Wednesday, May 26, 2010

திரை கடலோடி திரவியம் தேடு!

வழக்கம் போல நேரமின்மையை காரண கேடையமாக கொண்டு வந்தாலும், வழக்கத்தை விட மொக்கையை கொஞ்சம் குறைக்க முயற்சிக்கிறேன்.



ராஜ கீரிடத்தை என் தலையில் வைத்தமைக்கு ஜலீலாவிற்கு ஒரு சலாம்.

இடுகைக்கு போகலாம் வாங்கோ...!

இன்னும் எவ்வளவு நாள்தான் இங்க இருக்கிறது, வேற ஏதாவது தமிழ் பேசும் நாட்டுக்கு போக முயற்சிக்கலாமே? என்று தங்கமணி தன் தனிமை பிரச்சனையையும், தமிழ் பற்றையும் என்னிடம் கொட்டிக்கொண்டு இருந்த போது, போன் அடித்தது.

என்னடா நல்லா இருக்கீங்களா என்று ஆரமித்தார் என் தந்தை எதிர்முனையில்.

இங்கு நலம், அங்கு நலமா, பைரவி (ஜெர்மன் ஷெபர்ட்) எவ்வளவு உயரம், எடை வந்திருகிறது, தோட்டத்தில் இருந்த பெண் மருதாணி "பூ" பூத்து விட்டதா என்று பேச ஆள் கிடைத்ததில், ஆள் மாற்றி ஆள் நான் பரஸ்பரம் மொக்கையை போடும் பேச்சு வாக்கில், வேறு நாடு போக முயற்சிப்பதை சொல்ல!.

எனக்கு கூட உன்கிட்ட ரொம்பநாளா ஒன்னு கேட்கணும்டா? முப்பதுவருடம் ராணுவ அதிகாரியாக இருந்த நான் கூட, ஒரு இரண்டு முறை பாகிஸ்தான், சீனா, நேபாளம் எல்லை வரைதான் போக முடிந்தது!.

ஆனா இந்த கணினி துறை வாழ்கையில் மட்டும் எப்படி நிறைய நாடுகள் நீங்கள் சர்வ சாதாரணமாக போக முடிகிறது?

நீ கூட ஒரு பத்து வருடத்தில் ஆறு ஏழு நாடுகள் சுற்றி விட்டாய் இல்லையா என்றார்.


அதெல்லாம் உங்களுக்கு சொன்னா புரியாது, இப்ப நான் வேற வேலையாய் இருப்பதால் மாலை ஒரு ஆறு மணிக்கு இதை பற்றி நம்ம பேசுவோமே என்றேன்.

டேய் நான் உங்க அப்பாடா எனக்கேவா என்றார்?

சொன்னவுடன் ஓடி சென்று செய்வது உங்கள் ராணுவத்தில் வேணா சட்டமா இருக்கலாம், ஆனா எங்க கணினி துறையில் யாராவது ஏதாவது வேலையை போன் செய்து கேட்டவுடன் செய்து விடக்கூடாது.

இப்போது நான் வேலையாய் இருப்பதால், இன்னொரு நேரத்தை சொல்லி அப்போது ரூம் போட்டு (Meeting Room Booking) இந்த "ஆணியை புடுங்குவது" எப்படி என்று பேசுவோமே என்று சொல்வதுதான் எங்கள் கணினிதுறை அடிப்படை சட்டம்.




ஏப்பா அப்படி, அவ்வளவு வேலை பளுவா உங்களுக்கு?

அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை, அப்பதான நம்ம எதோ பிசியா இருக்கோம் என்று காட்டி, நம்ம ஒரு வேலை இல்லாத "வெட்டி பீசு" என்று யாரும் கண்டு பிடிக்க முடியாமல் செய்ய முடியும், அதுக்குதான்.

ஓ...சரி சரி, இந்த வெளிநாட்டு விசையத்துக்கு வா!.

அதாவது எங்கள் வாடிக்கையாளர் வரவு கணக்கை (customer billing account) வேறு இடத்திற்கு மாற்றுவதன் மூலம், நாங்கள் வேறு வேறு நாட்டுக்கு போக முடியும்.

அது என்னாப்பா சரியா புரியலயே? கொஞ்சம் தெளிவா புரியுற மாதிரி சொல்லு.

சரி, உங்களுக்கு புரியுற மாதிரி சொல்றேன்.

