Sunday, July 3, 2011

தாஜ்மஹாலுக்கு பின்னால்...!

எல்லா மதங்களும் நல்ல மதங்களே, ஆனால் எல்லா மனிதர்களும் நல்ல மனிதர்கள் அல்ல, அதிலும் அவர்களுக்கு "மதம்" என்னும் "மதம்" பிடித்து போகும் போது அவர்கள் மனிதர்களாகவே இருப்பது இல்லை.

இதையே நபிகள் நாயகம் சொன்னார், நல்ல மனிதன் என்பவன் தன் மதத்தின் மீது பற்று கொண்டு இருக்க வேண்டும், ஆனால் தன் மதத்தில் அல்லது மதத்தின் பெயரில் ஒருவன் தவறு செய்யும் போது, அந்த தவறை கண்டிக்காமல் அவனுக்கு துணை போகிறவன் தீவிரவாதியாகிறான் என்று.

இதை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால், இது இன மத ரீதியாகவோ அல்லது இந்தியாவின் அடையாள சின்னங்ககளில் ஒன்றின் பெருமையை குறைக்கவோ எழுதவில்லை.

நான் கடந்து வந்த பாதையில் பல இடங்களில் பல தரப்பட்ட மனிதர்களால் வாய்வழி சொல்லாக கேள்வி பட்ட தகவல்களை இங்கு தொகுப்பதே என் நோக்கமே தவிர, இதில் எது உண்மை, எது உண்மையல்ல என்று எனக்கும் தெரியாது.

ஆனால், என்னை விட இதை பற்றி அதிகம் தெரிந்தவர்கள், நான் அறிந்த தகவல்களை ஆதாரத்தோட உறுதி படுத்தவோ அல்லது தவறாக எதுவும் இருந்தால் அதை சரியாக மாற்றவோ உதவும் என்ற நோக்கில் இங்கு இதை பகிர்கிறேன்.



இன்று உலக அளவில் மிக பிரபலமாக இருக்கும் இந்திய உணவு "பிரியாணி" இதை கண்டு பிடித்தவர் தாஜ்மஹாலில் உறங்கும் மும்தாஜ்தான், அவர் கறி பிரட்டலில் பிரியாணி சமைக்கும் வாசம் அந்த பகுதியையே மயக்கி பசியை தூண்டுமாம்.

இங்கு ஒரு கிளை தகவல் வந்து சேர்க்கிறது.

இஸ்லாமியர்களில் ஒரு வழக்கம் இருக்கிறது, இளம் மனைவியை விதவையாக்கி விட்டு செல்லும் கணவனின் மூத்த அல்லது இளைய சகோதரர்களில் ஒருவர் அந்த இளம் விதவையின் வாழ்கை தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் அவரை திருமணம் செய்து கொள்ளவேண்டும்.

அப்படி திருமணம் செய்யும் போது அவருக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்தாலும், இன்னொரு மனைவியாக ஏற்றுக்கொள்வதில் தடையேதும் இல்லை.

இதை இங்கு சொல்ல காரணம், மும்தாஜ் திருமணமாகி இளம் வயதில் தன் கணவனை இழந்ததால் அவர் கணவரின் திருமணமான சகோதரர் மும்தாஜையும் தன் மனைவியாக்கிகொண்டார்.

இவ்வாறு ஒருநாள் தன் வீட்டில் மும்தாஜ் பிரியாணி சமைத்துக்கொண்டு இருக்க, வழக்கம் போல வாசனை அந்த பகுதியை தூக்கியது.

அப்போது அந்த பகுதியில் தன் சுற்றங்களுடன் வலம் வந்த "ஷாஜஹான்" இந்த வாசத்தில் மயங்கி தன் சேவகனை சென்று அது என்ன என்று பார்த்து வர அனுப்பினார்.

அரசாங்க சேவகன் மூலம் அரசர் தான் சமைக்கும் உணவின் வாசத்தில் மயங்கியதை கேட்டு மகிழ்ந்த மும்தாஜ் அவருக்கு ஒரு தட்டில் வைத்து கொடுத்து அனுப்பினார்.

