Friday, April 9, 2010

புது வரவு!

வணக்கம் நண்பர்களே! ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி (ஓய்...எவுரா அதி!, "இப்படி வருக்கு சந்தோசங்க உண்ணாமு, மீறு அப்புடே ஒச்சேஸ்சாரா" -ன்னு அடுவுரதி?, நோர் மொய் ர தொங்கனா கொடுக்கா).

ஆ...ஆப் சிந்தா மத், ஓ மேரா தோஸ்த்தே, சோடுதோ உஸ்கோ, ஆப் பாக்கி பூரா பட்லோ.

ஓஓஓ...எந்த குருவாயூர்யப்பா, எந்தா இது? ஒரி மாதம் கேப் விடங்கில் எனக்கி இ கீ-போர்டில் அல்லாம் மறந்து போயி, தமிழ் தாயே உன்ட பிள்ளைய நீ தான் ரச்சிக்கணும்.

கொஞ்சம் ஓவராத்தான் போறமோ!, ஓகே...ஓகே பில்டப் போதும், மேட்டருக்கு போவோம்.

குழந்தைகள் கவலை தீர்க்கும் செல்வங்கள் என்னும் பாரதின் சொல் எவ்வளவு உணர்வு பூர்வமான உண்மை என்பது அனுபவிக்கும் போதுதான் புரிகிறது.

ஆம், என் வீட்டில் இன்னொரு புதுவரவு என் மகன் "ஆரிஷ் ஆரா" (இதுலயாவது புரமோசன் வாங்குவோம்).

முன்பே நான் "தென்கொரியா குழந்தைகள் பராமரிப்பை" பற்றி ஒரு இடுகையில் சொல்லி இருக்கிறேன், அது தவிர இனி இதில் என் சொந்த அனுபவத்தை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

எச்சரிக்கை: இது கர்பிணி பெண்களுக்கு தரும் அறிவுரை இடுகை அல்ல, சொந்த அனுபவ பகிர்வு இடுகை மட்டுமே. மேலும் இங்கு சொல்லியுள்ள அனைத்துமே மருத்துவரால் தனிப்பட்ட உடல் நிலையை சேதித்து கொடுத்த அறிவுரையின் பெயரில் கடைபிடிக்க பட்டது. எனவே யாரும் சரியான மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எதையும் சுய பரிசோதனை செய்து பார்க்க வேண்டாம்.

என் மகள் பிறக்கும் போது எனக்கு இவ்வளவு அனுபவம் கிடைக்கவில்லை என்று சொல்லுவதை விட, நான் என் குடும்பத்துடன் இல்லை என்பதுதான் உண்மை.

அப்போது பணி நிமித்தம் கொரியா - சிங்கை - வியட்நாமுக்கு இடையில் மாறி மாறி பறந்து கொண்டிருந்ததாலும், முதல் பிரசவம் என்பதாலும் நான்காவது மாதமே தங்கமணியை இந்தியாவிற்கு அனுப்பிவிட்டேன்.

அதன் பின் வளைகாப்பு சமயத்தில் ஓரிரு நாட்கள் பார்த்தேன், குழந்தை பிறந்து மூன்று மாதம் கழித்து ஓரிரு நாட்கள் பார்த்தேன், இப்படியே முழுதாக ஆறுமாதம் முடிந்தவுடன்தான் குடும்பத்துடன் சேரும் சந்தர்ப்பம் வாய்த்தது.

ஆக, ஆறுமாத குழந்தையில் இருந்துதான் என் மகளுடன் இருக்கும் அனுபவம் எனக்கு கிடைத்தது.

அதனாலோ என்னமோ, இந்த முறை எனக்கும் சரி, தங்கமணிக்கும் சரி பிரிந்திருக்க மனமில்லை(ரெண்டு பேருக்குமே அப்புறம் யாரு கூட சண்டை போடுவது என்ற கவலைதான்).

மேலும் என் மகளை விட்டு என்னால் அதிக நாட்கள் பிரிந்து இருக்க முடியாது. அதனால் இங்கேயே தென்கொரியாவில் பார்த்து கொள்ளலாம் என்று முடிவாகிவிட்டது.

பின்னால் சில சந்தர்ப்ப சூழ்நிலை மற்றும் உடல் நிலை காரணமாக இருவீட்டில் இருந்தும் பெரியவர்கள் யாரும் இங்கு வர முடியாமல் போக, நாங்களே தனியாக சமாளிக்கும் படியாகிவிட்டது.

அவ்வை சண்முகி கமல் போல் இது ஒரு அற்புதமான அனுபவமானாலும், உள்ளுக்குள் ஒரு பயம் இருந்ததது.

