மனிதனோடு மிக நெருங்கிய வாழ்கை முறையை கொண்ட மிருகம் குரங்கு எனபதை நாம் அனைவரும் அறிவோம், சமீபத்தில் இதை பற்றிய ஒரு நல்ல தகவல் எனக்கு கிடைத்தது, அதை இங்கு உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
சிங்கையில் எனக்கு முரளி என்று ஒரு நண்பர் இருக்கிறார், மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கொண்ட அவருடன் அடிக்கடி சந்தித்து கருத்து பரிமாற்றம் செய்வது எங்கள் வழக்கம்.
ஆன்மிகம் மட்டுமின்றி அது போல நேரத்தில் இருவருக்கும் தெரிந்த ஆரோக்கியமான கருத்துக்களை மற்ற உலக நடப்புகளை பற்றி இருவருமே பகிர்ந்து கொள்வோம்.
அது போல பேசிக்கொண்டு இருந்த ஒரு நேரத்தில் அவர் சொன்ன ஒரு தகவல்தான் இது.
அவரின் ஆன்மீக ஆர்வத்தை தொண்டு என்ற போர்வையில் இடைத்தரகர்கள் பயன்படுத்தி கொள்கிறார்கள் என்று நான் சொல்ல, அதற்கு அவர் ஆன்மீகம் பற்றி ஒரு நல்ல விளக்கம் கொடுத்தார்.
மாறுபட்ட நல்ல சமூக சிந்தனை மற்றும் அப்படி மனதில் பட்டதை அதே போல செய்வது சுவாமி விவேகானந்தர் போல ஒரு சிங்கத்தால்தான் முடியும், என்பது எப்படி மறுக்க முடியாத உண்மையோ, அதே போல அனைவருமே அவரைப்போல வீர துறவியாக இருக்க முடியாது என்பதும் உண்மையே.
ஆகவே, இந்த மாதிரி ஒரு வாழ்கை முறையில் இருக்கும் நான் ஒரு நூறாவது குரங்காக இருப்பதில் எனக்கொன்றும் வருத்தமில்லை என்றார்.

அது என்ன நூறாவது குரங்கு என்று நான் கேட்க? அவர் சொன்னது இதுதான்.
கடந்த நூறாண்டின் துவக்கத்தில், குரங்குகளை வைத்து ஒரு ஆராச்சி நடந்ததாம், ஜப்பானுக்கு அருகே உள்ள ஒன்றுகொன்று தொடர்பில்லாத சில மழைகாடு தீவுகளில் பல குரங்குகளை கொண்டு விட்டு விட்டாகளாம், அதன் பின் அந்த குரங்குகள் உணவுக்காக பலவகை பழங்களை அந்த தீவுகளில் இருந்த குப்பைகளில் குறிப்பாக சகதிகளில் கொட்டிவிட்டு நடப்பதை கண்காணிக்க துவங்கினார்களாம்.
பசியின் காரணமாக குரங்குகளும் அந்த பழங்களை எடுத்து உண்டன, இப்படியே நாட்கள் நகர ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு ஒரு குரங்கு சகதியில் இருந்து எடுத்த பழத்தை ஊதி விட்டு பின் சாப்பிட, ஆராய்ச்சியாளர்களின் கண்காணிப்பு ஆர்வம் அதிகரித்ததாம்.
ஒரு சில நாட்களுக்கு பிறகு அந்த கூட்டத்தில் இருந்து வந்த ஒரு குட்டி குரங்கு, தன் உணவை எடுத்துக்கொண்டு தனியாக ஓடுவதை கண்டு அந்த குரங்கை கண்காணிக்க, சகதியில் இருந்து எடுத்த பழத்தை கொண்டு சென்ற குட்டி குரங்கு அருகே இருந்த நீரோடையில் அந்த பழத்தை கழுவி விட்டு பின் சாப்பிட துவங்கியதாம்.
அன்று முதல் அனைவரும் கூர்ந்து கண்காணிக்க, இந்த குரங்கு மட்டும் தொடந்து உணவை கழுவிவிட்டு உண்பதை கைவிடவில்லையாம்.

