Saturday, May 16, 2009

டெல்லி [இறுதி] பாகம்- IV - ஹிந்தி தெரிஞ்ச மாதிரியே நடிக்கிறது!

நாங்க "வாக் இன் இன்டெர்வியு" போக, மத்த நேரத்துல "ஏக் காவ்மே ஏக் கிஸான் ரகு தாத்தா"-ன்னு ஹிந்தி படிச்சுகிட்டு இருந்தப்போ, என் குரு ராஜேஷ் என்னை அடிக்கடி கேட்பார், எப்போ முழுசா ஹிந்தி பேசுவேன்னு?

அதுமட்டும் இல்லாம எனக்கு உதாரணமா என் நண்பன் "ஜான்" அவனை பாரு தினம் வீட்டுக்கு தேவையான எல்லா பொருளும் வாங்க எவ்ளோ ஆர்வமா போறான்னு!

அதுதான் பிள்ளைக்கு அழகு, நாலு பேரோட பேசினாத்தான் உனக்கும் ஹிந்தி பேச வரும்ன்னு வசை பாடுவாரு.

எனக்கு செம காண்டா ஆகிடும், என்னடா இது? நாமளாவது ஒரு நாலு வார்தை சேந்தாப்புல பேசுவோம், இதுக்கு ஹிந்தி ஒன்னுமே புரியாதே?

போன வாரம் கூட இவனும் சுச்சு மாமாவும் ஆட்டோவுல போயிட்டு, ஆட்டோகாரன் பச்சீஸ் (இருபத்தஞ்சு ரூபா) கேட்டதுக்கு! இல்ல, இல்ல நாங்க நேத்து கூட பச்சாஸ்-குதான் போனோம்ன்னு சண்டை போட்டு "அம்பது ரூபா" கொடுத்துட்டு வந்தாங்களே!

"பச்சீஸ்-கும் (இருபத்தஞ்சு ரூபா) பச்சாஸ்-கும் (அம்பது ரூபா)" வித்தியாசம் தெரியாத இவனுக்குள்ள இப்படி ஒரு ஹிந்தி ஆர்வமா?

சரி, இவனே போய் சமாளிக்கும் போது, இன்னிக்கு நம்மளும் கூட போய் பாத்துருவோம்-ன்னு ஆர்வமா ஜான்கிட்ட சொன்னேன்.

அவனும் சரி, சரி வா..! இப்பத்தான் தோனுதாக்கும்....? ஆனா ஒரு கண்டிசன் எல்லா விசையத்தையும் மாதிரி இதையும் வச்சு என்ன ஓட்டக்கூடாது ஓகேவா-ன்னு கேட்க?

நானும் "ச்ச" இவரப்போய் நம்ம ஓட்டி, நம்ம ஹிந்தி பேசுவதை நாமே கெடுத்துக்ககூடாது-ன்னு, சரி ஜான் யார் கிட்டையும் இத பத்தி பேசவே மாட்டேன்னு சொல்லிட்டு கூட போனேன்.

ஜான் வழக்கம் போல எல்லா "காஸ்மெட்டிக்கும்" போட்டுகிட்டு கீழ வர, நேரா ஒரு காய்விற்கும் கடைக்கு போனோம், போகும் போதே என்கிட்ட சொன்னார், எதுவும் பேசாதே கவனமா பார்ன்னு.

நானும் ஒருவேளை உதட்டு அசைவை கவனிக்கனும்னு போல-ன்னு நினைச்சுகிட்டு, அவர் என்ன பேச போராருன்னு கவனமா பாத்துக்கிட்டு நின்னேன்.

அவரை பார்த்ததும் கடைக்காரர் கையெல்லாம் ஆட்டி "ராம் ராம்-ஜி"-ன்னு சொல்ல நான் ஜானோட செல்வாக்கை பாத்து சும்மா அசந்து போய்டேன்.



ஆனா, இவர் பதிலுக்கு சிரிச்சரே தவிர, ஒரு வார்த்தை கூட பேசல, நேரா போனார் போய்...!

அதுக்கப்புறமா எல்லாம் ஒரே "ஆக்சன்" தான்!