அந்த வேளையில் எனக்காகவே எழுதியது போல் நம்ம சித்ரா எழுதிய "ஸ்பெஷல் டெலிவரி" இடுகையையும், "ஜலீலா" மற்றும் "துமிழ்" எழுதிய "குழந்தை பிறப்பை பற்றிய இடுகைகளையும்" படித்த போது "எனக்கும் யாரும் இல்லாமல் தனியாக இருக்கிறோம் என்ற உணர்வு போய் இருந்தது."



அப்போது அங்கு அவர்களுக்கு பின்னூட்டம் கூட போட இயலாமைக்கு இப்போது இங்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

தென்கொரியாவில் பிரசவ மருத்துவ முறை இதுவரை கேள்விப்படாத வகையில் சற்று மாறுபட்டு இருந்தது.

பொதுவாக நம்ம ஊரில் கர்பிணி பெண்களை அலுங்காமல் குலுங்காமல் பார்த்து கொள்வார்கள், அதிக பட்சமாக மெதுவான நடைதான் பார்த்திருப்போம்.

இங்கு எட்டாவது மாதம் ஆரமித்தவுடன் எங்கள் மருத்துவர் கொடுத்த அறிவுரை தினமும் வேகமான நடை, படி ஏறி இறங்குதல்.

தங்கமணியும் தினம் முப்பது நிமிட நடை மற்றும் ஆறு மாடி ஏறி இறங்க, நான் எதோ நம்மளால் முடிந்த வீட்டு வேலை (சமையல் குறிப்பு உபயம் கீதாஆச்சல், மேனகா, ஜலீலா இடுகைகள்) மற்றும் என் மகளை பார்த்துக் கொள்ள என்று இரண்டு மாதத்தை ஓட்டி விட்டோம்.

நடுவில் வாரம் முப்பத்தி ஆறு, ஏழு, எட்டு என்று நகர நகர பிரசவ வலிக்கான அறியையும் காணோம், குறியையும் காணோம், அதிலும் எங்களை விட தினம் போன் போட்டு என்ன இன்னுமா வலிக்கவில்லை, நீர் குடம் உடையவில்லை(நாங்க ஏதோ கையில் குடத்தை வைத்துக்கொண்டு உடைக்க மாட்டோம் என்று சொன்னது போல) என்று எங்கள் ரத்த ஓட்டத்தை அதிக படுத்தியவர்கள் தான் அதிகம்.

நாங்களும் எதிர் பார்த்து பார்த்து போங்கடா "ஆணியே புடுங்க வேண்டாம்" என்று முப்பத்தி ஒன்பதாவது வாரத்தை கடத்த, அடுத்த ஆறாவது நாள் நடு இரவில் லேசாக பிரசவ வலி துவங்கியது.

அப்பத்தான் புரிந்தது பிரசவ வலி என்பது, நம்ம சூப்பர் ஸ்டார் மாதிரி, எப்ப வரும் எப்டி வரும்னு நாம தேடாக்கூடாது, அதுவா வர வேண்டிய நேரத்துல கரெக்ட்ட வரும்னு.

பிரசவ வலியை எதிர்பார்த்து முன்னமே தேவையான அனைத்தும் தயார் நிலையில் வைத்து இருந்ததால் சீக்கிரம் தயாராகி மருத்துவமனைக்கு சென்று விட்டோம், சோதித்து பார்த்து விட்டு பிரசவத்துக்கு இன்னும் நேரம் இருக்கிறது, நீங்கள் உங்கள் மனைவியுடன் பிரசவ நேரத்தில் இருக்க வேண்டும் என்பதால், உங்கள் மகளை பிரசவத்திற்கு பின் நீங்கள் தங்கும் அறையில் உங்கள் நண்பர்களுடன் விட்டு விடவும் என்று சொல்ல, நான் என் மகளை தூங்க வைத்து நண்பர்கள் பொறுப்பில் விட்டு விட்டு பிரசவ அறைக்கு வரும் போது விடிந்து விட்டது.

உள்ளே வந்ததும் வராததுமாய் தங்கமணி சொன்னது ஏங்க இவ்வளவு பெரிய பிளாஸ்மா டி.வி இருக்கு கொஞ்சம் நல்ல படமா போட சொல்லுங்க! (ரொம்ப அவசியம் என்று நினைத்து கொண்டேன்).



இனி நடந்தவைதான் என்னால் இன்னும் மறக்க முடியவில்லை, தாய், குழந்தை என இருவருக்கும் இதய துடிப்பை கண்காணிக்க ஒரு சில இணைப்புகளை தங்கமணி உடலில் பொருத்தினார்கள், பின் பத்து நிமிடத்துக்கு ஒரு முறை இரு பெண்கள் வந்து குழந்தை கீழ் நோக்கி நகரும் படி வயிற்றை அழுத்தினார்கள்.

