Wednesday, October 13, 2010

"பதிவு" எனப்படுவது யாதெனில்...!

தமிழ் வானொலி கலந்துரையாடல் ஒன்றில் சமீபத்தில் கேட்ட " தமிழ் மொழிபெயர்ப்பு சொல்லும், உருவாக்க பட்ட சொல்லும்" எனும் செய்தியில் "வலைப்பூ" என்று மொழிபெயர்க்க பட்ட தமிழ் சொல்லைவிட, "பதிவு" என்று உருவாக்க பட்ட சொல்லே "ப்ளாக்" என்பதை குறிக்கும் சரியான சொல்லாகும், காரணம் நம் எண்ணங்களை, நடவடிக்கைகளை நம் சொந்த கருத்துக்கள் கொண்டு இணையத்தில் பதிவதே "ப்ளாக்" என்று எடுத்து சொன்னார்கள்.

ஆரம்பத்தில் "கம்ப்யூட்டர்" என்பதை கூட "கணிப்பொறி" என்று மொழிபெயர்க்க பட்டு பின் "கணினி" என்று ஒரு சொல் உருவாக்க படும் போது "கணினி" என்று சொல்லுக்கு எதிர்ப்பு வந்தாலும், பின் அதுவே சரியான வார்த்தையாக ஏற்றுக்கொள்ள பட்டது, அதே போல் "வலைப்பூ" என்பதைவிட "பதிவு" என்ற சொல் விரைவில் ஏற்றுக்கொள்ளபட்டு அதிகம் பயன்படுத்த படும் என்று முடிந்தது அந்த நிகழ்ச்சி.

எனக்கும் இது சரி என்று பட, இனி "பதிவு" என்ற சொல்லை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருக்கும் போது, என் மனதில் வேறு சில எண்ணங்கள் தோன்ற!, அந்த எண்ணங்களை இங்கு பதிவதே என் நோக்கம்.



பொதுவாகவே பதிவு எழுதும் விசையத்தில் நான் அவ்வளவாக அதிக நேரம் செலுத்துவதில்லை, காரணம் இது என் தொழிலோ, குடும்பமோ அல்ல. பதிவு எழுதுவது என்பது என் தனிப்பட்ட பொழுதுபோக்கு மட்டுமே.

ஆகவே வேறு எந்த வேலைகளும் பாதிக்காத என் ஓய்வு நேரத்தில் கொஞ்சத்தை பதிவுக்காக ஒதுக்குவது என் வழக்கம்.

அதனால்தான் தொடர்ந்து என் பதிவுகளை படித்து மறக்காமல் தங்கள் கருத்துக்களை சொல்லும் நண்பர்கள் பதிவுகளை கூட என்னால் தொடர்ந்து படித்து கருத்து சொல்ல முடிவதில்லை, ஒட்டு போடுவது மிக எளிது, ஆனால் பதிவை முழுவதும் படிக்காமல் கருத்து சொல்ல நான் நினைப்பதில்லை.

சுருக்கமாக முன்பு ஒரு பதிவில் "கிரி" சொன்னது போல, பதிவை படிக்காமல் கும்மி பின்னூட்டம் போடுவதைவிட, பின்னூட்டமே கொடுக்காமல் இருப்பது மேல் என்று நினைப்பவன் நான்.

பொதுவாக நான் யாருடைய பெயரையும் என் பதிவுகளில் அவர்கள் அனுமதி இல்லாமல் பயன் படுத்துவது கிடையாது, அதனால் என் பதிவுகளை தொடந்து படித்து என்னுடன் நட்புடன் இருக்கும் நண்பர்களுக்கும், தங்கமணியுடன் நட்புடன் இருக்கும் தோழிகளுக்கும் என் நன்றியை இங்கு தனியாக தெரிவித்து கொள்கிறேன்.

எனக்கு கிடைக்கும் நேரத்தில் எல்லா பதிவுகளையும் படிக்க ஆசை பட்டாலும், இப்போதெல்லாம் எல்லா பதிவுகளையும் படிக்க உண்மையில் எனக்கு நேரம் சாத்திய படவில்லை, மேலும் இன்னொரு விசையம் எனக்கு பெரிய சவாலாக இருக்கிறது.

