்வாணமாக வந்துள்ளார், இது பற்றி அவர் கூறுகையில் "அது ஒரு புத்திசாலிதனாமான எண்ணம்", ஏன் என்றால்? நாங்கள் ஒருவரை ஒருவர் பிறந்த மேனியாக பார்க்க முடிந்ததால், இப்போது எங்களுக்குள் உடல் வடிவமைப்பை பற்றி எந்த ஒளிவு மறைவும் கிடையாது என்றார்.

மேலும் இப்படித்தான் வரவேண்டும் என்று எங்களுக்கு எந்த நிர்பந்தமோ, நெருக்கடியோ எங்கள் நிர்வாகம் கொடுக்கவில்லை, எங்கள் விருப்பபடி முழு உடையுடனோ அல்லது உள்ளாடையுடனோ வந்திருக்க முடியும், ஆனால் நான் முழு நிர்வாணமாக வருவதயே விரும்பினேன், என் உடல் ஒன்றும் அவ்வளவு பார்க்க முடியாத வடிவத்தில் இல்லை என்று நினைக்கிறேன் என்றார், அந்த அழகு மங்கை.

மேலும் நாங்கள் அனைவருமே அழகானவர்கள், எங்களிடம் உடலில் பெரிது, சிறிது என்ற அளவு வித்யாசத்தை தவிர, வேறு எந்த மாற்றமும் இல்லை என்பது அவர் கருத்து.

ஒரு வார காலத்திற்கும் மேலாக அந்த அலுவலக பணியாளர்கள் "நிர்வாண வெள்ளி" திட்டத்துக்காக பயிர்ச்சி எடுத்துக் கொண்டார்களாம்.

முதலில் அவர்களை அவர்கள் உடல் உறுப்பை ஜெராக்ஸ் எடுத்துக் கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்பட்டதாம், உடன் வேலை பார்த்தவர்கள் கைகளையும், கால்களையும் ஜெராக்ஸ் எடுத்தாலும், "சாம் ஜாக்சன்" தனது மார்பகத்தை ஜெராக்ஸ் எடுத்தாராம்.

அதன் பிறகு அவர்கள் ஒரு நிர்வாண மாடல் பெண்ணின் உடலை வரைந்து, அந்த பெண்ணின் உடலமைப்பை பற்றிய அவள் எவ்வாறு உணர்ந்தாள்? என்ற கருத்தை கேட்டு புரிந்து கொண்டார்களாம்.

இறுதியாக அவர்கள் பிறந்த மேனியாக அலுவலகம் வர கேட்டுக்கொள்ள பட்டார்களாம், ஆனால் அவ்வாறு வர அவர்கள் விரும்பினால் மட்டுமே தவிர வேறு எந்த கட்டாயமும் இதில் இல்லை.

முதலில் கூச்சப்பட்ட சாம் இது பற்றி சொல்கையில்.

எங்களை மனம், உடல் ரீதியாகவும் தயார்படுத்தி உற்சாகப்படுத்த, டேவிட் தன் முழு ஒரு வார காலத்தை செலவிட நேர்ந்தது என்றார். முதன் முதலில் அலுவலகத்தில் காலடி எடுத்து வைக்கும் போது, ஒரு தயக்கமும், வெக்கமும் இருந்தாலும், என் இருக்கைக்கு சென்று அமர்ந்து என் வேலைகளை பார்க்க ஆரபித்தவுடன், நான் எந்த தயக்கமும் இல்லாமல் உற்சாகமாகவே உணர்ந்தேன் என்றார்.



நான் என் ஆடைகளை களைந்து விட்டு வர ஒரு காரணமும் இருந்தது, இது உணர்ச்சிகரமாக இருந்தாலும், நாங்கள் ஒருவருக்கொருவர் நேர்மையாக பேசிக்கொள்ள உதவியது, மேலும் அதன் பின் எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சி அதிவேகமாகிவிட்டது என்பதில் எங்கள் அனைவருக்குமே மகிழ்ச்சி என்றார்.

அந்த நிறுவனத்தின் நாற்பது வயது தலைவர் "மைக் ஓவென்" கூறுகையில், நாங்கள் பைத்தியமோ அல்லது முட்டாளோ! ஆனால் நான் மிக தெளிவாக அனைவரிடமும் சொல்லியது, இதில் எந்த கட்டாயமும் இல்லை, மேலும் உங்கள் "மனதுக்கு சரி" என்று பட்டால் மட்டும் செய்யுங்கள் என்பதே.

ஒரு ஆக்கபூர்வமான நிறுவனமாக எங்கள் வாடிக்கையாளர்களுக்கு எந்த வித தயக்கமோ பயமோ இல்லாமல் சேவை செய்ய முடிந்தது, இதை இரண்டு தொலைகாட்சி சேனல்கள் ஒலிபரப்பி, எங்கள் நிறுவனத்துக்கு மேலும் விளம்பரத்தை தேடிதந்தன என்றார்.

மேலும் இந்த முறையை தான் வியாபாரத்தில் புதுமையை விரும்பும் அனைவருக்கும் சிபாரிசு செய்வதாக சொன்னவர், இது "செக்ஸ் இல்லை" என்றார். நீங்கள் உங்கள் வியாபாரத்தில் புதுமையை புகுத்தும் போது, அது புத்துணர்ச்சியையும் சந்தோசமாக வேலை செய்யும் திறனையும் அதிகரிக்கும், இதையே நாங்கள் எதிர்பார்த்தோம் என்றகிறார்.

நான் (இது நான் சிங்கக்குட்டி) கூட, சமீபத்தில் இதே போல வேறு சில செய்தியைகளை படித்தேன்.

(I)- ஒரு நட்சத்திர விடுதி நிறுவனம் தங்கள் வியாபாரத்தை பெருக்க, ஒரு சில தளங்களை நிர்வாண பகுதியாக அறிவித்து இருக்கிறது, அதாவது அந்த பகுதியில் விடுதியில் தங்குபவர்கள் முதல் விடுதியில் வேலை செய்பவர்கள் வரை அனைவரும், உடைகள் எதுவும் இல்லாமல் பிறந்த மேனியாக உலாவ முடியும், மேலும் இத்திட்டதின் மூலம் அவர்கள் வியாபாரம் அதிக அளவில் பெருகி, முன் பதிவும் வருட கணக்கில் முடித்து விட்டதாம்.

(II) - தங்கள் திருமணத்தை பிறந்தமேனியாக நடத்தவே பலர் விரும்புவது, சிலர் செய்தும் காட்டி விட்டார்கள் இந்த புதுமையை (கொடுமையை)அதில் சில ஜோடிகள.





ஆக மொத்தத்தில் இது காலத்தின் "பரிணாம மாற்றமா?" அல்லது "கலி காலத்தின் கொடுமையா!" என்று எனக்கு புரியவில்லை, இதற்கு வரும் தலைமுறைகளுடன் சேர்ந்து காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

வெளி நாட்டுல என்னென்ன கொடுமை எல்லாம் நடக்குது பார்! என்று தங்கமணியிடம் காட்ட, சும்மா மத்த நாட்ட மட்டுமே குறை சொல்லாதிங்க.

இதுக்கு ஏன்? அவ்வளவு தூரம் போகணும், இதோ நம்ம நாடு கொல்கத்தாவில் நடந்த ஆடை அலங்கார போட்டிக்கு, நம்ம மந்த்ரா பேடி எப்படி "திறந்த மனதோடு" வந்து இருக்காங்க பாருங்கன்னு இந்த படங்களை காட்ட...!






வாயடைத்து போன நான் தங்கமணியிடம் கேட்டது...ஆடை அலங்கார போட்டி சரி!, ஆனா ஆடை எங்கமா?