இப்ப பாத்தீங்கனா, நம்ம நாட்டு மென்பொருள் நிறுவங்கள் ஒரு கல்லூரி விடாம நேரா போய் இருக்க கணினி துறை பீசை (மக்கள்) எல்லாம் அள்ளிக்கிட்டு வந்துடுவாங்க.

ஆனா, அவுங்களுக்கு எந்த வேலையும் தெரியாது. ஏட்டு சுரக்காய் வாழ்க்கைக்கு உதவாது இல்லையா? அதுக்காக சம்பளமும் கொடுத்து வேலையும் கத்து தரவா முடியும்?

அதுனால, பழைய "ஆயிரத்தில் ஒருவன்" படத்தில் "எம்.ஜி.ஆர், நாகேஷ்" எல்லாத்தையும் கன்னிதீவுக்கு அடிமைகளா விற்பது போல, கொண்டு வந்த நம்ம கணினி துறை ஆட்டு(கத்து) குட்டிகளுக்கு எல்லாம் கம்பெனியோட புலி தோலை போர்த்தி, ஆணி புடுங்குவதில் மிக சிறந்த புலிகள் என்று சொல்லி விற்று விடுவார்கள்.


எங்க கன்னித்தீவுலையா?

ஹுஹும் அது படத்துல, இங்க கணினி துறைல அதுக்கு பேரு "கஸ்டமர் பிளேஸ்" (Onsite Customer Service).

அவனும் மாஸ்டர் பீஸ், காமிடி பீஸ், டம்மி பீஸ் (கொட்டை எடுத்ததா எடுக்காததா) என்று பார்க்காமல் மொத்தமா வாங்கி உள்ள திறந்து விட்டு ஆணி புடுங்குங்கன்னு சொல்லிடுவான், இங்கதான் நம்ம கத்து குட்டிகள் எல்லாமே கத்துக்கணும்.


அது சரி, ஆனா இந்த கத்து குட்டிகளுக்கு எப்படி, எந்த ஆணி தேவையானது, எது தேவை இல்லாதது என்று தெரியும்? அப்புறம் எப்படி அவர்கள் அதை செய்வார்கள்?

குட் கொஸ்டீன், நமக்கு எப்படி எந்த ஆணி தேவை என்று தெரியாதோ!, அதே மாதிரி அவுங்களுக்கு எந்த ஆணி தேவை இல்லாதது என்று தெரியாது!.

அதுனால நம்ம புடுங்கறது எல்லாமே தேவை இல்லாத ஆணிதான்னு அவங்கள நம்ப வைப்பதுதான் நம்ம கத்துக்கும் முதல் பாடம்.


அது சரி, ஆனா இவ்வளவு வேலை ஆட்கள் தேவை படும் போது, அவுங்க நாட்டில் இருப்பவர்களை விட்டு விட்டு, ஏன் நம்ம மக்களை வேலைக்கு எடுக்கணும்.

அது ஏன்னா, அறிவே இல்லா விட்டாலும், காசு மட்டும் இருப்பதால் அவுங்க எல்லாம் முதலாளிகளாக இருக்க மட்டுமே விரும்புவார்கள், அதுனால நம்ம மாதிரி இந்த சில்லறை காசு கூலி வேலைக்கு எல்லாம் அவுங்க நாட்டு மக்கள் வர மாட்டார்கள்.

அவர்களுக்கும் காசு ஏதுன்னா, தலை முறை தலை முறையாய், அவுங்க அம்மா அப்பாக்கள், நம்ம அம்மா அப்பா மாதிரி இந்த குடும்ப மானமே உன் கையில் தான் இருக்குப்பா, உன் தங்கச்சி கல்யாணம் வேற இருக்கு என்று சொல்லி விபூதி போட்டு விமானத்தில் வெளி நாட்டுக்கு பிளைக்க அனுப்பாமல் இருக்க வேண்டும் என்று நினைத்து,தங்கள் வாரிசுகளுக்கு வாழ்க்கை முழுவதும் தேவையானதை சேர்த்து வைத்து விடுகிறார்கள், அதனால் தான்.


டேய்...!

ஹிஹிஹி கோவிக்காதிங்க, சும்மாப்பா துலுலாக்கு...! சரி விசையதுக்கு வருவோம்.

இப்படியே வேலையில், மின் அஞ்சலில் ரொம்ப பிசியாகிடுவோம், பக்கத்து சீட்டுக்கு பேசனும்னா கூட, மெயில் அனுப்பி, போன் போட்டு தான் பேச முடியும், அதுவும் திங்கள்கிழமை-ன்ன ரொம்பவே பிசி.


