Sunday, August 23, 2009

"அக்காமாலாவையும் கப்சியையும்" விடுங்கையா!



"வெற்றிவேல் வீரவேல்" "வந்தேமாதரம்" என்று என் தாய் நாட்டு சுதந்திரத்துக்கு பாடுபட்ட அத்தனை உயிர்களுக்கும் என் இதயம் கனிந்த அஞ்சலி.

தாமதமான சுதந்திர தின வாழ்த்தோடு துவங்கினாலும், வழக்கம் போல பெரிய மொக்கை எதுவும் இல்லாம, உருப்படியா ஏதாவது ஒரு விசையத்த இந்த பதிவில் சொல்ல முயற்ச்சிக்கிறேன். அதனால் தான் இந்த தாமதம்.

தென்கொரியாவில் காலை வேளையில் சாலைகளில் மற்றும் அலுவலகம் செல்லும் பாதை வாசல்களில் அழகிய சீருடை அணிந்த பெண்களை ஒரு வகை விற்பனை வண்டியுடன் காண முடியும், தினம் இவர்களை பார்க்கும் போதெல்லாம் எனக்கு நம்ம ஊரில் "ஐஸ்" வண்டியுடன் விற்பதை போல, இவர்களும் ஏதோ! விர்ப்பதாய் ஒரு நினைப்புடன் இருந்தேன்.

ஆனால், இவர்கள் எல்லா அலுவலகங்களுக்கு உள்ளேயும் வந்து அங்கு வேலை பார்பவர்களில் தினம் குளிர்பானம் குடிக்கும் வாடிகையாளர்களுக்கு "விற்பனை" செய்து விட்டு போவதில் எனக்கு ஆச்சரியம், ஏன் என்றால் சாதரணமாக "வங்கி", "தேசிய சேவை ராணுவ தளம்" போன்ற அலுவலகங்களில் வேலை இல்லாத வெளி ஆட்களை அனுமதிப்பது இல்லை, அதுவும் விற்பனைக்கு என்ற போது, அது எப்படி இவர்களால் மட்டும் சாத்தியமாகிறது என்று எனக்கு புரியவே இல்லை.

இதனால் எனக்கு அதைபற்றி தெரிந்து கொள்ளும் ஆவல் கூடியது, சில நாட்கள் முன் ஒரு முறை அது என்னவென்று பார்க்க ஆவலுடன் அருகில் சென்று பார்த்தேன், அது முழுவதும் கொரியன் மொழியில் எழுதப்பட்ட சிறு சிறு மருந்து பாட்டில் திரவமாக இருந்ததால் அப்போது எனக்கு எதுவும் புரியவில்லை.



ஆனால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வாங்கி குடிப்பதை பார்த்து இருந்ததால், சரி எதுவும் ஆகாது என்ற நம்பிக்கை என்பது மட்டுமில்லாமல் விலையும் ஒன்றும் அதிகம் இல்லை "ஆயிரம் கொரியன்வேன்" இங்கு ஆயிரம் வேன் என்பது, நாம்ம ஊரில் "ஒரு ரூபாயை போல்" என்பதால் (இந்திய மதிப்பில் ஐம்பத்து ரூபாய்) நானும் ஒன்றை வாங்கி குடிக்கும் முன், இதை நான் குடிக்கலாமா என்று அந்த பெண்ணிடம் சைகையில் கேட்டு உறுதி படித்திக்கொண்டு (நாம எப்பவும் அலாட்டுங்க) குடித்து பார்த்தேன்.

பார்ப்பதற்கு மருந்து பாட்டிலை போல் இருந்தாலும், அதில் இருந்தது என்னவோ நம்ம ஊர் "லசி" (இனிப்பு கலந்த தயிர்) போல நல்ல சுவையுடன் இருந்தது, அதன் பிறகு அதை மறந்து விட்டு வேலையை துவங்க, சாதாரண நாட்களை விட அன்று உற்சாகமாக உணர்ந்தேன், அன்று நல்ல பசியும் எடுத்தது, சரி, இது நம்ம ஊர் "லசி" போல கொரியன் "லசி" என்று நினைத்துக் கொண்டேன்.

இன்னொரு முறை குடித்த போது, அன்றும் இதே போல உணர, இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ளும் ஆவலுடன், என் அலுவலக நண்பியிடம் (பக்கத்து இருக்கைல இருக்கிறது கொரியன் பொண்ணு-ன்னு தங்கமணிக்கு இன்னும் தெரியாது) விசாரிக்க கிடைத்த தகவல்கள் வியக்க மட்டுமல்ல, மலைக்கவும் வைத்தன.

உண்மையில் அது மருத்துவ குணம் கொண்ட ஒரு குளிர்பானம், இந்த சூத்திரத்தை கண்டு பிடித்தவர் "நோபல் பரிசு" பெற்ற கொரியன் ஒருவர், அவர் தன் "வயிற்று புற்றுநோய்" பற்றிய ஆராய்ச்சிக்கும், அதை தடுக்கும் சூத்திரத்துக்காகவும் மருத்துவ துறை நோபல் பரிசு கிடைத்ததாம்.