நான் இணையத்தில் பொழுதுபோக்க வரும் போது, நான் பின்தொடரும் நண்பர்கள் பதிவை என்னால் என் பதிவு பக்கத்தில் "டாஷ்போர்ட்" பகுதியில் சென்று அவர்கள் புதிதாக எழுதியுள்ள பதிவை படிக்க முடியும், முடிந்த வரை கருத்து சொல்ல முடியும்.

ஆனால், தினம் வருவது எனக்கு சற்று சிரமம் என்பதால், வரும்போது எல்லாம் கண்ணில் படும் பதிவுகளை படித்து விடுவேன், மற்ற எந்த பதிவையும் படிக்க எனக்கு திரட்டிகளின் உதவி அவசியமாகிறது, இங்குதான் எனக்கு கொஞ்சம் சிக்கல்.

மேலே சொன்னது போல, பதிவு என்பது ஒரு தனிமனிதன் தன் சொந்த கருத்துக்களை, நடவடிக்கைகளை, எண்ணங்களை மற்றும் சமையல், கலை போன்ற தங்கள் தனி திறமைகளை இணையத்தில் மற்றவர்களுடன் பதிவதே ஆகும்.

இதனால் பலருடைய திறமைகளை, எண்ணங்களை, கருத்துக்களை மற்றும் நடவடிக்கைகளை நாம் படிக்க முடிகிறது, சுருக்கமாக மனிதர்களை மற்றும் மனிதர் மனதை படிக்க பதிவுகள் பெரிதும் உதவுகின்றன.



இதில் என்னால் எல்லா பதிவுகளையும் படிக்கமுடியாமல் போக என் சிக்கல் என்னவென்றால், இப்போதெல்லாம் திரட்டிகளில் காணும் அனேக பதிவுகள் மேலே குறிப்பிட்ட உண்மையான பதிவு நோக்கத்தை விட்டு விலகி, "தின-செய்திதாள்" வேலையை செய்யும் போதுதான்.

எனக்கு இணையத்தில் உலாவ கிடைக்கும் நேரத்தில் இத்தகைய செய்தி பதிவுகள் ஆனது மற்ற நல்ல பதிவுகளை தேடி கண்டு பிடிக்க முடியாமல் ஒளித்து வைத்து கொள்கிறது (பதிவின் தலைப்பை பொருத்து உள்ளே சென்றவுடன்தான் புரிகிறது).

மற்றொரு காரணம் வீட்டை தவிர மற்ற இடங்களில் இருந்து பொது கணினியில் பதிவுகளை படித்து பின்னூட்டம் எழுத நினைத்தால், பெரும்பாலான இடத்தில பின்னூட்ட பகுதி தடை செய்ய பட்டு இருக்கிறது. சரி, மாலை வீடு திரும்பியது எழுதாலாம் என்று நினைத்தால், அதற்குள் அந்த பதிவையே இத்தகைய செய்தி பதிவுகள் திரட்டியில் எதோ ஒரு பக்கத்துக்குள் காணாமல் போய் விட செய்கிறது.

கவனிக்க, இங்கு யாருடைய பதிவையும் குறை சொல்வது என் நோக்கம் அல்ல.

ஒரு உதாரணத்துக்கு தமிழிஸ் என்ற ஒரு திரட்டியில் ஒரு நாளில் வரும் அத்தனை பதிவுகளையும் சலித்து தினசெய்திதாள்களில் செய்தியாக வராத பதிவுகளை தேடுவது என்பது! மற்றவர்களுக்கு எப்படியோ? ஆனால் எனக்கு கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் சாத்திய படவில்லை.

இது போல் எத்தனை முன்னணி திரட்டிகள்!, அதில் எத்தனை நல்ல பதிவுகள் நம் கண்ணில் படாமல் தொலைந்து போகக்கூடும்? என்பதைத்தான் இங்கு நான் சிந்தித்து பார்கிறேன்.

அதனால் செய்திகளை பதிவாக போடுவது தவறு என்று சொல்ல வரவில்லை, தின செய்திகளை அப்படியே திரும்ப திரும்ப பதிவாக போட்டு திரட்டிகளில் இடத்தை அடைக்காமல், முக்கியமான அல்லது கருத்துக்குரிய ஒரு செய்தியாயின் அந்த செய்திகளை பற்றிய தனிப்பட்ட கருத்துக்களை அல்லது எண்ணங்களை பதிவாக போலாமே என்பதுதான் இங்கு என் நோக்கம்.