மொத்தத்துல ஒன்னே ஒன்னு மக்களே, இதெல்லாம் பாத்துட்டு நானும் புதுமை பண்றேன்னு வர்ற வெள்ளிகிழமை அலுவலகத்துக்கு இது மாதிரி நீங்க போக முயற்சி பண்ணுனா! அதில் வரும் பின் விளைவுகளுக்கு நானோ, இந்த பதிவோ பொறுப்பில்லைங்க.

நன்றி! திரும்ப மீட் பண்ணுவோம்.

Wednesday, October 14, 2009

ஃபாரின் கால்

இனிய தீபாவாளி நல்வாழ்த்துக்களுடன் தொடங்கினாலும், வெளிநாட்டு மோகத்தில் கனவுகளுடன் வாழும் மற்றும் படிக்கும், என் இந்திய சகோதர சகோதரிகளுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.

மேலும் நாம் நாகரீகமாக நினைக்கும் ஆங்கில தமிழ் எழுத்துக்களுக்கு மன்னிக்கவும்.


வெளியில் குளிர் மைனஸ் பத்து டிகிரி செல்சியஸ்-ல் பனி கொட்டிக்கொண்டு இருப்பதால், இன்று இரவு சரக்கோடு வீட்டுக்கு போ என்று ஐந்து மணிக்கே உள்மனது ஆசையை தூண்டியது.

சரி, சரக்க போடுவோம்ன்னு வாங்க போன போது, கடையில் காலிங் கார்டு கண்ணில் பட, சரி, வீட்டுக்கும் ஒரு போன போடுவோம்ன்னு வழக்கம் போல வாங்குறது எல்லாம் வாங்கிகிட்டு, வீட்டுக்கு போய் போன் பண்ணி பேசி முடிக்கப் போகும் போது, அம்மா சொன்னாள்.

டேய், நம்ம ரமேஷ் வந்துட்டு போனான்டா, நீ எப்ப ஊருக்கு வருவான்னு கேட்டான்? நீ கூட போனே பண்ணுறது இல்லையாமே?!, சின்ன வயசு படிப்போட கிராமத்துல வீடு விவசாயம்னு தங்கிட்டதால! எங்கள எல்லாம் மறந்துட்டானா-ன்னு கேட்டான்?

அப்படி இல்லப்பா, ஏதாவது வேலை பிசியா இருக்கும்ன்னு சொன்னேன், கண்டிப்பா உனக்கு போன் பண்ண சொல்லுறேன்னு சொன்னேன், மறக்காம அவனுக்கு பேசிடுப்பான்னு சொல்லிவிட்டு வைத்தாள்.

சரி, நம்ம மாப்ளதான, சரக்க போட்டுகிட்டே பேசுவோம்ன்னு, ஒரு பெக்க ஊத்திகிட்டே அவனுக்கு போன போட்டேன், தம்மடிக்க ஜன்னலை லேசாக திறந்த போது ஸ்காட்ச்சையும் தாண்டி குளிரியது.

டிங் டிங் டிங் ..."காதல் இருந்தால் சொல்லி அனுப்பு உயிரோடு இருந்தால் வருகிறேன்" என்ற பாடல் அடுத்த வரி போகும் முன் போனை எடுத்துவிட்டான்,

போனை எடுத்துவிட்டு, பக்கத்தில் யாருடனோ பேசினான் "ஏ செத்த சும்மா இருள, பாரின் காலு"

ஹெலோ...யாரு...ஏஏ அந்த மோட்டார அணைங்கப்பா டப டபன்னு ...

கடைசியாக எனக்கு பேச நேரம் கிடைக்க, என்ன மாப்ள வேலையா இருக்கியா? என்றேன் நான்?

திரும்ப எனக்கு பதில் சொல்லும் முன், பக்கத்தில் பேசிக்கொண்டான், அட பார்ரா மாப்ள பாரின்ல இருந்து பேசுறான்?

என்னடா!, இப்பதான் எங்க நியாபகம் வந்ததா? ஜப்பான் எப்படி இருக்கு? என்றான்.



ஜப்பான் அங்கேயே தான் இருக்கும், ஆனா நான் இப்ப கொரியாவுல இருக்கேன்டா தெரியாதா உனக்கு? என்றேன்.

ஓ...அப்படியா, உனெக்கென்ன மாப்ள!, நாடு நாடா சுத்துவ, நமக்கு இந்த வயலும் தென்னந்தோப்பும் விட்டா ஒன்னும் தெரியாது...சரி கொரியா எப்படி இருக்கு?

சூப்பரா...இருக்கு மச்சி, இங்க ரோடு எல்லாம் அவ்வளவு சுத்தம், பெருசு, ஒரே நேரத்துல பத்து பஸ் போகலாம்? கட்டடம் எல்லாம் அவ்வளவு பெருசு...

அப்படியா!, அதெல்லாம் சரி, ஏண்டா ஒரு போன் கூட பண்ணல? எங்கள எல்லாம் மறந்துட்டியா?

இப்ப நாங்க எங்க இருக்கோம் தெரியுமா? நம்ம துர்கா தோப்புலடா சரக்கடிக்க வந்தோம்,

"உன்னோட பேவரிட் துர்கா" இளநீ வெட்ட போயிருக்கு, அப்புறம் நம்ம செந்தில் வீட்டுல கோழி வேகுது, அதான் எல்லாம் இங்க வந்து நம்ம கேப்டனோட பட்டறைய போட்டோம்.

எல்லாம்னா? பசங்க கூட இருக்கானுகளா? ஆமா துர்கா எப்படி இருக்கா என்றேன்?

ஆமாடா, நானு, நம்ம செந்திலு, கோபி, பாலாஜி எல்லாம் இங்கதான் இருக்கோம் ஸ்பீக்கர்ல போடுறேன் பேசு.... துர்காவுக்கு என்னடா எப்பவும் போல கல கல-ன்னு இருக்கு ....

என்று அவன் பேசிக்கொண்டே இருக்கும் போதே, என் மனம் துர்காவை நினைத்தது.

பதிவுல டார்டாய்ஸ் எல்லாம் சுத்த முடியாததுனால, பிளாஷ்பேக் எல்லாம் வேற கலர் எழுத்து ஓகே (சரி,சரி முறைகாதிங்கப்பா).

சின்ன வயதில் அம்மா தவறியதால், அப்பாவோடு தோப்பு வீட்டில் இருந்தாள் அப்படி ஒரு அழகு, நிறம், நீளமான முடி என்று சாமுத்திரிகா லச்சனதுடன் இருப்பவள், நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள்.

அவள் அப்பாவும் நல்ல குணம் ராணுவத்தில் இருந்தவர், எங்களை அவர் பிள்ளைகளாகவே நினைப்பார், நாங்கள் அவருக்கு வைத்த செல்ல பேர் "கேப்டன்" எங்களோடு இருக்கும் போது துர்காவும் அவரை கேப்டன் என்று எங்களை போலவே கூப்பிடுவாள்.

சிறு வயது முதல் நாங்கள் நல்ல நண்பர்கள் என்பதால், எங்களுக்கு அவர் தோப்பில் முழு சுதந்திரம், ஒரு கால கட்டத்திற்கு பிறகு எங்களை வளர்ந்த பிள்ளைகளாக, ஒரு மூத்த நண்பன் போல நடத்தினார் (சரக்கு அவரோடது, சைடிஷ் எங்களோடது, மிக்ஸ்சிங் இளநீர் உபயம் துர்கா)

எனக்கு பிடித்த நெருங்கிய நண்பன் என்ற முறையில், நானும் கட்டுனா துர்கா மாதிரி ஒரு நல்ல பொண்ணைதான் கட்டுவேன் என்றும், அவள் உன்னைபோல ஒருத்தனை (ஒரு குடிகாரனை என்பது இங்கு சைலென்ட்) கட்ட சொன்னா அதுக்கு நான் அந்த கிணத்துல போய் குதிச்சுருவேன்னு (அவள் என்னைவிட நன்றாக நீந்துவாள்) சொல்லி ஒருவரை ஒருவர் காலை வாரி கேலி செய்வோம்.