அந்த புது உணவை சுவைத்து மகிழ்ந்த ஷாஜஹான், இத்தனை சுவையான உணவை சமைத்தவருக்கு நான் ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும் என்று சொல்லி அவரை அழைத்து வர சொன்னார்.

அரசன் முன் வந்து நின்ற மும்தாஜை பார்த்ததும், அவரின் அழகில் மயங்கி மும்தாஜை தன் காதல் மனைவியாக்கி கொள்ளவிரும்புவதாக சொல்லி (கணவரை மிரட்டி என்றும் கேட்டதுண்டு) அவரை தன்னோடு அழைத்து சென்று விட்டார்.

ஷாஜஹானுக்கும் ஏற்கனவே திருமணமாகி இருந்தாலும், அழகில் அதிக நாட்டம் கொண்ட ரசிகனாம் அவர்.



பின்னாளில் மும்தாஜ் மீது மிகுந்த காதல் கொண்டிருந்த ஷாஜஹான், 1631 ஆம் ஆண்டு புர்ஹாம்புரில் உள்ள புலாரா மஹாலில் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்துவிட்டு மும்தாஜ் மரணமடைந்துவிட, அவர் மீது கொண்ட காதலால் மும்தாஜுக்கு ஒரு நினைவு சின்னம் கட்டவேண்டும் என்று ஷாஜகான் விரும்பினார்.

அதன் விளைவாகவே ஆக்ராவில் யமுனையாற்றின் கரையில் தாஜ்மஹால் கட்டப்பட்டது.

தாஜ்மஹால் வேலைகள் முடிந்து மும்தாஜின் உடலை இங்கு அடக்கம் செய்யும் வரை மும்தாஜின் உடல் புர்ஹாம்புரில் உள்ள புலாரா மஹாலில்தான் வைக்கப்பட்டிருந்ததாம்.

முழுவதும் வெள்ளை சலவைகள் மூலம் தாஜ்மஹால் கட்டப்பட்டதால் நாட்டின் பொருளாதரமே பாதிக்கப்பட்டதாம், ஆனாலும் அதை பற்றி வருந்தாமல் யமுனையாற்றின் மறு கரையில் தாஜ்மஹால் போலவே கருப்பு சலவைகள் மூலம் தனக்கு ஒரு நினைவு சின்னம் எழுப்பி தான் இறப்புக்கு பிறகு தான் உடலை மும்தாஜின் சமாதியை பார்ப்பது போல அமைக்கும் வேலையில் இறங்கிவிட்டாராம்.




இதில் கோவம் கொண்ட அவர் பட்டத்து வாரிசான ஷாஜஹானின் மகன் ஓரங்கசிப் தந்தை என்றும் பாராமல் அவரை சிறையில் வைத்து தான் ஆட்சியை எடுத்து நடத்தினாராம்.

தன் கருப்பு தாஜ்மஹால் ஆசை நிறைவேறாமல் போனதால் சிறையில் இருந்த தன் கடைசி காலத்தில் ஷாஜஹான் தன்னையும் மும்தாஜின் சமாதிக்கு அருகில் அடக்கம் செய்யுமாறு கேட்டுகொண்டாராம்.

இது இப்படி போக, இன்னொரு பக்கம் அது தாஜ்மஹாலே அல்ல என்றும், அது ஷாஜஹானின் காலத்துக்கு முன்பே இருந்த ராஜபுத்திர கட்டிடகலை அமைப்பில் உருவாக்க பட்ட கோவில் என்றும் வெவ்வேறு ஆதாரம் மற்றும் புகை படங்களோடு பல கட்டுரைகள் வருகின்றன.

இவர்கள் சொல்வது, கரையான்கள் கட்டிய வீட்டை நல்ல பாம்பு தன் வீடாக்கி கொண்டதை போல, மொகலாய ஆட்சியில் இந்த கோவில் தாஜ்மஹாலாக மாற்ற பட்டு விட்டதாகவும், உலகில் எந்த இஸ்லாமிய கட்டிடகலை அமைப்பிலும் தாஜ்மஹால் போல இல்லை என்றும், மேலும் "மஹால்" என்று முடியும் எந்த கட்டிடமும் தாஜ்மஹாலுக்கு முன் கட்டும் வழக்கம் மொகலாய, இஸ்லாமிய கட்டிடகலையில் இல்லை என்றும் தங்கள் பக்க கருத்துக்களை முன் வைக்கிறார்கள்.