அந்த சூத்திரத்தின் அடிப்படையில், கொரிய அரசாங்கத்தின் நேரடி பார்வையில் தயாரிக்க படுவது தான் இந்த குளிர்பானமாம், இதை பல மருத்துவ தனியார் வியாபாரிகளுக்கும் ஒப்பந்த அடிபடையில் தயாரிக்க அரசாங்கம் அனுமதி கொடுத்திருக்கிறதாம்.

அது மட்டுமில்லாமல், இத்தகைய தயாரிப்புகளுக்கு மற்ற குளிர்பானத்தை போல வரி எதுவும் கிடையாது என்பதால், மக்களுக்கு இதை குறைந்த விலையில் கிடைக்க செய்யமுடிகிறது.

மற்ற உடலை கெடுக்கும் குளிர்பானத்தை குடித்து மக்கள் உடலை கெடுத்து கொள்ளாமல் இருக்கவே, இத்தகைய தயாரிப்பை மக்கள் மத்தியில் எளிதில் கிடைக்க செய்கிறார்கள். மேலும் இத்தகைய குளிர்பானங்களை "இரண்டு நாட்களுக்கு மேல் பயன் படுத்த முடியாது" என்பதாலும் தான், இந்த தயாரிப்பை விற்பனை செய்பவர்களால் எந்த அலுவலகங்களுக்கும் நேரில் செல்ல, சென்று விற்பனை செய்ய அனுமதி கிடைத்து இருக்கிறது.



இதை குடிப்பதன் மூலம், நல்ல செரிமானமாகுமாம், நல்ல பசி எடுக்குமாம், காலை கடன் உபாதைகள் நீங்குமாம், வயிற்று புற்றுநோய், குடல்நோய் வரும் சந்தர்ப்பம் அதிக அளவில் குறையுமாம், மேலும் இது அரசாங்க நேரடி கண்காணிப்பில் தயாராகும் உள்ளூர் தயாரிப்பு என்பதால், கலப்படம் இருக்காது மற்றும் பின் விளைவுகள் இருக்காது என்பதற்கு உத்திரவாதம் அதிகம் என்று அடித்து சொல்கிறார்கள்.

அதன் பின் தான் நான் கவனித்து பார்த்தேன், இங்கு இது மட்டுமில்லாமல் மற்ற அணைத்து குளிர்பானங்களும் திராச்சை, ஆப்பிள், ஆரஞ்ச் போன்ற நன்மை தரும் உள்ளூர் தயாரிப்பு குளிர்பானங்கள் மட்டுமே அதிக அளவில் விற்பனை செய்ய படுகிறது.

இதை பார்த்த போது எனக்கு நம்ம ஊரில் நினைவில் வந்தது இரண்டு.

ஒன்று தினம் காலை வேலை ஊரில் பச்சை கண்டாங்கி கட்டி, தலையில் கூடையை வைத்துக்கொண்டு தயிர் விற்று வரும் அம்மா, அந்த கூடையில் ஒரு ஓரத்தில் மோர் கிண்ணத்தில் வெண்ணை உருண்டைகளை மிதக்க விட்டு இருக்கும் (நான் வாங்கும் போது ஒரு வெண்ணை உருண்டை ஐம்பது காசு).

இன்னொன்று வெள்ளை துண்டை தலையில் கட்டிக்கொண்டு, சட்டை இல்லாத உடம்புடன் இடுப்பில் வேட்டியுடன் சைக்கிளில் முன்னும் பின்னும் இளநீரை கட்டிக்கொண்டு வரும் முதியவர், இந்த முறை வந்த போது கூட தேசியபுற சாலைகளில் புளிய மரதடியில் விற்பதை பார்த்து போய் வாங்கி குடித்தேன்.

சரி, இப்ப நம்ம விசையத்துக்கு வருவோம், இதுக்கும் "அக்காமாலாவையும் கப்சியையும்" விடுவதற்கும் என்ன சம்மந்தம் என்றால்?

நாமும் இப்படி நமது பாரம்பரிய குளிர்பானமான இளநீர், மோர் என்று தினம் பருகி உடல் நலனை காப்பதுடன், இந்த உடலுக்கு தீங்கு விளைவிக்கும் "அக்காமாலா, கப்சி" போன்ற அந்நிய குளிர்பானத்தை தவிர்க்கலாமே?

இதை மட்டும் ஏன் இங்கு நான் குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்று நினைப்பவர்கள், நம்பிக்கை இல்லாதவர்கள், ஒரு புது "அக்காமாலாவையோ அல்லது கப்சியையோ" வாங்கி அதை திறந்தவுடன் ஒரு "கோழியின் கால் எலும்பை" போட்டு உடனே மூடிவிடவும், இருபத்து நான்கு மணி நேரம் கழித்து அந்த "எலும்பின் நிலையை" பார்த்தல் உண்மை புரியும்.