ஏன் கடினமான வேலையா, அப்படி என்ன செய்வீர்கள்?

அப்படி இல்லை, தினமும் கணினியை பார்த்தல், காலை வணக்கம், மதிய வணக்கம், மாலை வணக்கம், இந்த நாள் இனிய நாள், வாழ்கையில் உயர என்பது போல பூ போட்டு, பொம்மை போட்டு கலர் கலரா பல மெயில் வந்திருக்கும்.

அதெல்லாம் யார் அனுப்புவா, எல்லாத்தையும் படிச்சு பதில் அனுப்பனுமா?

எல்லாம் நம்ம கல்லூரி மற்றும் உடன் வேலை பார்க்கும் நண்பர்கள் தான், நம்மள மாதிரியே அவுங்க வேற நாட்டு "கஸ்டமர் பிளேஸ்", அதாவது அவுங்க முல்லை தீவுக்கு விற்கப்பட்டு இருப்பாங்க.



நம்மளும் இதை எல்லாம் படிக்கனும்ன்னு ஒன்னும் அவசியமில்லை, வந்ததை அப்படியே வேற நண்பர்களுக்கு எல்லாம் அனுப்பனும், அப்பதான நம்ம தொழில் நட்பை வளர்க்க முடியும்.

இப்படியே இங்க இருந்து வந்ததை அங்கேயும், அங்கே இருந்து வந்ததை இங்கேயும் அனுப்பினா போதும், ஏன்னா இத அனுப்புன அவுங்களும் சொந்தமா எதுவும் எழுதுவதில்லை. இணையத்தில் மின் அஞ்சலை கொடுத்தால் தினம் அவர்கள் அனுப்பி விடுவார்கள்.


என்னப்பா இது, சரி இப்படியே இருந்தா அப்புறம் வேற நாட்டுக்கு மாறி போவீங்க? அதுக்கு என்ன வழி?

இப்படியே ஒரு நாள் நமக்கும் இந்த வேலை ரொம்ப போர் அடிச்சுடும், அதுனால புது இடத்துக்கு போக தோணும், அதுக்கு ரெண்டு வழி இருக்கு.

மொதோ வழி ரொம்ப ஈசி, வேற நிறுவனத்தை பிடிச்சு வேற தீவுக்கு (Client) விற்க சொல்லி நம்ம வேற நாட்டுக்கு போய்டலாம், ஆனா வேலை என்னமோ அதே ஆணிதான். இதுல கொஞ்சம் சம்பளம் அதிகமாக கிடைக்க வாய்ப்பு உண்டு, ஆனா வேலை நிரந்தரமா என்பது உடனே தெரியாது.

ரெண்டாவது இப்ப இருக்கும் நிறுவனத்தின் மூலமாகவே வேறு நாடு மாறுவது(Intra Company Transfer) அது எப்படின்னா.

மனித வளத்துறைக்கு மொதல்ல இதை சொல்லணும், அவுங்களும் உடனே நம்ம வேற நிறுவனத்துக்கு போய்ட்டா இப்ப கிடைக்கிற படிக்காசு போய்டுமேன்னு ராஜ மரியாதையாக பேசி, உடனே வேறு எங்கு உன்னை அனுப்ப முடியும் என்று பார்ப்போம் கொஞ்சம் அவகாசம் கொடு என்று கொஞ்சுவார்கள்.

இப்பதான் ரவுண்டு ராபின்ன்னு ஒரு முறை ஆரமிக்கும், அந்தா இந்தான்னு தேடி நம்மள மாதிரியே ரொம்ப நாளா வேற எங்கையாவது முல்லை தீவு மாதிரி இடத்துல ஆணி புடுங்கி புடுங்கி சலிப்பான ஒருத்தன், எனக்கு வேற இடத்துக்கு போகனும்னு கேட்டிருப்பான்.

உடனே நம்ம மனித வள மூளை சுருசுருப்பா வேலை செய்யும், நம்ம கிட்டையும் அவன் கிட்டையும் இதே ஆணிதான், ஆனா வேற இடம்னா ரெண்டு பேருமே இருக்கதை விட்டுட்டு போக யோசிப்போம்.

அதுனாலா இப்ப நம்ம பாக்குறத விடஅது என்னமோ புதிய விசையம் என்றும், அதில் நமக்கு மிக அருமையான பதவி என்றும், இன்னும் நம் அறிவை வளர்க்க இது ஒரு அற்புதமான சந்தர்ப்பம் என்றும், ரெண்டு பக்கமுமே சொல்லி அழகான ஆங்கிலத்தில் ஒரு பில்டப் கொடுப்பார்கள்.