அதை விட அவுங்கப்பா, எதுக்குடா? நம்ம எல்லோரும் சரக்கடிக்கும் போது, இப்படி முட்டை பொரியல் பண்ணிகொடுக்கவா? என்று நண்பர்களுடன் சேர்ந்து மேலும் என் காலை வாருவார்கள்.


ஹலோ...ஹலோ டேய் மாப்ஸ்?? என்ற குரல் என்னை நினைவிற்கு கொண்டு வர...
(சுத்துன டார்டாய்ஸ்ச நிறுதிக்குவோம்).

சொல்லுடா என்றேன் நான்.

என்னடா? லைன் கட் ஆகிடுச்சுன்னு நினைத்தேன் என்றான்!, உன் பேவரிட் வருது கொடுக்கவா? என்று அவன் சொல்லும் போதே, அவள் பேசுவது எனக்கு கேட்டது.

இன்னும் பேவரிட் என்ன பேவரிட், இங்கிட்டு கொடு அந்த போன என்று வாங்கியவள். என்னடா மாப்ள! எப்படி இருக்க என்றாள்?

எனக்கென்ன உங்களை எல்லாம் விட்டு தள்ளி இருக்கிறத தவிர நல்லா இருக்கேன், என்ன அப்படி சொல்லிட்ட, நீ எப்பவும் என் பேவரிட்தான-ன்னு சொன்னேன்.

டேய்...டேய் மச்சா...போதும்டா, கடைசி வரை வெறும் வாய் பேச்சோட சொல்லிட்டு, என்ன வச்சு சமாளிக்க முடியாதுன்னு பயந்துதான இன்னொருத்திய கட்டிகிட்ட, உனக்கு எம் புருஷன் எவ்வளவோ தேவலாம்டா என்றாள்?

(அப்போது தான் அவள் மாமா மகனை பேசி முடித்தாக பத்திரிகை வைத்ததை, என் அப்பா சொல்லியது நினைவில் வந்தது? விடுமுறைக்கு ஊருக்கு வரும் போது எல்லாம் அவனும் எங்கள் நண்பன்தான், துர்காவை போலவே விவசாய படிப்பில் ஆர்வம் கொண்டு பட்ட படிப்பை முடித்தவன்.)

எப்படி இருக்கா? என் தொங்கச்சி, உன்ன நல்லா பாத்துகிறாளா! அப்புறம் நீ போட்ட குட்டி, எம்மக எப்படி இருக்கா?, உம்மேல உச்சா அடிக்கிராளா இல்லையா? என் கல்யாணத்துக்கு கூட வராத உன் கூட பேச கூடாதுன்னு தான் இருந்தேன், என்று வழக்கம் போல மழை அடிப்பதை போல் பேசினாள்.

அப்படி இல்ல துர்கா, இங்க என்னோட ப்ராஜெக்ட் நிலை ரொம்ப மோசமா இருக்கு, அதான் ரெண்டு வருசமாகியும் ஊருக்கு வரமுடியல என்றேன்...வழக்கம் போல அவள் கொஞ்சம் கூட யோசிக்காமல் சொன்னாள்

பார்ரா! வாடி போடின்னு கலாய்ப்பான், இப்ப பேர சொல்லறான்? கல்யாணம் ஆனா உடன் நம்ம மாப்ளைக்கு அந்த பொறுப்பு வந்துருச்சு பாரு! என்று சிரித்துக்கொண்டே சொன்னவள்,
சரி சரி, அடுப்பை பார்க்கனும் வந்து பேசுறேன், நீ பசங்ககிட்ட பேசு, மச்சி என் வீட்டுகாரரும் இருக்கார்டா அவர்கிட்டையும் ரெண்டு வார்த்தை பேசு என்று, என் பதிலை எதிர்பார்க்காமல், போனை கொடுத்துவிட்டு போனாள்.

சொல்றா என்று போனை வாங்கிய நண்பன், ஆமா அங்க வெயில் எல்லாம் எப்படி இருக்கு என்றான்?

வெயிலா? டேய் இங்க ஐஸ் கொட்டுதுடா, ஊரே வெறும் ஐஸா கிடக்கு என்றேன்

அப்படியா மாப்ள, அப்ப சரக்கடிக்க ஐச தேடவேண்டி இருக்காது என்றான் சிரித்துக்கொண்டே.

இல்லடா, இந்த ஐஸ சாப்பிட முடியாது, ரோட்ட விட்டு ஓரமா ஒதிக்கி விட்டுடுவாங்க என்றேன் நான்.

என்னா...மாப்ள நீ, பெரியரோடு, உயரமான கட்டிடம், ரோடெல்லாம் ஐஸ்ன்னு எதுவுமே நமக்கு எந்த பிரயோஜனமும் இல்லாத விசையமா சொல்ற?

"ஊட்டில டி எஸ்டேட் இருக்கு நமக்கு இருக்கான்னு" கவுண்டமணி சொன்ன மாதிரி அவன் கேட்ட நியாமான கேள்விக்கு விடை தெரியாமல், அப்படி இங்க இல்லைனா ஊர்ல சொந்தமா வீட்ட வாங்க முடியுமான்னு சொல்லி சமாளிச்சேன்.

ஆ, மாப்ள வீடுன்னவுடன் நியாபகம் வந்தது, மேட்டருக்கு போவோம் எதுக்கு கூப்பிட சொன்னேன்னா?

(அடப்பாவி சிங்கக்குட்டி, அப்ப இன்னும் மேட்டரையே தொடாம மொக்கைய போட்டுக்கிட்டு இருக்கியான்னு?! நீங்க கேக்குற வருத்தத்துல, தங்கமணி முறைக்கிறத பாக்காத மாதிரி இரண்டாவது பெக்க ஊத்திகிட்டேன் :-)

நம்ம துர்கா தோப்புக்கு ஒட்டி இருக்கிற மாந்தோப்ப விலை பேசி இருக்கேன், இருபது ஏக்கர் எல்லாம் நல்ல ஜாதி மரம், நானு, துர்கா அப்புறம் நம்ம பாலாஜியும் வாங்க பாத்தோம், ஆனா அவன் மொத்தமா இருபதையும் தான் தர முடியும்னு சொல்றான், அதான் நீயும் சேந்தா முடிசிரலாம்னு துர்கா சொல்லுச்சு.

என்ன நீ ஒரு பத்து இல்ல பதினஞ்சு போட்டா போதும், அதான் கேக்கலாம்னு வீட்டுக்கு போனேன் என்றான்.

எந்த வங்கியில் எந்தனை வட்டி என்று கூகுளில் பார்க்க வேண்டும் என்று நினைத்து கொண்டே சொன்னேன், நான் லோன்தான் போடணும் மாப்ள என்றேன்.



ஐய்யய்யோ, அந்த இழவே வேணாம் மாப்ள! ஒத்த ரூபாய்க்கு ஒன்பது ரூபா வட்டி பிடிங்குவான், ஏண்டா? உன் கைல இல்லயா?-ன்னான்.

இல்ல, மாப்ள இப்ப தான் அமெரிக்காவுல பேங்க் எல்லாம் மூடி பொருளாதாரம் ரொம்ப பாதிச்சு இருக்கு, வேலையே பிரச்சனையா இருக்கு என்றேன்.