சரி, இப்படி இந்த குளிர்பானங்களை தவிர்ப்பதால், நம் உடலுக்கு மட்டும் தான் நன்மையா? என்றால் நிச்சியம் இல்லை!, எப்படி என்றால்.

இதனால், அழிந்து வரும் நம் பாரம்பரிய இயற்கை உணவு முறைகள் மீண்டும் வழக்கத்திற்கு வரும் மற்றும் உள்ளூர் விவசாயிகள் நேரடியாக பயன் பெறுவார்கள், இதனால் அழிந்து வரும் விவசாயம் நம் நாட்டில் பெருகும், வீட்டிற்க்கு வரும் விருந்தாளிக்கு கூட இளநீர், மோர், பருத்திப்பால், பழசாறு, தேநீர் தரும் வழக்கம் மீண்டும் வரும்.

இப்படி நாம் அனைவரும் பயன்படுத்தும் விற்பனை தேவை அதிகரிப்பதால் அரசாங்கம் இத்தகைய குளிர்பானங்களை கிராமங்களில் கிடைப்பதை போலவே, பரபரப்பான நகர மக்களுக்கும் தினம் கிடைக்க ஏற்ற வகையில் புட்டிகளில் அடைத்து குறைந்தது "மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு மேல் பயன்படுத்த முடியாத" வகையில் தயாரிக்க வேண்டிய சூழ்நிலை வரும், இப்படி குறிகிய கால பயன் பாட்டினாலும், இயற்கை உணவு முறை என்பதாலும் கலப்படம் இருக்க சந்தர்பம் வெகுவாக குறையும்.

மேலும் இதனால் நம் உள்ளூர் வேலை வாய்ப்பு பெருகும், உள்ளூர் தயாரிப்பு என்பதால் வரி அதிகம் இருக்காது, அதாவது அன்றாடம் நாம் குடிக்கும் குளிர்பானத்திற்கு, நாம் காப்புரிமை எனப்படும் "வரி வெளிநாட்டுக்கு செலுத்த வேண்டி இருக்காது". இதனால் நம் தயாரிப்பின் விலை குறையும், நாட்டின் பண வளர்ச்சி மற்றும் சுழற்சி அடையும்.

நாளடைவில் நம் மக்கள் இருக்கும் இடமெல்லாம் இத்தகைய நம் நாட்டு தயாரிப்புகள் தேவைப்பட, உலக சந்தையில் நம் நாட்டு தயாரிப்பு சர்வதேச உலக தரத்துடன் தயாரிக்கபட்டு, நம் வியாபாரம் அன்னிய செலவாணியில் உயர்வதால், நம் நாட்டு பண மதிப்பு உலக சந்தையில் உயரும்.

நம் பண மதிப்பு அதிகரிக்க அதிகரிக்க ஒவ்-ஒன்றாக, நம் உள்நாட்டு தயாரிப்பு அனைத்தும் நம் நாட்டு மக்களுக்கு வரி இல்லாமல் சகாய விலையில் நிச்சியம் கிடக்கும், அதாவது நம் நாட்டில் விளையும் "பாசுமதி அரிசி" நமக்கு கிலோ ஐந்து ரூபாயில் கிடைக்க கூட வழி வகுக்கும்.

அதன் பின் "என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில்? ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்?" என்ற கவிங்கரின் கனவு நினைவாகும்.



ஆக, இந்தியா இன்னும் இருபது ஆண்டுகளில் ஒரு வல்லரசு ஆகும் என்று படிப்பதோடு மட்டும் இல்லாமல், அதை நடை முறை படுத்த நாம் தான் முயற்சி எடுக்க வேண்டும் இல்லையா?

இதை தினம் நாம் செலவிடும் ஒரு அந்நிய குளிர்பானத்தில் இருந்து துவங்கலாமே?

அதனால் தான் மீண்டும் ஒரு முறை சொல்கிறேன் இந்த "அக்காமாலாவையும் கப்சியையும்" மொதல்ல விடுங்கையா.

சற்று சிந்தித்து பார்த்தால், இதுகூட இன்றைய நம் சமுதாய நடைமுறைக்கு அவசியமான ஒரு "சுதேசி" தான் நாண்பர்களே.

ஆகவே, நம் நாட்டை உயர்த்த ஒன்றுபடுவோம்,நம் நாட்டோடு சேர்ந்து நாமும் உயர்வோம்.

ஜெய்ஹிந்.


பிகு:- வழக்கம் போல படிச்சிட்டு "ஓட்ட போடாம" போங்க...... எப்பவும் ஓட்டு போடுங்கன்னுதான சொல்லுவோம், அதான் சும்மா ஒரு சேஞ்சுக்கு :-))...

இந்த பதிவின் கருத்து மக்களுக்கு பயன்படும் என்று நீங்கள் நினைத்தால், உங்கள் நண்பர்களுடன் இந்த பக்கத்தை பகிர்ந்து கொள்ளவும்.
 

Blogger Widgets