அது எப்படிப்பா வேலை விசையதுல பொய் சொல்ல முடியும்?

அப்படி இல்லை, இது தொழில் தர்மம் ஏன்னா அவர்கள் வேலையே பொய் சொல்வதுதான்!.

நம்மளும் சரி என்று சொல்லி, கண்ணை மூடி திறக்கும் முன், விசா விமான டிக்கெட் என்று எல்லாம் வந்து, இன்றிரவே நீ பறக்க வேண்டும் என்று சொல்லி விடுவார்கள். நாம் அங்கு போகும் முன் நம் முழு விபரமும் அங்கு சென்றுவிடும்.

ஒரு வழியா நம்ம அங்க போனா, அந்த அலுவலகத்துல எல்லோரும் நம்ம எதோ விடுமுறைக்கு வந்த மாதிரி விசாரிப்பார்கள், இல்லை இல்லை நான் வேலை மாற்றி வந்திருக்கிறேன் என்றதும்...!



அப்படியா? எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லையே? இதோ பார்கிறேன் என்று சொல்லி, நம்மை ஒரு கணினி இல்லாத இருக்கையில் அமர சொல்லி விடுவார்கள்.

எங்களை பொறுத்த வரை வேலையே இல்லாமல் "வெறிக்க வெறிக்க கணினி திரையை" பார்த்தாலும் பார்ப்போமே தவிர கணினி இல்லாமல் ஒரு நிமிடம் கூட அலுவலகத்தில் அமர முடியாது .

சுருக்கமா சொல்லனுமா, சுமங்கலி கூட்டத்துக்கு நடுவில் தாலி அறுத்து அமர வைத்தது போல ஒரு பீலிங்க்ஸ் வரும். இப்படி நம்ம முகம் கொஞ்சம் மாறினாலும் போதும் அந்த கணம் முதல் நாம் அந்த மனிதவள துறைக்கு அடிமை.

இப்பதான் அவசர சிகிச்சை பிரசவ வார்டுக்கு உள்ளும் வெளியும் நடக்கும் நர்சு போல மொபைல் போனில் பேசிகொண்டே நம்மை கடந்து வந்தும் போவார்கள், அதில் நம் காதில் விழுவது எல்லாமே கிட்ட தட்ட இது மட்டுமே.

நோ நோ, இங்க இங்க அனுப்பாதிங்க, என் கிட்டேயே ஆறு பேரு வேலை இல்லாம பென்ச்ல இருக்காங்க...!

அப்படி இல்ல, நான் எவ்வளவோ முயற்சி பண்ணியும் எதுவும் அமையல, அதன் நோட்டீஸ் கொடுத்து அனுப்ப வேண்டியதாகி விட்டது...!

நான் என்ன செய்ய முடியும் மார்கெட் வேற முன்ன மாதிரி இல்ல...!

அங்க ஏதாவது தேவை இருக்கா? என்கிட்ட பில்லிங் இல்லாம மக்கள் இருக்காங்க...!


இப்படியே நேரம் ஓட நாள் ஓட, நமக்கு உள்ளுக்குள்ள கொஞ்சம் டரியலாகி விடும், விசா விமானம் எதுவுமே இல்லாமல் மனம் இந்தியா பறந்து விடும்.

வீட்டு லோனை எப்படி கட்டுவது? காரை திருப்பி கொடுத்து லோனை முடித்து விடுவோமா? ஊரில் அந்த செய்முறைக்கு பணம் அனுப்ப வேண்டுமே? எல்.ஐ.சி பணம் கட்ட வேண்டுமே? என்று மனம் இங்கும் அங்கும் சிட்டாய் பறக்கும்.

இப்பதான் நம்ம பக்கம் ஆள் வரும்.

ஸாரி நண்பா, பாத்தீல்ல, ரொம்ப பிசி, மார்கெட் வேற சரியில்ல, என்ன செய்ய? நானும் முடிஞ்ச வரைதானே முயற்சி பண்ண முடியும். நான் என்ன கம்பெனி முதலாளியா, உங்களை மாதிரி நானும் வேலைதானே பார்கிறேன் என்று பேச பேச...!.