ஒரு கோடி ஆண்டுக்கு முன் விசையங்களை தோண்டி எடுக்கும் ஆய்வாளர்கள், வெறும் முந்நூறு வருடத்துக்கு முன்னய ஆதாரத்தை தோண்டி எடுப்பது என்ன பெரிய விசையமா என்றும் கேள்வி கேட்கிறார்கள்?

இதை பற்றி அதிகம் படிக்க, படங்களை பார்க்க இணைப்பை இங்கு கொடுத்துள்ளேன்.


தாஜ்மஹாலா கோவிலா?


தாஜ்மஹால் பற்றிய கேட்ட சில சுவாரசியமான தகவல்கள்

இருபது ஆண்டுகளாக கட்டி முடிக்க பட்ட தாஜ்மஹாலின் வடிவமைப்பாலரின் கை விரல்களை வெட்டி எடுத்து அவரை சிறையில் அடைத்து விட்டாராம் ஷாஜஹான்.

இனி வரும் நாட்களில் இதுபோல வேறு யாருக்கும் வடிவமைத்து கொடுக்ககூடாது என்பது ஷாஜஹானின் நோக்கம்.

மரண படுகையில் இருந்த அந்த வடிவமைப்பாளர், இது போல நடக்கும் என்று தெரிந்துதான், அந்த கட்டிடத்தில் ஒரு குறையை வைத்து உள்ளேன்.

அதாவது மழை வரும் போது ஒரு துளி நீர் மும்தாஜின் சமாதி வரை வடியும் என்றும், அதை தன்னை தவிர வேறு யாரும் இனி எந்த காலத்திலும் சரி செய்ய முடியாது என்பதுதான் அவர் சொன்ன தகவல்.

அதே போல அக்குறையை இன்றுவரை யாராலும் சரி செய்ய அல்ல எப்படி, எங்கே இருந்து நீர் உள்ளே வருகிறது! என்று கூட கண்டு பிடிக்கக்கூட முடியவில்லையாம்.

இதே போல மற்றொரு சுவையான தகவல்.

கடந்த நூற்றாண்டின் நடுவில் தாஜ்மஹாலில் பராமரிப்பு நடை பெற்ற போது, ஒரு இடத்தில ஓட்டை விழுவதை கண்டறிந்த ஆய்வாளர்கள் அதை எப்படி கட்டிடத்தின் மற்ற இடத்திற்கு பாதிப்பு வராமல் சரி செய்வது என்று குழம்பி விடை கண்டு பிடிக்க முடியாமல், தாஜ்மஹாலில் பராமரிப்பு புத்தகத்தை புரட்டினார்களாம்.

அதில் இரநூறு வருடங்களுக்கு முன் இதே போல ஒரு இடத்தில வந்த ஓட்டையை அடைக்க வெள்ளியை காய்ச்சி ஊற்றி அடைத்ததாய் படித்து வியந்து, அதே போல செய்து பிரச்சனையை தாஜ்மஹாலுக்கு வேறு பாதிப்பில்லாமல் சரி செய்தார்களாம்.

எது எப்படியோ, வரலாற்றில் எது உண்மையோ எனக்கு தெரியாது, ஆனால் இன மத காலத்தை கடந்து இந்தியாவின் ஒரு முக்கிய அடையாள சின்னமாக கம்பீரமாக நிற்கும் தாஜ்மஹாலை இன்று பார்த்தாலும் ஒரு நிமிடம் யாருக்கும் மூச்சு முட்டும் என்பது மறுக்க முடியாத உண்மை.

நன்றி மீண்டும் விரைவில் சந்திப்போம்.

Photobucket

Photobucket
 

Blogger Widgets