அனைவருக்குமே தெரியும், இன்று இணையத்தில் இல்லாத தின பத்திரிகைகளே கிடையாது தினமலர், தினதந்தி, தினகரன்,மாலைமலர், தட்ஸ்தமிழ், தமிழ்சினிமா என்று அத்தனை தின செய்திகளையும் மற்றவர்களும் படிப்பார்கள் அல்லது படித்திருப்பார்கள்.

எனவே எந்த ஒரு தின செய்தியையும் அப்படியே ஒரு பதிவாக பதியும் முன், ஒரு முறை யோசிப்பதே நல்ல பதிவராக நம்மை அடையாளம் காட்ட ஒரு சிறந்த வழி என்று நான் கருதுகிறேன்.

மேலும், அவசியம் இத்தனை நாளுக்கு ஒரு பதிவு போடவேண்டும் என்பது கட்டாயம் இல்லையே?

அப்படி நமக்கு பதிய எதுவும் புது விசையம் இல்லாத பட்சத்தில், தின செய்திதாளில் இருப்பதை, இருந்ததை அப்படியே பதிவாக்காமல்!, அந்த நேரத்தை மற்ற பதிவர்களின் "நல்ல பதிவுகளை" படித்து கருத்து சொல்லி வாக்களிக்க பயன் படுத்தலாமே?

அதனால் அந்த நல்ல பதிவும் அனைவரின் பார்வைக்கும் வரும், மேலும் அப்படி செய்வதால் இணையத்தில் அதிக நேரம் உண்மையில் கிடைக்காதவர்கள் (என்னை போல) கண்ணில் படாமல் அந்த பதிவு காணாமல் போகாமல் நிறுத்தியதில் நமக்கும் ஒரு பெரிய பங்கு இருக்கும்.

அடிப்படையாகவே எந்த ஆதாயமும் இல்லமல் நாம் செய்யும் செய்கைகள் வெகுவாக குறைந்து விட்டன, அதனால் இப்படி செய்வதால் நமக்கு அல்லது நம் பதிவுக்கு என்ன ஆதாயம் என்று நினைக்க வேண்டாம்.

ஒன்று, தினசெய்திதாள்களில் வந்த அதே செய்திகள் திரும்ப திரும்ப திரட்டிகளில் பக்கத்தை அடைத்துக்கொள்ளாமல் அந்த இடங்கள் நல்ல பதிவுகளுக்கு கிடைக்கும்.

இன்னொன்று, நல்ல பதிவுகளை நாம் தொடர்ந்து படித்து கருத்து சொல்லும் பட்சத்தில், நாம் எவ்வளவு இடைவெளி கொடுத்து சொந்த பதிவை பதிந்தாலும் மற்ற நல்ல பதிவர்கள் நம் பதிவை படித்து இன்னும் நம்மை மெருகேற்றுவார்கள்.

அப்படி வரும் பதிவர்கள் அனைவரும் நல்ல மற்றும் தரமான பதிவர்களாக இருக்கும் பட்சத்தில், அவர்கள் வருகை அவர்களை பின் தொடரும் சக பதிவர்களையும் உங்கள் பதிவை நோக்கி திருப்பும், இதனால் நம் பதிவுகள் தரமான பதிவர் வரிசையில் இடம் பெரும்.

அப்புறம் என்ன? அட இன்னுமா புரியல...! பிரபல பதிவர்தான்... :-) .

பதிவர்கள் இதை பற்றி சிந்தித்து ஒரு நல்ல வழியை பின் பற்றினால், நிறைய திறமையுள்ள மற்றும் புதிய புதிய பதிவர்களின் திறமை திரட்டிகளில் முதல் பக்கத்தில் பலரை சென்று அடைய இது வழிவகுக்கும் என்று நம்புகிறேன்.

உங்கள் நேரத்துக்கு என் நன்றி!.

36 பின்னூட்டம்:

ஜோதிஜி said...

தொடக்கம் முதல் பதிவு என்று தான் நானும் குறிப்பிட்டு வந்துள்ளேன்.

தெளிவான புரிந்துணர்வு.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லாச்சொன்னீங்க சிங்கக்குட்டி...நல்லகருத்துகள்.