அழுத்தினார்கள் என்றால், சும்மா லேசா இல்லைங்க, சைக்கிள் பம்பில் காத்தடிப்பது போல, உங்க வீட்டு அழுத்தா? எங்க வீட்டு அழுத்தா! அதிலும் ஒரு பெண் சைடில் ஒரு குட்டி ஸ்டூலை போட்டு அதில் ஏறி தங்கமணி கட்டிலில் ஒரு காலை வைத்து முழு பலத்தையும் கொடுத்து அழுத்தினார் என்றால் பாருங்கள்.

இதுல நம்மள வேற உதவிக்கு கூப்பிட்டு நிற்க வைத்து, உங்கள் மனைவிக்கு தைரியம் கொடுங்கள் என்றார்கள்(க்...க்கும் நம்மளே நடுங்கி போய் இருக்கும் போது, நம்ம எங்க போய் தைரியம் கொடுக்கறது)ஒரு வழியா சமாளிச்சு தங்கமணி தலைய தடவியபடி கையை பிடிச்சு "புஸ்" மா "புஸ்" என்று நானும் கூட்டத்தில் ஒரு கோவிந்தாவை போட்டேன்.

அத விட தங்கமணி, என்னாங்க நம்ம தமிழ் பொண்ணுங்க பிரச நேரத்துல வலி தங்காம உன்னால தானடா இப்படி ஆச்சுன்னு சொல்லி திட்டி கணவரை அடிப்பாங்களாம், நம்ம கலாச்சாரப்படி நானும் உங்கள ...

என்று அவள் சொல்லும் போதே குறுக்கிட்ட நான், அதெல்லாம் பரவாயில்ல விடும்மா என்று சொல்ல!,

அதில்லைங்க திட்டும் போது ஒரு புலோவுல ஏதாவது நாலு கெட்ட வார்த்தை வந்தா கொரியா நர்சுக்கு புரியவா போகுது, அப்படி வந்தா என்ன மன்னிச்சுடுங்க, தண்டிச்சு கை விட்டுறாதீங்க! என்று சந்திரமுகி ஜோதிகா டயலாக்கை ரீமிக்ஸ் செய்து சொல்லி சிரிக்க "இந்த நேரத்திலும் உனக்கு இப்படி எல்லாம் தோணுது பாரு" என்ற வரி நினைவில் வந்தது.

ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை குழந்தை எவ்வளவு கீழ் நோக்கி இறங்கி இருக்கிறது என்று சோதித்தார்கள், ஒரு வழியாக குழந்தையின் தலை லேசாக தெரிந்தவுடன், அந்த இரு பெண்களில் ஒருவர் மருத்துவரை அழைத்து வருவதாக சொல்லி வெளியே சென்றவர்,திரும்ப வரும் போது ஒரு கூட்டத்துடன் வந்தார்.

மருத்துவரும் ஒரு பெண்ணும் குழந்தையை வெளியில் எடுக்கும் முயற்சிக்கு தயாராக, இரு பெண்கள் வழக்கம் போல கட்டிலுக்கு இருபக்கமும் குட்டி ஸ்டூலில் ஏறி வயிற்றை அழுத்த தயாராக (தங்கமணி, திரும்பவும் மொதல்ல இருந்தா! உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...இப்பவே கண்ண கட்டுதேங்க என்றாள்).

மற்றவர்கள் ஏன்? என்று புரியாமல் திரும்பி பார்த்தல், ஒரு பெண் கையில் மொபைல் கடிகாரத்தை வைத்துக்கொண்டு நேரம் பார்கிறார், ஒரு பெண் ஒரு சி.டி-யை பாட விட தயார் நிலையில் இருக்கிறார், மேலும் இரு பெண்கள் அவர் பின்னால் நிற்கிறார்கள் (ஏன் என்று அப்போது புரியவில்லை).

மருத்துவர் வந்து ஒரு இரண்டு முறை "புஸ்" சொல்ல இரு பெண்களும் அழுத்த, அடுத்த இரண்டு நிமிடத்தில் நம்ம ஜூனியர் மெதுவாக தலையை எட்டிப்பார்த்தார், வெளியில் வந்து முதல் சுவாசம் பட, ஒரு பெண் நேரத்தை குறித்தார், ஒரு பெண் சி.டி-யை பாட விட அதில் ஒரு கொரியன் மொழியில் முதல் பிறந்தநாள் பாடல் வர, மற்ற இருவரும் கை தட்ட (இதற்குதான் என்று இப்போதுதான் புரிந்தது) அந்த அறையே ஒரு பிறந்த நாள் கொண்டாட்டம் போல கலை கட்டியது.