அட பாவி! உனக்குமா? ஒரு விசையம் தெரியுமா? இந்த தோப்பே, நம்ம குமார் போன தடவ லண்டன்ல இருந்து வந்தப்ப வாங்க ஆசைப்பட்டு முன் பணம் கொடுத்துட்டு போனதுதான்.

ஆனா, போன அதே வேகத்துல, எனக்கு போன போட்டு, எதோ வியாபார கட்டிடத்த இடிச்சுட்டாங்க (அதாண்டா பின்லேடன் ஆளுங்க), அதுனால எனக்கு வேலை போச்சு, இனி லோனும் கிடைக்காது அதுனால முன் பணத்த எப்படியாவது திருப்பி வாங்கி கொடுத்தாலே போதும்டான்னு சொன்னான்.

தோப்புகாரன் என்னடானா, பொண்ணு கல்யாணம் இருக்குன்னு பணத்த திருப்பி தர யோசிக்க, நாங்கதான் அந்த தோப்ப குத்தகைக்கு எடுத்துகிட்டு, நம்ம குமாருக்கு பணத்த கொடுத்தோம்.

நான் கூட குமார் சொன்னப்ப, அந்த கட்டடத்துலதான் மாப்ளயோட ஆபிஸ் இருக்கு போல, அத திரும்ப கட்டி முடிகிறவரைக்கும் வேலைக்கு என்னடா பண்ணுவேன்னு கேட்டா...?

அப்ப தான் தெரிஞ்சது, அதுவும் அமெரிக்காவுலதான் இடிஞ்தாமே?!.

ஆனா, எனக்கு ஒன்னு மட்டும் புரியல மாப்ள?

அமெரிக்காவுல கட்டடம் இடிஞ்சா, லண்டன்ல அவன் வேலை போச்சுன்னு அழுகிறான், அமெரிக்காவுல பேங்க்க மூடினா, கொரியாவுல நீ வேலை பிரச்னைன்னு பொலம்புற!

அது ஏண்டா மாப்ஸ், அமெரிக்காவுல எது நடந்தாலும், நம்ம ஊருகாரனுகள இப்படி தள்ளாட வைக்கிது? ஆனா, அவிங்க எல்லாம் எப்பவும் போல நல்லா வசதியாத்தான இருக்கானுக?!.



ஏகாதிபத்திய நாடுகளின் உலக பொருளாதார அரசியல் விளையாட்டை, இப்படி ஈசியாக கேட்பான்! என்று கொஞ்சமும் எதிபார்காத நான், மூன்றாவது பெக்கை எடுக்க.

கிச்சனில் இருந்து எட்டி பார்த்த படி என் தங்கமணி, இதோட உங்க வின்டர் கோட்டா மூணு முடிஞ்சது போதுங்க!, இல்லைனா இன்னிக்கு நீங்க சிஸ்டம் ரூம்லதான் என்றாள்.

போனில் என் பதில் இல்லாததால், மீண்டும் அவனே தொடர்ந்தான்.

அது என்னமோ மாப்ள, நமக்கெல்லாம் அமெரிக்காவுல இல்ல, இங்க நம்ம ஊர்லையே ஹைவேஸ் ரோடு போட, அரசாங்கம் நம்ம வீட்ட விலைக்கு எடுத்து, குடியிருக்க வீட்ட இடிச்சப்ப கூட, களத்து மேட்டுல நம்ம வேலை கருது அறுப்பு நிக்காம ஓடுச்சு.

அதுல வந்த காசையும், கையிருப்பையும் போட்டு தோட்டத்துல மாடியோட வீட்ட கட்டி, நாம பழைய அம்பாசிட்டர் காரை மாத்தி இப்பத்தான் புதுசா டாட்டா சபாரி எடுத்தேன், அதான் கொஞ்சம் பணமுடை, இல்லைனா நானே மிச்சத்தையும் ரெடி பண்ணி இருப்பேன் என்றான்.

எனக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை.

ஆனால் நாகரீக போர்வை, முகமூடி இல்லை என்றாலும், நம் சொந்த நாட்டில் வெளிநாட்டை விட அதிக வசதியுடன், மிகமுக்கியமாக நம் பாரம்பரிய சந்தோசத்துடன் வாழ வழி இருக்கிறது என்பது மட்டும் தெளிவாக புரிந்தது.



என் மவுனம் அவனுக்கு புரிந்து இருக்க வேண்டும்.

சரி, மாப்ள உடம்ப பாத்துக்க, ரொம்ப நேரமாச்சு, இத இங்க பாத்துக்கலாம், நம்ம இன்னொரு நாள் பேசுவோம் வேற யார் கிட்டையாவது பேசுறியா என்றான்?

பேச எதுவும் இல்லாமல், இருக்கட்டும் இன்னொரு நாள் பேசுவோன்னு சொல்லி போனை வைத்து விட்டு, திறந்த என் ஜன்னலுக்கு வெளியில் வெறித்து பார்த்தேன், பனிமழையில் என் முக பிம்பம் என்னை பார்த்து சிரித்துகொண்டே கேட்டது.

எல்லோரும், எல்லாம் இருக்கும் இடத்தை விட்டு விட்டு வந்து, இங்கு யாருமே, எதுவுமே இல்லாத இடத்தில் இயந்திரமாய் எதை தேடுகிறாய் என்று?

தேடுவதாய் நினைத்து வந்து, பாரின் வாழ்க்கை என்ற போர்வைக்குள் ஒளிந்து கொண்டு, நிஜ வாழ்கையை தொலைத்துக்கொண்டு இருக்கிறோமோ? என்ற சிந்தனையில் மெய் மறந்து இருந்த என்னை....

என் கணினி மேஜையில் இருந்து வந்த இனிய பெண் குரலில் பேசும் கடிகாரம் நினைவிற்கு கொண்டு வந்தது.

Good evening honey...are you sure still your evening is young?

It’s time to go to bed and you have scheduled server allocation meeting tomorrow morning 09.15 AM....also tomorrow is first of the month, so you have scheduled regular online transactions to India for Housing Loan Due, Marriage Lone Due, LIC Due.... Lets go to sleep early dear...Good Night.

Saturday, October 10, 2009

பதினெட்டு சித்தர்கள்

சித்தர்கள் என்றல் யார்? என்றும் தமிழ் சித்தர்கள் பதினெட்டு என்றும் கிடைத்த தகவல்களை பார்த்தோம்.

அருளும், அன்பும், சிவமும், அளவற்ற சக்தியையும் ஒருங்கே பெற்றுள்ள அந்த பதினெட்டு சித்தர்கள் திரு உருவங்களும், பெயரும், இன்றும் அவர்கள் அருள் தரும் சன்னதிகளின் விவரம் பற்றி தகவல்களை இங்கு பார்ப்போம்.

1- திருமூலர் - சிதம்பரம்

2- இராமதேவர் - அழகர்மலை

3- அகஸ்தியர் - திருவனந்தபுரம்

4- கொங்கணர் - திருப்பதி

5- கமலமுனி - திருவாரூர்

6- சட்டமுனி - திருவரங்கம்

7- கரூவூரார் - கரூர்

8- சுந்தரனார் - மதுரை

9- வான்மீகர் - எட்டிக்குடி

10- நந்திதேவர் - காசி

11- பாம்பாட்டி சித்தர் - சங்கரன்கோவில்

12- போகர் - பழனி

13- மச்சமுனி - திருப்பரங்குன்றம்

14- பதஞ்சலி - இராமேஸ்வரம்

15- தன்வந்திரி - வைதீஸ்வரன்கோவில்

16- கோரக்கர் - பேரூர்

17- குதம்பை சித்தர் - மாயவரம்

18- இடைக்காடர் - திருவண்ணாமலை

பதினெட்டு சித்தர்கள்களின் திரு உருவங்கள்.



