Thursday, June 18, 2009

யுனிக்ஸ்சும் யுகமும்

யூனிக்சில் cal என ஒரு கட்டளை உண்டு. இது நாட்காட்டியை உங்களுக்கு காட்டுவதற்காக அமைந்த கட்டளை. உங்கள் யூனிக்சின் $ prompt-ல் cal 1752 என நீங்கள் தட்டினால் 1752-ஆம் ஆண்டிற்கான காலண்டரை காட்டும். இதில் ஆச்சரியம் என்னவென்றால், செப்டம்பர் மாதத்தில் 2-ம் தேதிக்கப்புறம் நேரடியாக பதினான்காம் தேதிக்கு போய்விடும். இடையிலுள்ள 11 நாட்களும் காணமல் போய்விடும்?

ஏன்? என்று தேடிப்பார்த்த போது, அந்த மாதத்தில் தான் பிரிட்டீஷார் தங்கள் காலண்டர்முறையை பழைய ஜூலியன் நாட்காட்டிமுறையிலிருந்து கிரிகோரியன் நாட்காட்டிமுறைக்கு மாற்றினார்களாம். அதனால் அவர்கள் இப்படி சின்ன ஒரு மற்றத்தை செய்யவேண்டி வந்தாம் 1752-ம் வருட காலண்டரில்.

இந்த காலத்தை யார் அமைத்தார்கள் என்று ஆராந்து பார்க்க எனக்குள் ஒரு ஆசை பிறந்தது, அதன் முடிவில் நான் தெரிந்துகொண்ட தகவல்கள் இது.

ஆண்டவரின் படைப்பில் காலம் என்பது மிகவும் அதிசயிக்க தக்க வகையில் விசித்திரமானது. காலம் என்பது ஒரு வரையறைக்கு உட்படாதது. காலத்தின் அடிப்படை அலகு எனும் கை நொடி பொழுது தவிர மற்ற அலகுகள் இடத்திற்கு தக்கவாறு அவ்வப்போது மாறுபடும்.

காலம் என்பது நொடி, வினாடி, நாழிகை, முகூர்த்தம், ஜாமம், நாள், வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம், பக்சம், மாதம், ருது, அயனம், வருடம், யுகம், மனு, கல்பம், என்று பல்வேறு அடிப்படையில் ஞானிகளால் நிகழ்வுகளைக் கொண்டு நிர்ணயிக்கப்பட்டது.

60 தற்பரை - 1 விநாடி
60 விநாடி - 1 நாடி
60 நாடி - 1 நாள்
29-32 நாள் - 1 மாதம்
12 மாதம் - 1 வருடம் (365 நாள், 15 நாடி, 31 விநாடி, 15 தற்பரை)

யுகம்:-

கிருதயுகம் 4 X 4,32,000 = 17,28,000
திரேதாயுகம் 3 X 4,32,000 = 12,96,000
துவாபரயுகம் 2 X 4,32,000 = 8,64,000
கலியுகம் 1 X 4,32,000 = 4,32,000


நாம் வாழும் பூமியானது உருவாகி கடல்கள் தோன்றியபின் 5 முறை பிரளயம் ஏற்பட்டு கல்ப காலம் முடிந்து அடுத்த கல்பம் ஏற்பட்டது என நமது முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளார்கள். புவியியல் வல்லுநர்களும் அதை உண்மையென ஆய்வின் மூலம் நிருபித்துள்ளார்கள்.



மெய்ஞ்ஞானிகள் பிரம்ம கல்பம் என்று கூறும் காலத்தை புவியியல் வல்லுநர்கள் ஆர்க்கியோ சோயிக் என்றும், கூர்ம கல்பம் புரட்டிரோ சோயிக் என்றும், பார்த்திவ கல்பம் பேசியோ சோயிக் என்றும், சாவித்திரி கல்பம் மீச சோயிக் என்றும், பிரளய கல்பம் சென சோயிக் என்றும் பெயரிட்டுள்ளார்கள்.

மெய்ஞ்ஞானிகள் வராஹ கல்பம் எனும் கல்பத்தில் வைவஸ்வத மனுவின் காலம் நடந்து வருகிறது என்று கூறியுள்ளார்கள், வல்லுநர்கள் இதை பிளைஸ்டோசின் காலம் என்று கூறுகிறார்கள். பூமியில் மனிதன் தோன்றி பத்து லட்சம் ஆண்டுகள் ஆகிறது என்கிறார்கள்.