இப்படியாக ஒரு குறிப்பிட்ட காலம் நகர ஒவ்வொன்றாக மற்ற அனைத்து குரங்குகளும் அதே போல உணவை சகதியில் இருந்து கழுவிவிட்டு உண்பதை கண்டதும் ஆராய்ச்சியாளர்களுக்கு சந்தோசம் ஒரு புறம் இருக்க, ஒரு வேலை இந்த குட்டி குரங்கை பார்த்து மற்ற குரங்குகள் சக்தியை கழுவவேண்டும் என்று பழகி இருக்குமோ என்று சந்தேகமும் வந்ததாம்.
இப்படி சில காலம் நகர நகர, ஒன்றுகொன்று தொடர்பில்லாத அந்த மழைகாடு தீவுகளில் இருந்த ஒவ்வொரு தீவிலும் இருந்த குரங்குகள் தன் உணவை சகதியில் இருந்து எடுத்து கழுவி விட்டு உண்பதை காண முடிந்ததாம்.
இந்த ஆராய்சியின் முடிவில் அத்தனை குரங்குகளும் இதே போல் செய்வதை கொண்டு மனித நாகரீக வளர்ச்சியை பற்றி ஒரு புத்தகம் வெளிவிட பட்டதாம்.
இதன் மூலம் நமக்கு புரியும் கருத்து என்பது, நல்ல சிந்தனைகள் மற்றும் செயல்கள் செய்யும் போது, அதில் உள்ள குறை நிறைகளை பற்றி கவலை படாமல் தொடந்து செய்வதன் மூலம் அது நீண்ட தூரம் பயணம் செய்து பலரை நல்வழி படுத்தும் என்பதுதான் என்று நண்பர் சொல்லி முடித்தார்.
நண்பர் சென்று நீண்ட நேரம் ஆகியும் எனக்கு இந்த கதையை கேட்ட திருப்தியில் கிடைத்த சந்தோசம் மட்டும் குறையவே இல்லை, காரணம் இதையே வெவ்வேறு மத துறவிகள் அவர்கள் சமூகத்திற்கு வேறு வேறு வார்த்தைகளில் சொல்லி இருப்பதை எப்போதே படித்தது நினைவில் வந்தது.
நபிகள் பற்றி படித்த போது அவர் சொன்ன ஒரு தகவல், எல்லா சமூககத்தினரும் அவர்கள் இனத்தின் மீது பற்று கொண்டு இருக்க வேண்டும், அதே நேரத்தில், தன் இனத்தில் மீது வெறி கொண்டவன் தீவிரவாதியாகிறான்.
அப்படி வெறி கொண்ட யாரையும் எந்த சமூகத்தினரும் மன்னிக்கவே கூடாது, இல்லையெனில் அந்த வெறி தீ பொறிபோல பரவிவிடும்.
இதே கருத்தை சுவாமி விவேகானந்தரும் சொல்லி இருக்கிறார், நாம் யார் என்பதை நம் எண்ணங்களே உருவாக்குகின்றன, ஆகவே நல்ல விசையத்தை பற்றி சிந்தியுங்கள், காரணம் எண்ணங்கள் நீண்ட தூரம் பயணம் செய்யும் சக்தி கொண்டவை, வார்த்தைகள் எல்லாம் இரண்டாம் பட்சம்தான்.
“We are what our thoughts have made us; so take care about what you think. Words are secondary. Thoughts live; they travel far.” - Swami Vivekananda.
அவ்வளவு ஏன், "பெரியதாக கனவு காணுங்கள்" அந்த நல்ல சிந்தனை ஒரு நாள் நிஜமாகும் என்று நம் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சொல்லி இருக்கிறார் இல்லையா?.
நண்பர்களே, நாம் என்ன செய்கிறோம், ஏன் செய்கிறோம், என்பதை விட, நல்ல விசையங்களை பற்றி சிந்திக்க செய்தாலே போதும். அது தானாகவே காற்றில் கலந்து மற்ற அனைத்து மக்களையும் சென்று சேர்ந்து விடும்.
இதைத்தான் இந்து மதத்தில், இந்த பிரபஞ்சம் அனைத்து கேள்விகளுக்கும் விடையை திறந்து வைத்து இருக்கிறது. அதை நல்ல சிந்தனையுடன் மனதை ஒரு நிலை படுத்தும் யார் வேண்டுமானாலும் பெற முடியும் என்று சொல்லி இருக்கிறார்கள்.
நன்றி மீண்டும் சந்திப்போம்.