மேல் சொன்ன பதினெண் சித்தர்களும் சமாதியான ஸ்தலங்களைப் பற்றி குறிப்பிடும், நெற்கட்டும் செவல் மன்னர் பூலித்தேவர் காலத்தில் உள்ள பழைய ஓலைச்சுவடியின் சான்று.

ஆதி காலத்திலே தில்லை திருமூலர்
அழகுமலை இராமதேவர்
அனந்த சயன கும்பழனி திருப்பதி கொங்கணவர்
கமலமுனி ஆரூர்
சோதி அரங்க சட்டமுனி கருவை கருவூரார்
சுந்தரானந்தர் கூடல்
சொல்லும் எட்டிக்குடியில் வான்மீகரோடு நற்
றாள் காசி நந்திதேவர்
ப்லாதி அரிச்சங்கரன் கோவில் பாம்பாட்டி
பழனி மலை போகநாதர்
திருப்பரங்குன்றமதில் மச்சமுனி
பதஞ்சலி இராமேசுவரம்
சோதி வைத்தீஸ்வரம் கோவில் தன்சந்திரி பேரையூர்
கோரக்கர் மாயூரங்குதம்பர்
திருவருணையோர் இடைக்காட சமாதியிற்
சேர்ந்தனர் எமைக் காக்கவே.

இது தவிர, மதுரை அழகர் கோவிலின் முன்பாக பதினெட்டாம் படி கருப்பண்ணசாமியாக உள்ள "பதினெட்டு படிகளும்", இந்த பதினெட்டு சித்தர்கள் ஆவார்கள். இவர்களுக்கு இங்கு ஆடி பதினெட்டு அன்று சிறப்பு பூசை நடைபெறுகிறது.

முதலில் சொன்னது போல், இந்த பதினெண் சித்தர்கள் பெயரிலும் பல கருத்தக்கள் கிடைக்கின்றன, அவற்றில் எனக்கு கிடைத்த சில,

1. கும்ப முனி, 2. நந்தி முனி, 3. கோரக்கர், 4. புலிப்பாணி, 5. புகண்ட ரிஷி, 6. திருமுலர், 7. தேரையர், 8. யூகி முனி, 9. மச்சமுனி, 10. புண்ணாக்கீசர், 11. இடைக்காடர், 12. பூனைக் கண்ணன், 13. சிவவாக்யர், 14. சண்டிகேசர், 15. உரோமருஷி, 16. சட்டநாதர், 17. காலாங்கி, 18. போகர் என்று கருவூரார் எழுதிய அட்டமாசித்து நூல் கூறுகிறது.

1. அகத்தியர், 2. போகர், 3. நந்தீசர், 4. புண்ணாக்கீசர், 5. கருவூரார், 6. சுந்தரானந்தர், 7. ஆனந்தர், 8. கொங்கணர், 9. பிரம்மமுனி, 10. உரோமமுனி, 11. வாசமுனி, 12. அமலமுனி, 13. கமலமுனி, 14. கோரக்கர், 15. சட்டைமுனி, 16. மச்சமுனி, 17. இடைக்காடர், 18. பிரம்மமுனி என்கிறது நிஜானந்த போதம்.

1. அகத்தியர், 2. போகர், 3. கோரக்கர், 4. கைலாசநாதர், 5. சட்டைமுனி, 6. திருமுலர், 7. நந்தி, 8. கூன் கண்ணன், 9. கொங்கனர், 10. மச்சமுனி, 11. வாசமுனி, 12. கூர்மமுனி, 13. கமலமுனி, 14. இடைக்காடர், 15. உரோமருஷி, 16. புண்ணாக்கீசர், 17. சுந்தரனானந்தர், 18. பிரம்மமுனி என்கிறது அபிதான சிந்தாமணி.

இனி இந்த சித்தர்ககள் வாழ்ந்த மற்றும் வாழும் காலத்தை இங்கு பார்ப்போம்.

எண் - சித்தரின் பெயர் - பிறந்த மாதம் - நட்சத்திரம் - வாழ்நாள் - சமாதியடைந்த இடம்.


1- திருமூலர் - புரட்டாதி – அவிட்டம் - 3000 வருடம் 13 நாட்கள் – சிதம்பரம்.

2- இராமதேவர்– மாசி – பூரம் - 700 வருடம் 06 நாட்கள் – அழகர்மலை.

3- அகத்தியர் – மார்கழி – ஆயில்யம் - 4யுகம் 48 நாட்கள் - திருவனந்தபுரம்.

4- கொங்கணர் – சித்திரை – உத்திராடம் - 800 வருடம் 16 நாட்கள் – திருப்பதி.

5- கமலமுனி – வைகாசி – பூசம் - 4000 வருடம் 48 நாட்கள் திருவாரூர்.

6- சட்டமுனி – ஆவணி - மிருகசீரிடம் - 800 வருடம் 14 நாட்கள் – திருவரங்கம்.

7- கருவூரார் – சித்திரை – அஸ்தம் - 300 வருடம் 42 நாட்கள் – கருவூர்(கரூர்).

8- சுந்தரானந்தர் – ஆவணி – ரேவதி - 800 வருடம் 28 நாட்கள் – மதுரை.

9- வான்மீகர் – புரட்டாதி – அனுசம் - 700 வருடம் 32 நாட்கள் – எட்டுக்குடி.

10- நந்திதேவர் –வைகாசி – விசாகம் - 700 வருடம் 03 நாட்கள் – காசி.

11- பாம்பாட்டி சித்தர் – கார்த்திகை – மிருகசீரிடம் - 123 வருடம் 14 நாட்கள் – சங்கரன்கோவில்.

12- போகர் – வைகாசி – பரணி - 300 வருடம் 18 நாட்கள் – பழனி.

13- மச்சமுனி – ஆடி – ரோகிணி - 300 வருடம் 62 நாட்கள் – திருப்பரங்குன்றம்.

14- பதஞ்சலி – பங்குனி – மூலம் - 5யுகம் 7நாட்கள் - இராமேசுவரம்.

15- தன்வந்திரி – ஐப்பசி – புனர்பூசம் - 800 வருடம் 32 நாட்கள் – வைத்தீச்வரன்கோவில்.

16- கோரக்கர் – கார்த்திகை- ஆயில்யம் - 880 வருடம் 11 நாட்கள் – பேரூர்.

17- குதம்பை சித்தர் – ஆடி – விசாகம் - 1800 வருடம் 16 நாட்கள் – மாயவரம்.

18- இடைக்காடர் – புரட்டாதி – திருவாதிரை - 600 வருடம் 18 நாட்கள் – திருவண்ணாமலை.

சித்தர்களின் யோகம் மற்றும் யோக முறைகள்

'யோகம்' என்பது 'யுஜ்' என்பதிலிருந்து 'யோக்' ஆகி வந்திருக்கிறது. அதாவது இணைத்தல் என்ற பொருளில். சிதறும் மனச் சக்தியைக் கூட்டுதல், ஆதியில் இருந்த நிலையில் தன்னைச் சேர்த்தல், யாதுமான சக்தியினிடம் சரணாகதியடைந்து அதனுடன் தன்னைச் சேர்த்தல், விசேஷ புருஷன் அல்லது இறைவனுடன் தன்னை இணைத்தல், - இதுவே யோகம்.

யோக, சமாதி நிலையை அடைய எட்டு அங்கங்களான

1- இயம,
2- நியம,
3- ஆசன,
4- பிராணாயாம,
5- பிரத்தியாகார,
6- தாரண,
7- தியான,
8- சமாதி.