இப்ப நமக்கு வேலை இருக்குன்னு சொல்றானா? இல்லை போக சொல்றானா?இத நம்பி இருந்ததை வேற விட்டுட்டமே! என்று நமக்குள் மூளைக்கும் மனசுக்கும் ஒரு பானிபட் போரே நடக்கும்.

சரி, உன் விசையத்துக்கு வருவோம் என்று சொல்லும் போது தான் அந்த மனிதவள துறைக்கு முகம் மாறும்.

இப்ப இங்க வேலை எதுவும் இல்லை. ஆனாலும் உன்னை போல நல்லவனை இழக்க நான் விரும்பவில்லை.

அதனால், முல்லை தீவுல ஒரு வேலையை உனக்காக ஒதுக்கி தருகிறேன், இப்போதைக்கு பார்கிறாயா? பின் நல்ல சமயம் வரும் போது மாற்றி தருகிறேன் என்ற வார்தையை கேட்டதும்.

"யப்பாபா" என் வயிற்றில் பாலை வார்த்தாய் மகனே, சும்மா இருப்பதை விட எதையாவது செய்வது மேல் என்று நினைத்து, நாமும் சரி என்று சொல்லி விடுவோம்.

அடுத்த நாளே, அங்கு அனுப்பி விடுவார்கள், ஆக அன்று முதல் அதே ஊதியம், அதே ஆணி, ஆனால் ஆணி புடுங்கும் இடம் மட்டும் வேறு, இப்படியே அடுத்த இரண்டு வருடம் ஓடி விடும்.


அப்படியா அதுக்கப்புறம் என்ன ஆகும்?

என்ன ஆகுமா?

இப்பவே "பஞ்ச தந்திரம் தேவயானி மாதிரி" எவ்வ்வ்...ளோளோ பெரிய (மூடி) "இடுகைன்னு" யாராவது ஒரு அக்கா பின்னூட்டத்துல திட்டுவாங்க...!

அதுனால, திரும்ப இதே இடுகைய முதல்ல இருந்து படிங்க, ஆனா தீவு(Client) பெயரை மட்டும் வேறு ஏதாவது மாற்றி படியுங்கள், அதுதான் ஆகும்.

சரிப்பா, நான் வெளியே போகிறேன், நீங்க தங்கமணிகிட்ட பேசுங்க, இந்தாமா நீ பேசு...! என்று போனை கொடுத்து விட்டு எம்.பி-3 யை ஆன் பண்ண அப்போது வந்த பாடலை கேட்டு கொண்டே வெளியே நடந்தேன்.


"கட்டிய மனைவி தொட்டிலில் பிள்ளை, உறவை கொடுத்தவர் அங்கே...!

அலை கடல் மேலே அலையாய் அலைந்து உயிரை கொடுப்பவர் இங்கே...!

வெள்ளி நிலாவே விளக்காய் எரியும் கடல்தான் எங்கள் வீடு...!

முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும், இதுதான் எங்கள் வாழ்க்கை...! இதுதான் எங்கள் வாழ்க்கை."


சைடிஷ்:-தங்கமணிக்கு மின் அஞ்சலில் வந்த ஒரு அருமையான குறும்படம், கணினிதுறை மக்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.



நன்றி!.

Tuesday, May 4, 2010

பிகரு பிகருதான், அது சூப்பர் பிகருதான்!

ஆசிய நாடுகளில் நான் பார்த்த வரை தென்கொரிய பெண்கள் மிகவும் அழகு என்றே சொல்வேன், ஜப்பானிய சீன பெண்களை போலவேதான் இவர்கள் நிறமும் என்றாலும், அவர்களை விட இவர்கள் முகலட்சணம் மற்றும் நல்ல(சாமுத்திரிகா)உடல்வாகுடையவர்கள். குறிப்பாக இவர்கள் உடை அமைப்பு மிக அற்புதமாக இருக்கும்.

இங்கே படத்தில் இருக்கும் பெண்கள் எதோ ஆயிரத்தில் ஒன்று என்று நினைக்க வேண்டாம், தெருவில் இறங்கி நடந்தால் கிட்டதட்ட அனைவரும் இதே போலத்தான் இருப்பார்கள்.



ஆனால், தென்கொரியாவில் குளிர்காலம்தான் அதிகம். மைனஸ் பதினாறு டிகிரி வரை போகும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள், அதனால் கண்ணை தவிர மற்ற முழு உடலையும் மறைக்கும் குளிர்கால உடைதான் பெரும்பாலும் பயன் படுத்த வேண்டி இருக்கும்.