யுகம் என்பது இந்துக்களின் கால அளவை முறையில் காலத்தை அளக்கும் பெரிய அலகுகளில் ஒன்று. 360 மனிதஆண்டுகள் 1 தேவ ஆண்டாக கணக்கிடப்படுகிறது.யுகங்கள் நான்கு வகைப்படும். அவை,

1-கிருதயுகம்
2-திரேதாயுகம்
3-துவாபரயுகம்
4-கலியுகம்

இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு கால அளவுகளைக் கொண்டன.

கிருத யுகம் மொத்தம் 17,28,000 ஆண்டுகள் கொண்டது. இது கலியுகத்தின் நான்கு மடங்கு பெரியதாகும்.

திரேதா யுகம் 12,96,000 ஆண்டுகளையும் கொண்டன. இது கலியுகத்திலும் மூன்றுமடங்கு பெரியதான.

துவாபர யுகம் 8,64,000 ஆண்டுகளை கொண்டன, இது கலியுகத்திலும் இரண்டு மடங்கு கால அளவு கொண்டது.

கலியுகம் சிறிய யுகமாக நான்கு இலட்சத்து முப்பத்து இரண்டாயிரம் (4,32,000) ஆண்டுகள் கொண்டது.

ஆகவே இந்த அடிப்படையில் பார்க்கும் போது,

- 'கிருதாயுகம்' 4800 தேவ ஆண்டுகள் நடந்தது.... (மனித ஆண்டு கணக்குப்படி17,28,000 ஆண்டுகள்).
- 'திரேதாயுகம்' 360 தேவஆண்டுகள் நடந்தது.
- 'துவாபாயுகம்' 2,400 தேவ ஆண்டுகள் நடந்தது.
- 'கலியுகம்' மொத்தம் 432,000 ஆண்டு,

யுகங்களில் கலியுகம் குறைந்த வருடங்களைக் கொண்டது. இப்போது நாம் 5101வது கலியுகத்தில் இருக்கிறோம். அப்படியானால், கலியுகம் இன்னும் 4,26,899ஆண்டுகள் நடைபெறும், இந்த கலியுகத்தில் தான் புத்தன், யேசு, முகம்மது நபி போன்றோர்கள் தோன்றினார்கள்.

கிருதாயுகம், திரேதாயுகம், துவாபாயுகம், கலியுகம் என்ற இந்த நான்கு யுகத்தையும்சேர்த்து 'சதுர்யுகம்' என அழைக்கப்படுகிறது, அதாவது இந்த நான்கு யுகங்களும் ஒரு சுற்றுசுற்றி வருதலின் பெயர் தான் ஒரு சதுர்யுகி (Chaturyugi).


கிருத யுகம் அல்லது சத்திய யுகம்:- இந்து சமயத்தின்படி இது உண்மையின் காலம் எனப்படுகிறது. அக் காலத்தில் மனித இனம் கடவுளரால் ஆளப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு வேலையும், வெளிப்பாடும் தூய இலட்சியத் தன்மைக்கு நெருக்கமாக இருந்தது. இது சில சமயங்களில் பொற்காலம் எனவும் குறிப்பிடப்படுவது உண்டு. கிருத யுகத்தில் மக்கள் நீண்ட வாழ்நாட்களையும் கொண்டிருந்தனராம்.

சுழற்சி முறையில் வருவதாகக் கருதப்படும் நான்கு யுகங்களில் கிருத யுகமே முதல் யுகம். அறிவு, தியானம், தவம் என்பன இந்த யுகத்தில் சிறப்புப் பெற்றிருந்தன. இந்த யுகத்தில் மனிதரின் வாழ்நாள் 100,000 ஆண்டுகளாக இருந்ததாகப் பழங்கால இந்துக்கள் நம்பினர்.

இந்த யுகத்தில் சத்தியம்மும் தர்மமும் நான்கு வழிகளிலும் அனைவருக்கும் பயன்பட்டதாக, அதாவது யாரன்று பாராமல் யாரும் யாருக்கும் எல்லா உதவியும் செய்ததாக வேதங்கள் சொல்கிறது.

திரேதாயுகம்:- திரேதாயுகத்தில் இன்னும் அதிகமாய் 1,296,000 ஆண்டுகள் இருந்தனவெனவும் அக்காலத்தில் தான் இராமனும் வாழ்ந்தான் என்கின்றார்கள். அது ராமாயணகாலம்.

இந்த யுகத்தில் சத்தியம்மும் தர்மமும் மூன்று வழிகளில் பயன்பட்டதாக, அதாவது யாரென்று பார்த்து தன் சொந்த பந்தங்களுக்கும் நண்பர்களுக்கும் உதவிகள் செய்ததாக வேதங்கள் சொல்கிறது.