எனப்படும் எட்டு படிகள் கூறப்பட்டதால் இந்த யோகம் 'அஷ்ட்டாங்க யோகம்' எனப்படும், யோக வழியை மனித இனத்துக்குத் தந்தவர் 'ஹிரண்யகர்பர்' என்பவராம். அதை சூத்திரங்களாக்கி வைத்தவர் "மஹரிஷி பதஞ்சலி" என்று சொல்லப்படுகிறது.

அறிவுச் செய்திகளை மறை பொருட்களை உள்ளடக்கி சூத்திரங்களாக வைத்தவர்கள், வேத உண்மைகளை பிரும்ம சூத்திரங்களாக வியாஸரும், பக்தி சூத்திரங்களை நாரதரும்,யோக சூத்திரங்களை பதஞ்சலி முனிவரும் மானிடம் உய்ய செய்துவைத்தனர். இவரை ஆதிசேஷனின் அவதாரமாக சொல்வர். நாரயணனின் படுக்கையே ஆதிசேஷன், சக்தியின் ஒரு விரல் மோதிரமாகியவர், இவ்வுலகை தன் தலையில் தாங்கிக்கொண்டிருப்பவர் எனவும் சொல்கிறார்கள்.

இவர் தந்தை: அத்திரி முனிவர்.
இவர் தாய்: கோணிகா.

இவரின் வேறு பெயர்கள்: அத்ரியின் பிள்ளையாகையால் 'ஆத்திரேயர்', கோணிகாவின் பிள்ளையென்பதால் 'கோணிகாபுத்திரர்'.

இவர் எழுதிய மூன்று நூல்கள்

1- யோகத்தினை விளக்கும் 'யோக சாஸ்திரம்',
2- மொழி இலக்கணமான 'மஹாபாஷ்யம்',
3- ஆயுர் வேத்மாகிய 'சரகம்' என்ற 'ஆத்திரேய சம்ஹிதை'.

ஆக மனம், வாக்கு, உடலு(மெய்)க்கான மூன்று நூல்களைச் செய்தவராகிறார்.

இந்த யோக நிலையை அடையுமுன், உலக வாழ்க்கையில் மேலாக எனப்படும் பொருள், புகழ், திறமை, பலம், சுகம் அடைவதற்கான எட்டு மஹா யோக 'சித்தி'களும் ஏற்படும்

யோக 'சித்தி' என்பது என்ன என்று தேடினால்?

அட்டமா சித்தி என்று மரபாகக் கருதப்படும் எட்டுத் திறமைகள் ஆகும். இவை இயற்கை அளித்த திறமைகள் எனவும் அற்புதத் தன்மை உடையன என்றும் கருதப்படுகின்றன. இவ்வாறான அட்டமா சித்திகளைச் சித்தர்கள் அட்டாங்க யோகப் பயிற்சியினால் பெற்றனர்.

அட்டமா சித்திகள்

1- அணிமா - அணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல்.

2- மகிமா - மலையைப் போல் பெரிதாதல்.

3- இலகிமா - காற்றைப் போல் இலேசாய் இருத்தல்.

4- கரிமா - மலைகளாலும், வாயுவினாலும் அசைக்கவும் முடியாமல் பாரமாயிருத்தல்.

5- பிராத்தி - மனத்தினால் நினைத்தவை யாவும் தன் முன்னே அடைய, அவற்றைப் பெறுதல்.

6- பிராகாமியம் - கூடு விட்டுக் கூடு பாய்தல்.

7- வசித்துவம் - அனைத்தையும் வசப்படுத்தல்.

8- ஈசத்துவம்(இறைத்துவம்) - நான்முகன் முதலான தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்தல்.

என்ற பல வியக்க வைக்கும் தகவல்கள் கிடக்கிறது.

ஆகவே, இந்த கலி காலத்தில் இறைவனை அடைய, மேல் சொன்ன சித்தர்களின் வாழ்வை படித்து அவர்கள் வாக்குப்படி நடப்போம்.

என் பதிவில் உங்கள் நேரத்துக்கு நன்றி சொல்லும் அதேவேளையில், எனக்கு தகவல் கொடுத்த அனைத்து புத்தகங்களுக்கும், இணையதளங்களுக்கும், பதிவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றி.

Monday, October 5, 2009

சித்தர்கள்

பதிவுக்கு முன் SASHIGA மேனகாவின் அன்பு விருதுக்கு என் நன்றி.



முகு:- என் சொந்த அனுபவத்தில் சொல்ல, நான் சித்தர் இல்லை என்பதால், இவை அனைத்தும் நான் படித்து திரட்டிய தகவல் மட்டுமே.

யுகத்தை பற்றி படித்த போது கலியுகத்தில் இறைவனை அடைய சிறந்த வழி சித்தர் வழி போவது என்று பார்தேன், அப்போது சித்தர் என்றால் யார்? சித்தர் வழி என்பது என்ன? மொத்தம் எத்தனை சித்தர்கள் என்று பல கேள்விகள் எழுந்தது?

நான் பல இடங்களில் தேடி படித்த வரை, சித்தர்கள் பற்றி முழுதாக சொல்கிறேன் என்பதும், உலக உருண்டைக்கு பொன்னாடை போர்த்துகிறேன் என்பதும் ஒன்று என்பதை நான் நன்கு புரிந்து கொண்டேன்.

அதனால் எதோ என் அறிவுக்கு திரட்ட முடிந்த தகவல்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

சித்தர்கள் யார்?



"சித்தர்" என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்று பொருள்.

சிவத்தை நினைத்து அகக்கண்ணால் கண்டு, தியானித்து தரிசனம் செய்து, ஆத்ம சக்தியை எழுப்பி, மனித சக்திக்கு அப்பார்பட்டு செயற்கரிய காரியங்களை செய்வது சித்த மூர்த்திகளது செயலாகும். இச் செயலை "சித்து விளையாட்டு" என்று ஆன்மீக ஞானிகள் கூறுவர்.

இன்று பல பிரசித்தி பெற்ற ஸ்தலங்களில் மூலவருக்கு அருகிலேயே சித்தர்கள் சன்னதி இருக்கிறது.

சித்தர்கள் யோகசமாதி அடைந்த இடங்கள் மகிமை பெற்ற திருத்தலங்களாக விளங்குகின்றன.

அந்த சன்னதியில் மனதை ஒருமுகப்படுத்தி இறைவனிடம் வேண்டினால் நினைத்தது நடக்கும், செய்வது வெற்றி பெறும் என்பது ஆன்மீகவாதிகளின் அசைக்க முடியாத நம்பிக்கை.

இன்று பழனிமலையின் பிரபலமும், சக்தியும் உலகம் அறிந்த ஒன்றாகும். அந்த ஸ்தலத்தில் நவபாஷானத்தால் குமரன் வடிவேலனை உருவாக்கியவர் யோக சமாதியை விரும்பிய போகர் என்ற சித்தரே.



அதே போன்று பிரசித்தி பெற்ற திருப்பதி மலை மீது கொங்கணவர் என்ற சித்தர் உள்ளார்.

காலத்தை வென்று மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தும், கூடு விட்டு கூடு பாய்ந்தும், மூச்சடக்கி மனித விமானங்களாக வானத்தில் பறந்தும், நவக்கிரகங்களை வசப்படுத்தியும் பலவாராக சாதனைகளைப் புரிந்த சித்தர்கள் மீவியற்கை (supernatural) சக்திகள் உடையவர்கள், எனினும் இவர்கள் உலகாயுத (material) இயல்புகளை சிறப்பாக அறிந்து பயன்படுத்தினர் என்பதுவே தகும்.