வசந்த காலம், கோடை காலம், பருவகாலம் , குளிர்காலம் என்பதில் பருவகாலம் கூட காற்று அதிகமாக இருப்பதால் முழு உடை தேவைப்படும், இந்த காரணத்தாலோ என்னமோ வசந்த காலமும் கோடைகாலமும் வரும் "மே முதல் ஆகஸ்ட்" வரை இந்த நான்கு மாதமும் மக்களுக்கு மிக பிடித்த பருவமாகிறது.

அதிலும் மே மற்றும் ஜூன் "செர்ரி ப்லோஸ்சம்" (Cherry Blossom) சீசன் என்பதால் நகர் முழுவதும் பூக்களால் மூடி இருப்பது போல மிக அருமையாக இருக்கும்.

இந்த காலத்தில் தென்கொரியாவில் கண்ணை கவருவது பூக்கள் மட்டுமல்ல இன்னொரு விசையமும் இருக்கிறது.

குளிர் குறைய குறைய இங்கு பெண்களின் ஆடை கீழிருந்து மேலாகவும், மேலிருந்து கீழாகவும் குறைந்து கொண்டே வரும், அதுவும் அவர்களின் பளீர் நிறத்துக்கு பொருந்தும் அடர் சிவப்பு, நீளம் என்று பார்கவே கண்ணை கட்டும்.

இந்த பருவத்தில் தங்கமணியை வெளியில் அழைத்து போகும் போதெல்லாம் (இந்த நான்கு மாதமும் முடித்த வரை தனியாகத்தான் போவேன் என்று நான் சொல்லாவிட்டால் உங்களுக்கு தெரியாதா என்ன?)என்னை சாப்பிங் அழைத்து போகும் சாக்கில் நல்லா கண்ணை கழுவிக்கிறாயா நடத்து நடத்து!.

என்று சொல்லிக்கிட்டே வந்தாலும், யப்பா அவள பாருங்க! என்னா பிகரு சும்மா பளபளன்னு இருக்கா! என்று சொல்லி நான் பார்க்க தவறும் பெண்களை காட்ட தவறுவதில்லை.

இப்படி இருக்கும் இந்த சூழ்நிலையில் சென்ற வாரத்தில் நடந்த என் "மெட்ரோ" பயண அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன்."மெட்ரோ" போக்குவரத்தை பற்றி சென்ற பதிவில் பார்தோம், இனி இது ரயிலுக்கு உள்ளே நடப்பது.

அது என்னவோ தெரியாது நான் பயணிக்கும் போது மட்டும் உருப்படியாய் ஒரு பெண்ணும் நான் இருக்கும் அந்த பகுதில் கண்ணில் படவே படாது, என்ன கொடுமை சார் இது என்று நினைத்து நினைத்து இப்போதெல்லாம் அதை பற்றி நினைப்பதே கிடையாது.

இந்த முறை பாஸ்போர்ட் விசையமாக இந்திய தூதரகம் வரை செல்ல வேண்டும், இரண்டு ரயில் மாறி ஒருமணி நேரம் முப்பது நிமிட பயணம், சரி, நம்ம ஜாதகப்படி எப்படியும் கண்ணை கழுவ யாரும் வர போவதில்லை என்ற நம்பிக்கையில், வழக்கம் போல என் சோனி எம்.பி-3 யை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டேன்.



அன்னிக்குன்னு பாருங்க அந்த கம்பார்ட் மென்ட் முழுவதும் பெண்கள் மட்டும்தான் இருந்தார்கள், பல இருக்கைகளும் காலியாகவே இருந்தது.

ஆகா, தங்கமணி கூட இல்லையே என்று வருத்தப்பட்டாலும் (நம்புங்கப்பா சத்தியமா) சரி விடு இன்னைக்கு நேரம் போவதே தெரியாது கண்ணை கழுவுவோம் என்று சன்கிளாசை (அப்பதான யாரை பார்க்கிறோம் என்று தெரியாது) இறக்கி விட்டுக்கொண்டு என் எம்.பி-3 யை எடுத்து கிளப் பாடல்களை கேட்கும் நோக்கில் ஆன் பண்ணிக் கொண்டு சுற்றி ஒரு லுக் விட்டேன்.

என் அருகில் ஒரு உயரமான பெண் ஆறடி இருக்கும் முழங்காலுக்கு மேல் (ரொம்பவே மேல்) இருக்கும் படி ஒரு சீருடை அணித்து இருந்தார் விமான பணிப்பெண் என்று நினைக்கிறேன் தெளிவான முகம்.