இங்கும் ஒரு ஆச்சரியம், குழந்தையை வெளியில் எடுத்தவுடன் மருத்துவர் குழந்தையை பிடித்திருக்க, அவருடன் இருந்த பெண் தொப்புள் கொடியை நீட்டி பிடித்து என் கையில் ஒரு கத்திரியை கொடுத்து வெட்ட சொன்ன போது, சந்தோஷத்தில் லேசாக என் கை நடுங்கியபடி வெட்டினேன்.

அடுத்த இரண்டு நிமிடத்தில் அங்கயே ஜூனியரை தூக்கி பிடித்து வாயில் இருந்து நீர் எடுத்து, ஒரு அவசர சுத்தம் செய்து, ஒரு வெள்ளை நிற துண்டில் சுற்றி தாமரை இதழில் விட்ட நீர்துளி போல் என் கையில் கொடுக்க, கையில் வாங்கியதும் மெதுவாக கண்களை திறந்து என் முகத்தை பார்த்த போது, என் உள்ளங்காலில் உள்ள ரத்த அணுக்கள் கூட "ஜிவ்" என்று எதிர் நீச்சல் போட்டு உச்சி தலைக்கு ஏறியது "இதையம் எம்பி வாய் வழியே வந்து விடுவது போல" விவரிக்க முடியாத ஒரு பரவச அனுபவம்.

சந்தோஷத்தில் சிரி என்று புத்தி உடலுக்கு சொன்னாலும், மனமும் கண்ணும் அதை காதில் வாங்காதது போல லேசாக கண்ணீரை கொட்டியது கூட என் முதல் அனுபவம்.



இப்படியாக இதர விசையங்கள் முடிந்து நாங்கள் தங்கும் அறைக்கு வரும் போதே, நண்பர்கள் மற்றும் அலுவலக நண்பர்கள் அழகழகான பூக்கூடைகளை வாழ்த்து அட்டைகளுடன் அனுப்பி மிக சுத்தமான அந்த அறையை இன்னும் அழகுபடுத்தி இருந்ததை பார்த்ததும் எங்கள் மகிழ்ச்சி இன்னும் கூடியது.

இந்த அனுபவத்தில் எனக்கு இருந்த பல சந்தேகங்கள் தீர்ந்தது, இந்தியாவில் இவை சாத்தியமா இல்லையா என்று தெரியாவிட்டாலும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.

கணவரும் பிரசவ அறையில் இருக்க வேண்டும் என்று சொன்ன போது எனக்கு லேசாக பயம் என்றாலும், தங்கமணிக்கும் அது ஒரு நல்ல மன நிலையை கொடுத்ததை என்னால் உணர முடிந்தது. மேலும் ஒவ்வொரு ஆணும் ஒரு பெண்ணின் பிரசவத்தில் உடன் இருந்து அவர்கள் உடல் வழியை நம் மனதால் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த முறை கையாளப்படுகிறது என்று நினைக்கிறேன்.

மொபைல் போன் பல சமயம் எனக்கு வரும் மின்அஞ்சல்களில் நாள், வருடம், ஊர் குறிப்பிட்டு ஒரு மருத்துவ மனையில் பிரசவம் அல்லது அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருந்ததாகவும், அந்த அறைக்கு உள்ளே அல்லது வெளியே கதவுக்கு அருகே ஒருவர் தன் மொபைல் போனை பயன் படுத்தியதாகவும் அதனால் வந்த காந்த அலைகள் அல்லது கதிர் வீச்சால், குழந்தைக்கு அல்லது நோயாளிக்கு உயிரிழப்பு ஏற்பட்டு விட்டது என்று சொல்லி, அதனால் குறிப்பிட்ட எல்லைக்கு அருகில் மொபைல் போனை அனைத்து வைக்கவும் என்று வந்ததை நானும் நம்பி இருந்தேன்.

ஆனால் இங்கு அதற்கு அவசியமே இல்லை, நீங்கள் தாராளமாக எந்த நேரத்திலும் பிரசவ அறையில் உங்கள் மொபைல் போனை பயன் படுதலாம் அனைத்து வைப்பது உங்கள் இஷ்டம், கட்டாயம் ஒன்றும் இல்லை என்றார்கள். சொல்லபோனால் பிறப்பு நேரம் குறிக்க நேரம் பார்த்த பெண் மொபைல் முதல் அந்த பிரசவ அறைக்குள் மொத்தம் ஒன்பது மொபைல் போன்கள் இருந்தன (சைலென்ட் மோடில்), சில போன் அழைப்புகளும் வந்தன எந்த பாதிப்பும் எனக்கு தெரிந்து வரவில்லை.