இவர்களின் மருத்துவ, கணித, இரசவாத, தத்துவ, இலக்கிய, ஆத்மீக ஈடுபாடுகள் வெளிப்பாடுகள் இவர்களின் உலகாயுத பண்பை எடுத்தியம்புகின்றன, ஆயினும் இவர்கள் வெறும் பொருளியல் வாதிகள் (materialists) அல்ல, மெய்ப்புலன் காண்பது அறிவு என்பதிற்கிணங்க, உண்மை அல்லது "நிசநிலையை" அடைய முயன்றவர்கள் சித்தர்கள்.

இவர்கள் இயற்கையோடு இயைந்து அதனைக் கருவியாகப் பயன்படுத்தி பல அற்புதங்களைச் செய்திருக்கிறார்கள். வெறும் சித்து விளையாட்டுகளோடு நிற்காமல், யோகம், ஞானம், வைத்தியம் போன்ற பல அரிய விஷயங்களை உலக நன்மைக்காக அருளிச் செய்த சித்தர்கள் தமிழ் மரபின் விதிவிலக்குகள். பொது வாழ்வு முறை, வழி முறைகளில் இருந்து வேறுபட்ட வாழ்வு, வழி முறைகளை உருவாக்கி. சித் - அறிவு, சித்தை உடையவர்கள் சித்தர்கள்.

சித்தர்களை அடையாளப்படுத்துவதோ, வரையறுப்பதோ கடினம். ஏனென்றால், ஒவ்வொருவரின் தனித்துவமும், மரபை மீறிய போக்குமே சித்தர்களின் வரைவிலக்கணம். தரப்படுத்தலுக்கோ, வகைப்படுத்தலுக்கோ இலகுவில் சித்தர்கள் உட்படுவதில்லை. எனினும், தமிழ் சூழலில், வரலாற்றில் சித்தர்கள் என்பவர்கள் என்றும் இருக்கின்றார்கள்.

சாதி, சமயம், சாத்திரம், சடங்குகள் மீறிய உலக நோக்கு, பொது இல்லற, துறவற வாழ்முறைகளில் இருந்து வேறுபட்ட வாழ்வு முறைகள். விந்தையான செயல்கள், பட்டறிவு தமிழ், சீரிய ஆராய்ச்சி ஆகிய அம்சங்கள் சித்தர்களை வருணிப்பன எனலாம். அப்படிப்பட்ட மேலோட்டமான வருணிப்புக்களுக்கு மேலாக, சித்தர்கள் என்பவர்கள் சித்தி அடைந்தவர்கள். தங்கள் இருப்பை (existence), உடம்பை, சிந்தையை, சுற்றத்தை, இவ்வுலகின் இயல்பை நோக்கி தெளிவான புரிதலை (understanding), அறநிலை உணர்வை (external awareness), மெய்யடைதலை (actuality) சித்தி எய்தல் எனலாம்.

இதை பற்றி அறிந்த, ஆராய்ந்த பலர், சித்தர்களை புலவர்கள், பண்டாரங்கள், பண்டிதர்கள், சன்னியாசிகள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், ஓதுவார்கள், கலைஞர்கள், கவிஞர்கள், அரசர்கள், மறவர்கள், ஆக்கர்கள், புலமையாளர்கள், அறிவியலாளர்கள், பொது மக்கள் ஆகியோரிடம் இருந்து வேறுபடுத்தி அடையாளப்படுத்தலாம் என்று சொல்லி இருக்கிறார்கள்.

இத்தகைய தகவல்கள் மூலம் சித்தர்களின் மரபை, கோயில் வழிபாடு, சாதிய அமைப்பை வலியுறுத்தும் சைவ மரபில் இருந்தும், உடலையும் வாழும்போது முக்தியையும் முன்நிறுத்தாமல் "ஆத்மன்", சம்சாரம் போன்ற எண்ணக்கருக்களை முன்நிறுத்தும் வேதாந்த மரபில் இருந்தும் வேறுபடுத்திப் பார்க்க முடிகிறது.

இன்று, சித்தர் மரபு அறிவியல் வழிமுறைகளுடன் ஒத்து ஆராயப்படுகின்றது. எனினும், சித்தர் மரபை தனி அறிவியல் கண்ணோட்டத்தில் பார்ப்பது அதன் பரந்த வெளிப்படுத்தலை, அது வெளிப்படுத்திய சூழலை புறக்கணித்து குறுகிய ஆய்வுக்கு இட்டு செல்லும் என்பவர்களின் கருத்தும் உண்மையாகிறது.

சித்தர்களின் கொள்கை என்பது, பரமாத்மா எங்கும் தனியாக இல்லை. நமது உடம்பு தான் பரமாத்மாவின் இடம் ஆதலால் கடவுளைத்தேடி எங்கும் அலைய வேண்டாம். உடம்பைப் பேணுவதே கடவுட்பணி, உடம்பினுள்ளேயே பரமாத்மாவைக் கண்டு மகிழ்ந்திரு என்பதே சித்தர் கொள்கை.

சித்தர்களின் வைத்திய முறைகள் காலம் குறிப்பிட முடியாத பழமையானதாக இருக்கிறது. பண்டைத்தமிழரின் விஞ்ஞான அறிவின் சிகரமே சித்த வைத்தியமாகும் என்று சொல்லப்படுகிறது.

மனித குலத்தைக் காக்கும் பொருட்டு, அன்றைய கலாச்சாரத்திற்கேற்பவும், மனித வாழ்க்கை முறைக்கு தேவையான, அனைத்து ஆரோக்கிய முறைகளையும் மிக எளிய வைத்திய முறைகளை, அனைவரும் செய்துகொள்ளும் பொருட்டு தந்தனர்.

அந்த முறைகளை, அவர்களின் இருப்பிடத்திலே அருகில் கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டு, மனித குலத்தைக் காத்து வந்தனர். மக்கள் அனைவரும், ஒழுக்கந்தவறாமல் வாழவேண்டும் என்றும், பொய், சூது, கொலை, குடி, விபச்சாரம், கூடா ஒழுக்கம் உடல் நோயை உண்டாக்கும் என்றும், யோகப்பயிற்சியிலே வாழ்வில் வெற்றி பெறமுடியும் என்றும் உடல் வலிமையுடன் நீண்டநாள் வாழ முடியும் என்றும் சித்தர்கள் பல பாடல்கள் பாடியுள்ளனர்.

"சித்தர்களில் சிலர் இரும்பைப் பொன்னாக்கும் (ரசவாதம்) வேலைகளில் ஈடுபட்டிருந்திருக்கின்றனர் என்றும் இந்த வகையான முயற்சி கடந்த நூற்றாண்டுகளில் உலகெங்கிலும் நடந்திருக்கின்றது என்றும் சொல்லப்படுகிறது.

மருந்துகளில் ரசம் முதன்மையானது. இதன் மூலம் இரசபஸ்பம், ரசசெந்தூரம், ரசக்கட்டு, முதலிய மருந்துகள் தயாரிக்கப்பட்டன. தீராத பல கொடிய நோய்களுக்கு இம்மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. ரசவாதம் என்றால் ரசத்தின் மாறுதல்களை அறிவது பொருள்.

போகர் எழுதிய பாடல்கள் வேதியல் தொடர்பான பாடல்களில் முக்கியத்துவம் பெறுகின்றன.

சித்தர்கள் கண்டறிந்த வாத வித்தையே சிறந்த விஞ்ஞான ஆராய்ச்சியாகும். உலோக வகைகள், உப்பு வகைகள், பாஷாண வகைகள், வேர் வகைகள், பட்டை வகைகள், பிராணிகளி்ன் உடம்பிலே உற்பத்தியாகும் கோரோசனை கஸ்தூரி, மூத்திரம், மலம் முதலியவைகளின் குணங்களை ஆராய்ந்து கண்டிருக்கின்றனர்.