இந்த பக்கம் ஒரு பெண் பாத்ரூமில் இருந்து அப்படியே வந்தது போல ஒரு துண்டை மற்றும் சுற்றியது போல புசு புசு வென்று ஒரு உடை அணிந்து கதவில் சாய்ந்து நின்று கொண்டிருந்தார்.

அந்த பக்கம் அதை விட, எங்கேமா டிரஸ் என்று கேட்கும் படி, கிட்டதட்ட நான் கடவுள் படத்தில் நயன்தாரா (இந்த இடுகைக்கு இதுதான் இவர் பெயர்) வேடத்தில் வருபவர் அணிதிருப்பதை போலவே சிவப்பும் கருப்பும் கலந்து கொஞ்சம் துணியை மேலும் கீழும் சுற்றி இருந்தார்.

ஆகா, என்ன அழகு என்று ஜொள்ளிக்கொண்டு எம்.பி-3 யை பார்த்தால்! தியான பாடல் பகுதியை தவிர வேறு எதையும் காணவில்லை, தங்கமணிக்கு போனை போட்டு, என் எம்.பி-3 யை யார் எடுத்தது என்று கேட்டேன்?.

ஏப்பா என்ன ஆச்சு! நான்தான் எடுத்தேன்.

என் பாடல்கள் எதையுமே காணோம்? தியான பாடல்கள் மட்டும்தான் இருக்கிறது என்றேன்.

அப்படியா!, நேற்று மதியம் நான்தான் குழந்தைகள் தூக்கியதும் பாட்டு கேட்க எடுத்தேன், "லவ்" பண்ணும் போது கொடுத்த பாட்டு எல்லாம் இருந்ததா, என்னோட எம்.பி-3ல காப்பி பண்ண நினைத்தேன், காப்பி பண்ணும் போது மூவ் பண்ணிவிட்டேன் போல, என்று சொல்ல.

எனக்கு வந்த கோவத்தில்...சரி விடும்மா வந்ததும் திரும்ப எனக்கு காப்பி பண்ணி வைத்து விடு என்று சொன்னேன் (வேற என்ன சொல்ல முடியும்).

ஆகா, தலைவரோட "ஆசை நூறுவகை","வச்சுக்கவா உன்ன மட்டும்" முதல் ஆதவன் "ஹனி ஹனி" வரை அருமையான பாடல் எல்லாம் இப்ப இல்லாம போச்சே என்று நினைத்தேன்.

அது சரி, சுத்தி ஒரே கலர் கலரா இருக்கா என்ன? என்று தங்கமணி திரும்ப கேட்க?

சுதாரித்துக்கொண்டு, அப்படி இல்ல சும்மா பாட்டு கேட்கலாம் என்று இழுத்தேன்...!



உன்ன பத்தி எனக்கு தெரியாதா என்ன? வேணும்னா அந்த பொண்ணுகிட்ட போன கொடு, நான் மச்சான் ரொம்ப நல்லவரு வல்லவருன்னு சொல்லி கோர்த்து விடுகிறேன், எனக்கு ஒண்ணுமில்லை, பாவம் யாரு பெத்த பொண்ணோ! அது தலைஎழுத்து அப்படி இருந்தா யாரு காப்பாத்த முடியும்!.

அதெல்லாம் ஒன்னும் வேணாம் நீ போனை வை, என்று நான் பதில் சொல்ல.

நடத்து மச்சான் நீ நடத்து, வெட்டியா கண்ண கழுவாம ஒழுங்கா தியான பாட்ட கண்ண மூடிகிட்டு கேளு என்று சொல்லி போன் வைக்கப்பட்டது.

என்ன கொடுமை இது? என்று நினைத்துக்கொண்டு ஒரு பாடலை துவக்க அது ராகவேந்திரா படத்தில் இருந்து "அழைக்கிறான் மாதவன்" பாடல்.

இனி வருவது என் கண் பார்த்ததும்,என் காது கேட்டதும் மட்டுமே.

அழைக்கிறான் மாதவன் ஆநிரை மேய்த்தவன்...மணிமுடியும் மயில் இறகும் எதிர்வரவும் துதி புரிந்தேன்...!

ஒரு வழியாக நிலைக்கு வந்து அருகில் இருந்த "விமான பணிப்பெண்" நினைவில் வர எங்கே என்று பார்த்தேன்.