ஜான்:- ஒரு ஒருகிலோ எடை கல்லை எடுத்து கொடுத்தாரு...!

கடைகாரர்:- அந்த கல்லை வாங்கி தராசுல வச்சாரு...!

ஜான்:- ஒரு வெங்காயத்தை எடுத்து கொடுக்க,

கடைகாரர்:- ஒரு கிலோ வெங்காயம் கொடுக்க,

ஜான்:- ஒரு ரெண்டு கிலோ கல்லை எடுத்து கொடுக்க,

கடைகாரர்:- அந்த கல்லை வாங்கி தராசுல வைக்க

ஜான்:- ஒரு தக்காளியை கொடுக்க,

கடைகாரர்:- ரெண்டு கிலோ தக்காளியை கொடுக்க, இப்படியே எல்லாம் வாங்கியாச்சு.

(வடிவேலு மருதமலை காமெடி மாதிரி) நான் அப்டியே ஷாக் ஆகிட்டேன்...!

இப்பவும் எனக்குள்ள ஒரு சந்தேகம்?

காசை கொடுக்கணுமே? மொத்தம் என்ன விலைன்னு அவர் எப்படி சொல்லுவாரு?

ஜான் எப்படி புரிஞ்சு காசை கொடுப்பருன்னு யோசிச்சுகிட்டு கடைகாரரை பார்த்தா அவரு ஒன்னுமே சொல்லல!

என் சந்தேகம் தீராம, ஜான் பக்கம் திரும்பினா, அவர் "கூலா" ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து கொடுத்தாரு.

கடைகாரரும் வாங்கி வைத்துக்கொண்டு மிச்ச பணத்தை கொடுத்து "ராம் ராம்-ஜி"-ன்னு சொல்ல, இவர் பதிலுக்கு சிரித்து விட்டு வந்தார்.

நான் அப்படியே ஜானை பாத்தேன்...!

அவரும் கொஞ்சம் கூட அசராமல் நீ என்ன நினைத்து என்னை லுக் விடுகிறாய் என்று எனக்கு புரிகிறது.

எப்படி பாத்தாலும் காய் வாங்கும் விலை மொத்தமா நூறு ரூபாய்க்குள்ள தான வரும்? அதான் தான் ஒரு ஆயிரம் ரூபாய்க்கு, நூறு ரூபா நோட்டா மாத்தி வச்சு இருக்கேன்.

சிம்பிள், தினம் ஒரு நூறு ரூபா நோட்டு, இத விட்டுட்டு உன்னை மாதிரி அவனுககிட்ட பேச்சு வாங்க வேண்டிய இருக்காது பாரு-ன்னு சொன்னாரு.

அவ்ளோதான், எனக்கு மண்டைல கொம்பு முளைச்சு, காதுல புகை வராத குறை!

என்னப்பா இதெல்லாம்? உன்ன போய் அந்த ஆளு ராஜேஷ் நல்லவேன்னு நினைச்சுகிட்டு இருக்காரே?

அதை விட கொடுமை உன்கூட போய் ஹிந்தி கத்துக்க வந்தேன் பாருன்னு என்ன நானே நொந்துகிட்டேன்.

அதுக்கும் அவர் அசராம சொன்ன பீட்டர் பதில்...!

" யு சி மேன், கம்யுனிகேசன் இஸ் நாட் வாட் யு டாக், கம்யுனிகேசன் இஸ் வாட் யு மேக் அதர்ஸ் டு அண்டர்ஸ்டாண்ட்" ஓகே-ன்னு பீட்டர் விட...!

அன்னைக்கே நான் முடிவு பண்ணிட்டேன், இனி எவன் என்னை என்ன திட்டினாலும் சரி, இல்ல வாயில் ஒரு செருப்பை கொடுத்துட்டு, இன்னொரு செருப்பால் என்ன அடித்தாலும் சரி...! இவன் கூட போய் ஹிந்தி கத்துக்க நினைக்க மட்டும் கூடவே கூடாது என்று.

அது ஓர் அழகிய நிலா காலம், ஆனால் அந்த நட்பு இப்போது இல்லையே என்று மனம் சில அந்தி மாலை பொழுதில் நினைக்கும்.

நன்றி!.
 

Blogger Widgets