காட்டிலும் மலையிலும் குகையிலும் வாழ்ந்து சித்தர்கள் தங்கள் ஆராய்ச்சிகளை நடத்தியிருக்கிறார்கள். நவீன பரிசோதனை சாலைகள் இருக்கவில்லை எனினும் அவர்களின் ஆராய்ச்சிகள் இன்றைய விஞ்ஞான ஆய்வுடன் ஒத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

சித்தர்கள் அவனன்றி ஓரணும் அசையாது என்று நம்பிக்கை உள்ளவர்கள் மக்கள் நூறாண்டுகள் தான் உயிர் வாழமுடியும் என்று நம்புகின்றனர். ஆனால் சித்தர்களின் நம்பிக்கை இதற்கு மாறானது. நூற்றுக் கணக்கான, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உயிர் வாழமுடியும் என்பது சித்தர்களின் நம்பிக்கை.

இஸ்லாமிய மதத்தின் சூஃபி மரபினரை தமிழ் சித்தர்களுடன் இணைத்து பார்க்கும் வழக்கும் உண்டு. இது எவ்வளவு பொருந்தும் என்பது கேள்விக்குறியானதே. எனினும் பல இஸ்லாமிய பின்புலம் கொண்டவர்களும் சித்தர்களாக எடுத்துக் கொள்ளப்படுகின்றார்கள்.



தமிழ்ச் சித்தர்கள்

தமிழ் நாட்டில் இருந்த சித்தர்கள் பதினெட்டுப் பேர் (பதினெண்சித்தர்கள்) என்று கூறுவர்.

இறையுணர்வில் முழுமையடைந்து, உயரிய இறைநிலை எய்திய, மருத்துவம், ரசாயனம், இயற்கை விஞ்ஞானம், தத்துவம் போன்ற பல துறைகளிலும் சிறந்து விளங்கிய அந்த பதினெட்டு மகான்களை, பதினென் சித்தர்கள் என்று அழைக்கிறோம்.

எனினும் பிற்காலத்தில் "பல சித்தர்கள் இவர்கள் வழியில் தோன்றினர்" என்றும், "ஒரே சித்தர் பல பெயர்களில் அழைக்கப்பட்டார்" என்றும், "பல சித்தர்கள் ஒரே பெயர்களில் அழைக்கப்பட்டார்" என்றும் வெவ்வேறு கருத்துக்கள் உள்ளன.

இந்தப் பதினெட்டுச் சித்தர்கள் யார், யார்? என்பதில் பலரது கூற்றுக்களில், சில பெயர்கள் மாறுபடுகின்றன. இதனால் முற்காலத்தில் உயரிய இறைநிலையை எய்தியவர்களின் எண்ணிக்கை பதினெட்டிற்கும் மேற்படும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை என்று விளக்கம் தரப்படுகிறது.

சித்தர்கள் அனைவருமே, தாம் உயர்நிலை எட்டியது மட்டுமின்றி, உலக மக்கள் நலனுக்காக பல விதங்களிலும், உயரிய நுட்பங்களை வெளிப்படுத்தியதன் மூலமும், தம்முடைய காலத்தில் பிறருக்காக செயல்கள் புரிந்தும், சேவை புரிந்துள்ளனர் என்பதை நம்மால் இத்தகைய கருத்துகளை படிக்கும் போது புரிந்து கொள்ள முடிகிறது.

பதினெட்டுச் சித்தர்களில் ஒருவரான குதம்பைச் சித்தர் ஒரு பெண் என்றும் சொல்லப்படுகிறது.

தமிழர்கள் மட்டும் தான் சித்தர்களா என்றால்?

பதினென் சித்தர்கள் சமாதி அடைந்த இடங்கள் பெரும்பாலும் இன்றையத் தமிழ்நாட்டில் உள்ளது. சித்தர் பாடல்கள் என்றழைக்கப்படுபவை அனைத்தும் தமிழ் பாடல்களே. ஆனால் இந்தச் சித்தர்கள் அனைவரும் தமிழர்கள் என்று கூறமுடியாது என்ற கருத்தும் பரவலாக உள்ளது.

இவர்கள் எண்ணங்களைக் கடந்த உயர்நிலையை எட்டியவர்கள். மொழி, இன பாகுபாடுகளுக்குள் அடைபடுபவர்கள் அல்ல. இவர்களுடைய ரிஷிமூலமும் அறியப்படவில்லை. மேலும் தங்களுடைய இறையுணர்வால், உலகிலுள்ள எந்த மொழியிலும் உடனடியாக தம் கருத்துக்களை இவர்களால் வெளிப்படுத்த முடியும் என்று சில குறிப்புகள் மூலம் சொல்கிறது, நம்பப்படுகிறது.

உதாரணமாக, போகர் ஜப்பான் மற்றும் சீனாவிற்குச் சென்று அங்குள்ள மக்கள் இறைவன்பால் மனத்தை ஈடுபடுத்தப் பணியாற்றியதாக வரலாறு உண்டு.

நான் ஜப்பானில் இருந்த போது அங்கு உள்ள முருகன் கோவிலை பற்றி அறிய முடிந்தது, ஆனால் அது "முருகன் அல்ல போகர்" என்றும்.

அவர் பழனியில் மூலவர் சிலை தயார்செய்து கொண்டு இருந்த காலத்தில், தன் சீடரின் ஒரு செய்கையினால் அவர் மீது கோவப்பட்டு காற்றில் நடந்து சென்று, அங்கு ஒரு பெண்ணிடம் வயப்பட்டு குடும்பம் நடத்தியதாகவும், அந்த வழி வந்தவர்கள் தான் ஜப்பானில் இன்றும் "போகர் கொண்டையுடன்"(தளபதி படத்தில் ரஜினி சுந்தரி பாட்டில் வைத்து இருப்பார்)
இருப்பதாகவும், இந்தியா வந்தவுடன் அறிந்தேன்.

ராமதேவர், யாக்கோபு (Jacob) என்ற பெயரில் மெக்காவில் சில வருடங்கள் இறைத் தொண்டு புரிந்ததாகவும் கூறப்படுகிறது.

திருமூலர் வடநாட்டிலிருந்து வந்தவர் என்றும் குறிப்புகள் உண்டு.

கோரக்கரின் முழுப்பெயர் கோரக்நாத் என்றும், ராமாயணத்தை வட மொழியில் எழுதி உலகிற்கு முதன்முதலில் கொடுத்த வால்மீகியும் சிலர் கூற்றுப்படி பதினென் சித்தர்களில் ஒருவராகிறார்.

மேலும் பிறப்பினால் வரும் சாதித் தீட்டுக்கள், சடங்குகள், சிலை வழிபாடு, கோயில் வழிபாடு, போன்றவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஆகியவற்றில் உள்ள தவறுகள் பற்றி தெளிவான ஆணித்தரமான கருத்துக்களை முதன்முதலில் சித்தர் பாடல்களில் தான் பார்க்கிறோம்.

இதனாலேயே ஆச்சாரமான இந்துக்கள் சிலர் சித்தர் பாடல்களை ஒதுக்கியதாக சித்தர் வரலாற்றை ஆராய்ந்த ஜ்வெலபில் (Zvelebil) குறிப்பிடுகிறார்.

சித்தர் பாடல்களில் இறைவனை உணர்தல் பற்றிய பல விபரங்களைப் பரிபாஷைகளாக (மறைந்திருக்கும் பொருளாக) வைத்துள்ளனர்.

இந்த பதினெட்டுச் சித்தர்கள் யார்? பதினெட்டுச் சித்தர்களின் பெயர்கள், சித்த சக்திகள், சமாதியான இடம், போன்று திரட்டிய விபரங்களை மற்றொரு சமயத்தில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

என் பதிவில் உங்கள் நேரத்துக்கு நன்றி.
 

Blogger Widgets