Friday, February 5, 2010

ஆஹா! கெளம்பீட்டாங்கையா கெளம்பீட்டாங்க!

எனக்கு வந்த மின் அஞ்சலை தமிழில் மாற்றி, (சும்மா) நகைக்க இங்கு பகிர்ந்து கொள்வதை தவிர, இதில் உள்குத்து நோக்கம் எதுவும் இல்லை!.

"சற்றுமுன் கிடைத்த அதிர்ச்சி தகவல்"! (இது தான் அந்த மின் அஞ்சலின் தலைப்பு)

இதோ, அந்த அதிர்ச்சி தகவல் மற்றும் படங்கள்!



கணக்கில் அடங்காத மீன் வகைகள், எண்ணிக்கை இல்லாத அளவு, தமிழ் நாட்டு கடல் கரையில் இறந்து கிடக்கின்றன!



பத்திரிக்கையாளர்களும், அரசாங்க அதிகாரிகளும், காவல்துறையும், இதன் காரணத்தை கண்டுபிடிக்க சம்பவ இடத்துக்கு விரைகிறார்கள்!



அங்கு சென்று பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்களுக்கு, எந்த தடையமோ காரணமோ கிடைக்கவில்லை!.

எனவே, தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்படுகிறது.



தீவிர விசாரனையில், இதுவரையில் நடந்திராத அளவு ஒரு(மீன்)இனத்தின் கூட்டு தற்கொலை! என்ற அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்தது.

இதன் முழு காரணத்தை அறிய விசாரணையை துரித படுத்திய காவல் துறைக்கு, கடைசியாக துப்பு கிடைத்து காரணமும் புரிந்தது!.



அந்த காரணத்தை அறிய துப்(பி)பு கொடுத்த மீன் சொன்னது!...
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;

"விஜய்"-யின் அடுத்த படத்துக்கு "சுறா" என்று பெயர் வைத்திருப்பது, எங்களை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டது.



இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், வருங்காலத்தில் எங்கள் இனத்தின் பெயரை "பதிவுலக இடுகைகளில் துவைத்து தொங்க விடாமல்" காக்கும் பொருட்டும்!

அந்த படத்துக்கு வேறு ஏதாவது பெயரை வைக்க சொல்லவே, இன்று எங்கள் உயிரை கொடுக்கிறோம்.

நாங்கள், இங்கு புதைக்க படவில்லை, விதைக்க படுகிறோம், ஏன்னா...

எ...ஏ! நான் தனி ஆளு இல்ல தோ(ஆ)ப்பு!.

இனி வருவது என்னுடைய எண்ணம்,

எப்படி எல்லாம் யோசிக்கிறாங்கையா! அவ்வ்வ்வ்...

இன்னும் படமே முடியவில்லை, அதுக்குள்ளே மின் அஞ்சல் எஸ்(எம்).எம்.எஸ்-ன்னு ஆரமிச்சா எப்புடி?

உங்க ஆர்வம் புரியுது!, ஆனா, பொறுமை பொறுமை மக்களே!. எதையுமே பிளான் பண்ணாம பண்ணக்கூடாது!.

மொதொல்ல படம் முடியோணும், அப்புறம் ஒன்னுக்கு ஒன்னு டிக்கெட் இலவசம்னு போஸ்டர் ஒட்டோணும்..., அதுக்கப்புறமா, "ரெடி ஒன்...டூ...த்ரீ... ஜூட்" சொல்லித்தான் ஆரமிக்கணும், ஓகே-வா?.

ஹயோ..ஹயோ...! என்னது இது! சின்ன புள்ளதனமால்ல இருக்கு? என்று சொல்பவர்களுக்கு, சமீபத்தில் படித்த "சுறா" படம்! பற்றிய செய்தி ஒன்று!.

கடலில் வின்னை தொடுகிற அளவுக்கு சீறிக்கொண்டு வரும் சுனாமி அலையை பார்த்து பயந்து ஊரே அஞ்சி ஓடிக்கொண்டு இருக்கும் போது!...

சீறி வரும் அந்த அலைக்குள் இருந்து படகை ஓட்டிக் கொண்டு விஜய் (ஸ்டைலாக, "ஹயோ..ஹயோ... :-)" ) அறிமுகம் ஆவாராம்!.

இந்த இடத்துல நம்ம "பாஷாவோட ஹோய்...ஹோய்..." பின்னணி பில்டப் உறுதின்னு, இத படிக்கும் போதே உங்களுக்கு புரிஞ்சு இருக்கும், இதுக்கும் மேல வேற என்னத்த சொல்ல ஹும்ம்ம்...

கம்ஷா ஹமிதா!(அதாங்க,...கொரியன் மொழியில் நன்றி!)

டிஸ்கி: கண்ணா!, நான் "பி.எம்"... ஆ.."போஸ்ட் மேன்" மின் அஞ்சலில் வந்ததை அப்டியே கொடுத்துட்டேன், இத புரியாம பின்னூட்டத்துல "பாண்டி" ஆட கூடாது.
 

Blogger Widgets