துவாபாயுகம்:- துவாபரயுகத்தை பார்த்தால் அதில் மொத்தம் 864,000 ஆண்டுகள் இருந்தனவாம்.அது கிருஷ்ணா வாழ்ந்த மகாபாரதகாலம்.

இந்த யுகத்தில் சத்தியம்மும் தர்மமும் இரண்டு வழிகளில் மட்டுமே பயன்பட்டதாக, அதாவது தன் வாரிசு வழி மற்றும் தன் ரத்த சொந்தங்களுக்கும் மட்டும் உதவியதாக வேதங்கள் சொல்கிறது.

கலியுகம்:- வர்த்தமான யுகத்தை கலியுகம் என்பது இந்து மரபு, கலியுகம் என்பது கேடுகளும் தீங்குகளும் நிறைந்த யுகமாகும். நீதி, நியாயம் தலைகீழாக நிற்கும் காலமாகும்.

இந்த யுகத்தில் சத்தியம்மும் தர்மமும் ஒரே ஒரு பக்கமாக நொண்டி நொண்டி நடக்கும், அதாவது மனிதன் யாரென்றும் பாராமல் சுயநலமாக தானும் தன் சுகமும் மட்டுமே முக்கியமென்று தன் அழிவிற்கு காரணமான நிரந்தரம் இல்லாத மாய ஆசைகளுக்கு அடிமையாகி மனிதன் தன்னை தானே அழித்துக்கொள்ளும் கலி காலம் என்று என்று வேதங்கள் சொல்கிறது.

இந்த காலத்தில் ரிஷிகளும், சித்தர்களும் பாவங்களில் இருந்து விலகி, இறைவனை தேடி காட்டில் ஓடி ஒளிந்து கொள்வார்கள் என்றும், நாட்டில் வாழும் நால்லவர்களும், புத்திசாலிகளும் இறை நம்பிக்கையோடு அந்த அந்த சரியான வயதுகும் நேரத்துக்கும் தகுந்த மாதிரி மட்டுமே எந்த பெரிய முடிவுகளையும் எடுப்பர்கள் என்றும், அரைகுறையாக தெரிந்த வேதாந்திகள் அதை வைத்து மக்களை ஏமாற்றி பணம் பண்ணுவார்கள் என்றும், ஆக மனிதனே மனிதனை அழிக்கும் காலம் என்று சாஸ்திரங்களும் வேதங்களும் சொல்கிறது.

அப்படியானால் இந்த கலி காலத்தில் இறைவனை அடைய என்னதான் வழி என்றால், சித்தர் வழி போவது, மாய ஆசைகளை துறப்பது, தவம் (Meditation) செய்து ஆசையை துறந்து, புலன்களை அடக்கி இறைவனை நாடும் மனிதனே துன்பமின்றி வாழ முடியும் என்று இந்து சாஸ்திரங்களும் வேதங்களும் சொல்கிறது.

இந்து மதம் மட்டுமல்லால் எனக்கு தெரிந்த மற்ற மத வேதங்களும் இதே அர்த்தத்தை வெவ்வேறு வார்த்தைகளில் சொல்கிறது என்பது என் தனிப்பட்ட கருத்து .

சரி, இந்த கலியுகம் முடிந்ததும் என்னவாகும்?

கலியுகம் பிறந்தது பெப்ரவரி 18, 3102 BCE ல், கலியுகம் முடிந்ததும் மீண்டும் கிருதயுகம் ஆரம்பிக்கும், அடுத்து திரேதாயுகம், துவாபரயுகம், மீண்டும் கலியுகம் இவ்வாறு மீண்டும் மீண்டும் வந்துகொண்டேயிருக்கும்.

இப்படியே நான்கு யுகமும் சேர்ந்தால் ஒரு சதுர்யுகம் அல்லது மகாயுகம் = 4.32 மில்லியன் வருடங்கள்.

- 71 மகாயுகம் = 1 மன்வந்திரம்
- 14 மன்வந்திரம் = 1 கற்பம் (994 மகாயுகம்)

இப்படியே வரும் 2 கற்பம் இந்து கணக்குப்படி பிரம்மாவின் 1 நாள், இதை போல் பிரம்மாவுக்கு 100 வயது ஆனால் அவரின் ஆயுள் முடிந்து அடுத்த பிரம்மா ஆட்சிக்கு வருவார் என்று இந்து சாஸ்திரங்கள் சொல்கின்றன.
 

Blogger Widgets