பிறப்பு நேரம் பற்றியும் அதிக இடுகைகளில், விவாதங்களில், விமர்சனங்களில் பார்த்த போது, எனக்கும் தலை வெளியே வந்து முதல் சுவாச நேரம், முழு உடல் வெளியே வந்த நேரம், தொப்புள் கொடி துண்டிக்கப்பட்ட நேரம் என இவற்றில் எது சரியான பிறப்பு நேரமாக கூடும் என்று சந்தேகம் இருந்தது, இந்த முறை நேரடியாக பிரசவத்தை பார்க்கும் வரை.

மருத்துவர் குழந்தையின் தலையை வெளியில் எடுத்து முதல் சுவாசம் பட்ட அடுத்த நொடி முழு உடலும் "டக்"என்று வெளியே வந்து விட்டது, அடுத்த சில நொடிகளில் தொப்புள் கொடி துண்டிக்க பட்டு விட்டது, இவை அனைத்தும் நடந்தது ஒரு ஐந்து முதல் பத்து நொடிகளுக்குள்தான். ஆக பிறப்பு நேரம் எனப்படும் மணி மற்றும் நிமிடத்தில் (10:15 அல்லது 11:20 அல்லது 12:28 என்பதில்) எந்த மாற்றமும் இல்லை.

மொத்தத்தில் இது ஒரு அற்புதமான அனுபவமாகவும், கடவுளின் படைப்பில் ஒரு மிக நுணுக்கமான வடிவமைப்பாகவும் இருப்பதை என்னால் நேரில் உணர்வு பூர்வமாக உணர முடிந்தது.




தம்பி வந்ததில் என் மகளுக்கும் நிலை கொள்ளாத சந்தோசம், எனக்கும் இப்போதெல்லாம் வீட்டில் இவர்களுடன் நேரம் போவதே தெரியாமல், இருபத்தி நான்கு மணி நேரம் என்பது ஒரு நாளுக்கு மிக குறைவோ என்று தோன்றுகிறது.

தனிக்காட்டு சிங்கமாக திரிந்த போது பார்த்த வாழ்கையை விட, திருமணம் செய்தபோது அந்த காடு நந்தவனமாக மாறிய வியப்பே தீராத நிலையில், குழந்தைகளுடன் இப்போது என் நந்தவனம் பூத்து குலுங்குகுவது எனக்கு இன்னும் வியப்பை தருகிறது.

ஆண்டவன் படைப்பில் மனிதனின் வாழ்க்கை சக்கரத்தில்தான் எத்தனை எத்தனை மாறு பட்ட நிலைகள், அனுபவங்கள்...நன்றி இறைவா.

முடிக்கும் முன் ஒண்ணே ஒண்ணு சொல்லிக்கிறேனே ப்ளீஸ்!, என்னான்னு கேளேன்... மச்சான் நீ கேளேன்...பங்கு நீ கேளேன்... தங்கமணி நீயாவது கேளேன்...சரி சரி நானே சொல்றேன் (நான் பஞ்ச் டயலாக் சொன்னா மட்டும் பொறுக்காதே)...!

Yes, I'm back :-).

37 பின்னூட்டம்:

ராமலக்ஷ்மி said...

புது வரவு தந்த பூரிப்பு ஒவ்வொரு வார்த்தையிலும் தெரிகிறது. குழந்தைக்கும் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள்.

சந்தனமுல்லை said...

:-)வழக்கம்போல நிறைய இன்ஃபோவோட இடுகை...புதுவரவுக்கு தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் வாழ்த்துகள்!

சூர்யா ௧ண்ணன் said...

வாழ்த்துக்கள் தோழா!
உங்க தைரியத்தை உண்மையிலேயே பாராட்டனும்.. இதே நிலையில் நான் வார்டுக்கு வெளியே அல்ல.. எந்த சப்தமும் கேட்காத அந்த மருத்துவ மனைக்கு வெளியே சற்று தள்ளித் தான் அந்த டென்ஷனான இரவு நேரத்தில் அங்குமிங்குமாக நடந்துகொண்டிருந்தேன்..

Menaga Sathia said...

புது வரவுக்கும்,தங்கள் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள்!! இப்போழுதுதான் புரிகிறது உங்களின் நீண்டநாள் விடுப்பு காரணம்.நானும் கீதா ஆச்சலும் உங்களைப் பற்றி பேசிக்கொள்வோம் என்ன திடீர்ன்னு இவர் காணாமல் போய்ட்டார்ன்னு....இந்த இடுகையை படிக்கும் உங்கள் சந்தோஷம் என்னையும் தொற்றிகொண்டுவிட்டது...

குட்டி செல்லத்துக்கு இந்த அத்தையின் அன்பும்,ஆசீர்வாதமும்.....

GEETHA ACHAL said...