தேடினேன் தேவ தேவா தாமரை பாதமே...வாடினேன் வாசு தேவா வந்தது நேரமே...ஞான வாசல் நாடினேன்...!

இப்படி ஓடிக்கொண்டிருக்க என் அருகில் "ஹலோ" என்று ஒரு குரல் கொஞ்சியது!

காதில் நான் கேட்டது வேணுகானாமிர்தம்...!

திரும்பி பார்த்தல் நயன்தாரா பெண் என் (மிக) அருகில் அமர்ந்து இருந்தார்.

கண்ணில் நான் கண்டது கண்ணன் பிருந்தாவனம்.

ஆர் யு பிரம் பங்களா? என்று அவள் கேட்க, எப்படி இவர்களுக்கு மட்டும் உடம்பில் ஒரு மச்சம் வடு கூட இல்லாமல், ஒரே மாதிரி பொம்மை போல இருக்கிறார்கள் என்று நினைதுக் கொண்டே "நோ இந்தியா என்றேன்.

மாயனே நேயனே மாசில்லாத தூயனே, ஆத்மா நியாயம் அடைந்த பின்...!

உங்களுக்கு கொரியன் தெரியுமா? என்று கேட்க, நான் கொஞ்சம் தெரியும் என்று சொல்லி பேச்சை வளர்க்க விரும்பாமல், தெரியாது என்று சொல்லிவிட்டு (அதிக பட்சம் இப்பெண்களுக்கு இவ்வளவுதான் ஆங்கிலம் தெரியும் என்பது எனக்கு தெரியும்) எங்கடா அந்த விமான பணிப்பெண்ணை காணோம் என்று கண்களால் தேட...!

னும் தேடினேன் தேவ தேவா தாமரை பாதமே...!

பார்த்தல் எனக்கு நேர் எதிர் இருக்கையில் "அமர்ந்து" இருந்தார்.

குருவே சரணம்...குருவேவே சரணம்...குருவேவேவே சரணம்...குருவேவேவேவே சரணம்...!

அப்படியே கீழிருந்து மேலாக ஒரு "லுக்" விட்டேன்...!

ராகவேந்திரா ஸ்ரீ ராகவேந்திரா...ராகவேந்திரா ஸ்ரீ ராகவேந்திரா... ராகவேந்திர ராகவேந்திர ராகவேந்திர ராகவேந்திர, குருவேவேவேவே சரணம்...!

அந்த பெண் எதோ புத்தகத்தை வைத்து படித்துக் கொண்டிருக்க, அடுத்த ஸ்டேசன் வந்தது தான் தாமதம், நான் கண்ணை கழுவது பொறுக்காமல் திறந்து விட்ட வெள்ளம் போல திபு...திபுவென்று கூட்டம் வந்து நடுவில் நின்று விட்டார்கள்.

ஞான திரு மேனி காண வர வேண்டுமே...சீத பூ வண்ண பாதம் தொழ வேண்டுமே...பக்தன் வரும் போது பாதை தடை ஆனதே...காட்டு பெருவெள்ளம் ஆற்றில் உருவானதே...!

தாயாகி தயை செய்யும் தேவா, தடை நீங்கி அருள் செய்ய வா வா...நான் செய்த பாவம் யார் தீர்க்க கூடும், நீ வாழும் இடம் வந்து நான் சேர வேண்டும்...!


இப்படியே ஒரு நீண்ட வீணை மீட்டும் இசை வரும் கேப்பில் அடுத்த ஸ்டேசன் வர, நின்று கொண்டிருந்த கூட்டம் இறங்க மீண்டும் அப்பெண் தெளிவாக தெரிந்தாள்.

குருவேவேவே சரணம்...! குருவேவேவே சரணம்...! குரு ராகவேந்திர ராகவேந்திர ராகவா...!

ஐயோ...என்ன ஆச்சு இவனுக்கு? ஏன் இப்படி ஒரு "மொக்கை"ன்னு தான நினைக்கிறீங்க...!

என்னைக்கோ வரும் கோடை மழை மாதிரி, இருந்து இருந்து எனக்கு ஒரே ஒரு சந்தர்ப்பம் அமைந்தது!, அதிலும் இப்படி ஒரு பாட்டை கேட்க எனக்கு எப்படி இருந்திருக்கும்?

"யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்."

இது போல மொக்கையாக இல்லாமல், ஒரு அருமையான விசையத்துடன் மீண்டும் சந்திப்போம், நன்றி!.
 

Blogger Widgets