ராமலக்ஷ்மி said...

பதிவைப் பற்றி பகிர்ந்திருப்பவை நன்று.

Vidhoosh said...

matter of concern. Thanks for sharing :)

Radhakrishnan said...

மிகவும் சிறப்பான பகிர்வு. நல்ல பதிவும் கூட. :)

ஜீவன்பென்னி said...

சரியாச் சொல்லியிருக்கீங்க........ திரட்டிகளில் நீங்க சொல்லுற மாதிரியான பதிவுகள்தான் நிறைய இருக்கு.

விக்னேஷ்வரி said...

ஆமாங்க, சரியா சொன்னீங்க.

எப்பூடி.. said...

பதிவை பற்றி ஒரு சிறப்பான பதிவு.

//அப்படி நமக்கு பதிய எதுவும் புது விசையம் இல்லாத பட்சத்தில், தின செய்திதாளில் இருப்பதை, இருந்ததை அப்படியே பதிவாக்காமல்!,//

சொந்த சரக்கில்லாத என்னை மாதிரியாட்கள் என்ன செய்வது? :-) (போயி புள்ளைகுட்டிகளை பிடிக்க வையுங்க என்று மட்டும் சொல்லாதீங்க, ஏன்னா எனக்குதான் புள்ள குட்டிங்களே இல்லையே :-))

//பிரபல பதிவர்தான்... :-) .//

பிரபல பதிவர்னா நம்ம சாருவா?

Menaga Sathia said...

நல்ல கருத்துக்கள் சிங்கக்குட்டி,தெளிவா சொல்லிருக்கிங்க...

Praveenkumar said...

நடுநிலையுடன் கூடிய
சரியான மற்றும் விரிவான அலசல் நண்பரே.!!

Chitra said...

பதிவுகளை குறித்து, நீங்கள் பதிந்துள்ள கருத்துக்களும் ஆலோசனைகளும் அருமை. பொழுது போக்காகவே நானும் எழுதினாலும், நன்கு யோசித்து நல்ல கருத்துக்களை பகிர்ந்து கொள்ள என்னை ஊக்கப்படுத்துகிறது. நன்றி.

tamilanban said...

arumayana pathivu nanba

balachandar s
www.maalaineram.com

thiyaa said...

தெளிவான புரிந்துணர்வு.

Jaleela Kamal said...

மிகவும் சரியாக சொல்லி இருக்கீங்க.
பதிவு போடுவதை பற்றி, தெள்ளத்தெளிவா அள்ளி தெளிச்சிட்டீன்க.

Unknown said...

பதிவு என்பது ஒரு தனிப்பட்ட தலைப்பின் அல்லது கருத்தின் அடிப்படையில் பதியப்படும் ஒன்று. வலைப்பூ என்பது பல பதிவுகளின் தொகுப்பு. உதாரணமாக http://singakkutti.blogspot.com/2010/10/blog-post.html என்பது ஒரு பதிவு. ஆனால் http://singakkutti.blogspot.com என்பது உங்கள் பதிவுகளின் தொகுப்பு. இதைத்தான் வலைப்பூ என்று கூறுகிறோம். உங்கள் பதிவுகளின் தொகுப்புகளை குறிக்கத்தான் வலைப்பூ என்ற வார்த்தையை உபயோகிக்கிறோம்.

கிரி said...

சிங்கக்குட்டி நீங்க சொல்வது முற்றிலும் உண்மை.

தற்போது திரட்டிகளை செய்தி தளங்களும், கும்மி பதிவுகளும், வாழ்த்து பதிவுகளுமே ஆக்கிரமித்து இருக்கின்றன. இவையும் அவசியம் தான் என்றாலும் ஆனால் அளவுக்கு மீறும் போது சலிப்பையே தருகிறது.

pauljesu கூறுவதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்.

சிங்கக்குட்டி said...

@ஜோதிஜி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜோதிஜி, எனக்கும் கொஞ்சம் குழப்பமாகவே இருந்தது.

சிங்கக்குட்டி said...

@muthuletchumi நன்றி முத்துலெட்சுமி, தின செய்திகளை தவிர்த்து பதிவுகளை தேடுவது மிக சிரமமாக இருக்கிறது.