வாழ்த்துகள் சிங்ககுட்டி…உங்களுக்கு உங்கள் மனைவிக்கும், குடும்பத்திற்கும் வாழ்த்துகள்…நானும் மேனகாவும் உங்களை பற்றி பேசிகொண்டு இருந்தோம்..என்ன இவரை கானுமே...பார்த்தால் சிங்குட்டிக்கு ஒரு குட்டிராஜா...குட்டி ராஜாவின் வருகை....
நானே நினைத்து கொண்டு இருந்தேன்…எங்கே இந்த சிங்ககுட்டியினை கானும்..ஒரு வேளை இந்தியா vacationயிற்கு போயிருக்கிங்க என்று நினைத்து கொண்டேன்..
உங்களுடைய பதிவினை படிக்கும் பொழுது என்னுடைய பழைய நினைவுகள் திரும்பி வருகின்றது..
நாங்களும் அக்ஷ்தா குட்டி பிறக்கும் பொழுது தனியாக தான் பார்த்து கொண்டோம்…இந்தியாவில் இருந்து யாராலும் வரமுடியவில்லை…அதனால் எல்லாம் நாங்களே பார்த்து கொண்டோம்…உங்களுக்காவது நண்பர்கள் இருந்தாங்க…எங்களுக்கு அப்பொழுது யாரும் இல்லை…அதனை எல்லாம் திரும்பி நினைக்கும் பொழுது மிகவும் சுகமான சந்தோசமாக தான் இருக்கின்றது…எப்படி தான் அந்த பாதையினை கடந்து வந்தோம் என்று நினைக்கும் பொழுது…சில துளி கண்ணீர் வர இன்றும் தவறுவதில்லை…
ஆனால் அப்படி யாருடைய உதவியினை நடாமல் இருந்ததால் என்னவோ நானும் என்னுடைய கணவரும் இன்றும் தன்னம்பிக்கையுடன் வாழ்வில் எவருடைய உதவியும் இல்லாமல் இருக்கலாம் என்று எண்ணம் இருக்கின்றது….
இந்தியாவில் இருந்து எல்லோரும் பயங்கரமாக திட்டினாங்க…என்னை ஊருக்கு அனுப்ப சொல்லி…ஆனால் நாங்ளே பார்த்து கொள்கிறோம் என்று சொல்லிவிட்டோம்…
அந்த இனிய நாட்களை நினைக்கும் பொழுது…உண்மையில் கஷ்டமாக இருந்தாலும், அதனையும் மீறி சந்தோசம் தான் கிடைக்கின்றது…பழைய நினைவுகளை நியபகம் படுதியதற்கு நன்றிகள்…
நாங்கள் இப்படி தன்னம்பிக்கையுடன் தனியாக பார்த்து கொண்டதினை பார்த்து, என்னுடைய பல தோழிகளுக்கு நான் ஒரு முன் உதரணமாக அமைத்ததற்கு என்னுடைய கணவருக்கு தான் என் நன்றியினை சொல்லவேண்டும்…அவர் கொடுத்த confidence தான் இன்றும் எங்களை உயர்த்து கொண்டு இருக்கின்றது…

Chitra said...

////சந்தோஷத்தில் சிரி என்று புத்தி உடலுக்கு சொன்னாலும், மனமும் கண்ணும் அதை காதில் வாங்காதது போல லேசாக கண்ணீரை கொட்டியது கூட என் முதல் அனுபவம்.////

......wow! இதை விட அழகாக சொல்ல முடியாது. உங்கள் பதிவை படிக்கும் போது, மனதுக்குள் ஒரு சந்தோஷம்.
எல்லாவற்றையும் தனியாக சமாளித்து கொண்ட பெற்றோர்களுக்கு பாராட்டுக்கள். இறைவனுக்கு நன்றி.
அக்காவாகி விட்ட உங்கள் மகளுக்கு, வாழ்த்துக்கள்!
உங்கள் மகனுக்கு, எங்கள் ஆசிர்வாதங்கள்.
பூங் கொத்துக்கு நன்றி. :-)

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

சிங்கக்"குட்டி"க்கு வாழ்த்துக்கள்

விஜய் said...

வாழ்த்துக்கள் நண்பா

விஜய்

Vijayashankar said...

Congrats!

Atleast the little one's pic can be shared.

ஜீவன்பென்னி said...

ரொம்ப நாளா ஆளயே காணோமேன்னு இருந்தேன். இதுதான் மேட்டரா. சிங்கங்களுக்கும்,குட்டிக்கும் வாழ்த்துகள்.

பனித்துளி சங்கர் said...

மிகவும் சிறப்பான பதிவு .
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .

சிங்கக்குட்டி said...

@?????????? மிக்க நன்றி ராமலக்ஷ்மி :-) .

சிங்கக்குட்டி said...

@??????????? நன்றி சந்தனமுல்லை.

சிங்கக்குட்டி said...

@?????? ?????? ஒஓஹ தவறவிட்டு விட்டீர்களே சூர்யா ௧ண்ணன், அடுத்த முறை தவறாமல் உங்கள் துணையுடன் இருங்கள். அது ஒரு அற்புத அனுபவம்.

சிங்கக்குட்டி said...

@Mrs.Menagasathia உங்கள் அன்புக்கு மிக்க நன்றி மேனகா, அவரவர் வேலை பளுவில் நம்மை எங்கே நினைக்க போகிறார்கள் என்று நினைத்தேன், உங்கள் பின்னூட்டம் எனக்கு ஒரு தனி உற்சாகத்தை கொடுத்தது.
உங்கள் மின் அஞ்சலை கொடுக்க முடிந்தால், நான் தங்கமணியை பேச சொல்கிறேன். நன்றி.

சிங்கக்குட்டி said...

@Geetha Achal உண்மைதான் கீதா கடந்து வந்த பாதையை நினைக்கும் சுகம் எதிலும் கிடைக்காது, அதே நேரம் தனியாக வாழ்கையை சந்திக்கும் அனுபவமும் விவரிக்க முடியாதது. உண்மையில் ஒரு ஆண்மகனை விட பெண்கள் சக்தி மிக அதிகமானது, அதை சரியாக பயன் படுத்தினால் வாழ்க்கை மிக அற்புதமாக மாறிவிடும்.
தங்கமணி உங்கள் சமையல் குறிப்பு ரசிகை, உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் உங்களுடன் பேச சொல்கிறேன். நன்றி.

சிங்கக்குட்டி said...

@????.???? (??????????? ???? ???????????? ???? - ulavu.com) உங்கள் அன்புக்கு மிக்க நன்றி உலவு.காம்.

சிங்கக்குட்டி said...

@????? மிக்க நன்றி விஜய் :-)

சிங்கக்குட்டி said...

@Vijayashankar நன்றி விஜயஷங்கர்.
என் படத்தை கேளுங்கள் உடனே தருகிறேன், மற்றவர்கள் சுதந்திரத்தில் நான் தலையிடுவதிலை அது என் சொந்த குழந்தைகளாக இருந்தாலும் கூட.

சிங்கக்குட்டி said...

@??????????? நன்றி ஜீவன்பென்னி.

அதான் திரும்ப வந்துட்டமுல :-) கவலைய விடுங்க.

சிங்கக்குட்டி said...

@? ? ..? .????????? ?????? .?..? ? நன்றி சங்கர்.
வாருங்கள் வரவேற்கிறேன், இடுகையை படியுங்கள் மகிழ்விக்கிறேன் :-)

சிங்கக்குட்டி said...

@Chitra நன்றி சித்ரா :-)

உண்மையில் சரியான நேரத்தில் ஒரு நல்ல இடுகையை கொடுத்து என்னை தைரியபடுத்தியதற்கு நான்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் மீண்டும் வழக்கம் போல உங்கள் அனைவருடைய பக்கத்திலும் என் முகத்தை பார்க்க முடியும்.

அ.ஜீவதர்ஷன் said...

"ஆனந்தம் விளையாடும் வீடு, நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு" என்ற வரிகளுக்கிணங்க மிகுந்த சந்தோசமான நின்மதியான வாழ்வை உங்கள் குடும்பத்தினருக்கும் பிரபஞ்சத்தின் புதுவரவுக்கும் (அதாங்க சிங்ககுட்டியின் சிங்ககுட்டிக்கும்) எல்லாம் வல்ல ஆண்டவன் வழங்க வேண்டும் என்று உளமார வேண்டுகிறேன்.

கிரி said...

சிங்கக்குட்டி ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோசம். வாழ்த்துக்கள் :-)

நீங்கள் விவரித்து இருந்த அனுபவங்கள் அருமை அதில் நீங்கள் உணர்ந்த சிலிர்ப்பை என்னால் உணர முடிகிறது. உண்மையில் உங்களுக்கு கிடைத்த அருமையான வாய்ப்பு தான்.. அனைவருக்கும் இவ்வாறு அமைவதில்லை.

ஒரு குழந்தையை வைத்து சமாளிப்பதே பெரும்பாடு..தற்போது உடன் ஒரு குறும்புக்காரன் வேறு வந்து விட்டான்.. இனி ரொம்ப சுவாராசியமாக இருக்கும்..அதுவும் கொஞ்சம் வளர்ந்து விட்டால் இருவருக்கும் ஏற்படும் சண்டை கோபத்தை சில சமயம் வரவழைத்தாலும் ஜாலியாகவே இருக்கும்.

உங்கள் புதுவரவுடனும் மற்றும் உங்கள் குடும்பத்துடனும் உங்கள் பொழுது இனிதாக கழிய என் அன்பான வாழ்த்துக்கள் :-)

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

ஸ்வர்ணரேக்கா said...