சிங்கக்குட்டி said...

@ராமலக்ஷ்மிநல்லது ராமலக்ஷ்மி புது புது புகைப்படங்கள் கொண்ட பதிவை நிறைய கொடுங்கள் :-).

சிங்கக்குட்டி said...

@Vidhooshமிக்க நன்றி Vidhoosh.

சிங்கக்குட்டி said...

@V.Radhakrishnanநல்லது மற்றும் நன்றி Radhakrishnan.

சிங்கக்குட்டி said...

@ஜீவன்பென்னிஆமாம் ஜீவன்பென்னி, திரட்டிகள் மற்றும் பதிவர் குழுக்கள், இதற்கு ஏதாவது செய்யலாம் என்று நினைக்கிறேன்.

சிங்கக்குட்டி said...

@விக்னேஷ்வரிநன்றி விக்னேஷ்வரி :-).

சிங்கக்குட்டி said...

@எப்பூடிஉங்களுக்கு என்ன ராசா, பல தரப்பட்ட பதிவுகளை போட்டு சும்மா பட்டைய கெளப்புரீக...!

//பிரபல பதிவர்னா//

ஆஹா, முதல்வன் பட கிளைமாக்ஸ் மாதிரி, "அடபாவிகளா கடைசில என்னையும் இந்த பதிவரசியல்ல இழுக்கணுமா?"

ஐய்...சிக்க மாட்டோம்லா :-)

சிங்கக்குட்டி said...

@Mrs.Menagasathiaநன்றி மேனகா, குட்டி பொண்ணு எப்படி இருக்காங்க :-) செம சுட்டியா?.

சிங்கக்குட்டி said...

@பிரவின்குமார்நல்லது பிரவின்குமார் வருகைக்கு மிக்க நன்றி!.

சிங்கக்குட்டி said...

@Chitraஉங்களுக்கு என்ன சித்ரா, கலக்கல் "ராணி" நீங்க :-).

உங்கள் எழுத்து நடை மற்றும் நக்கல் காமிடி அனைவருக்குமே பிடிக்கும்.

சிங்கக்குட்டி said...

@tamilanbanநன்றி தமிழன்பன்.

சிங்கக்குட்டி said...

@தியாவின் பேனாநல்லது தியா, புது கவிதை போட்டாச்சா, விரைவில் படிக்க வருகிறேன் :-).

சிங்கக்குட்டி said...

@Jaleela Kamalநன்றி ஜலீலா.

எதுவும் உள்குத்து இல்லையே :-).

சிங்கக்குட்டி said...

@pauljesuஎனக்கும் அதே குழப்பம்தான் "pauljesu" பலர் இப்படி சொல்கிறார்கள், பலர் வேறு மாதிரி சொல்கிறார்கள்.

அதாவது வலைப்பூ (ப்ளாக்) என்பது "பதிவு".

அந்த பதிவு தொகுப்பில் பதியப்படும் ஒவ்வொரு பதிவும் (போஸ்ட்) என்பது "இடுகை" என்று.

ரொம்ப குழப்பமா இருந்தது.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி, தொடர்ந்து வாங்க.

சிங்கக்குட்டி said...

@கிரிஆமாம் கிரி, திரட்டிகள் குழுவும், பதிவர்கள் குழுவும் இப்படி தின செய்திகள் திரும்ப திரும்ப பதிவாக அளவுக்கு மீறுவதை கட்டுபடுத்த ஏதாவது செய்யலாம்.

"pauljesu" கூறுவதில் இருந்த குழப்பத்தையும் எழுதிவிட்டேன்.

பதிவு மற்றும் இடுகை என்ற இரண்டு வாரத்தையை நான் பயன்படுத்தி வருகிறேன்.

நன்றி கிரி.

thiyaa said...

நல்ல சிறப்பான பகிர்வு.

சிங்கக்குட்டி said...

@தியாவின் பேனாஉங்கள் வருகைக்கும் அன்புக்கும் மிக்க நன்றி தியா.

தக்குடு said...

சிங்கக்குட்டி நீங்க சொல்வது முற்றிலும் உண்மை!!!

சிங்கக்குட்டி said...

@தக்குடுபாண்டிநன்றி தக்குடுபாண்டி.

Post a Comment

 

Blogger Widgets