பூத்து குலுங்கும் உங்கள் நந்தவனத்திற்கும், அதில் பூத்திருக்கும் புத்தம் புதிய பூவிற்கும் வாழ்த்துக்கள்..

சிங்கக்குட்டி said...

@??????? ... உங்கள் அன்புக்கு மிக்க நன்றி!.

சிங்கக்குட்டி said...

@கிரி நன்றி கிரி. உண்மைதான் அற்புதமான ஒரு அனுபவம்.

ஒரு குழந்தைக்கும் இரு குழந்தைக்கு வித்தியாசம் ரொம்பவே அதிகம் கிரி, கஷ்டப்பட்டு ஒன்றை தூங்கவைக்கும் கேப்பில் இன்னொன்று தூங்கி எழுந்து விடுகிறது...ஸ்ஸ்ஸ்ஸ் இப்பவே கண்ண கட்டுதே!... நீங்க சொன்னா மாதிரி பெரிய பெரிய யுனிக்ஸ் சர்வர் நெட்வொர்க் பிரச்சனையை கூட எளிதாக தீர்த்து விடுவேன், ஒரு குழந்தை சமாதான படுத்துவது ரொம்பவே கஷ்டம் :-).

சிங்கக்குட்டி said...

@www.bogy.in அன்புக்கு மிக்க நன்றி!.

சிங்கக்குட்டி said...

@ஸ்வர்ணரேக்கா வாங்க ஸ்வர்ணரேக்கா.

உங்கள் அன்பு கலந்த வாழ்த்துக்கு மிக்க நன்றி :-).

Menaga Sathia said...
This comment has been removed by the author.
SUFFIX said...

வாழ்த்துக்கள் சிங்கக்குட்டி!!

Jaleela Kamal said...

உங்கள் புது வரவிற்கு என் வாழ்த்துக்கள்.
என் குறிப்புகளும் உங்களுக்கு உதவியாக இருந்தது மிகுந்த சந்தோஷம்.
எனக்கும் என் இரண்டாவது பையன் பிறந்த போது யாரும் துணைக்கு இல்லை எல்லாம் நாங்களே தான். அதே போல் நீங்கள் சொன்ன அனைத்தும் போனவருடம் மே யில் இங்கு என் தங்கைக்கு. ஆனால் நான் கூட இருந்ததேன், டெலிவரியின் போது வார்டில் என்ன ஒரு கவனிப்பு ,அந்த நர்ஸுக்கு பொறுமையோ பொறுமை. கட்டிலை சுற்றி, நாலு நர்ஸும் இரண்டு டாக்டர்களும். கவனிப்புனா கவனிபபு அப்படி ஒரு கவனிப்பு, நீங்கள் சொல்ல சொல்ல நிஜம் அப்படியே நேரில் பார்த்தது போல் கண் முன்னே ஓடுது,.


ஹா ஹா பெண்கள் கண‌வரை திட்டுவது. ஒரு கவர்மெண்ட் ஹாஸ்பிட்டலில் லைனா 15 பெண்களுக்கு ஒரெ வார்டில் பிரசவம், அவர்கள் கணவர்மார்களை திட்டியதும் , அவ்ர்களின் சத்தமான அழுகைக்கு ,பதிலுக்கு அங்குள்ள நர்ஸுகள் மார்கள் இவர்களை திட்டியதையும் எப்பா காது கொடுத்து கேட்க்வஏ முடியல‌

இனி இரண்டு பேரையும் வைத்து கொன்டு வளர்பேதே ஒரு பெரிய சுவாரஸியமாக இருக்கும், நிறைய படிப்பினைகள், இன்னும் 10 வருடத்தில் நீஙகள் நிறைய பேருக்கு டிப்ஸ் கொடுப்பீங்க.

Sabarinathan Arthanari said...

வாழ்த்துகள் சிங்க குட்டி

சிங்கக்குட்டி said...

@SUFFIX உங்கள் அன்புக்கு மிக்க நன்றி :-)

சிங்கக்குட்டி said...

@Jaleela உங்கள் அன்புக்கு மிக்க நன்றி ஜலீலா.

ஐயோ உங்க அனுபவத்தை பார்க்கும் போது இனி நான் உங்களை "அக்கா அல்லது அத்தை " என்றுதான் கூப்பிட வேண்டும் என்று நினைக்கிறேன்.

ஆனாலும் உங்கள் வாழ்கை அனுபவம் என்னை வியக்க வைக்கிறது.

சிங்கக்குட்டி said...

@Sabarinathan Arthanari உங்கள் அன்பு வாழ்த்துக்கு மிக்க நன்றி :-).

Post a Comment

 

Blogger Widgets